Friday 2 October 2009

அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலை அல்ல: துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி


அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலை அல்ல: துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி
First Published : 03 Oct 2009 01:26:07 AM IST
இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்)சென்னை, அக். 2: இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. எனவேதான் அவற்றை பார்வையிட யாரையும் அனுமதிக்கவில்லை என இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து இலங்கையை இப்போதுதான் மீட்டுள்ளோம். எங்கள் நாட்டு அதிபர் மஹிந்த ராஜபட்ச மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர். பயங்கரவாதிகளிடமிருந்து எங்கள் மக்களை பாதுகாத்த அவருக்கு, மக்களை எங்கு, எவ்வாறு குடியமர்த்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.
இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என பலரும் கேட்கிறார்கள். முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவேதான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை.
மீனவர்களை தாக்கவில்லை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதாக தமிழக ஊடகங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் வருகின்றன. இது குறித்து இலங்கை கடற்படையை நாங்கள் தொடர்பு கொண்டு கேட்டோம். இது, எவ்வித அடிப்படையும் அற்ற, முழுவதும் உண்மைக்கு புறம்பான செய்தி என கடற்படை மறுத்துள்ளது.
இந்திய, இலங்கை கடற்படைகளுக்கு இடையே உள்ள நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், திட்டமிட்டு இதுபோன்ற ஊடக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை மீனவர்களே அதிகம் கைது: இலங்கை ஒரு சுயசார்பான, சுதந்திரமான நாடு. அந்நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க வேண்டியது கடற்படையின் கடமை.
எனவே இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை கடற்படை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான் இலங்கை கடல் எல்லையில் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதுபோல் இந்திய எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களும் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக 560 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 100 இந்திய மீனவர்கள்தான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர்.
கச்சத் தீவு எங்களுக்கே: கச்சItalicத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு உள்ளதா, இல்லையா என விவாதிக்க எதுவும் இல்லை. கச்சத் தீவு என்பது இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று. எனவே கச்சத் தீவு குறித்து இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி: தினமணி (தமிழகம்)
வவுனியா ஆஸ்பத்திரியின் பதில் வைத்திய நிபுணர் உமாகாந் புலனாய்வுப் பிரிவினரால் கைதுயாழ் உதயன் 2009-10-02 05:57:44 வவுனியா பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய டாக்டர் உமாகாந்த் நேற்றுமுன்தினம் இரவு வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார் என வவுனியா வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர் சங்க வவுனியா கிளையின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.அத்துடன், பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், மேல் படிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்காக இருக்கும் அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு அவர் மீது குற்றமின்றேல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். வைத்திய நிபுணர் உமாகாந்த் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறினார்.

Comrade Sa'adat: "Negotiations" provide cover for occupation crimes and must end


Comrade Sa'adat: "Negotiations" provide cover for occupation crimes and must end.
The anniversary of Al-Aqsa Intifada and the ongoing Zionist assaults urgently require all Palestinian forces to restore national unity to confront the occupation attacks and honor our people, said Comrade Leader Ahmad Sa'adat, the imprisoned General Secretary of the Popular Front for the Liberation of Palestine, on September 28, 2009.
Attorney Buthaina Duqmaq, President of the Mandela Foundation for Prisoners and Detainees, met with Comrade Sa'adat on September 28 at Ramon prison, and relayed his comments on the current situation. Comrade Sa'adat denounced the vicious Zionist attacks on Jerusalem and the desecration of Al-Aqsa mosque by invading gangs of settlers. He also said that the ongoing and rapacious settlement plans of the Zionists require the development of an immediate and practical comprehensive national plan to end the division and restore national unity in order to confront these challenges and dangers to the Palestinian people and national cause.
Comrade Sa'adat sharply denounced the Abu Mazen-Netanyahu-Obama meeting on the sidelines of the United Nations General Assembly meeting in New York and demanded an end to all such negotiations, saying that it only provided cover for the occupying power as it continues its aggression against our people, and that such "negotiations" show no regard for the seriousness of the situation in the eyes of the Palestinian people.
He further said that unity in confrontation of the occupier honors our people and our martyrs on the anniversary of Al-Aqsa Intifada. He noted the extreme Zionist attacks on Al-Aqsa on the anniversary of the Intifada, which was launched from Al-Aqsa, and said that our people require national unity to defend and protect the achievements of the Intifada and the future of our national cause.
He called upon all Palestinian organizations to respond to the steadfastness of our people, our prisoners, our wounded and our martyrs, with movement toward national unity that closes the file on division and upholds the supreme national interest. Comrade Sa'adat demanded that the next round of national dialogue be the final round, ending with meaningful unity that can support the Palestinian people's struggle.
Comrade Sa'adat's isolation from the general Palestinian prison population has continued for six months now, and the next hearing on his isolation has been postponed into early October. In addition, his wife Abla has been prevented from visiting him at Ramon prison for the past three months due to the occupation authorities, and he is provided with newspapers only once or twice a week.
He ended his comments to Duqmaq by praising the steadfastness of our Palestinian people on their land and their adherence to their national and legitimate right to defend their land and their rights and reject the occupation.
Source:PFLP 's Official WEB

