Wednesday 14 June 2017

கட்சித் தோழர் பச்சியப்பனுக்கு கழக மக்கள் சிவப்பு அஞ்சலி!

கட்சித் தோழர் பச்சியப்பனுக்கு

கழக மக்கள் சிவப்பு அஞ்சலி!

தோழர் பச்சியப்பன் மறைந்தார்.

வரின் இலட்சியம் மறையவில்லை. பாலக்கோடு - தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது, அவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்! பச்சியப்பன்  வித்துடல் கூட, எங்கே புரட்சித் தீயை பற்ற வைத்து விடுமோ என்று அஞ்சி ஆளும் வர்க்கத்தின் நக்சல் ஒழிப்பு பிரிவு இரங்கல் நிகழ்ச்சியைக் கூட வேவு பார்த்தது, வெட்கக் கேடானது.

போலிச் சுதந்திரம், போலி ஜனநாயகத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கு, நிலப்பிரபுத்துவ  ஒடுக்குமுறையை எதிர்த்து கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி், தன்னியல்புப் புரட்சி இயக்கத்தில் தன்னை இளம் வயதில்  இணைத்துக் கொண்டு போராடிய போர் வீரர் தோழர் பச்சியப்பன் .

புரட்சிகர இயக்கத்தை ஒடுக்க  தமிழக காவல்துறை தொடுத்த பல்வேறு விதமான அடக்கு முறைகளை எதிர்த்து கதிகலங்க வைத்த களப் போராளி பச்சியப்பன் .

1980 ஆம் ஆண்டுகளில் நக்சல் ஒழிப்பின் ஒரு பகுதியாக, காவல்துறை தோழர் பாலனைக் கைது செய்து  படுகொலை செய்த, பாலக்கோடு சீரியம்பட்டி பொதுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் தோழர் பச்சியப்பன்.

நக்சல்பாரி இயக்கத்தின் நரோத்தினிய* - தன்னியல்புத் தனிநபர் பயங்கரவாதப் பாதையை, விமர்சன சுயவிமர்சனம் செய்து மார்க்சிய லெனினிய வழியிலே,இந்திய மக்கள் ஜனநாயகப்  புரட்சியினை நிறைவேற்றப் போராடும் ம.ஜ.இ.க வின் முன்னணி செயல்வீரர், பிரச்சாரப் பீரங்கி.

தோழர் பச்சியப்பன் கலைப்புவாதம், திருத்தல்வாதம் , தொழிற்சங்கவாதம் போன்ற பல்வேறு விதமான மார்க்சிய விரோத போக்குகளை எதிர்த்துப் போராடிய பாட்டாளி வர்க்க போர் வீரன்!

இவ்வாறு தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி விடைபெற்ற தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலத்தில்  ம.ஜ.இ.க தோழர்கள்,கழக மக்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று  சிவப்பு அஞ்சலி வீர வணக்கம் செலுத்தினர்.

தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலக் காட்சிகள்;






 
தோழர் பச்சியப்பன் நாமம் நீடூழி வாழ்க!
கழகப் பணி தொடர்க!
=========================== *
* நரோத்தியம்: ரசியப் புரட்சிகர இயக்கத்தில் 1860-70 ஆம் ஆண்டுகளிடையே தோன்றிய ஒரு குட்டி முதலாளித்துவப் போக்கு.நரோத்தியவாதிகள் எதேச்சாதிகார முறையை ஒழிக்கவும் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவும் விரும்பினார்கள்.அவர்கள் தம்மைத்தாமே சோசலிஸ்டுக்கள் என்று கருதினார்கள்.ஆனால் அவர்களது சோசலிசம் கற்பனாவாதமானது......மக்கள் என்பதற்கு ரசிய மொழியில் நரோத் என்பர்.இதனால் நரோத்தியவாதிகள் என்ற பெயர் பெற்றனர். 1880-90 ஆண்டுகளில் நரோத்தியவாதிகள் ஜாராட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையில் இறங்கினர்.பணக்கார விவசாயிகளின் -குலாக்குகளின்- நலன்களைவெளியிட்டனர்.மார்க்சியத்தை எதிர்த்துப் போராடினர்.
( லெனின் தேர்வு நூல்கள் 12(4) பக்கம் 274-5)

Russia-China: Two countries' coordination 'propelling establishment of a fair multipolar world order'

  Putin says China clearly understands roots of Ukraine crisis Two countries' coordination 'propelling establishment of a fair multi...