SHARE

Friday, February 12, 2010

கொழும்பில் எதிரணியின் ஆர்ப்பாட்டம் நேற்றுப் பெரும் களேபரத்தில் முடிந்தது!

கொழும்பு, பெப்ரவரி 11
கொழும்பு, உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் புதுக்கடையில் எதிர்க்கட்சியினர் நேற்றுக் காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது அரச ஆதரவாளர் குழுவினர் என்று கருதப்படும் ஒரு கோஷ்டியினர் திடீர்த் தாக்குதல் நடத்திய மையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் பெரும் களேபரத்தில் முடிந்தது.
பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
நாடாளுமன்றம் கலைக்கப் பட்டுள்ள நிலையில், முன் னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தின ரால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நேற்றுக் காலை ஆரம்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி அப்பகுதி எங்கும் கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக் கப்பட்டிருந்தனர்.பிறேமதாஸ சிலைக்கு அருகில் வைத்துத் தாக்குதல்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தப் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ வின் சிலைக்கு அருகில் வந்தவேளை ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் திடீரெனத் தாக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக தாமும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுக்கின்றனர் எனக் கூறிய ஆளும் கட்சி ஆதரவாளர்கள், கற்களையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பதற்றம் நிலவியது.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல் காரணமாக பலர் காயமடைந்ததுடன், உயர் நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்தன.
பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மனுத்தாக்கல் செய்வதைத்தடுப்பதற்கான முயற்சி
இந்த மோதல்கள் காரணமாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். மூன்று பொதுமக்களும், இரு பொலிஸாரும் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான முயற்சி இதுவெனவும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட காடையர் குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தம் மீது தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எதிர்க்கட்சியினர் மீதே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில்!!

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில் -
கோத்தபாயவின் நடவடிக்கை?
திகதி: 11.02.2010 // தமிழீழம்
சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சகம் அரச தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உடனடியாக கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எனது வேண்டுகோளை தொடர்ந்து சிறீலங்காவின் ஊடகத்துறை மற்றும் தகவல்துறை அமைச்சு அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களை மிகவும் செயல்திறன்மிக்க நிலையில் மேற்கொள்வதற்காகவே நான் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோத்தபாயவின் நடவடிக்கையின் பேரிலேயே ஊடகத்துறை அமைச்சகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tuesday, February 09, 2010

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

ரொயேட்டஸ் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை
[ புதினப்பலகை ]
சிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -
“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
இதனால் சமூகத்துக்குள் ஏற்படக் கூடிய பிளவுகளைச் சமாளிக்கின்ற பேராற்றல் சிறிலங்கா அரசுக்குத் தேவை. எந்த நடவடிக்கை எடுக்கும் போதும் மிகக் கவனத்துடன் நடக்கா விட்டால், அது சமூகத்துக்குள் காயங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.
“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலளர் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேரதல் சட்டங்கள் தனியே தேர்தல் காலத்துக்கு மட்டுமே உரியவையல்ல. அதற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே - சர்வதேச மன்னிப்புச் சபை, “இது தேர்தலுக்குப் பிந்திய அடக்குமறை” என்று கூறியிருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு எதிரணியைச் சிதைவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தேர்தலிலும் வெற்றியைப் பெற்ற பிறகு மகிந்த ராஜபக்ச மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணுகின்ற நிலைக்கு நாட்டை வழிநடத்த வேண்டும்.
ஆனால் மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ளும் தன்மை அங்கு மிகமிகக் குறைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் சரத் பொன்சேகா சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பதாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 08, 2010

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்றனர்

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மனோ கணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல்
* முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
* கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது!
கொழும்பு, பெப்ரவரி. 09 2010-02-09 05:37:18
அரசியல் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் தரதரவென இழுத்துச் சென்றனர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவாராம்

முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல்சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில்

கைது செய்யப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட்புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு
சென்றனர்.நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நடவடிக்கை அரங்கேறியது.
இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார் என இலங்கை இராணுவப் பேச்\õளர் பிரிகேடியர் பிரசாத்சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்_ தகவல் வெளியிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணே\ன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில்
ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன் சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜென ரல் பொன்சேகாவின் அலுவலகத்திலேயே இவ்விடயம் இடம் பெற்றது.
இச்சம்பவம் இடம்பெற்று சுமார் பதினைந்து நிமிடங்களில் பின்னர் சம்பவ இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.
"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைது செய்வதானால் சிவில் பொலிஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பா´ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.
இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் சேல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.
"அவரைத் தரதரவென இழுத்துச் சேன்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்
சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.
இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.
ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் சேயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.
அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ)
இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

