SHARE

Monday, March 10, 2014

மெல்லத் தமிழ் இனிச் சாகும்.








மெல்லத் தமிழ் இனிச் சாகும்.

மேற்காண்பவை சிங்களத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளிலும், நிறுவனங்களிலும் வைக்கப்பட்டு வருகின்ற அடையாளப் பலகைகள் ஆகும்.இவை வெறுமனே எழுத்துப் பிழைகள் சம்பந்தப்பட்ட மொழிப்பிரச்சனை மட்டுமல்ல,சிங்கள அரசுமுறையின் அதிகாரவர்க்கப்பிரிவில் `தமிழ்` அங்கம் பெறாமை ஒரு முக்கிய காரணமாகும்.அதாவது,போதுமான தமிழ் ஊழியர்கள் இன்மை,மும்மொழிக் கொள்கை அமூல்படுத்தப்படாமை, நவீன கணனி உலகுக்கு அதிகாரத்துறையில் தமிழ் உயர்த்தப்பட்டு-வளர்த்தெடுக்கப்படாமை,சிங்கள அதிகாரிகளின் அலட்சியப் போக்கு,தமிழ் ஊழியர்களின் அடிமைப்பட்ட நிலை போன்ற அரசுத் துறைப் பிரச்சனைகளும் முக்கிய காரணியாகும்.இந்த அரசுமுறை ஜனநாயகப் படுத்தப்படாமல் மொழிப்பிரச்சனை தீராது. அரசு எந்திரம் சிங்கள மயப்பட்டிருப்பதை மாற்ற வேண்டுமானால் தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவேண்டும்.இல்லையெனில் அரசு மற்றும் அதிகார, கல்வித் துறைகளில் மெல்லத் தமிழ் இனிச்சாகும்.இதற்கு சில சாட்சியங்களையே மேலே காண்கின்றோம்!

குறிப்பு: தகவல் மற்றும் புகைப்படங்கள், நன்றி Face Book நண்பர்

பாருங்கள்,அதிர்ச்சியடைவீர்கள்..! குளியாபிட்டியவில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம்
கண்காட்சியின்போது வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளைப் பாருங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்!

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...