காலநிலை அறிவிப்பு 10-12-2025
கலாநிதி நா.பிரதீபராஜா
10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணி
விழிப்பூட்டல் பதிவு ( எச்சரிக்கையாகவும் கருதலாம்)
இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது.
தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி மக்கள், மற்றும் ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது.
வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது.
மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் இன்றும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும்.
மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா -

2025.12.10 බදාදා පෙ.ව. 7.00
අනතුරු ඇඟවීමක් (අනතුරු ඇඟවීමක් ලෙසද සැලකිය හැකිය)
ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් පවතින සුළං සංසරණය සහ නිරිත දෙසින් පවතින වායුගෝලීය කැළඹිලි තත්ත්වය හේතුවෙන්, වත්මන් වර්ෂාපතනය 2025.12.12 දක්වා පවතිනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
උතුරු පළාතේ බොහෝ ස්ථානවලට පැය 18 කට වැඩි කාලයක් වර්ෂාපතනය ලැබෙමින් පවතී. තවදුරටත් වැසි ලැබීමේ හැකියාවක් පවතී.
බොහෝ ජලාශ පිටාර ගලමින් පවතී. ගංගා ද ඒවායේ ධාරිතාවයට ළඟා වී ඇත.
එබැවින්, මන්නාරම, යාපනය, කිලිනොච්චි සහ මුලතිව් දිස්ත්රික්කවල පහත් බිම් ප්රදේශවල ජනතාව ගංවතුර අවදානම පිළිබඳව විමසිල්ලෙන් සිටීම අවශ්ය වේ. ජලාශවල පහළ ප්රදේශවල ජනතාව විශේෂයෙන් ඉතා විමසිල්ලෙන් සිටීම අවශ්ය වේ.
විශේෂයෙන් යාපනය දිස්ත්රික්කයට පැය කිහිපයක් තද වැසි ලැබීමට ඉඩ ඇත. එබැවින්, යාපනය දිස්ත්රික්කයේ නගරය අසල පහත් බිම් ප්රදේශවල සහ අනෙකුත් පහත් බිම් ප්රදේශවල ජනතාව විමසිල්ලෙන් සිටීම වඩාත් සුදුසුය.
මන්නාරම දිස්ත්රික්කයට ජලය ගෙන එන පලියාරු සහ පරන්ගියාරු ගංගාවල ජල පෝෂක ප්රදේශවලට වැසි ලැබෙමින් පවතී. එබැවින්, මෙම ප්රදේශවල ජනතාව විමසිල්ලෙන් සිටීම අවශ්ය වේ.
නැගෙනහිර පළාතේ බොහෝ ප්රදේශවලට අද තද වැසි ලැබීමට ඉඩ ඇති අතර මෙම වර්ෂාව අනිද්දා දක්වා පවතිනු ඇත.
මධ්යම, දකුණු, ඌව සහ සබරගමුව පළාත්වල ද වැසි දිගටම පවතිනු ඇත. එබැවින්, ගංවතුර සහ නායයෑම් සම්බන්ධයෙන් මෙම ප්රදේශවල ජනතාව විමසිල්ලෙන් සිටීම අවශ්ය වේ.
- නාගමුතු ප්රදීපරාජා -
