SHARE

Saturday, October 09, 2010

பிரிந்து செல்லும் உரிமையே நமது பிரதான முழக்கம்

அதிகாரப்பரவலாக்கம் அல்ல பிரிந்துசெல்லும் உரிமையே நமது பிரதான முழக்கம்!
நிலப்பிரச்சனை, விவசாயப் பிரச்சனை, தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு சேனாதி கூறும் அதிகாரப்பரவலாக்கம் அல்ல பிரிந்து செல்லும் உரிமை உத்தரவாதப்படுத்தப்படுவதே!
மேலும் இந்த உரையை ஆழ்ந்து காது கொடுத்துக் கேளுங்கள், பின்வரும் கோட்பாடுகளை இவர் உரை பற்றி நிற்பதைக் காண்பீர்கள்!
1) இவர் அரசியல் விடுதலை பற்றியோ, அரசியல் சுயநிர்ணயம் பற்றியோ பேசவில்லை,அதிகாரப்பரவலாக்கம் பற்றியே பேசுகின்றார்!
2) ''அது வடக்கு மாகாணாமாக இருக்கட்டும், கிழக்கு மாகாணாமாக இருக்கட்டும் அந்த மாகாணங்களுக்கு நில அதிகாரம் வேண்டும்'' என்று கோருகையில் தமிழீழத்தாயகத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களாக துண்டாடிய தமிழீழ ஆக்கிரமிப்பாளர்களின் சதியை அங்கீகரிக்கின்றார்.
3)மேலும் ஒரு படி மேலே போய் இவரது அதிகாரப் பரவலாக்க மாதிரிக்கு இவர் இந்திய அமைப்பை உதாரணம் காட்டுகின்றார்.
4) ஆக மொத்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களை; இந்தியா இலங்கையில் தன் நலன்களை ஈட்டுவதற்கான பேரப்பொருளாக பயன்படுத்த, பேடித்தொழில் செய்யும் கூட்டம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
5) புலத்தில் 'தமிழீழ அரசாங்கம்' அமைப்போருக்கு அகத்தில் ஆணிவேர் இவர்கள் தானாம்!
6) அகத்தின் அழகு முகத்தில்தெரியும்!!

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...