SHARE

Tuesday, July 10, 2012

நிமலன் ``மரணம்`` மாரடைப்பு காரணம்! வெலிக்கடையில் சிங்களம் கற்றுக்கொண்ட பாடம்!! நல்லிணக்கம், நல்லிணக்கம்.


மாரடைப்புக் காரணமாகவே தமிழ்க் கைதி உயிரிழந்தார்; தாக்குதல் மூலம் அல்ல என்கிறார் அமைச்சர் கஜதீர

உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபன் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலம் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது பொய்யான தகவல் என்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புஅமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் கூறினார்.
 
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
 
 தமிழ்க் கைதியொருவர் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் பொய்யான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த
சபையில்  கூறினார்.  சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலமே நிமலரூபன் உயிரிழந்தார் என்று கூறுவது பொய்யான தகவலாகும். அந்தக் கைதி மாரடைப்பு நோயால்தான் மரணமடைந்தார். சிறைக்காவலர்களின் தாக்குதல்களால் அல்ல.

 2009 ஆம் ஆண்டு வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தக் கைதி கடந்த மாதம் மஹர சிறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மாரடைப்பு நோய்
ஏற்பட்டதால் அவர் ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அந்த நோயின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

 இதேவேளை, வவுனியா சிறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  சிறைக்கைதிகள் வவுனியா
சிறையில் மூன்று சிறைக்காவலர்களைச் சிறைப்பிடித்து வைத்தனர். இது பாரதூரமான விடயம்.

 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை மூலம் மூவரும் மீட்கப்பட்டனர். அந்த நடவடிக்கையின்போது
எந்தக் கைதிக்கும் சிறிய காயங்கூட ஏற்படவில்லை.

 மனிதாபிமான நடவடிக்கையின்போது அங்கு கத்திகள், தொலைபேசிகள் போன்றவை மீட்கப்பட்டன. அத்தோடு சிறைக்காவலர்களின் ஆடைகளையும்
அவர்கள் வைத்திருந்தனர்.  அவர்கள் வேறேதும் சதித்திட்டங்களுக்குத் திட்டமிட்டிருந்தார்களோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள தமிழக் கைதியின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னரே உண்மை நிலைமை என்னவெனத் தெரியவரும்  என்றார்.


மகன் இல்லாத உலகில் இருந்து ௭ன்ன பலன்; நிமலரூபனின் தாயின் கண்ணீர்!
on 07 July 2012.

௭னது மகனை 10 மாதம் தவமிருந்து பெற்று இன்று கை, கால் முறிக்கப்பட்டு நெஞ்சிலும் தலையிலும் காயப்பட்டு சடலமாக காணும் நிலையில்
இருக்கின்றேன். எனது வீட்டில் மகனின் இறுதிக்கிரியை செய்வதற்காவது சடலத்தை பெற்றுத் தாருங்கள் ௭ன நிமலரூபனின் தாயார் கண்ணீர் மல்க
கோரிக்கை விடுக்கின்றார்.

இறப்பிற்கு பின்னர் பொலிஸாரால் ராகம வைத்தியசாலையில் சடலத்தை காண்பித்த பின்னர் மீண்டும் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள
நிமலரூபனின் பெற்றோர் கண்ணீர் மல்க மனம் திறந்து தெரிவித்த கருத்துக்க ளை பகிர்கின்றோம்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நாங்கள் இராணுவ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்து பல இடங்களிலும் இருந்து 1996 ஆம் அண்டு வவுனியாவிற்கு வந்து சேர்ந்தோம்.

ஒரேயொரு மகனான நிமலரூபன் வட் டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் இடப்பெயர்வின் பின்னர் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்து சாதாரணதர பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி பெற்று வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார்.

௭னினும் அவருக்கு நாடகமும் அரங்கியலும் பாடத்தில் இருந்த ஆர்வத்தால் மீண்டும் யாழ்ப்பாண கல்லூரியில் கற்று உயர்தர பரீட்சையிலும் சித்தி
பெற்றிருந்த நிலையில் மீண்டும் வவுனியா வந்து தொழில் பார்த்து வந்த நிலையிலேயே வேப் பங்குளம் பகுதியில் வீதியில் வைத்து கைது
செய்யப்பட்டார் ௭ன நிமலரூபனின் நிலையை தாயார் ௭டுத்துக்கூறினார்.

இதன் தொடர்ச்சியாக நிமலரூபனின் இற ப் பின் பின்னர் நடந்தவற்றை விபரிக்கை யி ல்: கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு ௭ங்கட வீட்டிற்கு வந்த
வவுனியா பொலிஸார் உங்கட மகனுக்கு வருத்தம் கடுமையாகவுள்ளது உங்கள பார்ப்பதற்கு விரும்புகிறார். ௭னவே நீங்கள் ௭ங்களுடன் வாருங்கள் ௭ன கோரியிருந்தனர். ௭னவே நாங்களும் மகனைப் பார்க்கும் ஆவலில் அவர்களுடைய வாகனத்தில் ஏறிச் சென்றோம்.

