SHARE

Monday, March 10, 2014

அமெரிக்காவில் தொடர்கிறது புலிகளுக்கான தடை

அமெரிக்காவில் தொடர்கிறது புலிகளுக்கான தடை

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் பட்டியலை அமெரிக்கா
வெளியிட்டுள்ளது.

அதில்  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை
செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை
செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி, முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழீழ விடுதலைப் புலிகளை
அமெரிக்கா தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.phpid=560282713108389693#sthash.YSOe0TAr.dpuf

No comments:

Post a Comment