
SHARE
Friday, January 08, 2010
PFLP: Arab and international pressure to return to negotiations plays into the hands of the Zionist enemy

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது
நியூ மகஸின் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திருமலை, மட்டு., அ'புர சிறைகளுக்கும் பரவியது
யாழ் உதயன் 2010-01-08 07:33:55
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதி
கொழும்பு மகஸின் சிறைச்சலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அல்லது தங்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்போது திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம் சிறைச்சாலை களுக்கும் பரவியது. கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நான்காவது நாளாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாகவும், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்றிலிருந்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"அண்மையில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை அரசு விடுதலை செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது விடுதலை தொடர்பாக அரசு பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. எனினும் அது ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
"தற்போது நாங்கள் மீண்டும் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கு நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட எங்களுக்குத் தீர்க்கமான உறுதிமொழி ஒன்றை வழங்கவேண்டும். அந்தப் பட்சத்திலேயே நாம் எமது உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் எமது போராட்டம் சாகும்வரை தொடரும் என்று கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ் உதயன் 2010-01-08 07:33:55
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதி
கொழும்பு மகஸின் சிறைச்சலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அல்லது தங்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்போது திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம் சிறைச்சாலை களுக்கும் பரவியது. கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நான்காவது நாளாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாகவும், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்றிலிருந்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"அண்மையில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை அரசு விடுதலை செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது விடுதலை தொடர்பாக அரசு பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. எனினும் அது ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
"தற்போது நாங்கள் மீண்டும் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கு நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட எங்களுக்குத் தீர்க்கமான உறுதிமொழி ஒன்றை வழங்கவேண்டும். அந்தப் பட்சத்திலேயே நாம் எமது உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் எமது போராட்டம் சாகும்வரை தொடரும் என்று கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஜெனரலின் "நம்பிக்கையான மாற்றம்''

தினக்குரல்
இலங்கையில் மாற்றமொன்று ஏற்படுவதற்கான எதிர்பார்ப்புகள் கைகூடிவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கும் எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தப் போவதாகவும் ஊழலை அழித்தொழிக்கப் போவதாகவும் ஊடக சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படுமெனவும் வாக்குறுதி அளித்தார்."சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கையர் நான், என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா, தான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று குறிப்பிட்டார்.
"நம்பிக்கையான மாற்றம்'' என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, ராஜபக்ஷகளின் கீழ் வாழ்க்கை கடினமாகியிருப்பதாகவும் ஊழல், இலஞ்சம் என்பன நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு
1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.
சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.
அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.
அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.
எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.
2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.
மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.
இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.
உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.
3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.
உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.
சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.
4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.
சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.
பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.
5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.
மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.
6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.
முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.
நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.
8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.
3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.
கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.
இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம் '' எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.
9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.
தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.
மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.
10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்
அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட "அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.
நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.
நம்பிக்கை மிக்க மாற்றம்
நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.
இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.
Thursday, January 07, 2010
பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை
உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,
"விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.
இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.
இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.
அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கு ம் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
Wednesday, January 06, 2010
Majority of TNA MPs back Fonseka : The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the Tamil diaspora
Sampanthan: Majority of TNA MPs back Fonseka
[TamilNet, Wednesday, 06 January 2010, 15:27 GMT]
Tamil National Alliance (TNA) Parliamentary group leader and Trincomalee district MP Rajavarothayam Sampanthan on Wednesday said majority of 18 members of the alliance who were present at lengthy deliberations were of the view that the "only meaningful way" to thwart the desire of the Sri Lankan President Mahinda Rajapaksa to seek a mandate to hold office for a further term would be urging the Tamils to vote for the joint opposition candidate General (retd.) Sarath Fonseka. The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the Tamil diaspora against supporting either General Sarath Fonseka or Mahinda Rajapaksa as Tamils believe they are both implicated in war crimes and crimes against humanity.
18 members of the alliance who were present at a meeting held on Tuesday evening were of the unanimous view that they were opposed to President Mahinda Rajapaksa securing a fresh term.
