SHARE

Tuesday, April 15, 2014

``தலைவர்`` வைகோவும் - ``சூப்பர் ஸ்ரார்`` ரஜினியும் சந்திப்பு.

வைகோ- ரஜினி சந்திப்பு
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 08:32.36 AM GMT +05:30 ]

தலைவர் வைகோ அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது இல்லம் சென்றார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தலைவர் வைகோ அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தலைவர் வைகோ அவர்கள், ரஜினிகாந்த் அவர்களை 2014 ஏப்ரல் 6 அன்று பகல் 12.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. 

அப்போது, 

நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரிதை நூலை தலைவர் வைகோ, சூப்பர் ஸ்டாரிடம் கொடுத்தார்.

அதிமுகவுக்கு சீமான் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைப்பு!

அதிமுகவுக்கு சீமான் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைப்பு!

MONDAY, 14 APRIL 2014 12:55 E-mail

தஞ்சை: சீமான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த அவசரக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பழ. சக்திவேல் கூறுகையில், திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டில் ஒரு தமிழனை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துவிட்டு தற்போது சீமான் திராவிட கட்சிக்கு வாக்கு சேகரிப்பது கேள்விக்குறியாகவும், பிறர் நகைக்கும்படியும் உள்ளது.

ஒரே நேரத்தில் 40 தொகுதிகளிலும் 40 நிலைப்பாடுகள் என்பது தமிழக மக்கள் மற்றும் அவரை நம்பி வந்த இளைஞர்கள் ஆகியோரை ஏமாற்றுவதாக உள்ளது. அவரின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுகிறோம். மேலும் மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என்றார்.

புதிய இன வாழையால் பொருளாதார இழப்பு விவசாயிகள் கவலை


புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கெவண்டீஸ் இன வாழைச் செய்கை மூலம் அறுவடை செய்யப்படும் வாழைக்குலை மற்றும் வாழைப்பழத்தைச் சந்தைப்படுத்த முடியாத நிலையால் தாம் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இளைய வளர்ப்பு முறையில் வெளிமாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கெவிண்டீஸ் இன வாழை நாற்றுக்கள் தனியார் நிறுவனங்களால் கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் யாழ்.மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டன. சிறிய அளவிலான பைகளில் நடுகை செய்யப்பட்டு ஒன்று 125 ரூபாவுக்கு மேல் 175 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டன.

உயரம் குறைவானதும் காற்றுக்கு சாயாததும் நிறை கூடிய குலைகளை தரும் என்ற கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி விவசாயிகள் தமது தோட்டங்களிலும் பலர் வீடுகளிலும் அவற்றை நடுகை செய்தனர். 

ஆனால் அறுவடை செய்யப்படும் கெவண்டீஸ் வாழைக் குலைகளை யாழ்ப்பாணத்தில் நல்ல விலைக்கு விற்க முடியாத நிலையில் செய்கையாளர்கள் உள்ளனர்.
உள்ளூர் கதலி வாழைக் குலையிலும் குறைவான விலையில் ஒரு கிலோ 15 ரூபாவுக்குக் குறைவாகவே விற்கக் கூடியதாக உள்ளது.

கெவண்டீஸ் வாழைப்பழம்  சுவையிலும் மாறுபட்டதாக உள்ளது. இனிப்புத்  தன்மை இவற்றில் மிக மிகக் குறைவு. பழம்  பச்சை நிறம் கொண்டது. சாதாரண வாழைப் பழங்களிலும் பார்க்க நீளமானது. இதனை உள்ளூர் மக்கள் விரும்பிக் கொள்வனவு செய்வதில்லை.

ஆனால் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லத் தயங்குகின்றனர். யாழ்.மாவட்டத்தின் வெப்ப நிலை வீச்சு வறட்சிக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் மிகக் குறைந்த காலத்தில் கெவிண்டீஸ் வாழை குருத்தடைப்பு மற்றும் வெள்ளைக் குருத்து நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் புதிய பயிர் இனங்களை அறிமுகம் செய்யும்போது மாவட்ட நிலையை கருத்தில் கொள்ளாமலும் விவசாயிகளின் நலனை மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை கருத்தில் கொள்ளாமலும், அறிமுகம் செய்யப்படுவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=855892858515100125#sthash.lI4RvElN.dpuf

சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் !


சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் பங்கேற்பு – விசாரணை நடத்தக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மனு


[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 05:19 GMT ] புதினப் பலகை [ அ.எழிலரசன் ]


சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுடெல்லியைச் சேர்ந்த, டெல்லி தமிழ் சட்டவாளர் சங்கத்தின் செயலாளரான ராம்சங்கர் என்ற சட்டவாளரே இந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார். 


கடந்தவாரம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு மீதான விசாரணை வரும் நாளை மறுநாள் (17-04-2014)நடத்தப்படவுள்ளது. 


இந்த (இந்தியப் படை) நடவடிக்கைக்கு சீக்கிய அதிகாரி ஒருவரே தலைமை தாங்கியதாகவும், இந்தியப் படையினர் சிலர் போரில் காயமடைந்ததாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரில், சிறிலங்கா படைகளுக்கு உதவுவதற்காக 2008 ம், 2009 ம் ஆண்டுகளில் இந்திய இராணுவ, கடற்படை, மற்றும் விமானப்படையினர் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


போர்ப் பிரகடனம் ஒன்று செய்யப்படாமல்- இந்திய ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல்- அரசியலமைப்பின் 246வது பிரிவுக்கு அமைய, நாடாளுமன்ற அனுமதி பெறப்படாமலேயே இவர்கள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


அனைத்துலக மனிதாபிமான முன்னெடுப்புகளுக்காக தாம் பல முறை சிறிலங்காவுக்குச் சென்று வந்துள்ளதாக சட்டவாளர் ராம் சங்கர் தெரிவித்துள்ளார். 


கிளிநொச்சி, முல்லைத்தீவு மீதான தாக்குதலின் போது தலைப்பாகை கட்டிய இந்திய அதிகாரி ஒருவர் ஆயுதப்படைகளுக்கு தலைமை தாங்குவதை தாம் கண்டதாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைத்துலக விசாரணையில் 

சாட்சியமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

போர்ப் பிரகடனம் செய்யப்படாமலேயே, சிறிலங்கா படைகளுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், இந்தியப் படையினரை சிறிலங்காவில் நிறுத்தியுள்ளனர். 


இராணுவ விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கும் இது வெளிப்படுத்தப்படவில்லை. 


இந்தியாவின் பாதுகாப்பு தவிர, வேறு எந்தக் காரணத்துக்காகவும் இந்திய ஆயுதப்படைகளை பயன்படுத்த இந்திய அரசியலமைப்பில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. 


உள்நாட்டு போரில், தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு உதவியாக, இந்திய ஆயுதப்படைகள் 2008, 2009 காலப்பகுதியில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 


இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த சுதந்திர அனைத்துலக நிபுணர் குழுவின் அறிக்கையில் 56வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த அறிக்கை 2011 மார்ச் 31ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.” என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


சிறிலங்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான இந்திய ஆயுதப்படைகளின் கூட்டுப் பங்கு தொடர்பாக, விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அது சுயாதீனமாக நடத்தப்படுவதை கண்காணிக்குமாறும், சட்டவாளர் ராம் சங்கர் தனது மனுவில் கோரியுள்ளார். 


சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினரின் உயிர்கள், உடமைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விசாரித்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை சிறப்புத் தீர்ப்பாயம் முன்பாக நிறுத்தி விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 


இந்த மனுவில், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் உள்துறை அமைச்சுக்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

===================

Monday, April 14, 2014

ENB-Documents: Full text: BJP manifesto for 2014 Lok Sabha electi...

ENB-Documents: Full text: BJP manifesto for 2014 Lok Sabha electi...:



Full text: BJP manifesto for 2014 Lok Sabha elections IBNLive.com | Apr 07, 2014





 Ek Bharat, Shreshtha Bharat.

Jai Hind!

Vande Mataram!


 (One India, Best India - Unity and


 Development for everyone).



Friday, April 11, 2014

ENB WEST: NGOs In China

ENB WEST: NGOs In China:



Chinese civil society 

Beneath the glacier 

In spite of a political clampdown, a flourishing civil society is taking hold   

Apr 12th 2014 The Economist

Five moments in the Alex Pretti shooting

Five moments in the Alex Pretti shooting that raise red flags for policing experts By David Nakamura, Sarah Blaskey, Peter Hermann, Derek Ha...