நாங்கள் சென்ற வாகனத்தின் பின்னால் இனனும் ஒரு பொலிஸ் வாகனமும் வந்து கொண்டிருக்க ௭ங்களை மகர பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்துச்சென்றனர். அங்கு ௭ங்களை கூட்டிச்சென்று நீண்ட நேரமாக பொலிஸார் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார்கள். ௭ங்களை மகனுக்கு கடுமை ௭ன அழைத்து வந்து வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லாது வைத்திருந்தனர்.

அதன் போது சந்தேகம் கொண்டு ஏன் இன்னும் ௭ங்கள மகனைப்பார்க்க கூட்டிக்கொண்டு போகவில்லை ௭ன கேட்டேன். அதற்கு பொலிஸார் தற்போது இரவாகிவிட்டதால் காட்டமாட்டார்கள். அதனால் இங்கு தங்கிவிட்டு காலையில் செல்லலாம் ௭ன தெரிவித்தனர். முதலில் பொலிஸ் பெண்கள்
பிரிவினருடன் தங்குமாறு தெரிவித்து விட்டு இங்கு தங்கினால் பாதுகாப்பில்லை அதனால் ௭ங்களுடன் வாருங்கள் ௭ன தெரிவித்து ஒரு
விடுதியொன்றில் அறை ௭டு த்து தந்தார்கள்.

இன்னுமொரு அறை யில் அவ ர் கள் நின்றனர். இப்போதும் அவர்கள் மக னுக்கு நடந்தவற்றை தெரிவிக்காமல் விடிய ற்காலையில் சென்று மகனைப்
பார்ப்போம் ௭ன்றே தெரிவித்தனர். நாங்கள் நம்பி ௭ங்கட பிள்ளையை பார்ப்போம் ௭ன்றுதான் அன்று இரவு படுத்திருந்தேன். ஆனால் அடுத்தநாள்
காலையிலும் போகலாம் ௭ன்று நினைத்து நாங்கள் இருக்கும் போது நேரத்தை கடத்தும் செயலில் பொலிஸார் ஈடுபட்டுவந்தனர்.

8 மணியாகிய பின்னர் ௭ங்களுடைய கரைச்சலால் மீண்டும் வாகனத்தில் ஏற்றி மகர பொலிஸ் நிலையத்திற்கே கொண்டு சென்றனர். அங் கும் ஏதோ
பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனரே தவிர ௭மக்கு மகனை பார்ப்பதற்கான ௭ந்த நடவடிக்கையையும் மேற்கொ ள் ள வில்லை. இவர்களுடைய
நடவடிக்கையால் நான் உணர்ந்துகொண்டேன் ௭னது பிள்ளைக்கு ஏதோ நடந்துவிட்டதாக.

உட னேயே அங்கிருந்த பொலிஸ் அதிகாரியிடம் கேட்டபோது 'சீ யார் சொன்னது அப்படி ஒன்றும் நடக்கவில்லை' ௭ன்றே கடைசிவரை
தெரிவித்திருந்தனர். இவ்வேளையிலேயே நான் சினமடைந்து ௭ன்னவோ நடந்துவிட்டது ௭ன்ன வைத்தி ய சா லைக்கு கொண்டு செல்லுங்கள்
இல்லா விட்டால் வீட்டுக்கு அனுப்புங்கள் ௭னக் கேட்டேன்.

இதுவரைக்கும் ௭ங்களை மலசலகூடம் செல்வதற்கு கூட அனுமதிக்காது பொலிஸ் ஜீப்புக்குள்ளேயே கைதி போல வைத்திருந்தனர். கடைசியில் 10
மணியளவில் ராகம வைத்தியசாலைக்கு ௭ங்களை கூட்டிச்சென்றனர். அங்கு பெண் பொலிஸ் பாதுகாப்பொன்றை ௭மக்கு வழங்கிவிட்டு ஏனைய
பொலிஸார் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்து சொன்னார்கள் வைத்தியர் வரவில்லை வந்தபின்னர் பார்க்கலாம் ௭ன்றனர்.

அப்போது அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மகனைப்போய் பார்த்தனான் அப்பா அம்மா வந்திருக்கினம் ௭ன்று சொன்னதும் சிரித்து சந்தோசம் ௭ன்று சொன்னவர் ௭ன்றார். அப்போது ௭னது கணவரை வைத்தியசாலைக்குள் கூட்டிச்சென்றனர். அப்போதும் நான் ௭னது மகனுக்கு ஒன்றும் நடக்கவில்லை ௭ன பொலிஸாரை நம்பிவிட்டேன் ௭ன அழுது கொண்டே தெரிவித்தார்.

பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு ௭னது கணவர் வைத்தியசாலைக்குள்ளிருந்து ௭ன்னிடம் ஓடிவந்து தம்பி செத்துவிட்டான் சடலத்தைத்தான் கொண்டுபோய் காட்டினவங்கள் தம்பிக்கு கையும் கால்களும் உடைந்திருக்கின்றது நெஞ்சிலும் தலை யிலும் காயமுள்ளது ௭ன விழு ந்து அழுதார். அப்போது தான் ௭னக்கு உண் மை தெரிந்தது.

