SHARE

Monday, March 24, 2025

39வது பட்டமளிப்பு- மலையகப் பட்டதாரிகள்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில்  ஆரம்பமாகியது.

பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம், பிரபுத்துவ மரபு சார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகிய நிலையில் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பண்பாட்டு அணிவகுப்பு


19 முதல் வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் 3,920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவிருந்தனர்.

இவர்களில் கணிசமான மலையக மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் பட்டதாரிகள் ஆகினர்.

அவர்களில் சிலரின் விபரத் தொகுப்பு. 

* லிந்துலை - தங்கக்கலை, கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த போல்ராஜ் சபேஷ்ராஜ் (ஹரீஷ்) கட்டிடத் தொழில் நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் (BET Honors) பயின்று, தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.

லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 1-11ஆம் வகுப்பு வரை முடித்த இவர், அக்கரப்பத்தனை ஹோல்ப்ரூக் விஞ்ஞான கல்லூரியில் 2016-2018 ஆம் ஆண்டில்  உயர்தரப் பரீட்சையை முடித்தார். அதன் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 4 வருட பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கட்டிடத் தொழில்நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் (BET Honors) பயின்று, கடந்த மார்ச் 19ஆம் தேதி தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.

* ஹப்புத்தளை தோட்டம் (பழையகாடு) சேர்ந்த வீரமணி பரிமளாதேவி B.A Honour (Economics Special) பட்டம் பெற்றுள்ளார்.

பரிமளாதேவி ஆரம்ப கல்வியை ஹப்புத்தளை இல: 01 தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

* புசல்லாவை, ரொச்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் கவிதா B.A Honour (Geography Special) பட்டம் பெற்றுள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை புசல்லாவை ரொச்சைல்ட் தமிழ் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை புசல்லாவை இந்து தேசிய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

* இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை பிரதேசத்தின் நிலுக்ஷி சுப்பிரமணியம் (B.A) பொதுக் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை இ/பலா/ மெத்தகந்த தமிழ் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை இ/பலா/ சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்திலும் பயின்றவராவார்.

* புசல்லாவை, சோகம தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த செல்வி கலைச்செல்வன் சந்திரலேகா, பொறியியல் தொழில்நுட்பம் (Bachelor of Engineering Technology Honours) Specialization in Construction , Second ) பட்டம் பெற்றுள்ளார்.

இவர் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவியாவார். 

* கண்டி மாவட்டத்தின் மடுல்கலை மேற் பிரிவை சேர்ந்த செல்வராஜ் செல்வரஞ்சன் முதலாவது கலைமாமணி சிறப்பு புவியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை க/வ/ குறிஞ்சி தமிழ் வித்தியாலத்திலும், இடைநிலை கல்வியை க/வ/ அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை மாத்தளை இந்து தேசியக் கல்லூரியிலும் பயின்றவராவார்.

ல்வி முறையும், உடல்-மூளை உழைப்பு வேற்றுமையும், கல்விசார் அதிகாரமும் எவ்வளவுதான் ஜனநாயகம் அற்றவையாகவும், பின்தங்கிப் பிற்போக்கானவையாக இருக்கிற போதும், 200 ஆண்டுகால பிரபுத்துவ தொடர் காலனிய கூலி அடிமைத்தனத்தின்-நிலத்தோடு கட்டுண்ட நிலைமை இன்னமும் நீடித்து நிலைக்க வைக்கப்பட்டிருக்கின்ற மலையக சமூகத்திற்கு இந்தக் கல்வி முன்னேற்றம் மிக அவசியமானதே ஆகும்.

இப்பட்டதாரிகள்-`முன்னணி சக்திகள்`-, நிலத்தோடு கட்டுண்ட கூலி அடிமை முறையின் ஒழிப்புக்கு, நாடாளமன்ற பொறுக்கித்தனத்துக்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் எனப்படுகின்ற தொடர்காலனிய பண்ணையாளர்களின் கொடும் சுரண்டலுக்கு, மைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிரான ஓரு புதிய மலையகத்தின் எழுச்சிக்கு ஒளி வீசுவார்கள் என நம்புவோமாக! வாழ்த்தி வரவேற்போமாக!!🔺 

வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

வவுணதீவில் விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல் ஆகிய குளங்களைப்  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களைப் புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம்  கோரி விவசாயிகள் வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (18) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலக்தின் முன்னால் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து மாகாண நீர்ப்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளைச் செய், கண்டியனாறு திட்டம் கைவிடப்பட்டதா?  அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்?  ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லவேண்டும்? மாகாண நீர்ப்பாசன திணைக்களமே? ஊப்பாற்றில் வீணாகச் செல்லும் நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தத் திட்டங்களைத் தீட்டு! 1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டுக்காணி உட்பட்ட 2000 ஏக்கர் காணிக்கு நீர் வழங்க ஏன் தயக்கம்?



