SHARE

Monday, February 08, 2010

சரத்பொன்சேகா கைது

சரத்பொன்சேகா கைது
திங்கள், பிப்ரவரி 8, 2010 21:21 |
சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்

சிறீலங்காவின் முன்னாள் இராணுவ கட்டளை தளபதி சரத்பொன்சேகா அவர்கள் திங்கட்கிழமை இரவு சிறீலங்காவின் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைது ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இவரை மிகவும் கேவலாமான முறையில் கைது செய்து இழுத்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் இதனை ரவூப் ஹக்கீம் அவர்களும் ஏனையோரும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி மன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என இவர் அறித்ததைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...