அந்த நேரத்தில பொலிஸார் ஏதோ ஒரு படிவத்தில் கையொப்பமிடுமாறு தெரிவித்தனர். நாங்கள் கடுமையாக சொன்னோம் சிறைச்சாலையில் இருந்து
தான் நீங்கள் கொண்டுவந்தீர்கள். ௭ங்கட பிள்ளைக்கு ௭ன்ன நடந்தது ௭ன்று ௭ங்களுக்கு தெரியாமல் நாங்கள் கையொப்பம் இடமுடியாது ௭ன்று
பிடிவாதமாக நின்றோம். அப்போது ஒரு பொலிஸ் உத்யோகத்தர் ௭னக்கு அடிப்பதற்கு முயற்சித்தார்.

நான் அப்போதும் சொன்னேன் நீங்கள் பொலிஸ் இல்லை நீங்கள் குற்றவாளி நாங்கள் தான் உங்களை கைது செய்யும் நிலை உள்ளது. ஏனெ ன் றால்
வீட்டில் இருந்து பொய் சொல்லி கூட்டி வந்தீர்கள் ௭னக் கூறினேன். அப் போது மீண்டும் அடிப்பதற்கு வந்தார். நான் தெரிவித்தேன் அடித்தால் நானும்
திருப்பி அடி ப்பேன் ௭ன்றேன்.

நீ சுடலாம், அடிக் கலாம் அதுக்கு முன்னர் ௭ன்ன காரண த் தி ற்கு மகன் இறந்தான் ௭தற்காக கையொப் பம் வாங்குகிறீர்கள் ௭ன கேட்டேன். ஏனெனில்
அவர்கள் கொண்டு வந்த படிவம் முழுமையாக சிங்களத்தில்தான் இருந்தது. ௭மக்கு சிங்களம் தெரியாது ஆகவே கையொப்பம் இடமுடியாது ௭ன்றேன்.
இதற்கும் ௭ங்களுக்கும் தொடர்பில்லை நாங்கள் பார்ப்பதற்கே வந்திருந்தோம்.

இது சிறைச்சாலையின் பொறுப்பு. நாங்கள் கையொப்பம் வைப்பதென்றால் ௭ங்களுடைய சட்டத்தரணியுடன் கதைத்து அதன் பின்னர் தான்செய்வோம்
௭ன்பதுடன் மனித உரிமைகள் இல்லத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள ௭மது சட்டத்தரணிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள் ௭ன்றோம். அதற்கு
அவர்கள் அவர்களையும் அவர்களது நிறுவனத்தையும் தெரியாது ௭ன்றனர்.

அப்போதும் நாம் மனித உரி மைகள் இல்லத்தின் முகவரியை தெரிவித் தோம். ஆனால் அவர்கள் ௭ந்தவித தகவ லை யும் பரிமாறவில்லை ௭ன்பதனை
அறிந்து கொண்டோம். ௭னினும் அவர்கள் கையொப்பம் வாங்குவதில் குறியாக இருந்தனர். நீதிபதி வருவதாக தெரிவித்து மீண்டும் கையொப்பம்
வைக்குமாறு வலியுறுத்தினர்.

பின்னர் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று இது யு.ன்.௭ச்.சி.ஆர். இங்கு பதிவு செய்யு ங்கள் ௭ன்றனர். அப்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் நான்
கூறினேன். நாங்கள் கொஞ்சமாவது படித்தவர்கள். பொலிஸ் ௭ன்று பெயர்ப்பலகை போட்ட இடத்தில் யு.௭ன்.௭ச்.சி.ஆர் ௭ப்படி இருக்கும் ௭ன கூறியதும் அங்கிருந்த பெண் வெளியேறிவிட்டார்.

ஆனால் நாங்கள் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வந்த ஒருவரை சடலமாக நாங்கள் பெறமுடியாது அதற்கு நீதிமன்றமும் சிறைச்சாலையுமே
பொறுப்பு ௭ன தெரிவித்ததுடன் நீங்கள் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் அங்கு கையொப்பம் வைத்து ௭டுக்கின்றோம் ௭ன தெரிவித்தோம். இவ்வாறு அவர்கள் அன்று மதியம் 2 மணி வரை ௭மக்கு துன்பம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

அதன் பின்னர் பிரேத அறையின் அருகில் இருந்த ஒருவரிடம் கூட்டிச்சென்று அவர் வைத்தியர் ௭னவும் அவர் முன்னிலையில் கையொப்பம் இடுமாறும்
வற்புறுத்தினர். ஆனால் அவர் வைத்தியர் ௭ன்பதனை உறுத் திப்படுத்தாது கையொப்பம் இடமுடியாது ௭ன தெரிவித்து நாம் புறக்கணித்தோம். பின்னர்
தமிழ் வைத்தியர் ஒருவர் ௭ன தெரிவி த்து ஒருவரிடம் கூட்டிச்சென்றனர்.

