SHARE

Monday, March 12, 2012

மக்களுக்கு கூற முடியாத சம்பந்தனின் ஜெனீவா ரகசியம்?

``மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது, அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக   ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது, ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளது.``  இரா.சம்பந்தன்.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் முயற்சி – இரா.சம்பந்தன்.
12. Mar, 2012 Categories: Srilankan News

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதப்புரைகளில் திருத்தங்களை செய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் முயற்சி
எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதனால் ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடையும் வரை அரசாங்கத்தை
சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறிய சம்பந்தன், அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை தொடர்பான விவகாரங்களை கையாள ஜெனீவாவில்
கூட்டமைப்பின் சார்பில் பிரதிநிதி ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள் தமிழ் நாளேடுகளின் பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோதே சம்பந்தன் இவ்வாறு கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழத் தேசிய கூட்டமைப்பு ஏன் பங்குகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கமளித்த சம்பந்தன் சர்வதேச
நாடுகளினுடைய ஆலோசணைகளை மீறி செயற்பட முடியாது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் மற்றும் சர்வதேச கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தங்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய சம்பந்தன் அதன் ஓரு கட்டமாகவே அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சென்றிருக்கலாம் என தமிழ் மக்களில் அனேகமானவர்கள் கூறுவது நியாயமானதுதான் என்று தெரிவித்த அவர், அவர்களுடைய உணர்வுகளை கூட்டமைப்பு மதிக்கின்றது என்றும் தெரிவித்தார். ஆனால் மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது என்று குறிப்பிட்ட அவர், அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது என்றும், ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கும் என்று
கூறமுடியாது என்று தெரிவிக்கும் சம்பந்தன், ஆனாலும் முதன் முறையாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறு வேண்டிய
கடப்பாடு ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இவ்வாறான ஒரு இடத்தில் இருந்துதான் தமிழர்தரப்பு மேலும் பல முன்னேற்றகரமான
செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மீது உள்ள கோபங்களை
உடனடியாக தீர்ப்பதற்கு மனித உரிமைச் சபையின் கூட்டத்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.

அதற்கு மேலும் சில நகர்வுகள் தேவைப்படுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். அதேவேளை இலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளை பிளவு
படுத்தியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவு படுத்த அரசாங்கம் முயற்சித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனாலேயே தமிழ்
தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஒரேயொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான பியசேனவை அரசாங்கம் களவாடியதாக குற்றமச்hட்டிய
சம்பந்தன், அத்துடன் நின்றுவிடாது தொடர்ந்தும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி: தீபம் தொலைக்காட்சி இணையம்.

Marx/Engels Collected Works

  This is the listing of the Marx/Engels Collected Works (MECW), as compiled and printed by Progress Publishers of the Soviet Union in colla...