SHARE
Monday, October 25, 2010
மாவீரர் தின தீர்மானம்
Sunday, October 24, 2010
கடந்தகால வரலாறு கிளறப்படுவதற்கு அஞ்சும் நிகழ்கால அமைச்சர் - கருணா

கடந்த கால விடயங்களைக் கிளறுவதை விட எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கொழும்பு, ஒக்.23
கடந்த கால விடயங்களைக் கிளறுவதை விட எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம். 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, அந்தக் காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் மேலும் கூறியவை வருமாறு:
மட்டக்களப்பில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கிடையாது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றபோது நான் அந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் பொட்டு அம்மான், கரிகாலன் மற்றும் நியூட்டன் ஆகியோர் கிழக்குப் பிராந்தியத்தை வழிநடத்தினார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பேரவலங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே பொறுப்பேற்க வேண்டும் இப்படி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி: உதயன் செய்தி
Friday, October 22, 2010
Tuesday, October 19, 2010
கிரேக்கம் மூட்டிய தீ ஐரோப்பா எங்கும் பரவுகின்றது


கருங்காலி முதலாளித்துவ தொழிற்சங்க வர்க்க சமரசத்தை தூக்கியெறிந்து, புரட்சிகர சோசலிச, மக்கள் ஜனநாயக புரட்சிப்பாதையில் அணி திரள்வீர்!
தமிழீழ விடுதலைப் புரட்சி;
ஒழிந்தது பயங்கரவாதம், உயர்கிறது பாதுகாப்புச் செலவினம் !
எட்டுவீத பொருளாதார வளர்ச்சியும், ''தமிழீழப் பயங்கரவாதம்'' முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னால், ஆறு வீத பாதுகாப்புச் செலவின அதிகரிப்பும் சொல்லுகின்ற செய்தி என்ன?'தமிழ்ப் பயங்கரத்திடம்' இருந்து இலங்கையை மீட்டு, பன்னாட்டு மூலதன பயங்கரவாதிகளுக்கு விற்றுவருகின்ற பக்ச பாசிஸ்டுக்கள். அதன் விளைவாக எழத்தயாராக இருக்கின்ற எழுச்சிகளை நசுக்க தமது அரசை இராணுவமயப்படுத்தி வருகின்றார்கள்.
என்பதே!
Sri Lanka raises defence spending by six percent
(AFP) – 10 hours ago
COLOMBO — Sri Lanka announced Tuesday it would raise defence spending by six percent in 2011 -- broadly in line with annual hikes announced during the government's war with Tamil rebels.
The government allocated 215 billion rupees (1.92 billion dollars) for defence in calendar 2011, according to official figures tabled in parliament Tuesday -- about a fifth of the national budget.
Official sources say the state needs to keep defence spending high, despite the fact the ethnic war has ended, because of hefty installment payments on military hardware bought to fight the separatist Tamil Tigers.
Government forces crushed the rebels in May 2009, ending what had become Asia's longest-running ethnic conflict that claimed up to 100,000 lives over nearly four decades, according to UN estimates.
The highest portion of the defence budget next year in the island nation of 20 million people will go to the army.
The army will absorb just over half of the entire defence spending to maintain its 200,000 personnel, the figures show.
President Mahinda Rajapakse, who is also finance minister, is due to unveil the full 2011 budget on November 22, when he is expected to announce new revenue raising proposals to meet state expenses.
Sri Lanka's fiscal deficit shot up to 9.7 percent of gross domestic product in 2009, exceeding the seven percent target set by the International Monetary Fund when it released a 2.6-billion-dollar bailout package in 2009.
Monday, October 18, 2010
போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்
நோயுண்ணும் உடல் நலித்தும்,பேயுண்ணும் உணர்வொழித்தும்,தாய் நிலத்தின் வேதனையை - எம்தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது எனவரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?கூடாது... கூடவே கூடாது.
முற்றத்து மணற்பரப்பில்முழுமதியின் எழிலொளியில்,சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,அடிவளவு மூலையிலே படர்ந்தமுல்லைச் சொதி மணக்கும்கவளச் சோறெண்ணி,ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....விட்டுவிடுவோமா?
தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாடவாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.
வலியென்று துடித்தாலும்,'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்தவிப்பெய்த விட்டிடவோ....தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?
வாகை சூழ்ந்திருக்கும்,வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?
வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டிஎழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..
ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.
நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்மேனி நுடங்குதல் ஆகாது.
சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...
வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்பலம் தர நாமுள்ளோம்.அஞ்சற்க....
என தாயக உறவுகள் நோக்கிஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.
இன்று,காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்றஇதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.
பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ எனஇதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.
உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.
அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்றசொந்தங்களும் எழுந்துளர்.
பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தைசில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணைகல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளைஎண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்
எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,பேயுண்ணும் உணர்வொழித்தும்,தாய் நிலத்தின் வேதனையை - எம்தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது எனவரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?கூடாது... கூடவே கூடாது.
நன்றி:http://valvaizagara.blogspot.com/
Sunday, October 17, 2010
தமிழ்ப் பயங்கரத்திடம் இருந்து இலங்கையை மீட்டு, பன்னாட்டு மூலதன பயங்கரவாதிகளுக்கு விற்றுள்ளார்கள் பக்ச பாசிஸ்டுக்கள்.
எட்டுவீத பொருளாதார வளர்ச்சியும், ''தமிழீழப் பயங்கரவாதம்'' முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னால், ஆறு வீத பாதுகாப்புச் செலவின அதிகரிப்பும் சொல்லுகின்ற செய்தி என்ன?
'தமிழ்ப் பயங்கரத்திடம்' இருந்து இலங்கையை மீட்டு, பன்னாட்டு மூலதன பயங்கரவாதிகளுக்கு விற்றுவருகின்ற பக்ச பாசிஸ்டுக்கள். அதன் விளைவாக எழத்தயாராக இருக்கின்ற எழுச்சிகளை நசுக்க தமது அரசை இராணுவமயப்படுத்தி வருகின்றார்கள்.
என்பதே!
Saturday, October 16, 2010
Friday, October 15, 2010
Thursday, October 14, 2010
மரண விளையாட்டு

நன்றி: Thirumurugan Gandhi கார்டூனிஸ்ட் பாலாவின் அந்த ஓவியத்தை சுவரொட்டியாக போட்டிருந்தோம். வழக்கம் போல எல்லாவற்றையும் கிழிக்கும் காவல் துறை இதையும் விட்டு வைக்கவில்லை. "இவனுகளுக்கு வெள்ளைக்காரனே மேல் ".
ஏன் இத்தனை கூப்பாடு.
உங்களுக்கு ஏன் எரிகிறது.
அவர்தான் வரவேண்டும்.
வரவேற்பது எனது கடமை.
அடிக்கடி விரித்து நடந்து
வெளுத்துப்போனது என் சிவப்புக்கம்பளம்.
அதற்கு வண்ணமேற்ற
இன்னும் தேவைப்படுகிறது ரத்தம்.
தந்துதவத் தயாரா நீங்கள்.
நீங்கள் மறுத்தாலும்
எடுத்துக் கொள்(ல்)வதில்
உறுதியாய் இருக்கிறேன் நான்.
கடல்கடந்து வந்தவன்
ஆயுதமுனையில் கட்டியமைத்த
ரத்ததேசம் நான்.
உங்களின் அடங்கிய மூச்சில்தான்
என் உயிர்ப்பு இருக்கிறது.
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...