SHARE

Friday, February 12, 2010

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில்!!

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில் -
கோத்தபாயவின் நடவடிக்கை?
திகதி: 11.02.2010 // தமிழீழம்
சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சகம் அரச தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உடனடியாக கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எனது வேண்டுகோளை தொடர்ந்து சிறீலங்காவின் ஊடகத்துறை மற்றும் தகவல்துறை அமைச்சு அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களை மிகவும் செயல்திறன்மிக்க நிலையில் மேற்கொள்வதற்காகவே நான் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோத்தபாயவின் நடவடிக்கையின் பேரிலேயே ஊடகத்துறை அமைச்சகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...