SHARE

Sunday, January 17, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா கட்டளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா பல்வேறுபட்ட உத்தரவுகள்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சவார்தைகளை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் குறித்து இந்திய அரசாங்க தரப்பிற்கு தெளிவு படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே தாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக சரத் பொன்சேகாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூட்டமைப்பினர் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாளைய தினம் நாடு திரும்பும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளை முழு வீச்சுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவிற்கோ தமிழக அரசிற்கோ நெருக்கடி ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான
உத்தரவு இந்திய தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர்
பரப்புரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து தாங்கள் முன்வைக்கும் தீர்விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இந்தியா
வலியுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது - சரத்

வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட மாட்டாதென மல்வத்த பீடாதிபதிகளிடம் சரத் பொன்சேகா உறுதி

1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை,

2) நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஒருபோதும் எடுக்கப்போவதில்லை,

3) விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை தாமே மீள இணைப்பதற்கு இணங்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளது - டப்ளின் மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு

Press Release
DUBLIN TRIBUNAL FINDS AGAINST SRILANKA ON CHARGES OF WAR CRIMES
In Dublin today at 2pm the Peoples Tribunal chairman FranCois Houtart read the preliminary findings of the Peoples Tribunal on the war in Sri Lanka and its aftermath. There are 4 findings:
1. That the Sri Lankan Government is guilty of war crimes
2. That the Sri Lankan Government is guilty of crimes against humanity
3. That the charge of genocide requires further investigation
4. That the International Community, Particularly the UK and USA, share responsibility for the breakdown of the peace process.

Harrowing evidence including video footage was submitted y eye witnesses of the use of heavy artillery and phosphorous munitions, and of the continuous violation of human rights by military activity to a panel of 10 international jurors over two days. Irish members of the jury were Denis Halliday and Mary Lawlor.

The Irish Forum for Peace in Sri Lanka welcomed the preliminary findings of the tribunal.
Responding to the findings the forum issued the following five demands:

1. We call on the Sri Lankan Government to allow the UN to conduct an inquiry into war crimes and crimes against humanity perpetrated during the final stages of the war between the Sri Lankan armed forces and the LTTE, and during the war’s aftermath.
2. We call on the Sri Lankan Government to release all those being detained in concentration camps and the estimated 11,000 people being held secretly at unknown locations.
3. We call on the Sri Lankan Government to end the use of extra-judicial killings, sexual violence and the deprivation of food and water as weapons against a civilian population.
4. We call on the Sri Lankan Government to end the suppression of political dissent by violent or other means.
5. We call on the Sri Lankan Government to fully implement human rights for all citizens of Sri Lanka and a political solution involving the full participation of the Tamil population, ending the systematic historical discriminatory measures of the Sri Lankan state against the Tamil people.

Irish Forum for Peace in Sri Lanka asserts that long term peace and stability can only be established on the basis of full justice and rights for all the inhabitants of the island.

Saturday, January 16, 2010

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது
யாழ் உதயன் 2010-01-16 07:24:13
புதுடில்லியில் வைத்து மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார்.

நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர். நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்ட அக்குழுவினர் நேற்றும் இந்திய அரசின் உயர் வட்டாரங்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடவிருந்தனர். இதுவரை இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று "உதயனு" க்குக் கூறியவை வருமாறு:

முக்கியமாக மூன்று விடயங்களை இந்தியத் தரப்புக்கு எடுத்துரைத்தோம்.
ஒன்று தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களோடு சேர்ந்து எடுத்த முடிவு, அதன் பின்புலம் போன்றவற்றை விளக்கினோம்.
அடுத்தது தற்போதைய அரசியல் கள நிலைவரம், தமிழ்மக்களின் எண்ணக் கருத்து, நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் என்பவற்றைக் கூறினோம்.
மூன்றாவது இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம், நீதி கிட்டுவதற்காக நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள், இலக்குகள், அதற்காக இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு ஆகியன.

நம்பிக்கை தருவதாக அமைந்தது
இந்த விடயங்களை மிக்க கவனமாக செவிமடுத்த புதுடில்லித் தரப்பு, எங்களுடைய கருத்துகளை உள்வாங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. மிகவும் ஆரோக்கியமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்தத் தொடர்பாடல் இடம்பெற்று வருகின்றமை குறித்து நாம் முழுத் திருப்தி அடைந்துள்ளோம்.இன்று (சனியன்று) நாம் சென்னை திரும்பி, அடுத்த நாள் கொழும்பு செல்வோம். நாளை 17 ஆம் திகதிமுதல் வடக்கு, கிழக்கில் எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முழு மூச்சாக ஒரு வாரத்துக்கு இடம்பெறும். கிழக்கில் முஸ்லிம் தரப்புடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தவும் உத்தேசித்துள்ளோம். வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் கொழும்பிலும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றோம். என்றார் அவர். இதேநேரம், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள கையோடு, கூட்டமைப்பின் மூத்த தலைவர்களை அரசியல் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி அழைத்தமை, இலங்கை அரசுத் தரப்புக்குக் காட்டப்பட்ட தவறான சமிஞ்ஞை என்ற சாரப்பட இவ்விடயத்தைக் கொழும்பு கவனத்தில் எடுத்திருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இவ்விடயம் தொடர்பில் கொழும்புத் தரப்பில் இருந்து அத்தகைய உத்தியோகபூர்வ கருத்து வெளிப்பாடு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, January 15, 2010

பிணந்தின்னிகளுக்கு தேர்தல்

.................................. Having said all this, who will win the presidential poll? It is difficult to speculate in South Asian “democratic elections.” Usually money power, political arm twisting and horse-trading override emotions in voting. There are enough emotions rooting for both candidates, so the one who turns the head rather than the heart is likely to win.
Note No. 563 12-Jan-2010 SRI LANKA: Election hiccups - Update No 189
Col. R. Hariharan
(Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90.He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies. Blog: www.colhariharan.org E-mail: colhari@yahoo.com)

Wednesday, January 13, 2010

HELP HAITI

ஹெய்ட்டிக்கு உதவுவோம்

7Magnitued quake



Quake packed power of several nuclear bombs, says geophysicist




More than 100 Thousand people killed


300 Thousands people affected.


UN Building, Parliament, Hospitals, Prisons , cathedral all collapsed.