Global Tamil Forum, an umbrella forum of diaspora Tamil organisations, in an internal message sent to TNA parliamentarians a few days ago, said that the Tamils stood morally and ethically unable to lend support to neither of the two main candidates who were largely responsible for the deaths of Tamils' kith and kin and destruction of the Tamil homeland in the island of Sri Lanka.
"GTF stands in support of fundamental principles of the 1976 Vadukkoddai Resolution which was supported and overwhelmingly voted through a democratic election in 1977 by the Tamils of the island nation. Whilst we appreciate that any candidate cannot espouse the resolution in full in words due to the unreasonable restrictions levied by the sixth amendment of the Sri Lankan constitution, we will stand in solidarity with a candidate who will espouse the spirit of the resolution within the constraints," the GTF had told the TNA.
Full text of the statement by the TNA follows:

[TamilNet, Wednesday, 06 January 2010, 15:27 GMT]
Tamil National Alliance (TNA) Parliamentary group leader and Trincomalee district MP Rajavarothayam Sampanthan on Wednesday said majority of 18 members of the alliance who were present at lengthy deliberations were of the view that the "only meaningful way" to thwart the desire of the Sri Lankan President Mahinda Rajapaksa to seek a mandate to hold office for a further term would be urging the Tamils to vote for the joint opposition candidate General (retd.) Sarath Fonseka. The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the Tamil diaspora against supporting either General Sarath Fonseka or Mahinda Rajapaksa as Tamils believe they are both implicated in war crimes and crimes against humanity.
18 members of the alliance who were present at a meeting held on Tuesday evening were of the unanimous view that they were opposed to President Mahinda Rajapaksa securing a fresh term.
Global Tamil Forum, an umbrella forum of diaspora Tamil organisations, in an internal message sent to TNA parliamentarians a few days ago, said that the Tamils stood morally and ethically unable to lend support to neither of the two main candidates who were largely responsible for the deaths of Tamils' kith and kin and destruction of the Tamil homeland in the island of Sri Lanka.
"GTF stands in support of fundamental principles of the 1976 Vadukkoddai Resolution which was supported and overwhelmingly voted through a democratic election in 1977 by the Tamils of the island nation. Whilst we appreciate that any candidate cannot espouse the resolution in full in words due to the unreasonable restrictions levied by the sixth amendment of the Sri Lankan constitution, we will stand in solidarity with a candidate who will espouse the spirit of the resolution within the constraints," the GTF had told the TNA.
Full text of the statement by the TNA follows:


பொன்சேகா - சம்பந்தன் புரிந்துணர்வு ஆவணம்

பொன்சேகா - சம்பந்தன் புரிந்துணர்வு ஆவணம்
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.
சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால்நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.
•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.
•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும்,
வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
IV. நிலமும் விவசாயமும்
•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை
•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்
•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து
•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்
•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.
சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால்நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.
•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.
•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும்,
வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
IV. நிலமும் விவசாயமும்
•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை
•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்
•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து
•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்
•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
ஆட்சி மாற்றத்துக்கு பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு
ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு
அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்
யாழ் உதயன் 2010-01-06 07:11:25
தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது
என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள குழுக்களின் அறையில் தொடர்ந்து கூடியது.
பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால நீடிப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் தமது கூட்டத்தை இடைநிறுத்தினர். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கொழும்பு மாதிவெலயில் உள்ள எம்.பிக்களின் இல்லத் தொகுதியில் சந்திரநேரு எம்.பியின் வீட்டில் கூட்டம் தொடர்ந்தது.
நேற்றிரவு 9.45 மணிவரை வெகு காரசாரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
லண்டனில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, சந்திரநேரு, இந்தியாவில் தங்கி நிற்கும் கனகசபை, தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்ற இயலவில்லை.
கருத்துச் கலாசாரம்
கூட்டத்தின் முடிவு குறித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டோம். "காரசாரமாகப் பலதரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது.
அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது."
