SHARE

Thursday, November 13, 2014

Remove restrictions to improve FDI flows

Remove restrictions to improve FDI flows 
 November 13, 2014 2:05 am  

By Mario Andree

Ceylon Finance Today: As the country worries over a possible shortage of US$ 1 billion foreign direct investments in 2016 for the anticipated economic gains, a senior minister claimed that if the government removed some of the restrictions, the Board of Investment would be able to attract more FDI and surpass targets.

Sri Lanka is in an ambitious journey of improving its GDP to US$ 100 billion by 2016 with a per capita income of US$ 4,000 by that time.

Minister of Investment Promotion Lakshman Yapa Abeywardena highlighted that the country's economy would be US$ 100 billion by 2016, and that foreign direct investment needed to improve and reach close to 5% to US$ 5 billion by that time.

However, the Board of Investment had predicted a shortfall of US$ 1 billion FDI's in 2016 to achieve the government's ambitious target.The BOI had claimed, FDI would reach only US$ 4 billion in 2016.

Minister Abeywardena, who previously tried to halt the recently introduced Land Law, after receiving several complaints from investors, said that if the government removed some of the obstacles his ministry and the country's investment promotion agency, the country would be able to achieve FDI goals.

Many investors both local and foreign had shown their disgust to the Ministry of Investment Promotion and several other ministries on the decision to restrict foreign ownership of land.
Minister Abeywardena attempted to convince the Cabinet that the land alienation law was ill-convinced, and that the government should consult all stakeholders before making any further decisions on this issue.

Sri Lanka failed to achieve the last two years' FDI targets failing short of US$ 160 million in 2012 and US$ 610 million in 2013 to meet US$ 1.5 billion and US$ 2 billion respectively.
However, this year seems to be promising according to the minister, who said that the country had received US$ 1.5 billion during the first 10 months to achieve this year's revised target of US$ 2 billion.

Saturday, November 08, 2014

மஸ்கெலியா கார்ட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்: 47 குடும்பங்கள் வெளியேற்றம்

மஸ்கெலியா கார்ட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்: 47 குடும்பங்கள் வெளியேற்றம்

Submitted by P.Usha on Sat, 11/08/2014 - 14:56 வீரகேசரி

மஸ்கெலியா கார்ட் ஜமோர் தனியார் தோட்டம் கல்கந்த டிவிசனில் நிலத்திலும், குடியிருப்புகளிலும் வெடிப்பு ஏற்பட்டு, நிலம் தாழ்ந்து வருவதால் அங்குள்ள  47 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் வெளியேற்றப்பட்டு கார்ட்மோர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தில் பாரிய கற்பாறை ஒன்றும் சுமார் 70 அடி உயரமுள்ள மலைப் பிரதேசமும் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மக்கள் பாடசாலையில் தங்கியுள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தொடர்ந்தும் மக்கள் பாடசாலையில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

மீரியப்பெத்த ஊடறுப்பு செய்தி: Breaking News : இறந்த மாடு சடலமாக மீட்பு!


Tuesday, November 04, 2014

மீரியாபெத்தை அனர்த்தம் தொடர்பில் துரித விசாரணை தேவை- ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை news


பதுளை கொஸ்லந்தை, மீரியாபெத்தை அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும், அவ்வாறான எந்தவொரு எதிர்வு கூறலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, அந்த மக்கள் பாதிக்கப்பட்டுவிட்டனர்.அதுமட்டுமன்றி, இன்னும் பல பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கவனத்திற் கொண்டு, அம்மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும். துரதிஷ்டவசமாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைவானதாகும்.