சரத்பொன்சேகா கைது

சரத்பொன்சேகா கைது
திங்கள், பிப்ரவரி 8, 2010 21:21 |
சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்

சிறீலங்காவின் முன்னாள் இராணுவ கட்டளை தளபதி சரத்பொன்சேகா அவர்கள் திங்கட்கிழமை இரவு சிறீலங்காவின் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைது ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இவரை மிகவும் கேவலாமான முறையில் கைது செய்து இழுத்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் இதனை ரவூப் ஹக்கீம் அவர்களும் ஏனையோரும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி மன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என இவர் அறித்ததைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Fonseka to be court marshalled

Fonseka to be court marshalled
Monday, 08 February 2010 22:20
General Sarath Fonseka who was arrested late this evening will be Court Marshalled for the military crimes he has committed, Director General of the Media Centre for National Security Lakshman Hullugala told state television a short while ago.Fonseka has been accused of revealing military secrets and also plotting the assassination of President Mahinda Rajapaksa.

Sunday, February 07, 2010

ராஜபக்ச ரசியாவின் KP

ன்றுள்ள உலக ஏகாதிபத்திய பொதுப் பொருளாதார நெருக்கடியில், இதன் விளைவாக குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சாதகமான சூழ்நிலையில் அபரிமிதமான எண்ணை வளத்தைக் கொண்டும், ஆயுத விற்பனையைக் கொண்டும் மீண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்த்துக்கொள்ள பூட்டினின் ரசியா முயன்று வருகின்றது.இப்பலத்தையே உலக மறுபங்கீட்டிற்கான தனது ஆயுதமாகவும் ரசியா பயன்படுத்திவருகின்றது.இந்து சமுத்திரப் பிராந்தியதை இந்தியாவைக் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவது அமெரிக்காவின் யுத்ததந்திரத் திட்டமாக உள்ளது.இதற்குப் போட்டியாக ரசியாவும், சீனாவும், ஈரானும் எழுந்து வருகின்றன.இத்தகைய ஒரு உலக மற்றும் பிராந்திய மேலாதிக்கத்துக்கான - உலக மறு பங்கீட்டிற்கான- சூழ்நிலை இலங்கை போன்ற அரைக்காலனி நாடுகளின் தரகு ஆளும் கும்பலுக்கு பேரம் பேசும் பரப்பையும் ஆற்றலையும் விரிவாக்கிக் கொடுத்துள்ளன.இந்த இடைவெளிக்குள் நடத்தும் பேரத்தைப் பயன்படுத்தித்தான் தான் மேற்குலகத்திற்கு அடங்காத காளையென்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றார் ராஜபக்ச.ரசியா போன்ற சாவு வியாபார அரசுகளின் நலன்களுக்கும், ராஜபக்ச போன்ற இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியாளர்களின் நலன்களுக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.இந்த ஆயுத வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட கெளரவமே இந்த கலாநிதி பட்டம்.
மேலும்

Thursday, February 04, 2010

சம்பந்தன் ஒரு சாக்கடை

சம்பந்தன் ஒரு சாக்கடை-யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு
வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார் தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையாக வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கியுள்ளார் சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நப்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். மேலும்

செங்கல்பட்டு: காட்டுமிராண்டி கருணாநிதி ஆட்சியின் காடைத்தனம்

நீ வேறு நான் வேறு இல்லைக் கருணா
சிங்கள - பவுத்த வெறியன் மகிந்த இராபச்சே தமிழர்களைச் சிறைகளில் அடைத்து வைதது சித்திரவதை செய்கிறான் என்றால் அவனை மிஞ்சும் வண்ணம் செம்மொழி மாநாடு நடத்தும்
கருணாநிதியின் ஆட்சியில் இந்த காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார். "ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள். எமது தொப்புள்க் கொடி
உறவினர்" என கருணாநிதி மாய்மாலம் பேசுவதில் மட்டும் எந்தக் குறையுமில்லை. மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று "ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று
சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்கள் செல்லடியிலும் குண்டுமழையிலும் பொட்டுப் பூச்சிகள் போல் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில்
முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
அது மட்டுமல்ல அங்கு அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் பங்காளியாக இருக்கும்
திமுக தலைவர் கருணாநிதியும் காரணம் ஆவார். அவர் கையிலும் ஈழத்தமிழர்களின் பச்சை இரத்தம் பூசப்பட்டுள்ளது. அவரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.
<தமிழ் படைப்பாளிகள் கழகம்>

மேலும்

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...