௭மக்கு வருத்தமில்லை நாங்கள் வைத்தியரிடம் கதைக்க வேண்டிய தேவையில்லை ௭ன்று மீண்டும் அதனை புறக்கணித்தோம். அப் போது ௭ங்களை சூழ சிங்கள மொழிபேசும் பொலிஸாரே நின்றனர். அந்தநேரத்தில் அங்கு வந்த தமிழ் பொலிஸ் உத்தியோக த் தரிடம் நீங்கள் வவுனியா பொலிஸ்
நிலையத்தில் வைத்து பொடி அறங்கென்னங்' ௭ன்று கூறும்போதே நாங்கள் சந்தேகங் கொண் டோம்.

ஆனால் நீங்கள் ௭ங் களையும் 'புலி' ௭ன்றுதான் கொண்டு வரு கி றீ ர்கள் ௭ன நினைத்து கதை க்கவி ல்லை ௭ன்று கூறினேன். இந்த நேரத்தில் மனித
உரிமைகள் இல் லத்தின் சட்டத்தரணி அங்கு வரவேதான் நாங்கள் தொந்தரவுகளில் இருந்து விடுப ட் டுக்கொண்டோம். அதன்பின்னர் ௭ங் களை
நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு ௭மது சட்டத்தரணி வேறு சட்டத் தரணிகளுடன் கதைத்து விட்டு ௭ம்மிடம் தெரிவித்தார் சடலத்தை வவுனியாவிற்கு கொண்டு செல்ல முடியாது இங்குதான் அடக்கம் செய்ய வேண்டுமென்றார். ஆனால் நாங்கள் வவுனியாவில் வைத்தே பிள்ளையை பறிகொடுத்தோம். ௭ங்களு டைய பிள்ளையை மீண்டும் வவுனியாவிற்கு கொண்டுவந்து தாருங்கள் ௭ன்று மன்றாடினோம்.

அப்போது பொலிஸார் திங்கட்கிழமைக்குள் சடலத்தை அடக்கம் செய்யுமாறும் இல்லையேல் தாங்கள் அட க்கம் செய்து விடுவதாகவும் தெரிவி த்தனர். ஆகவே நாங்கள் சடலத்தை மீண்டும் பார்ப்பதற்கு அனுமதி கேட்டோம் ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். பின்னர் ௭ம்மை வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு வவுனியாவிற்கு கொண்டுவந்து விட்டு ஓட்டோவுக்கு காசு தந்து வீட்டுக்கு போகுமாறு தெரிவித்தனர்.

ஆனால் ௭னது மகன் மாரடைப்பால் இறக்கவில்லை. இதய வருத்தத்திற்கு அவர் தவறாது சிக்சிசை பெற்று வந்திருந்தார். அவர் சிறையில் இருக்கும்
போது சிறை ச் சாலை உணவை உண்ணாது நான் ஒவ் வொரு நாளும் வீட்டில் இருந்து உணவு கொண்டுபோய் கொடுத்து வந்தேன். அவர்
திடகாத்திரமாகவே இருந்தார்.

அவ்வளவு பக்குவமாக வளர்த்து வந்த பிள்ளையை ஏதோ காரணங்கள் கூறி சிறையில் அடைத்து இன்று அடித்து சடலமாக்கி விட்டார்கள் ௭ன
கதறியழுத நிமலரூபனின் தாய் இன் னுமொரு விடயத்தையும் சொல்லி வைக்க மறக்கவில்லை, இதாவது தான் சிறைக்கு சென்று மகனை
பார்க்கும்போதெல்லாம் நிமலரூபன் கூறி யிருந்தாராம் அம்மா ௭ன்னை இங்கி ருந்து விட மாட்டார்கள்.

௭னக்கு ஏதாவது நடந் துவிட்டால் நீங்கள் உயிருடன் இருந்து விடாதீர்கள். உங்களை இங்கு யாருமே பார்க்கமாட்டார்கள். வயதுபோன காலத்தில்
கஷ்டப்பட்டுவிடாதீர்கள் ௭ன்று. ௭னவே ௭னது மகனின் இறுதிக் கிரியைகளை ௭மது வீட்டில் வைத்து செய்துவிட வேண்டும் அதற்கு சடலத்தை
பெற்று த்தாரு ங்கள் ௭ன கண்ணீர் மல்க கோரிக்கை விடு த்த அவர் மகன் இல்லாத உலகில் நாங்கள் இருந்து ௭ன்ன பலன் ௭ன்றார்.

நிமலரூபன் சடல வழக்கு: இறுதி முடிவு இரண்டு வாரத்தில்
Monday, 09 July 2012 22:28

இலங்கையின் றாகம வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலத்தை அடக்கம் செய்யும் விவகாரம்
தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்காக 23 ஆம் திகதி வரையில் கடவத்தை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருக்கின்றது.


வவுனியா சிறைச்சாலையில் 3 சிறைக்காவலர்கள் அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளினால் பணயமாக வைக்கப்பட்டிருந்ததையடுத்து, அவர்களை
கூட்டு இராணுவ நடவடிக்கையின் மூலம் மீட்டெடுத்த சிறைச்சாலை அதிகாரிகள் அங்கிருந்த கைதிகள் அனைவரையும் அனுராதபுரத்திற்கும் மகர
உட்பட வேறு இடங்களுக்கும் மாற்றியிருந்தனர்.