"அதையடுத்து இரண்டாவது கருத்து ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்கப்பட்டது. அது இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையுமே ஆதரிக்கக் கூடாது என்பதாக இருந்தது. பலரின் கருத்து அதுவாக இருந்த போதிலும் இதனை ஒட்டி நான் அனைவருக்கும் விளக்கம் அளித்தேன். இறுதியாக, எமது முதலாவது தீர்மான விடயத்தை அதாவது
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்புக்கான ஆணைக் கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை காலை பத்திரிகையாளர் மாநாடு கூட்டி முடிவை அறிவிப்போம்'' என்றார் சம்பந்தர்.
எதிரும் புதிருமான பல கருத்துக்கள்
"இவ்விடயம் குறித்து ஆராயப்பட்ட போது எதிரும் புதிருமாகப் பல கருத்துகள் முன்வந்தன. ஆனால் இறுதி முடிவு ஏகமனதானது'' என்றார் கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர்
ஒருவர். இந்த முடிவை எட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமான கருத்துக்கள் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவிக்கும் முடிவுக்குத் தாங்கள்
அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தமையால், இறுதியில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தர் அறிவித்த போது, அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இணக்க ஆவணம் வாசிக்கப்பட்டது
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தாம் கண்டுள்ள இணக்கம் குறித்து இக்கூட்டத்தில் சம்பந்தர் விளக்கினார்.
அது தொடர்பான ஆவணத்தை அவர் கூட்டத்தில் வாசித்ததோடு அதன் மூலப்பிரதியையும் அங்கு காட்டினார். எனினும் அதன் பிரதி அங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
மூலப் பிரதியில் சரத் பொன்சேகாவும், ரணிலும் மட்டும் கையொப்பமிட்டிருக்கின்றனர். சம்பந்தர் அதில் ஒப்பமிடவில்லையே என்று ஸ்ரீகாந்தா அணி ஆட்சேபம் கிளம்பியதாகத் தெரிகின்றது.
எனினும் இது ஒப்பந்தம் அல்ல, எங்களுக்கு அவர்கள் தந்த உறுதியுரை ஆவணம் மட்டுமே என்று சம்பந்தர் அதற்கு விளக்கமும் பதிலும் தந்தார் எனத் தெரிகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனை தொடர்பிலும் அதில் உள்ள சில விடயங்களை ஒட்டி அடிப்படைப் பிரச்சினைகளை இதே தரப்பினர் கிளப்பினர் எனத் தெரியவந்தது. தீர்வு ஒற்றையாட்சி முறைக்குள்ளா அல்லது அதற்கு வெளியிலா என்பது இந்த ஆவணத்தில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்று குறை கூறி அவர்கள், இந்த அடிப்படையில் தாங்கள் ஏமாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்தனர். அது குறித்து சம்பந்தன் எம்.பி. மாவை சேனாதிராசா எம்.பி. போன்ற மூத்த தலைவர்கள் கொடுத்த விளக்கம் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏகமனதாக எடுத்துள்ளது என்று நேற்றிரவு கூறப்பட்டாலும், இன்று அது பற்றிய
அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர் மாநாட்டில், கூட்டமைப்பில் அங்கம் பெறும் சகல கட்சிகளினதும் தலைவர்களும் பங்குபற்றினால்தான் அது உறுதியாகும் என்றார் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி.
================
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.
சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.
•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.
•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
IV. நிலமும் விவசாயமும்
•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை
•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்
•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து
•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்
•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
==============
பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன்: சரத்பொன்சேகா
திகதி: 06.01.2010 // தமிழீழம்
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன். ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டேன் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை
2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன்.
இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார்.
இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அறிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது.
ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று
சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
=======================
புதன், ஜனவரி 6, 2010 03:16 பதிவு இணையம் (செய்தி அலசல்)
சரத்பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு! இழுபறிக்குள் இறிதி முடிவு!
எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக எத்தகைய தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்பட்ட இழுபறி ஒருவாறு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இன்று 5-1-2010 கொழும்பில் நான்கு மணிநேரம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐனாதிபதி மகிந்த ரர்ஐபக்ச அவர்களை எந்தக் காரணத்தினாலும் ஆதரிக்க முடியாது ஆதரிக்க கூடாது என்ற கருத்தினை எவ்வித விவாதமும் இன்றி ஏகமானதாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கே.துரைரட்ணம், தோமஸ் வில்லியம், சொலமன் எஸ் சிறில், செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன், இமாம், சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தினை ஆணித்தரமாக
வலியுறுத்தியதுடன் அதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகசெயற்படப் போவதில்லை எனவும் கூறினர்.