200 UN Staffs states are not known. Head of mission killed.

Death Bodies piling up on streets in thousands...

No electricity, No clean Water, No shelter, No Telephones.

Hardly any infrastructure available to deal with the situation in this scale.

Worst disaster of Haitiy’s 200 year old history; also the recent history of disasters!
Please Help Haity!

The Caribbean nation of 9 million is a former French colony and the world's oldest black republic, founded by freed slaves following a revolt that led to independence in 1804.
ENB

Tuesday, January 12, 2010

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 1/11/2010 9:13:38 AM -
விடுதலைகோரி நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல்
கைதிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 602ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 602 பேரே இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம், எமக்கு விடுதலை அல்லது பிணை அனுமதி வேண்டி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தும் பல வாக்குறுதிகள்
வழங்கப்பட்டும் அவை எவற்றையும் உரிய அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. உடலை, உயிரை வருத்தி விடுதலைக்காக நாங்கள் மேற்கொள்கின்ற இந்நடவடிக்கையின் நிமித்தமாக நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கப்பெற அரசுடன் தமிழ் அமைச்சர்களாக உள்ள வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுபினர்களும் எங்களுக்கு துணைநின்று ஜனாதிபதியிடம் எமது விடுதலையை வலியுறுத்தி பேசி, எமக்கான விடுதலையை பெற்றுத்தரும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்

விழவில்லைப் புலிகள் ஓயவில்லை தமிழ் ஈழப்போர் - வல்வை மக்கள்

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்" வல்வை மக்கள்
பெருமதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வல்வெட்டித்துறை மக்களின் இரங்கற் செய்தி
திகதி: 10.01.2010 // தமிழீழம்
மறைந்த வேலுப்பிள்ளை அவர்கள் வரலாற்றில் கறைபடியாத வகையில் வாழ்ந்து, தமிழினத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழினத்திற்கு கொடையாக அளித்து விட்டு சென்றிருக்கிறார்.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக நொறுங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தை கட்டியெழுப்பி அதன் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்த தேசியத் தலைவர் இன்றும் பின்னணியில் இருந்து விடுதலை இயக்கத்தை வழிநடத்தி வருகையில் அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மறைவெய்தியிருப்பது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாக, சோகத்தில் மூழ்கியிருந்த சொந்தங்களுkகு பேரிடியாக வந்து இறங்கியிருக்கிறது.

இவ்வேளையில் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தமிழினத்திற்கு ஆகப்பெரிய கொடையை தந்து சென்றிருக்கும் அன்னாருக்கு தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது தலைவரின் தாயார் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டிருப்பது பெற்றோர் இருவரும் எந்தவித காரணமுமின்றியே கைதுசெய்யப்பட்டமையை தெளிவாக்குகிறது.

அவர்களின் வயதையும் கருதாமல் தேசியத் தலைவரின் பெற்றோர் என்ற காரணத்திற்காகவே அவர்களை வெங்கொடுமை சிறையினில் அடைத்து வைத்திருந்தது சிறீலங்கா அரசு. எதுவித சட்டஎதிர்ப்பு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அவர்களிருவரையும் ஏன் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று உலக நாடுகள், நடுவண் அமைப்புக்கள் ஏதும் தட்டிக்கேட்காதது உலகில் மனிதம் செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அந்த வயதான பெற்றோர் சிறை வைக்கப்பட்டிருந்த காலையில் அவர்களுக்கு சரியான உணவோ சரியான மருத்துவமோ தரப்படவில்லை என்பதை அறிந்து தமிழினமே உள்ளம் கலங்கித் துடிக்கிறது. அரசின் வதை காரணமாகவே வேலுப்பிள்ளையவர்கள் இறந்திருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.

இன்று தலைவரின் தாயார் விடுதலை செய்யப்பட்டதைபோல முன்பே அவர்களிருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தால் தந்தையாரது இறப்பை தள்ளிப்போட்டிருக்கலாம். இருப்பினும் நிகழ்ந்துவிட்ட இழப்பானது தமிழ் பேசும் உலகெங்கும் துன்பச்சூழலை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளை மறைந்த மாமனிதர், தேசியத் தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் உலகெங்கும் தமிழர் சமுதாய மக்கள் தொடர்ந்தும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப்பதாகையினை உயர்த்திபிடித்து களம்புக வேண்டியதன் தேவையினை இந்த நேரத்தில் வலியுறித்தி அதன்படி செயல்படுவதே வேலுப்பிள்ளை அவர்களின் ஈகைக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பிரிவால் துயருறும் பல்லாயிரக்கணக்கான ஈழமக்கள், குறிப்பாக வல்வை மக்களுக்கும் பார்வதி அம்மையாருக்கும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்"
வல்வை மக்கள்

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...