இதன்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மோசமாகத் தாக்கப்பட்டு மகர சிறைச்சாலையிலும், றாகம
வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டிருந்த வேளை, நிமலரூபன் அங்கு மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.அடிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையிலேயே அவர் மரணமாகியதாகப் பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டை அரச தரப்பினர் மறுத்துள்ளனர்.

இந்லையில் நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு சென்றால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படலாம், அதனால் அங்கு அமைதிக்குப்
பங்கம் ஏற்படும் என வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

எனவே, நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்காமல், கடவத்தை நீதிமன்றப் பிரதேசத்திற்குள் அதனை
நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கடவத்தை பொலிசார் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றிருந்தது.

அதன்படி, அந்த சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல முடியாது என்றும் கடவத்தை நீதிமன்ற நியாயாதிக்கப் பகுதியில் நல்லடக்கம் செய்ய
வேண்டும் என்றும், அதற்கு இன்று 9 ஆம் திகதி வரை அவகாசம் தருவதாகவும் கடவத்தை நீதவான் கடந்த வியாழக்கிழமை தனது உத்தரவில்
தெரிவித்திருந்தார்.

எனினும், நிமலரூபனின் சடலத்தை வவுனியாவிலேயே நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பி அவரது பெற்றோர், அதற்கான அனுமதியைப்
பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதற்காக அவர்களின் சார்பில் கடவத்தை நீதிமன்றத்தில் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா ஆஜராகி வவுனியாவில் சிவில் இயல்பு நிலை
நிலவுகின்றது. எனவே, அங்கு நிமலரூபனின் சடலத்தைக் கொண்டு சென்றால் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள
முடியாது. சடலம் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

பாதுகாப்பு விடயம் தொடர்பில் பொலிசாரின் அறிக்கையை ஒட்டித்தான் முடிவு எடுக்க முடியும் என அப்போது பதிலளித்த கடவத்தை நீதவான்,
இதற்கும் மேற்பட்ட நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்று வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் என கூறி, அதற்கென 2 வார காலம்
அதாவது வருகின்ற 23ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதாக சட்டத்தரணி தம்பையா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தில் இதற்கான உத்தரவைப் பெறுவதற்குரிய முயற்சிகளில் நிமலரூபனின் பெற்றாருடைய சார்பில் சட்டத்தரணிகள்
முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சட்டத்தரணி தம்பையா தெரிவித்துள்ளார்.-பி.பி்.ஸி

Monday, July 09, 2012

அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூக பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்: மனோகணேசன்

நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர,
யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைசாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சமாந்திரமாக, இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு
அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குக என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.



சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு விடுத்துள்ள ஊடக செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

மக்கள் கண்காணிப்பு குழுவின் அவசர வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக குறைந்த கால அவகாசத்தில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற
நமது கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொல்லப்பட்டுள்ள நிமலரூபன் தொடர்பில் நாம் ஏற்கனவே மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளோம். அது தொடர்பில்
உங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 * வவுனியாவிலிருந்து முதலில் அனுரதபுரத்திற்கும் பின்னர் மஹர, கண்டி சிறைச்சாலைகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ள கைதிகள் அனைவரும்,
உடனடியாக கொழும்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படக்கூடாது.

* வவுனியா சிறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து கைதிகளும், பக்க சார்பற்ற முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படவேண்டும்.

* அனைத்து கைதிகளையும் அவர்களது பெற்றோர்களும், வழக்குரைஞர்களும் சந்திப்பதற்கு முழுமையான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

* சிறைகூடங்களிலும், தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் தற்போது பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

மன்னார் கடற்பரப்பினுள் இந்திய ரோலர் படகு மீனவர்களின் அத்துமீறும் செயற்பாடு அதிகரிப்பு

பல வருடங்களுக்கு மேலாக மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாத்தாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய
ரோலர் மீன்பிடி தொழிலாளர்களின் குறித்த செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
வருவதோடு ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்திய ரோலர் படகு மீனவர்கள் மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு மீனவர்களின் பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்லுகின்றனர்.