சிவநாதன் கிசோர், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினைகருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவக்கு எதிராக செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.
செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்க முடியாது என்றும் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனை வெளிப்படுத்தும் சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசத்திலுள்ள மக்கள் இத் தேர்தலை
புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசத்தில் வாழும் அனைத்து மக்களும் ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவரும் தமிழ் மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்பவற்றினை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக நீண்டகாலமாக உழைத்துவருபவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமது
நிலைப்பாடு என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.
இக் கூட்டத் தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையில் கூட்டத்தின் போது தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது நிலைப்பாடு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு முடிவுக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடில்லாத போதும் கூட்டமைப்பின் ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறிய முடியகின்றது.
அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்
யாழ் உதயன் 2010-01-06 07:11:25
தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது
என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள குழுக்களின் அறையில் தொடர்ந்து கூடியது.
பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால நீடிப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் தமது கூட்டத்தை இடைநிறுத்தினர். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கொழும்பு மாதிவெலயில் உள்ள எம்.பிக்களின் இல்லத் தொகுதியில் சந்திரநேரு எம்.பியின் வீட்டில் கூட்டம் தொடர்ந்தது.
நேற்றிரவு 9.45 மணிவரை வெகு காரசாரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
லண்டனில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, சந்திரநேரு, இந்தியாவில் தங்கி நிற்கும் கனகசபை, தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்ற இயலவில்லை.
கருத்துச் கலாசாரம்
கூட்டத்தின் முடிவு குறித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டோம். "காரசாரமாகப் பலதரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது.
அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது."
"அதையடுத்து இரண்டாவது கருத்து ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்கப்பட்டது. அது இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையுமே ஆதரிக்கக் கூடாது என்பதாக இருந்தது. பலரின் கருத்து அதுவாக இருந்த போதிலும் இதனை ஒட்டி நான் அனைவருக்கும் விளக்கம் அளித்தேன். இறுதியாக, எமது முதலாவது தீர்மான விடயத்தை அதாவது
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்புக்கான ஆணைக் கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை காலை பத்திரிகையாளர் மாநாடு கூட்டி முடிவை அறிவிப்போம்'' என்றார் சம்பந்தர்.
எதிரும் புதிருமான பல கருத்துக்கள்
"இவ்விடயம் குறித்து ஆராயப்பட்ட போது எதிரும் புதிருமாகப் பல கருத்துகள் முன்வந்தன. ஆனால் இறுதி முடிவு ஏகமனதானது'' என்றார் கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர்
ஒருவர். இந்த முடிவை எட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமான கருத்துக்கள் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவிக்கும் முடிவுக்குத் தாங்கள்
அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தமையால், இறுதியில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தர் அறிவித்த போது, அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இணக்க ஆவணம் வாசிக்கப்பட்டது
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தாம் கண்டுள்ள இணக்கம் குறித்து இக்கூட்டத்தில் சம்பந்தர் விளக்கினார்.
அது தொடர்பான ஆவணத்தை அவர் கூட்டத்தில் வாசித்ததோடு அதன் மூலப்பிரதியையும் அங்கு காட்டினார். எனினும் அதன் பிரதி அங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
மூலப் பிரதியில் சரத் பொன்சேகாவும், ரணிலும் மட்டும் கையொப்பமிட்டிருக்கின்றனர். சம்பந்தர் அதில் ஒப்பமிடவில்லையே என்று ஸ்ரீகாந்தா அணி ஆட்சேபம் கிளம்பியதாகத் தெரிகின்றது.