விவசாயிகளை பிரித்தாளும் தந்திரம் வேண்டாம், அரசாங்க அதிபரின் அராஜகம் ஒழிக? , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன பிரதேச செயலாளரே? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? விவசாயிகளே விழித்தெழுங்கள்!,  போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு முழக்கமிட்ட  விவசாயிகள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.🔺 


18 Mar, 2025 | வீரகேசரி + ENB



தையிட்டியில் `` மனித உரிமை ``!

``சரித்திரபூர்வ திஸ்ஸ ராஜமகா விகாரை``
இராணுவம் கட்டியமைத்து பராமரித்து வரும் விகாரையில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
தையிட்டி போராட்டக்காரர்களுக்கு  அச்சுறுத்தல்

 தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறிலங்கா பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி 2023  ஆம் ஆண்டு மே மாதம் 23  ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த  போராட்டத்தின்போது பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு  சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் எட்டுப் பேரினால் சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆயினும், காரணம் எதுவுமின்றி, குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ் பிராந்திய காரியாலயத்திலிருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தால்  விசாரணை எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்றைய நாள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது  இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும் போது  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மாற்று மத ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான தாக்குதலுக்கு எதிரான,மனித உரிமைப் போராட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்கது:

தையிட்டி, ஒடுக்கும் சிங்கள தேசத்தின் பெரும்பான்மை மக்களின் மதமான பெளத்தமத வழிப்பாட்டுத் தலம் அமைக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெளத்த தலம் இருந்ததாக இராணுவம் கூறுகின்றது.

இலங்கையில்  பெளத்தத்தை பாதுகாப்பது தனது தலையாய கடமை என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகின்றது.

அநுரா கும்பலின் புதிய ஆட்சி பெளத்த சாசன பாதுகாப்பு அமைச்சை தானும் உருவாக்கி தான் பிக்கு முன்னணி என்பதை நிரூபித்து வருகின்றது.

மறுபுறம் இந்த விகாரை அமைக்கப்பட்ட காணியின் உரிமையாளர் அதற்குரிய சொத்துரிமைப் பத்திரத்தோடு -உறுதியோடு- அலைகின்றார்.

இது ஒரு இடத்தில் ஒருவர் காணியில் மட்டும் நடக்கவில்லை, ஈழம் எங்கணும்- தமிழர் பூமி- எங்கணும் நிகழ்கின்றது.

இன்று நேற்றல்ல 1948 முதல் அரசின் திட்டமாக ஆயுத முனையில் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.

இது சடுதியாக மனித உரிமைப் போராட்டமாக மாறியுள்ளது!

அரசியல் உரிமைகளை அடக்கி ஒடுக்குபவர்களுக்கு `மனித உரிமை` மிகச் சிறந்த பதுகாப்புக் கவசம் ஆகிவிட்டது.

இது மக்களின் விடுதலைக்கு உதவாது. அரசியல் -தேசிய சுயநிர்ணய உரிமை- முழக்கத்தைத் தரம் தாழ்த்தி போராட்டத்தை மழுங்கடிக்கவே உதவும்.🔺   

இந்திய வளர்ச்சிக்கு ஐ.நா.பாராட்டு

பாலின சமத்துவத்தில் உலகளாவிய ரீதியில் இந்தியா முன்னணியில் உள்ளது

- ஐ.நா.பிரதிநிதி பாராட்டு!

March 24, 2025 தினகரன்

பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப் , உலகளாவிய அபிவிருத்தியில் இது மிக முக்கியமான பிரச்சினை என்று கூறினார். “எளிமையாகச் சொன்னால், உலகளவில் பாலின சமத்துவத்தில் முதலீடு செய்வதை விட முக்கியமான பிரச்சினை எதுவும் இல்லை.இந்தியாவும் அதில் விதிவிலக்கல்ல.” ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை மேற்கோள் காட்டி கருத்து வெளியிட்ட அவர், “பாலின சமத்துவம் என்பது நமது காலத்தின் நிறைவு செய்யப்படாத பணி” என்ற கருத்தை அவர் வலுப்படுத்தினார்.