குறித்த பிரதேசத்துக்கு 2011ஆம் ஆண்டில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் அவ்வாறான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பதால், ஏனைய குழுக்களைப் போல் அல்லாது, விசேட குழுவொன்றை நியமித்து துரிதமாக விசாரணை நடத்தப்படல் வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்


பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்
Submitted by Priyatharshan on Tue, 11/04/2014 - 09:37 வீரகேசரி

மீரிய­பெத்த மண்­ச­ரிவில் பலி­யாகி இருக்­கலாம் என நம்­பப்படும் 32 பேரது பெயர் விப­ரங்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

பலி­யா­ன­வர்கள் என நம்­பப்­ப­டு­ப­வர்­க­ளது விபரம் வருமாறு;

1. சந்­தி­ர­வ­தனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்­சிதா
5. சுஜன்
6. பால­சுப்­ர­ம­ணியம்
7. பவானி
8. ரஞ்­ஜிதம்
9-10. இராஜகௌரியும் அவ­ரது கண­
வரும் (தலைத்­தீ­பா­வ­ளிக்கு பெற்
றோர் வீட்­டிற்கு வந்­த­வர்கள் )
11. ராமன்
12-13. திலக்­க­லட்­சு­மியும் அவ­ரது கண­வரும்
14. விது­சிகா
15. முத்து
16. செல்­வ­நா­யகி
17. தங்கவேல்
18-21. குடும்பநலத்­தா­தியும் அவ­ரது
மகனும் மகளும் மகனின் மனை­வியும்
22. ருத்திரன்
23. மின்னல் என்­ற­ழைக்­கப்­ப­டு­பவர்
24. மாரி­யப்பன்
25. மாரி­யாயி
26-27. மேசன் வேலை செய்­ப­வரும் அவ­ரது மனை­வியும்
28. தெய்வானை
29. பிரகாஷ்
30. லீலாவதி
31. மாரியாயி
32. ஆர்னேல்

மண்சரிவு அனர்த்தத்தை வைத்து அரசியல் இலாபம் தேட த.தே.கூ. முயற்சி:

மண்சரிவு அனர்த்தத்தை வைத்து அரசியல் இலாபம் தேட த.தே.கூ. முயற்சி: 
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

 Mon, 11/03/2014 - 16:32
கொஸ்­லந்­தையில் மண் சரிவு  கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில்   பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கும் பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயா­ராக இருக்­கின்றது என தெரிவித்துள்ளமையானது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர  இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு காணிகளை வழங்க போவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். இது உண்மையில் வேடிக்கையான விடயமாகும்.

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் இன்னும் வடக்கில் அனாதரவாக இருக்கின்றனர். மேலும் அங்குள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து அரசியல் இலாபம் தேடுதவற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொஸ்லந்த மீரி­ய­பெத்­த பகுதியில், அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்ட இராணுவத்தினர் இன்னும் மீட்பு பணியில் உள்ளனர். இதுவரை எட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்சரிவு அனர்த்தத்தினால் 63 வீடுகளும், 6 லயன்களும், 3 தனிவீடுகளும், இரு கடைகளும் மற்றும் கோயில் ஒன்றுமே மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிகொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

மேலும் மலையகத்தில் தற்போது மண்சரிவு அபாயம் காரணமாக 7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை தற்போது இடம்பெற்றுள்ள இந்த மண்சரிவு அனர்த்தத்தை காரணமாக வைத்து உலக நாடுகளிடம் கடன் உதவிகளை வாங்குவது சரியான விடயம் அல்ல என கூறிய ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வீடுகளை தாமே அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
==================


இது ஒரு புதினமாம் தோழி. சு.பி.வழங்குமாம் காணி!

அரசாங்கம் மறுத்தால் மலையக உறவுகளுக்கு வடக்கு - கிழக்கில் காணிகளை வழங்கத்தயார் :சுரேஷ் எம்.பி.
Submitted by MD.Lucias on Mon, 11/03/2014 - 09:59

கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில் எமது மலை­யக உற­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தொடர்ந்தும் 10ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் அபா­யத்­தினை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இவ்­வா­றான நிலையில் அம்­மக்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்­பாக தமது அனு­தா­பங்­களை தெரி­வித்­த­துடன் முகாம்­களில் உள்ள மக்­க­ளி­டத்தில் நீண்­ட­நே­ர­மாக கலந்­து­ரை­யா­டி­ருந்­தது. இதன்­போதே அம்­மக்­க­ளி­டத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கண்ட­வாறு தெரி­வித்­தது.

