SHARE

Friday, March 18, 2016

இந்திய மக்களுக்கு காங்கிரசின் நற்செய்தி!

பசுவை தேசத் தாயாக அறிவித்தால் ஆதரிப்போம்: காங்கிரஸ்

By காந்திநகர்
First Published : 19 March 2016 03:35 AM IST

குஜராத் மாநிலத்தில், பசுவை தேசத் தாயாக அறிவிக்கும் முடிவை பாஜக தலைமையிலான மாநில அரசு எடுத்தால் ஆதரிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், இதுதொடர்பாக பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த 8 விவசாயிகள் பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஹிந்தாபாய் வம்பாடியா என்ற விவசாயி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. அவையில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா வலியுறுத்தினார். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் கண்பத் வசாவா அனுமதி மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்எம்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதீஷ் படேல் கூறுகையில், ""மாட்டிறைச்சியை உண்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் காங்கிரஸ் எம்எம்ஏ ஒருவர் கடந்த காலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளித்துள்ளார். எனவே, பசுவதை பற்றி பேசுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை இல்லை'' என்றார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சங்கர்சிங் வகேலா கூறுகையில், ""பசுவை தேசத் தாயாக பாஜக அறிவித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். வாக்குகளைக் கவர்வதற்காக மட்டுமே பசுப் பாதுகாப்பு பற்றி பாஜக பேசுகிறது'' என்றார்.

கடையடைப்புப் போராட்டம்: இதனிடையே, பசுவை தேசத் தாயாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, "பசு பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ராஜ்கோட் மாவட்டத்திலும், செளராஷ்டிரம் பகுதியிலும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு, விஹெச்பி, பஜ்ரங் தள், படேல் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழு ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

சீர்காழியில் ம.ஜ.இ.க தோழர் மனோகரனின் வெள்ள மறுவாழ்வு விவசாயப் புரட்சி உரை.






இணைய ஒலி நாடா நன்றி: ம.ஜ.இ.க.SR

Thursday, March 17, 2016

'பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்`- தமிழ் Mirror


குறிப்பு: தமிழ் மிரர் சிறிலங்காவில் வெளிவரும் Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையின் சகோதர நாளாந்த தமிழ்பத்திரிகை ஆகும்.(ENB)

தமிழக ஊடகப் பிரச்சாரம்
நக்கீரன்
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் ; 
தமிழ்நாட்டில் வாழ்கிறார் - பரபரப்பு தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.  என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப் பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. 

பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர். நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளி தழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

 அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.

 இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினத்தந்தி

விடுதலைபுலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் இலங்கை பத்திரிகை தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்பு வலுவாக இருந்ததற்கு இவரது உளவுப் பிரிவு தகவல்கள் முக்கிய பங்கு வகித்தது. சிங்கள படை நகர்வுகளை மிகத் துல்லியமாக பிரபாகரனுக்கு பொட்டுஅம்மான்தான் வழங்கினார்.புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.

என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. பிரபாகரன் உடலை இந்த உலகுக்கு காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர்.நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளார் 

அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர் களும் உள்ளனர். தமிழ்நாட் டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான தகவல்களை  கடந்த அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, March 16, 2016

வெற்றிச் செல்வி: மரணம் தாண்டியும் மறக்க முடியாது.



மனதின் மடல்

Posted on December 2, 2013  


பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.


நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.

என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?

என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.

அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.

இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.

நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.

அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.

இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.

உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.

நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.

தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.

என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.

நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.

நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.

 — வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி: படைப்புகள் கிடைக்கக் கூடிய இடம்


வெற்றிச் செல்வி: போராளியின் காதலி


நாவல் குறித்து DJThamilan  குறிப்பு:

இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன்.

முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப் பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.

வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன். 
அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.

இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) (மன்னார் நகரின் அடம்பன் கிராமத்தில் ENB) வசித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.

இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.
 (ஆடி 27, 2015)

http://djthamilan.blogspot.co.uk/2015/09/blog-post.html

வெற்றிச் செல்வி: ஈழப்போரின் இறுதி நாட்கள்


Tuesday, March 15, 2016

வெற்றிச் செல்வி படைப்புகள்

வெற்றிச் செல்வியின் ஒரு கவிதை!



எங்கள் கண்ணீருக்கு மட்டுமல்ல
செந்நீருக்கும் விலையற்றுப்போன
வேதனை வரலாற்றை எழுதுவதால்
யாருக்குப் பயன்?

பத்திரிகைகள்
காலத்தின் கண்ணாடிகள்தான்.
எனினும்
குருதிப் படிவும் பிணத்தின் நெடியும் வீசும்
மரணக்குழியாகிய எனது முகத்தை
கண்ணாடியில் பார்க்க எனக்கு விருப்பமில்லை.

வீரத்தின் கொடியேற்றங்களை எழுதிய
எனது பேனாவுக்கு,
தியாகத்தின் உச்சங்களை பாராட்டிய
எனது பேனாவுக்கு,
தோழிகளின் குறும்புகளை வடித்த
எனது பேனாவுக்கு,
துயர்மிகுந்த அந்த வீழ்ச்சியை எழுத
பிடிக்குதேயில்லை.

துகிலுரியப்பட்ட பெண்களாய்
என் தோழிகளை பார்ப்பேன் என்று
நான் கனவிலும் நினைத்தவளில்லை.

இப்போது கனவுகளும் நினைவுகளும்
அவைகளாகவே இருப்பதனால்
எனது எழுத்து
என்னோடு முரண்டுபிடிக்கிறது.

எனது முகத்தின் வடுக்களை பார்த்து
இன்னொருவர் அழுவாரா?
துடிப்பாரா?

யாருக்கு வேண்டும் அந்த வலியின் பிரதிபிம்பங்கள்?
உன்னையும் என்னையும் பெற்றதற்காக
பெருமைப்படவேண்டிய மண் இப்போதெம்மை
புனைபெயர்களில் ஒழித்துவைத்திருப்பதற்காக
அழுகிறேன்.

என் அழுகுரல் கேட்கிறதா?
நித்திரைகூடப் புறக்கணித்த என் இரவுகள்
என்னை குத்திக்கிழிப்பதால்
நானிடும் ஓலம் எவரின் செவிகளையும்
தொட்டுவிடுமா என்ன?

எனினும்
வழியும் விழிகளை துடைத்தபடிஎன் நம்பிக்கைகள்
புதிதாய் துளிர்விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி ஒரு போராளிப் படைப்பாளி!

படைப்பாளிப் போராளி!


30 ஆண்டுகள் அகிம்சாவாதிகளுக்கு எதிராகவும், அடுத்த 30 ஆண்டுகள் ஆயுதப் போராளிகளுக்கும், ஆதரவான பொதுமக்களுக்கும் எதிராகவும் ஆக மொத்தம் அறுபது ஆண்டுகள் சிங்களமும்,இந்தியமும்,ஏகாதிபத்தியமும், நடத்திய இனப்படுகொலை யுத்தத்தை எதிர்த்த முதலாவது ஈழ விடுதலை யுத்தம் மே 18 2009 இல் முள்ளிவாய்க்காலில் ஓய்ந்தது;

``துயர் மிகுந்த அந்த வீழ்ச்சியை`` அரசியல் இலக்கிய வரலாறாக்குகின்றது, வெற்றிச் செல்வியின் கலைத்துவம்.


துணை புரிகிறது வலது கண்ணையும், செவிப்பறைகளையும், வலது கையையும் இழந்து புதிய போராயுதமாக அவர் பழக்கி எடுத்துக் கொண்ட இடது கரத்தின் காயம் பட்ட ஐந்து விரல்கள்.