முடிவெடுப்பதில் பெண்களின் சம பிரதிநிதித்துவத்தின் மறுக்க முடியாத நன்மைகளை ஷார்ப் எடுத்துரைத்தார்: “முடிவெடுப்பதில் பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம் உள்ளது.வீடுகள் செழிக்கின்றன. சமூகங்கள் செழிக்கின்றன. வணிகம் அதிக லாபகரமானது.நாடுகளும் அதிக வளமானவை என்பதற்கான சான்றுகள் உலகம் முழுவதும் தெளிவாக உள்ளன என்பதை நாங்கள் காண்கிறோம்.” சர்வதேச தளங்களில், குறிப்பாக G20 மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவின் தலைமையையும் அவர் வரவேற்றார்.

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை நாங்கள் மிகவும் அங்கீகரிக்கிறோம்.பாராட்டுகிறோம்.இந்தியா முன்வைத்த பல சர்வதேச முயற்சிகள் மூலம், இந்தியா முழுவதும் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் உண்மையில் ஒரு பெரிய வாக்குறுதியை அளிக்கிறது. இந்த தாக்கத்தின் அளவை உண்மையில் மிகைப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் சிலவற்றில் 25 அல்லது 50 சதவீதத்திற்கு மேல் பங்களிக்க முடியும்.எனவே இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மார்ச் மாதம் பாலின சமத்துவ மாதமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால், பாலின சமத்துவத்தை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை ஷார்ப் மீண்டும் வலியுறுத்தினார். ” ஒவ்வொரு நாளும் மகளிர் தினமாக இருக்க வேண்டும். நாம் பாலின சமத்துவத்தை அடையும் வரை, நாம் கொண்டிருக்கும் இலக்குகளை அடைய முடியாது.” பரந்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார், ” 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் 2047 விகாசித் பாரத் – இவை அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரே பாதையில் இரண்டு படிகள். இது இன்று மிகவும் உற்சாகமான மற்றும் மிக முக்கியமான கலந்துரையாடலாகும்” என்றும் அவர் கூறினார்.

பாலின சமத்துவமின்மையின் உலகளாவிய சவால் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய ஷார்ப், “எந்தவொரு நாடும் உண்மையில் முழு பாலின சமத்துவத்தை அடையவில்லை. இது ஒரு உலகளாவிய சவால்.” இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், இன்னும் முடுக்கம் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “இந்தியாவில், உத்தியோகப்பூர்வ தரவுகளின் பிரகாரம் பாலின சமத்துவத்திற்கு கூடுதல் முடுக்கம் தேவை என்பதைக் காட்டுகிறது .”

இந்தியாவின் அண்மைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பாராட்டிய அவர், “மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பார்த்தோம்.எனவே அந்த மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மிக முக்கியமான அதிகரிப்புகளைக் காணப்போகிறோம்” என்று கூறினார். உள்ளூர் நிர்வாக மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார், “நிச்சயமாக, உள்ளூர் மட்டத்தில் – எங்கள் மட்டத்தில் பஞ்சாயத்தில், ஏற்கனவே பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முடிவெடுப்பது மிக அதிகமாக உள்ளது. அது மிகவும் முக்கியமானது”.

இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.ஆனால் முன்னேற்றத்தின் அறிகுறிகள் காணக்கூடியதாக உள்ளது என்பதை ஷார்ப் ஒப்புக்கொண்டார். “பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்.ஆனால் அவை அதிகரித்து வருகின்றன – இந்தியாவில் இங்கு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது பல நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்று நான் கருதுகிறேன். ”

இந்தியாவில் பெண்கள் வலுவூட்டலின் எழுச்சியை ஒரு பலமான சக்தியாக அவர் விவரித்தார்.இந்தியாவின் பெரிய அளவிலான வளர்ச்சி முன்னேற்றத்தை மேலும் விரிவாகக் கூறிய ஷார்ப், மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதில் நாட்டின் பங்கைப் பற்றிப் பேசினார்.

“இந்தியாவில் நாம் காண்பது அளவிலான வளர்ச்சி தாக்கம். கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் இந்த நம்பமுடியாத இந்திய வளர்ச்சிக் கதையில் பணிவான பங்காளிகளாக இருப்பதில் ஐ.நா என்ற வகையில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். அதில் ஒரு பெரிய பகுதி முற்றிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலும் ஆகும்.”என்றும் அவர் தெரிவித்தார்.🔺


காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...