அர­சாங்கம் மலை­ய­கத்தில் மண் சரிவு அபாயம் உள்­ள­தாக பல இடங்­களை குறிப்­பிட்டுக் கூறி­யுள்­ளது. இவர்­களை உரிய இடங்­களில் இருந்
தும் வெளி­யேற்றும் முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இது போன்றே கொஸ்­லந்தை பகு­தி­யிலும் மண் சரிவு அபா­யத்­தினை காரணம் காட்டி பாட­சா­லை­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மண்­ச­ரிவு தொடர்­பான அச்சம் கார­ண­மாக இத்­த­கைய பல குடும்­பங்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­மையை காண முடி­கின்­றது. எனினும் இத்­த­கை­யோர்­க­ளுக்கு புதி­தாக வீட­மைத்துக் கொள்ளும் பொருட்டு அர­சாங்கம் உரிய காணி­களை வழங்­கு­வதில் பின்­ன­டிப்­பையே செய்து வரு­கின்­றது. காணிகள் வழங்­கப்­ப­டு­மி­டத்து வீட­மைப்­பிற்­கென இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­களும் இன்னும் பல தொண்டர் நிறு­வ­னங்­களும் ஒத்­து­ழைப்பும் உத­வியும் வழங்கும் என்­பதே உண்மை.

மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் பாதிப்­பினை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளுக்கும் அரசு காணி­களை வழங்க மறுக்­கு­மி­டத்து வடக்கு கிழக்கில் நாம் காணி­களை பெற்­றுக்­கொ­டுக்க தயா­ராக உள்ளோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் காணிகள் வழங்­கப்­பட வேண்டும். பல்­வேறு அமைப்­புக்­க­ளுடன் கலந்து பேசி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாங்கள் யுத்தத்தினால் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு பல இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றோம். இழப்புகளின் வலி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இயன்ற உதவிகளை நாம் செய்வோம்.

மலையக மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ காகிதத் திட்டம்

மலையக மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ காகிதத் திட்டம்


STRATEGIES TO ADDRES THE NEEDS OF THE VICTIMS OF MEERIYABEDDA
LANDSLIDE AT HALDUMULLA IN BADULLA DISTRICT – 29/10/2014
Background:

A severe landslide ocured in Meriyabeda area in Kotabathma Grama Niladhari division in
Haldumula Divisional Secretariat Division in Badula District on 29th October 204 at around 7.30 am.
The impact of landslide afected around 30 people of 57 familes in Ampitkanda tea estate. Total
number of buildings destroyed were 63 including Houses, Kovil, Community Center, Dairy colection
Centers, Boutiques, Telecommunication Center, and 3 Estate bungalows. As of 30th October 2014
four dead bodies were recovered. The total number of mising persons is yet o be confirmed. Out of
the total number of children who atend the schol, 75 children were orphaned. As per the instructions
given by the HE the President, The Minister of Disaster Management directed al Provincial and
District Politcal Authorites, the Agencies under the Ministry of Disaster Management, District and
Divisional Secretaries, Health Authorites, Tri-forces and Police to continue the Search and Rescue
operations and post disaster recovery activites. Government provides the funeral expenses and
undertakes the last rights of the deceased persons. Al hospitals in the area conducting emergency
medical services to minimize health impacts. The government has already provided required funds to
met he immediate emergency requirements.

As an emergency response, people in high risk areas are acommodated in two safe centers which
were established at Koslanda Tamil Schol and Ponagala Tamil Schol. As of 30th October 2014
these two centers acommodate 52 & 317 people respectively. In responding to the early warnings
isued by the National Building Research Organization, number of people are continue to evacuate
from the high risk areas and therefore number of safe centers wil be increased.

