SHARE

Tuesday, January 12, 2010

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 1/11/2010 9:13:38 AM -
விடுதலைகோரி நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல்
கைதிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 602ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 602 பேரே இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம், எமக்கு விடுதலை அல்லது பிணை அனுமதி வேண்டி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தும் பல வாக்குறுதிகள்
வழங்கப்பட்டும் அவை எவற்றையும் உரிய அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. உடலை, உயிரை வருத்தி விடுதலைக்காக நாங்கள் மேற்கொள்கின்ற இந்நடவடிக்கையின் நிமித்தமாக நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கப்பெற அரசுடன் தமிழ் அமைச்சர்களாக உள்ள வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுபினர்களும் எங்களுக்கு துணைநின்று ஜனாதிபதியிடம் எமது விடுதலையை வலியுறுத்தி பேசி, எமக்கான விடுதலையை பெற்றுத்தரும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்

விழவில்லைப் புலிகள் ஓயவில்லை தமிழ் ஈழப்போர் - வல்வை மக்கள்

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்" வல்வை மக்கள்
பெருமதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வல்வெட்டித்துறை மக்களின் இரங்கற் செய்தி
திகதி: 10.01.2010 // தமிழீழம்
மறைந்த வேலுப்பிள்ளை அவர்கள் வரலாற்றில் கறைபடியாத வகையில் வாழ்ந்து, தமிழினத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழினத்திற்கு கொடையாக அளித்து விட்டு சென்றிருக்கிறார்.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக நொறுங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தை கட்டியெழுப்பி அதன் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்த தேசியத் தலைவர் இன்றும் பின்னணியில் இருந்து விடுதலை இயக்கத்தை வழிநடத்தி வருகையில் அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மறைவெய்தியிருப்பது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாக, சோகத்தில் மூழ்கியிருந்த சொந்தங்களுkகு பேரிடியாக வந்து இறங்கியிருக்கிறது.

இவ்வேளையில் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தமிழினத்திற்கு ஆகப்பெரிய கொடையை தந்து சென்றிருக்கும் அன்னாருக்கு தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது தலைவரின் தாயார் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டிருப்பது பெற்றோர் இருவரும் எந்தவித காரணமுமின்றியே கைதுசெய்யப்பட்டமையை தெளிவாக்குகிறது.

அவர்களின் வயதையும் கருதாமல் தேசியத் தலைவரின் பெற்றோர் என்ற காரணத்திற்காகவே அவர்களை வெங்கொடுமை சிறையினில் அடைத்து வைத்திருந்தது சிறீலங்கா அரசு. எதுவித சட்டஎதிர்ப்பு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அவர்களிருவரையும் ஏன் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று உலக நாடுகள், நடுவண் அமைப்புக்கள் ஏதும் தட்டிக்கேட்காதது உலகில் மனிதம் செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அந்த வயதான பெற்றோர் சிறை வைக்கப்பட்டிருந்த காலையில் அவர்களுக்கு சரியான உணவோ சரியான மருத்துவமோ தரப்படவில்லை என்பதை அறிந்து தமிழினமே உள்ளம் கலங்கித் துடிக்கிறது. அரசின் வதை காரணமாகவே வேலுப்பிள்ளையவர்கள் இறந்திருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.

இன்று தலைவரின் தாயார் விடுதலை செய்யப்பட்டதைபோல முன்பே அவர்களிருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தால் தந்தையாரது இறப்பை தள்ளிப்போட்டிருக்கலாம். இருப்பினும் நிகழ்ந்துவிட்ட இழப்பானது தமிழ் பேசும் உலகெங்கும் துன்பச்சூழலை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளை மறைந்த மாமனிதர், தேசியத் தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் உலகெங்கும் தமிழர் சமுதாய மக்கள் தொடர்ந்தும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப்பதாகையினை உயர்த்திபிடித்து களம்புக வேண்டியதன் தேவையினை இந்த நேரத்தில் வலியுறித்தி அதன்படி செயல்படுவதே வேலுப்பிள்ளை அவர்களின் ஈகைக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பிரிவால் துயருறும் பல்லாயிரக்கணக்கான ஈழமக்கள், குறிப்பாக வல்வை மக்களுக்கும் பார்வதி அம்மையாருக்கும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்"
வல்வை மக்கள்

Friday, January 08, 2010

PFLP: Arab and international pressure to return to negotiations plays into the hands of the Zionist enemy

More > PFLP: Arab and international pressure to return to negotiations plays into the hands of the Zionist enemy

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது

நியூ மகஸின் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது
யாழ் உதயன் 2010-01-08 07:33:55
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதி

கொழும்பு மகஸின் சிறைச்சலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அல்லது தங்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்போது திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம் சிறைச்சாலை களுக்கும் பரவியது. கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நான்காவது நாளாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாகவும், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்றிலிருந்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"அண்மையில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை அரசு விடுதலை செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது விடுதலை தொடர்பாக அரசு பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. எனினும் அது ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
"தற்போது நாங்கள் மீண்டும் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கு நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட எங்களுக்குத் தீர்க்கமான உறுதிமொழி ஒன்றை வழங்கவேண்டும். அந்தப் பட்சத்திலேயே நாம் எமது உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் எமது போராட்டம் சாகும்வரை தொடரும் என்று கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜெனரலின் "நம்பிக்கையான மாற்றம்''

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் "நம்பிக்கையான மாற்றம்''.
தினக்குரல்
இலங்கையில் மாற்றமொன்று ஏற்படுவதற்கான எதிர்பார்ப்புகள் கைகூடிவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கும் எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தப் போவதாகவும் ஊழலை அழித்தொழிக்கப் போவதாகவும் ஊடக சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படுமெனவும் வாக்குறுதி அளித்தார்."சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கையர் நான், என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா, தான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று குறிப்பிட்டார்.

"நம்பிக்கையான மாற்றம்'' என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, ராஜபக்ஷகளின் கீழ் வாழ்க்கை கடினமாகியிருப்பதாகவும் ஊழல், இலஞ்சம் என்பன நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.


அவர் நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம் '' எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட "அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

Thursday, January 07, 2010

பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி இணையச் செய்திகள்
வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை
உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,

"விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கு ம் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

Wednesday, January 06, 2010

Majority of TNA MPs back Fonseka : The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the Tamil diaspora

Sampanthan: Majority of TNA MPs back Fonseka
[TamilNet, Wednesday, 06 January 2010, 15:27 GMT]
Tamil National Alliance (TNA) Parliamentary group leader and Trincomalee district MP Rajavarothayam Sampanthan on Wednesday said majority of 18 members of the alliance who were present at lengthy deliberations were of the view that the "only meaningful way" to thwart the desire of the Sri Lankan President Mahinda Rajapaksa to seek a mandate to hold office for a further term would be urging the Tamils to vote for the joint opposition candidate General (retd.) Sarath Fonseka. The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the Tamil diaspora against supporting either General Sarath Fonseka or Mahinda Rajapaksa as Tamils believe they are both implicated in war crimes and crimes against humanity.

18 members of the alliance who were present at a meeting held on Tuesday evening were of the unanimous view that they were opposed to President Mahinda Rajapaksa securing a fresh term.

Global Tamil Forum, an umbrella forum of diaspora Tamil organisations, in an internal message sent to TNA parliamentarians a few days ago, said that the Tamils stood morally and ethically unable to lend support to neither of the two main candidates who were largely responsible for the deaths of Tamils' kith and kin and destruction of the Tamil homeland in the island of Sri Lanka.

"GTF stands in support of fundamental principles of the 1976 Vadukkoddai Resolution which was supported and overwhelmingly voted through a democratic election in 1977 by the Tamils of the island nation. Whilst we appreciate that any candidate cannot espouse the resolution in full in words due to the unreasonable restrictions levied by the sixth amendment of the Sri Lankan constitution, we will stand in solidarity with a candidate who will espouse the spirit of the resolution within the constraints," the GTF had told the TNA.

Full text of the statement by the TNA follows:

பொன்சேகா - சம்பந்தன் புரிந்துணர்வு ஆவணம்


பொன்சேகா - சம்பந்தன் புரிந்துணர்வு ஆவணம்
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45

ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.

சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில்

தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால்நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும்,

வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

IV. நிலமும் விவசாயமும்

•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை

•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்

•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து

•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்

•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.

ஆட்சி மாற்றத்துக்கு பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு
அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்
யாழ் உதயன் 2010-01-06 07:11:25

தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது
என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள குழுக்களின் அறையில் தொடர்ந்து கூடியது.

பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால நீடிப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் தமது கூட்டத்தை இடைநிறுத்தினர். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கொழும்பு மாதிவெலயில் உள்ள எம்.பிக்களின் இல்லத் தொகுதியில் சந்திரநேரு எம்.பியின் வீட்டில் கூட்டம் தொடர்ந்தது.

நேற்றிரவு 9.45 மணிவரை வெகு காரசாரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
லண்டனில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, சந்திரநேரு, இந்தியாவில் தங்கி நிற்கும் கனகசபை, தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்ற இயலவில்லை.

கருத்துச் கலாசாரம்
கூட்டத்தின் முடிவு குறித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டோம். "காரசாரமாகப் பலதரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது.

அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது."

"அதையடுத்து இரண்டாவது கருத்து ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்கப்பட்டது. அது இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையுமே ஆதரிக்கக் கூடாது என்பதாக இருந்தது. பலரின் கருத்து அதுவாக இருந்த போதிலும் இதனை ஒட்டி நான் அனைவருக்கும் விளக்கம் அளித்தேன். இறுதியாக, எமது முதலாவது தீர்மான விடயத்தை அதாவது

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்புக்கான ஆணைக் கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை காலை பத்திரிகையாளர் மாநாடு கூட்டி முடிவை அறிவிப்போம்'' என்றார் சம்பந்தர்.

