SHARE
Wednesday, December 15, 2010
தமிழீழ தேசிய கீதம்
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே!
அமுதை வென்ற மொழியினள்
அருள் கனிந்த விழியினள்
அரிய பண்பு நிதியினள்
அவனி மெச்சும் மதியினள்;
மமதை கொண்ட பகைவரும்
வணங்கும் அன்பு விதியினள்
வளரும் 25 இலட்சம் மக்கள் கொண்ட பதியினள்.
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
பட்டிப்பளை மகாவலி பயிலருவி முத்தாறுகள்,
பல வளங்கள் பொலியவே எழில் நடம் செய்துலவிடும்,
மட்டக்களப்பு யாழ்நகர் மாந்தை வன்னி திருமலை,
மகிழ்வொடு மலைத் தமிழர்கள்
மலரடி தொழும் இனியவள்.
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
தலை நிமிர்ந்து வாழ்கவே!
தலை நிமிர்ந்து வாழ்கவே!
Ukraine-Russia peace talks
Ukraine-Russia peace talks: How US envoys and a 28-point plan failed to secure deal... India has significantly increased its diplomatic invo...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...