In the above context, strategy of the Ministry is to implement a short, medium and long term disaster
risk reduction program. A “Hazard Resilent Vilage” concept is promoted for the survived
community of Meriyabeda.

1. Long Term Strategies

a) Hazard Resilent Vilage
Resilent Vilages mainly focuses on construction of resilent houses under the technical asistance
and supervision of National Building Research Organization (NBRO) for the afected familes. The
resilent vilage wil include;  30 hazard resilent houses with basic furniture and kitchen utensils  Health Center  Fuly equiped community Center  Religious Center  Provide water and sanitation facilties  Rain Gauges to improve community based early warning system
b). Programme for Orphaned children due to Meriyabeda landslide
Provisioning of scholarships and developing a foster parent scheme in order to ensure the safety and
beter future of orphaned children under the supervision of government.  Schol including a hostel for the orphaned children within the resilent vilage  Scholarship scheme  Foster Parent Scheme  Psychosocial suport and Trauma Counseling
 Playgrounds with equipment
c). Empowering livelihod options of displaced personel
Provision of livelihod options for the displaced persons and their dependants. Implementation of the
livelihod development programme linking the existing initatives.

2. Medium Term strategies

a). Temporary relocation of landslides victims
Provision of suitable land for relocation of landslide victims of Meriyabeda and provision of
temporary shelters and al the required basic facilties. Aditonaly, provision of facilties and other
requirements for the children to continue their education without further interuptions.  Temporary shelters and al the required basic facilties  Water and sanitation facilties  Water bowser and water tanks  Portable generators  Safety equipments
2. Short Term strategies
Provision of basic requirements for the displaced communites by giving special atention to children,
women and disable people for their safety.  Schol uniforms, Schol bags, shoes and other personal belongings  Boks and any other materials required to suport heir education
 Personal belongings for women ( sanitary items etc)  Whel chairs, crutches, other disabilty friendly equipment  Towels, bed shets, blankets, umbrelas, mosquito nets etc.  Matreses (Folding and Sleping)  Water purifcation kits  Tarpaulin
 Mobile toilets  Water tanks and Water pumps  Rofing shets  Ground penetration detectors which can be used for search & Rescue operation
 Emergency rechargeable lamps  Raincoats, bots etc.

3. Implementation modalites
For further details please kindly contacthe oficials named below.  Mrs. Wasantha Samarawera, Aditonal Secretary(Development) Ministry of Disaster
Management-071-567076, 01 26594
www.disastermin.gov.lk
 Mr. K. Prasana Chandith, Director, National Disaster relief Services Centre-01265123,
07-3641563
www.ndrsc.gov.lk
 Mr. Rifa Wadod, Asistant director, National Disaster Relief Services Centre,- 0718127263,
01 26521
 Mr. K.H.M. Sanjaya, Asistant Secretary, Ministry of Disaster Management -01 265352,
07 9371368
www.disastermin.gov.lk
 Mr. Indika Pushpakumara Asistant Director, Disaster Management Centre -072130754
www.dmc.gov.lk

அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளே மண்சரிவு ஏற்படக் காரணம்:-



அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளே மண்சரிவு ஏற்படக் காரணம்:-
03 நவம்பர் 2014
சன்குகவரதன் - குளோபல்தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என  ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சன் குகவரதன் தெரிவித்தார்.


இதனால் மண்சரிவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வேறு இடங்களில் காணிகளை உடனடியாக வழங்கி அங்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக சன்குகவரதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.


அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறை முகத்தை அமைப்பதற்கு கடல் ஆழமாக தோண்டப்பட்டமையும், மத்தள பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் என சில புவியியலாளர்கள் கூறுவதாக சன் குகவரதன் சுட்டிக்காட்டினார்
.