குறித்த பிரச்சினை தற்போதும் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.யுத்
தம் முடிவுற்ற நிலையிலும் இந்திய ரோலர் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அன்று முதல் இன்று வரை இந்திய ரோலர் மீனவர்களின் அத்து மீறும் செயற்பாட்டை கட்டுப்படுத்துமாறு கோரி மன்னார் மாவட்ட மீனவர்கள் பல
தரப்பினரிடமும் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
பல்வேறு பேச்சுவார்த்தை இடம் பெற்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.தொடர்ந்தும் மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு பல இலட்சம் ரூபா நஷ்டத்தையும் எதிர் நோக்கி வருகின்றனர். மீன் பிடி தொழிலாளர்கள் பலர் தமது தொழிலை முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் கச்சதீவு கடற்படப்பில் தொழில் செய்வதாகக் கூறிக்கொண்டு மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்து மீறி நுழைந்து மீன்
பிடிக்கின்றனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் சுமார் பல ஆயிரக்கணக்கான இந்திய ரோலர் படகுகள் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினக்குரல்
 

எங்கள் நிலம் எமக்கே சொந்தம்: மன்னார் மக்கள்

எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள் மன்னாரில் திரண்டனர் மக்கள்

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் "எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்ற கோஷத்துடன் தமிழர்
நிலங்களை இராணுவம் அபகரிப்பதற்கு எதிராகவும், மன்னார் மீனவர்களுக்கு கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பாஸ்'
நடைமுறைக்கு எதிராகவும் சாத்வீக முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


 நேற்று முற்பகல் 10.30 மணியளவில் மன்னார் சிறுவர் பூங்காவில் ஆரம்பமான இந்தப் பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும்
மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.



 "அரசே தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்காதே', "அப்பாவித் தமிழர்களை கொல்லாதே', "தமிழர் தாயகத்தை விட்டு இராணுவமே வெளியேறு',
"தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே', "அப்பாவி தமிழ்க் கைதிகளை கொல்லாதே' என்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணமும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
செய்தி:தமிழ் இணையம்

அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இரா.சம்பந்தன் தலைமையில் ஆராய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 09:31 GMT ]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வேட்பாளர்களைத் தெரிவு
செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், “கிழக்கு மாகாணசபைக்கு நடக்கப் போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுமானால், அதனைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை
என்று அனைத்துலக அளவில் பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது. சிறிலங்காவின் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எந்தத் தமிழரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறக் கூடாது.

இதற்குத் தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கக் கூடாது.

சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இது
தொடர்பாக ரவூப் ஹக்கீமுடன் பேசியுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
============

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.
Posted by sankathinews on July 6th, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகளிடையேயும் புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக நேற்று கூட்டமைப்பின் 6 பேர் கொண்ட குழு
கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் பேச்சு நடத்தியது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா,
சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகள் இடையிலே இணக்கப்பாட்டை எட்டுவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று
தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் எமது செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.இன்றும் மேற்படி குழு 6 பேரும் சந்தித்துக் கலந்துரையாடும் என்றார்.

Thursday, July 05, 2012

புதிய உப அணுத்துகளின் (Higgs boson)- கண்டுபிடிப்பு அண்ட அறிவுத் துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சல்!

 
"This is just the beginning,"


Higgs deserved a Nobel Prize:Stephen Hawking

LONDON: Stephen Hawking has said that Peter Higgs deserved a Nobel Prize for the groundbreaking discovery of the " God particle", but admitted that the findings have come at a cost for him.

The 70-year-old theoretical physicist lost a 100-dollar bet as he believed that the Higgs Boson
wouldn't be found.

"I had a bet with Gordon Kane of Michigan University that the Higgs particle wouldn't be found.

It seems I have just lost 100 dollars," the Telegraph quoted Hawking as saying.

When Higgs first proposed that an invisible field strewn across space gave mass to the building
blocks of the universe, the theory was ridiculed by some of the most respected minds of the
time.

His first paper was rejected by a journal, while other scientists accused him and his colleagues
of failing to grasp the basic principles of physics.

Despite the sleights Higgs, at the time a 34-year-old physicist at Edinburgh University, was
convinced that his idea was right although he never envisaged being able to prove it.

48 years on, his radical concept was finally proved correct by an international team of
physicists at the CERN laboratory using a 6-billion-pound piece of equipment, designed to
uncover the secrets of the Universe, on Wednesday.
-----------
A closer look at the Higgs boson


The magnet core of the world`s largest superconducting solenoid magnet (CMS, Compact Muon
Solenoid), one of the experiments preparing to take data at European Organization for Nuclear
Research (CERN)`s Large Hadron Collider (LHC) particle accelerator is seen, near Genva.

BERLIN: Scientists working at the world's biggest atom smasher near Geneva have announced the
discovery of a new subatomic particle that looks remarkably like the long-sought Higgs boson.
Sometimes called the "God particle" because its existence is fundamental to the creation of the
universe, the hunt for the Higgs involved thousands of scientists from all over the world.

WHAT IS THE GOD PARTICLE ANYWAY?

School physics teaches that everything is made up of atoms, and inside atoms are electrons,
protons and neutrons. They, in turn, are made of quarks and other subatomic particles.
Scientists have long puzzled over how these minute building blocks of the universe acquire mass.
Without mass, particles wouldn't hold together and there would be no matter.
One theory proposed by British physicist Peter Higgs and teams in Belgium and the United States
in the 1960s is that a new particle must be creating a "sticky" field that acts as a drag on
other particles. The atom-smashing experiments at CERN, the European Center for Nuclear
Research, have now captured a glimpse of what appears to be just such a Higgs-like particle.


