SHARE

Monday, January 18, 2010

போர்க்குற்றவாளிகளை பொதுமக்களின் பிரதிநிதிகளாக்கும் போலி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

போர்க்குற்றவாளிகளை பொதுமக்களின் பிரதிநிதிகளாக்கும் போலி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

தமிழ் பேசும் மக்களுக்கு ''கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வு''
"மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு"
* தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மேலதிகமாக, மாகாணசபைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேல்சபை ஒன்று இருக்கும்.
* வடக்கும், கிழக்கும் இணைக்கப்படமாட்டாது.
* மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது.
* பிரிவினைக்கு இடமில்லை

ஜெனரலின் "நம்பிக்கை தரும் மாற்றம்''
* விடுதலைப் புலிகளூக்கெதிராகப் போரிட்டு விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்கும் தேவை தமக்கில்லையெனவும் கிழக்கு மாகாணத்தை தான் மீட்டதன் காரணமாகவே, வடக்குடன் இணைக்கப்பட்டிருந்த கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க முடிந்ததாகவும் பொன்சேகா கூறியுள்ளார்..கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்படதனாலேயே உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து சாதகமான தீர்ப்பைப்பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* தான் ஒருபோதும் தேசியத்தையும் நாட்டின் இறையாண்மையையும் காட்டிக்கொடுக்கப் போவதில்லையெனத் தெரிவித்த அவர் நாட்டை விற்று வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தான் தயார் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்,
* பிரிவினைக்கு இடமில்லை

சம்பந்தன் சுரேஸ் கும்பலின் ''ஆட்சிமாற்றம்''
* பிரிவினைக்கு இடமில்லை

*இனவெறிப்பாசிச இராணுவசர்வாதிகார இலங்கை அரசும் இந்திய விஸ்தரிப்புவாத அரசும் ஆடும் தீர்வு நாடகத்துக்கு மக்களை மயங்க வைப்பது.
=============================================
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
==============================================

No comments:

Post a Comment

Nursing Uniform Reform

Pic:Google-Face Book   Nursing Uniform Reform Calls Grow for Change as Sri Lanka's Dress Code Faces Criticism By Humaira Riyas 17/01/20...