அரசாங்கத்தின் இந்த முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களினால் உறவினர்களின் உயிர்களையும் இருப்பிடங்களையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும். 75 சிறுவர் சிறுமியர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இது தொடர்பான வேலைத் திட்டங்களை பாராளுமன்றத்திலும் ஊவா மாகாண சபையிலும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
பொது மக்களும், பொது அமைப்புகளும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும்; தங்களால் இயன்றளவு நிவாரண உதவிகளை செய்கின்றன. இதனால் அரசாங்கம் தங்களுக்குரிய நிவாரண பணிகளை தட்டிக்கழிக்க முடியாது. கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் மக்கள் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் அரசாங்கம் கூற முடியாது.


ஏனெனில் மாற்று இடங்களை கையளிக்காமல் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய சன் குகவரதன் மக்களுக்கான பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்வதாகவும் குற்றம் சுமத்தினார்.


திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் மக்களை பாதிக்கும் வகையில் அணல் மின் நிலையம் நிறுவப்படவுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தளம் நுNரைச் சோலையில் அணல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு எற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.


அதேபோன்று காலி முகத்திடலுக்கு அருகில்; 233 ஹெக்ரேயர் பரப்பளவு கடற்பரப்பை முடி துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் சூழவுள்ள பிரதேசங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பிய சன் குகவரதன் மக்களைப் பற்றி அக்கறைப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் யாருக்காக எனவும் கேள்வி தொடுத்தார்.


மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளின் நிதி கிடைக்கின்றது என்பதற்காக சாதாரண குடிமக்களை பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஏற்கக்கூடாது. அது அழிவுக்கே வழிவகுக்கும்.


இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் சன் குகவரதன் கோரிக்கை விடுத்தார்.

கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு, நிவாரண உதவிகள் அவசியமில்லை.

சொந்த வீடும், சொந்த காணியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய தேவை - மனோ கணேசன்:-

03 நவம்பர் 2014


சொந்த வீடும், சொந்த காணியுமே  மீரியபெத்த மக்களின் இன்றைய தேவை - மனோ கணேசன்:-

கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு, மென்மேலும் நிவாரண உதவிகள் அவசியமில்லை. அனுதாப உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன. இந்நிலையில், வாழ்விழந்த, வீடிழந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான ஸ்தலத்தில் சொந்த நிலமும், அங்கு வாழ வீடும், குழந்தைகளுக்கு கல்வியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய பிரதான எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.


இந்நிலையில் மலையக மக்களின் சொந்தநில, சொந்த வீட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நிற்கும் அரசியல், சமூக, சட்ட முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முன்னெடுப்புகள் இலங்கையின்  இந்நாள், முன்னாள் ஆட்சியாளர்களை நோக்கி மாத்திரம் அல்ல, இந்த மக்களை இங்கே கொண்டு வந்து, அநாதைகளாக  சுதந்திர இலங்கையில் விட்டு போய்விட்ட பிரித்தானிய பேரரசையும், இந்த மக்களை கேளாமல்  இலங்கை அரசுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்ட இந்திய அரசையும் நோக்கியும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த முயற்சிகளுக்கு அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு உணர்வாளர்களையும், நல்ல உள்ளங்களையும் வேண்டுகிறேன்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களை நேரடியாக சந்தித்து களநிலவரங்களை அறிந்து கொண்டு கொழும்பு திரும்பிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,


இன்றைய நிலவரப்படி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக, உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன். மீண்டும் நிவாரண பொருட்கள் அவசியப்படுமானால், அதுதொடர்பாக அங்குள்ள தொண்டுள்ளம் கொண்ட நமது இணைப்பாளர்கள் கண்காணித்து அறிவிப்பார்கள்.


மலையக மக்களின் காணி, வீட்டு குடியிருப்பு உரிமைகள்  மற்றும் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளமை ஆகியவை தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த பிரச்சினைகள் தேசிய, சர்வதேசியமயப்படுத்தப்பட வேண்டும். ஆகவே இவை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிங்கள முற்போக்கு கட்சிகள், மலையக அமைப்புகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடகிழக்கு மக்கள் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் நோக்கில் செயல்பாடுகளை முன்னெடுக்க நாம் தயாராகி கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...