SHARE
Tuesday, January 29, 2013
சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்பட, யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத்தூதரகத்தை நிறுவ கத்தோலிக்க பெரிய பாதிரி பகிரங்க அழைப்பு!
சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்பட, யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத்தூதரகத்தை நிறுவ கத்தோலிக்க பெரிய பாதிரி பகிரங்க அழைப்பு!
இந்தியாவைப் போலவே அமெரிக்காவும், யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகத்தை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள், நேற்று யாழ். ஆயரைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட்டு வருகிறது. அதுபோலவே, அமெரிக்காவும் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, இங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்காணிக்கக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம், யாழ். குடியியல் சமூகத்துடனான தொடர்புகளை பேணி வரமுடியும்” என்று தாம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவைப் போலவே அமெரிக்காவும், யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகத்தை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள், நேற்று யாழ். ஆயரைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட்டு வருகிறது. அதுபோலவே, அமெரிக்காவும் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, இங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்காணிக்கக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும். இதன்மூலம், யாழ். குடியியல் சமூகத்துடனான தொடர்புகளை பேணி வரமுடியும்” என்று தாம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முத்துக்குமார் நாலாம் ஆண்டு நினைவு!
தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!
இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் முன் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.
அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
![]() |
| முத்துக்குமாரின் நாலாம் ஆண்டு நினைவில் வை.கோ, நெடுமாறன் |
Subscribe to:
Comments (Atom)
China rolls out the red carpet for Keir Starmer
China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...