எதிரும் புதிருமான பல கருத்துக்கள்
"இவ்விடயம் குறித்து ஆராயப்பட்ட போது எதிரும் புதிருமாகப் பல கருத்துகள் முன்வந்தன. ஆனால் இறுதி முடிவு ஏகமனதானது'' என்றார் கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர்

ஒருவர். இந்த முடிவை எட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமான கருத்துக்கள் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவிக்கும் முடிவுக்குத் தாங்கள்
அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தமையால், இறுதியில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தர் அறிவித்த போது, அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இணக்க ஆவணம் வாசிக்கப்பட்டது
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தாம் கண்டுள்ள இணக்கம் குறித்து இக்கூட்டத்தில் சம்பந்தர் விளக்கினார்.

அது தொடர்பான ஆவணத்தை அவர் கூட்டத்தில் வாசித்ததோடு அதன் மூலப்பிரதியையும் அங்கு காட்டினார். எனினும் அதன் பிரதி அங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
மூலப் பிரதியில் சரத் பொன்சேகாவும், ரணிலும் மட்டும் கையொப்பமிட்டிருக்கின்றனர். சம்பந்தர் அதில் ஒப்பமிடவில்லையே என்று ஸ்ரீகாந்தா அணி ஆட்சேபம் கிளம்பியதாகத் தெரிகின்றது.

எனினும் இது ஒப்பந்தம் அல்ல, எங்களுக்கு அவர்கள் தந்த உறுதியுரை ஆவணம் மட்டுமே என்று சம்பந்தர் அதற்கு விளக்கமும் பதிலும் தந்தார் எனத் தெரிகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனை தொடர்பிலும் அதில் உள்ள சில விடயங்களை ஒட்டி அடிப்படைப் பிரச்சினைகளை இதே தரப்பினர் கிளப்பினர் எனத் தெரியவந்தது. தீர்வு ஒற்றையாட்சி முறைக்குள்ளா அல்லது அதற்கு வெளியிலா என்பது இந்த ஆவணத்தில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்று குறை கூறி அவர்கள், இந்த அடிப்படையில் தாங்கள் ஏமாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்தனர். அது குறித்து சம்பந்தன் எம்.பி. மாவை சேனாதிராசா எம்.பி. போன்ற மூத்த தலைவர்கள் கொடுத்த விளக்கம் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏகமனதாக எடுத்துள்ளது என்று நேற்றிரவு கூறப்பட்டாலும், இன்று அது பற்றிய
அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர் மாநாட்டில், கூட்டமைப்பில் அங்கம் பெறும் சகல கட்சிகளினதும் தலைவர்களும் பங்குபற்றினால்தான் அது உறுதியாகும் என்றார் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி.
================
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.

சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:


•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

IV. நிலமும் விவசாயமும்

•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை

•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்

•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து

•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்

•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
==============
பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன்: சரத்பொன்சேகா
திகதி: 06.01.2010 // தமிழீழம்
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன். ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டேன் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை

2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன்.

இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார்.

இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அறிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது.
ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று

சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
=======================
புதன், ஜனவரி 6, 2010 03:16 பதிவு இணையம் (செய்தி அலசல்)
சரத்பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு! இழுபறிக்குள் இறிதி முடிவு!

எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக எத்தகைய தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்பட்ட இழுபறி ஒருவாறு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இன்று 5-1-2010 கொழும்பில் நான்கு மணிநேரம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐனாதிபதி மகிந்த ரர்ஐபக்ச அவர்களை எந்தக் காரணத்தினாலும் ஆதரிக்க முடியாது ஆதரிக்க கூடாது என்ற கருத்தினை எவ்வித விவாதமும் இன்றி ஏகமானதாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கே.துரைரட்ணம், தோமஸ் வில்லியம், சொலமன் எஸ் சிறில், செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன், இமாம், சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தினை ஆணித்தரமாக
வலியுறுத்தியதுடன் அதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகசெயற்படப் போவதில்லை எனவும் கூறினர்.

சிவநாதன் கிசோர், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினைகருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவக்கு எதிராக செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.

செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்க முடியாது என்றும் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனை வெளிப்படுத்தும் சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசத்திலுள்ள மக்கள் இத் தேர்தலை

புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசத்தில் வாழும் அனைத்து மக்களும் ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவரும் தமிழ் மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்பவற்றினை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக நீண்டகாலமாக உழைத்துவருபவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமது
நிலைப்பாடு என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.

இக் கூட்டத் தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையில் கூட்டத்தின் போது தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது நிலைப்பாடு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.

இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு முடிவுக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடில்லாத போதும் கூட்டமைப்பின் ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறிய முடியகின்றது.

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...