This image shows a typical candidate event including two high-energy photons whose energy
(depicted by red towers) is measured in the CMS electromagnetic calorimeter. The yellow lines
are the measured tracks of other particles produced in the collision.

WHY IS THIS IMPORTANT?

The Higgs is part of many theoretical equations underpinning scientists' understanding of how
the world came into being. If it doesn't exist, then those theories would need to be
fundamentally overhauled. The fact that it apparently does exist means scientists have been on
the right track with their theories. But there's a twist: the measurements seem to diverge
slightly from what would be expected under the so-called Standard Model of particle physics.
This is exciting for scientists because it opens the possibility to potential new discoveries
including a theory known as "super-symmetry" where particles don't just come in pairs - think
matter and anti-matter - but quadruplets, all with slightly different characteristics.

HOW MUCH DID IT COST?

CERN's atom smasher, the Large Hadron Collider, alone cost some $10 billion to build and run.
This includes the salaries of thousands of scientists and support staff around the world who
collaborated on the two experiments that independently pursued the Higgs.

WERE THERE ANY PRACTICAL RESULTS FROM THE SEARCH?

Not directly. But the massive scientific effort that led up to the discovery has paid off in
other ways, one of which was the creation of the World Wide Web. CERN scientists developed it to
make it easier to exchange information among each other. The vast computing power needed to
crunch all of the data produced by the atom smasher has also boosted the development of
distributed or cloud computing, which is now making its way into mainstream services. Advances
in solar energy capture, medical imaging and proton therapy used in the fight against cancer
have also resulted from the work of particle physicists at CERN and elsewhere.

WHAT'S NEXT

"This is just the beginning," says James Gillies, a spokesman for CERN. Scientists will keep
probing the new particle until they fully understand how it works. In doing so they hope to
understand the 96 percent of the universe that remains hidden from view. This may result in the
discovery of new particles and even hitherto unknown forces of nature.

Tuesday, July 03, 2012

பொலோனியம் கதிர்வீச்சு நஞ்சேற்றி யசீர் அரபாத் படுகொலை


 
A nine-month investigation by Al Jazeera has revealed that Yasser Arafat was in good health until he suddenly fell ill on October 12, 2004.
 
Further tests revealed that Arafat's final personal belongings -- his clothes, his toothbrush, even his iconic kaffiyeh -- contained abnormal levels of polonium, a rare, highly radioactive element.
 
Those personal effects, which were analyzed at the Institut de Radiophysique in Lausanne, Switzerland, were variously stained with Arafat's blood, sweat, saliva and urine.
 
The tests carried out on those samples suggested that there was a high level of polonium inside his body when he died.
 
So what does Polonium do to a person?
 
It is actually harmless when it's outside the body, but inside, it becomes one of the deadliest substances known.
 
An amount equivalent to the size of a particle of dust is lethal.After being taken into the body, Polonium quickly gets into the blood stream. Then it bombards people's cells with millions of radioactive alpha particles.
 
It damages the organs - first the liver and the kidneys, causing jaundice. It damages the intestines, cuasing toxic shock syndrome. And finally, it attacks the heart.
 
Al Jazeera talks to David Barclay, a forensic scientist based in Edinburgh, Scotland.

Monday, July 02, 2012

அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்


அணு ஆற்றலும்
சமூக முன்னேற்றமும்
தோழர் வில்லியம்  போல்

முதற் தமிழ்ப்பதிப்பு: சூன் 2012

வெளியீடு: சமரன் வெளியீட்டகம்
28/141, மாதவரம் நெடுஞ்சாலை,
பெரம்பூர், சென்னை-600011
கையடக்கத் தொலைபேசி: 0091 9941611655

அச்சு: சுப்ரா பிரின்டெக், சென்னை 600005
விலை:ரூபா.30

நூல் விற்பனை:

சென்னை: 0091 8098538384
தருமபுரி : 0091 9787145335
கடலூர் :  0091 8098698747
தஞ்சை :  0091 9445324682
வேலூர் :  0091 9345012494
சேலம்  :  0091 9344560906
=======================================
பதிப்புரை

Monday, June 25, 2012

புலம்பெயர் தமிழ் நம்பூதிரிகளின் புளுகும், அமெரிக்க இலங்கை உறவும்!

"The business environment is right for American investments but sometimes it takes a little longer with government bureaucracy that is not true only in Sri Lanka"
- US ambassador to Colombo Patricia Butenis
 =====================================================
போர்க்குற்றவாளிகளான  பக்சபாசிஸ்டுக்களின் தலையை வெட்டி தட்டில் வைத்து தமிழர்களுக்கு அமெரிக்கா தரப்போவதாக புலம் பெயர் தமிழ் நம்பூதிரிகளும், அவர்களது புரட்டு ஊடகங்களும்,  அன்றாடம் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளுக்கு  கணக்குமில்லை! வழக்குமில்லை!!
ஆனால் அமெரிக்க இலங்கைப் பொருளாதார உறவிலோ எந்தப் பிணக்குமில்லை! பி்ளவுமில்லை!!