காஞ்சிவரம் ஒரு கற்பூரவாசனை

''என் வாழ்நாளின் கனவும்,சாதனையும்தான் காஞ்சிவரம் என்றும் இது வியாபாரத்திற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல என் ஆத்ம திருப்திக்காக எடுக்கப்பட்ட படம் என்று சொன்னார் இயக்குநர் பிரியதர்ஷன். படத்தை எடுத்ததும் திரையரங்குகளில் வெளியிடவில்லை. உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிற்கு அனுப்பிவைத்தார். திரைப்பட விழாவில் காஞ்சிவரத்தை பார்த்த திரைப்படக் கலைஞர்கள் பலரும் படத்திற்கு பெரிதும் பாராட்டு வழங்கினர். ஒரு வருடத்திற்கு மேலாக உலக திரைப்பட விழாக்களில் பவனிவந்த பின்புதான் தமிழ்நாட்டில் காஞ்சிவரம் வெளியானது. நல்ல படங்களுக்கு எத்தகைய வரவேற்பு!'' - (சினிமாச் செய்திகளிலிருந்து).
நெய்பவனுக்குத் துணியோ தறியோ, சொந்தமில்லை என்னும் கசப்பான உண்மையை எடுத்துச்சொன்ன சினிமா காஞ்சிவரம்.கதை நிகழும் காலகட்டம் போலிச்சுதந்திரத்துக்கு முந்தையது. பட்டு நெசவாளியான வேங்கடம்-பிரகாஷ்ராஜ்- தன் கல்யாணத்தின்போது தன் மனைவியை பட்டுப்புடவையில் அமர வைத்து தாலி கட்டுவேன் என தனக்குள் சபதம் ஏற்கிறார்.அது வறுமையின் காரணமாக இயலாமல் போக, தன் மகளை -தாமரை-மணவறையில் பட்டுப்புடவையில்தான் அமர வைப்பேன் என்று ஊர்அறிய சபதம் செய்கிறார்.இதை நிறைவேற்ற அவர் தறியில் பட்டுநூலை திருட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இதன் விளைவாக சட்டம் அவரைக் கைது செய்கிறது.கைது செய்யப்பட்டு சிறை சென்ற வேங்கடம் படுத்த படுக்கையாகக் கைகால் வழங்காமல் கிடக்கும் மகளைப் பார்க்க இரண்டு நாட்கள் அனுமதி பெற்று பொலிஸ் காவலில் ஊருக்கு
வருகிறார். பராமரிக்க ஆளின்றியிருக்கிற தன் அன்பு மகளைப்பார்க்கிறார்.வாழ வைக்க வழியோ வாய்ப்போ அற்ற அந்த ஏழைப் பட்டு நெசவாளி {எலிப் பாசாண) நஞ்சு கலந்த சோறையூட்டி மகளை அன்புடன் கொல்கிறார்.மரணச் சடங்கில், பதினாறு வருடங்களாக நெய்தும் முடிவுறாத சேலைத்துண்டை இரகசிய தறியில் இருந்து அரிவாளால் வெட்டிக்கொண்டு வந்து உடலைப் போர்த்துப் பார்க்கையில்: முகத்தை மூடினால் கால் மூடப்போதாது, காலை மூடினால் முகம் மூடப்போதாது என வெட்டுப்பட்டுக்கிறது அந்தச் சிவப்புப் பட்டுத்துணி.பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பாடுபடுகிறார் தந்தை வேங்கடம்.48 மணி நேரமாகிறது,போலீசார் சரி, வா போகலாம் என்று சொன்னதும் திரும்பி அவர்களைப்பார்த்து வேங்கடம் வெறுப்புச் சிரிப்பை உதிர்க்கிறார், தாமரை முழுதும் மூடாமல் உதிர்ந்து கிடக்கிறது;
காஞ்சிவரம் இதோடு முடிகிறது,
மன்மோகன் சோனியாகும்பலின் பாரத புரம் தொடர்கிறது.பாரத புரத்தில் காஞ்சிவரம் நிச்சயம் ஒரு கலைத்துறைப் பாதிப்பை நிகழ்த்தும்.நன்றி காஞ்சிவரம் கலைஞர்களுக்கு.
குறிப்பு: You Tube இணையத்தில் 13 தனித்தனிப் பாகங்களாக காஞ்சிவரத்தைக் காணமுடியும்

Russia-China: Two countries' coordination 'propelling establishment of a fair multipolar world order'

  Putin says China clearly understands roots of Ukraine crisis Two countries' coordination 'propelling establishment of a fair multi...