தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட குழு
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில்ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட குழு அதன் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை என்கிறார் அமைச்சர் டியு குணசேகர
கொழும்பு, ஒக்ரோபர் 29
விடுதலைப்புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பரிசீலனை செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கவென குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மூத்த அரச சட்டத்தரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளோ, குற்றச்சாட்டுக்களோ இன்றி நீண்ட நாள்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இதன் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் என புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர "உதயனு'க்குத் தெரிவித்தார். நேற்று "உதயன்' செய்தியா ளர் அமைச்சரைச் சந்தித்து உரை யாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"அரச படைகளுடன் நேரடியாகச் சண்டையிட்டு சரணடைந்த முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் பயிற்சிகளை வழங்கி விடுதலை செய்கின்றீர்கள். அதேவேளை, புலிகளுக்குப் புகலிடம் அளித்தனர். உணவு கொடுத்தனர். ஆதரவளித்தனர் எனச் சந்தேகத்தின் பேரில் நீண்ட காலமாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே; இது ஏன்?'' என்று "உத யன்"செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
"இவ்விடயத்தில் உள்ள உண்மைத் தன்மையையும், சட்டச்சிக்கல்களையும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.சரண் அடைந்தவர்கள் சந்தேகப் பேர்வழிகள் அல்லர். நேரடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தனர். இதனால் எம்மால் மன்னிப்பு வழங்கப்பட்டது. சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகை வழங்கப்படவில்லை. விசாரணைகளும் நடத்தப்படவில்லை. இதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே சட்டமா அதிபருடன் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளேன். இதன் காரணமாக சிரேஷ்ட அரச சட்டத்தரணிகள் பத்துப்பேரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பாக தனித்தனியாகப் பரிசீலனை செய்து வருகின்றனர். குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகத்தின் பேரில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு முடிவு காணப்படும்.குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பின் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஏனையோர் விடுதலை செய்யப்படுவர். வழக்கு விசாரணைகளும் துரிதப்படுத்தப்படும்'' என
அமைச்சர் டியு குணசேகர கூறினார்.தற்போது புதியமகசின் சிறைச்சாலையில் 115 பேர், வெலிக்கடையில் 18 ஆண்கள், 55 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட கொழும்பு விளக்கமறியலில் 340பேர், நீர்கொழும்பில் 26,
அநுராதபுரத்தில் 45, வவுனியாவில் 27, யாழ்ப்பாணத்தில் 30, திருகோணமலையில் 40, மட்டக்களப்பில் 35, கண்டியில் 16, பதுளையில் என மொத்தம் 763, தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.
செய்தி: யாழ் உதயன்
SHARE
Saturday, October 30, 2010
பக்ச பாசிஸ்டுக்களின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கொலை மிரட்டல்

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது, களனியில் பெற்றோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டது ஆகியன தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது, களனியில் பெற்றோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டது ஆகியன தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: களனியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது முறையா?பதில்: இது குறித்த அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை.
கேள்வி: பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது குறித்து அறிக்கை கிடைத்ததா?
பதில்: இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் சாட்சிமளிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அறிக்கையை எதிர்பார்க்க முடியுமா?
கேள்வி : நல்லிணக்க ஆணைக்குழு முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் சாட்சியமளிக்கும்போது 900 பொலிஸார் கொல்லப்பட்டதற்கு கருணாவே காரணம் எனத் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: இறுதி அறிக்கை கிடைத்ததும் இது குறித்து ஆராயப்படும். அப்போது நீங்கள் இருப்பீர்களா என்பது சந்தேகமாகவுள்ளது
கேள்வி: ஏன் என்னைக் கடத்திக் காணாமலாக்கப் போகின்றீர்களா?
பதில் : நீங்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை
தகவல் : நன்றி யாழ் உதயன்
Subscribe to:
Posts (Atom)
இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்
இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...

-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...