SHARE

Monday, July 09, 2012

எங்கள் நிலம் எமக்கே சொந்தம்: மன்னார் மக்கள்

எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள் மன்னாரில் திரண்டனர் மக்கள்

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் "எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்ற கோஷத்துடன் தமிழர்
நிலங்களை இராணுவம் அபகரிப்பதற்கு எதிராகவும், மன்னார் மீனவர்களுக்கு கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பாஸ்'
நடைமுறைக்கு எதிராகவும் சாத்வீக முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


 நேற்று முற்பகல் 10.30 மணியளவில் மன்னார் சிறுவர் பூங்காவில் ஆரம்பமான இந்தப் பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும்
மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.



 "அரசே தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்காதே', "அப்பாவித் தமிழர்களை கொல்லாதே', "தமிழர் தாயகத்தை விட்டு இராணுவமே வெளியேறு',
"தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே', "அப்பாவி தமிழ்க் கைதிகளை கொல்லாதே' என்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணமும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
செய்தி:தமிழ் இணையம்

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...