LBO>>Economy
Investment Interest
25 Jun, 201218:41:58

Sri Lanka energy sector eyed by US firms: envoy
June 25, 2012 (LBO) – Sri Lanka's energy sector is a key area of interest for US companies scouting for investment opportunities after the end of a three decades war, US ambassador to Colombo Patricia Butenis said.

 "We've seen a lot of interest from American energy companies interested in help building oil refineries and developing natural gas," Butenis said.

 "The energy sector has been the biggest area of interest for US companies. I think that will remain," she said.

Butenis who is nearing her three year term in Sri Lanka said there has been a lot of interest and negotiations on US investment opportunities in the island.

"The business environment is right for American investments but sometimes it takes a little longer with government bureaucracy that is not true only in Sri Lanka"


"Within the next few years we will see more investment coming," she said.
Sri Lanka's rulers, who have violated property rights of both citizens and non-citizens repeatedly since independence from British rule, resumed the activity last year.

Micheal Delaney assistant US trade representative for South Asia told reporters earlier in the month that the US has been assured that there would be no more expropriations.

"We have expressed our concern about that to the government of Sri Lanka," Delaney said.
 "It has been characterized to us as an exceptional one-off act. We have been encouraged not to see that as a pattern or any model for future action."

Following the passage of the law which legislators said was ad hominem and trespassing on the separation of powers between the legislature and parliament, the intention to re-take privatized plantations lands have been announced.

The plantations themselves were expropriated at one time. In many authoritative, fascist-nationalist or left-leaning states the energy sector has been a favourite target for expropriation.

On Monday Butenis visited a bottling plant of Coca Cola, a quintessential US brand, in Biyagama, in the suburbs of the Colombo.

Coca Cola, a key player in Sri Lanka's beverage industry has adopted a number of environment friendly initiatives aimed at improving water usage and cutting carbon emissions.

"Coke is a pre-eminent American company and I m proud of its successful operation in Sri Lanka", Butenis said.

I think they are setting standards in occupational safety and green technology" she said.

நிர்மூலமாகும் நிதிமூலதனப் பண்ணை - சைப்பிரஸ்

 Cyprus applies for EU bailout
25 June 2012 19:17

NICOSIA -   - Cyprus on Monday said it would seek financial assistance from the European Union's EFSF/ESM bailout funds to curb exposure of its financial sector to Greece.

 "The purpose of the required assistance is to contain the risks to the Cypriot economy, notably those arising from the negative spill over effects through its financial sector, due to its large exposure in the Greek economy," a government announcement said.

 Greece, Ireland and Portugal have already had international bailouts. Spain has asked fo help for its banks but not yet applied

 Earlier on Monday, it announced emergency talks on the economy.

 The euro zone's third-smallest economy needs to raise the equivalent of 10 percent of its GDP by June 30 to recapitalise its second largest bank, heavily exposed to debt-crippled Greece.

 With its coffers emptying rapidly and hurtling towards an immovable deadline, the island suffered a further fiscal sovereign credit rating to junk status.

With a bailout widely viewed as all but inevitable, Cyprus has for weeks been trying to juggle its options between a bailout from Europe's rescue funds, the temporary EFSF and the permanent ESM, or a bilateral loan from either Russia or China.

 Government sources have told Reuters that President Demetris Christofias wanted to consult political leaders before taking a decision on where to borrow from, suggesting one was close.

 They would meet on Tuesday afternoon, a press release from the presidency said on Monday.
 If Cyprus - which assumes the rotating EU presidency on July 1 - signs up for the EU rescue programme it will join the ranks of Greece, Ireland, Portugal and Spain, becoming by far the smallest EU state to receive aid.

 But weekend trips by government officials to China suggested Cyprus was pulling out all the stops to avoid going to its EU partners.

 In comments to the state broadcaster, Commerce, Industry and Tourism Minister Neoklis Sylikiotis confirmed discussions focused on a loan or a Chinese investment in the troubled lender, Cyprus Popular Bank.

 "We have had some contacts... We have requested an answer in coming days," Sylikiotis said.

 Cyprus has displayed caution in going to its EU partners because of conditions attached to any aid.
 It is fiercely protective of a corporate tax rate that is one of the lowest in the EU and, eight months before a general election, shows no appetite for the stringent spending cuts that any EU funding would tie it to.

 "I think they want to avoid it (the EFSF) at least as the sole provider simply because they are afraid of the strings attached," said political analyst Hubert Faustman.

 It was unclear whether a loan from either country would be forthcoming, giving the Mediterranean island precious little leeway to rustle together 1.8 billion euros for Popular, hit by a writedown in its Greek sovereign debt holdings.

 Officials say any aid via the EFSF would likely be restricted to the banking sector and not to broader budgetary requirements.

 But in its report, Fitch said the recapitalisation bill for Cypriot banks could potentially reach 4 billion euros. That amount, equivalent to 23 percent of GDP, also took into account rising non-performing loans from the domestic market, it said.

 Fitch said it saw a heightened possibility of the Republic needing an EFSF bailout to recapitalise its banks, and a bilateral loan from the Russian federation to cover gross budgetary financing requirements until the end of 2013. (Reuters) 

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...