வெற்றிச் செல்வி ஈழ மன்னார் மாவட்டத்தில் அடம்பன் என்கிற நெல் விவசாயக் கிராமத்தைச் சார்ந்தவர்.தந்தை வேலு விவசாயி, தாயார் பொன்னியின் செல்வன், நளவெண்பா போதித்த இலக்கியவாதி.

1970 களின் உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியைச் சார்ந்து, தரகு வணிக நாடாக இருந்த இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி வெடித்தது.சிங்களம் அன்றும் இன்றும் கையாளும் அதே தந்திரத்தை 70 களிலும் கடைப்பிடித்தது. ஏகாதிபத்திய நெருக்கடிக்கு முண்டு கொடுக்க உள்நாட்டில் இன மோதலை ஊக்குவித்தது.

1980 களில் இந்த இன ஒடுக்கு முறை அரசியல் இனப்படுகொலை யுத்தமாக வடிவெடுத்து 1983 இல் உள் நாட்டு யுத்தமாக மாறியது.

1970 களில் இலங்கையில் ஒரு விவசாயப் பிரச்சனை எழுந்தது, 1972 அரசியல் யாப்பு,தரப்படுத்தல் திட்டமும், அதை எதிர்த்த ஈழ மாணவர் இயக்கமும், ஜே.வி.பி.இன் ஆட்சிக் கவிழ்ப்பு கிளர்ச்சியும் ஒரு மரத்தின் இரு கிளைகளாகும்.

இதுதான் வெற்றிச் செல்வியின் இளம் பருவக் காலம்.அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தது 16 வயதினிலே!

வெற்றிச்செல்வி 19 வயதில் ஈழ தேசிய தற்காப்புப் போர்க்கடமையில் வலது கையையும் வலது கண்ணையும், செவிப்பறைகளையும், இழந்து புற ``முதுகு தவிர பெரு விரல் வரை``  உடல் எங்கும் காயப்பட்டார்.

முள்ளிவாய்க்காலில் இவர் கைதி ஆனார்.

``புனர்வாழ்வுப் பயிற்சியின் போது எனக்கு பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை , அரசாங்கம் தானாக முன்வந்து கொடுத்த கடன் உதவியின் மூலம் தன்னைப் போன்றவர்கள் வாழ்வாதார முயற்சிகளில் முன்னேறுவதற்குப் பதிலாக கடனாளிகளாக மாறியுள்ளோம்``
என பி.பி.சி.தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் பிறப்பியல்பாக வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான சுய பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிளில் ஓடித்திரிபவராகவும் இருக்கின்றார். அரசாங்க ``ஐசலக்கா``வீட்டுத்திட்டத்தில் ஒரு குடில் பெற்று விட்ட வெற்றிச் செல்வி அதனை ஒரு பூங்கா வனமாக, தூங்கா ஈழக் கனவாக,
புத்துயிர் பெற்ற பொருளாக படைத்துள்ளார்.

வீட்டுச் சுற்றமே சொல்லும் அவர் படைப்பின் இரகசியத்தை.

அரசாங்க சுயதொழில் திட்டத்தின் இலாப போட்டி இயந்திர வாழ்க்கையை கைவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றின் மாத வருமானத்தில் தற்போது வாழ்க்கை நடத்தி வருகின்றார்.

சமூக முன்னேற்றத்துக்கும், ஈழப் போர்க்கால மானுட வாழ்வை இலக்கிய ஆவணமாக படைத்தளிக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது வரையில் கட்டுரை,கவிதை,சிறுகதை,நாவல் என ஐந்து நூல்கள் வரை வெளியிட்டுள்ளார்.

மன்னார் அமுதனின் ஒரு குறும் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்,



அவர் தன்னைப்பற்றியும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால்  தான் காணும் ஈழ சமூகத்தைப் பற்றியும் இதில் தனது பங்கு பாத்திரம் குறித்தும் மன்னார் இணையத்துக்கு அளித்த பேட்டி வருமாறு.







"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...