எனினும் இது ஒப்பந்தம் அல்ல, எங்களுக்கு அவர்கள் தந்த உறுதியுரை ஆவணம் மட்டுமே என்று சம்பந்தர் அதற்கு விளக்கமும் பதிலும் தந்தார் எனத் தெரிகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனை தொடர்பிலும் அதில் உள்ள சில விடயங்களை ஒட்டி அடிப்படைப் பிரச்சினைகளை இதே தரப்பினர் கிளப்பினர் எனத் தெரியவந்தது. தீர்வு ஒற்றையாட்சி முறைக்குள்ளா அல்லது அதற்கு வெளியிலா என்பது இந்த ஆவணத்தில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்று குறை கூறி அவர்கள், இந்த அடிப்படையில் தாங்கள் ஏமாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்தனர். அது குறித்து சம்பந்தன் எம்.பி. மாவை சேனாதிராசா எம்.பி. போன்ற மூத்த தலைவர்கள் கொடுத்த விளக்கம் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏகமனதாக எடுத்துள்ளது என்று நேற்றிரவு கூறப்பட்டாலும், இன்று அது பற்றிய
அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர் மாநாட்டில், கூட்டமைப்பில் அங்கம் பெறும் சகல கட்சிகளினதும் தலைவர்களும் பங்குபற்றினால்தான் அது உறுதியாகும் என்றார் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி.
================
உடனடி மீட்சி நடவடிக்கை குறித்து பொன்சேகா ஒப்பமிட்டு ஆவணம்
யாழ் உதயன் 2010-01-06 07:08:45
ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என..எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.
சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள் ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.
•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.
•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
IV. நிலமும் விவசாயமும்
•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை
•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்
•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து
•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்
•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
==============
பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன்: சரத்பொன்சேகா
திகதி: 06.01.2010 // தமிழீழம்
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன். ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டேன் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை
2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன்.
இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார்.
இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அறிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது.
ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று
சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
=======================
புதன், ஜனவரி 6, 2010 03:16 பதிவு இணையம் (செய்தி அலசல்)
சரத்பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு! இழுபறிக்குள் இறிதி முடிவு!
எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக எத்தகைய தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்பட்ட இழுபறி ஒருவாறு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இன்று 5-1-2010 கொழும்பில் நான்கு மணிநேரம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐனாதிபதி மகிந்த ரர்ஐபக்ச அவர்களை எந்தக் காரணத்தினாலும் ஆதரிக்க முடியாது ஆதரிக்க கூடாது என்ற கருத்தினை எவ்வித விவாதமும் இன்றி ஏகமானதாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கே.துரைரட்ணம், தோமஸ் வில்லியம், சொலமன் எஸ் சிறில், செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன், இமாம், சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தினை ஆணித்தரமாக
வலியுறுத்தியதுடன் அதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகசெயற்படப் போவதில்லை எனவும் கூறினர்.
சிவநாதன் கிசோர், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினைகருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவக்கு எதிராக செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.
செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் மகிந்தராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்க முடியாது என்றும் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனை வெளிப்படுத்தும் சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசத்திலுள்ள மக்கள் இத் தேர்தலை
புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசத்தில் வாழும் அனைத்து மக்களும் ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவரும் தமிழ் மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்பவற்றினை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக நீண்டகாலமாக உழைத்துவருபவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமது
நிலைப்பாடு என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.
இக் கூட்டத் தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையில் கூட்டத்தின் போது தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது நிலைப்பாடு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு முடிவுக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடில்லாத போதும் கூட்டமைப்பின் ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறிய முடியகின்றது.
ஜனாதிபதித்தேர்தல் குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை
ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
by வீரகேசரி இணையம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது.
ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.
இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.
தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.
இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது.
அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.
தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.
அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே
உதவும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
by வீரகேசரி இணையம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது.
ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.
இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.
தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.
இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது.
அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.
தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.
அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே
உதவும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Tuesday, January 05, 2010
அவசரகால சட்ட நீடிப்பை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் வாக்களிக்கவில்லை?
79 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
பதிவு சிவதாசன், கொழும்பு செவ்வாய், ஜனவரி 5, 2010 15:15
79 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம்; மேலும் ஒருமாதம் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை சமூகமளிக்கவில்லை-மறைமுகமாக ஆதரவளித்தனர் -.
நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால்
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
2010-01-03 06:19:05
யாழ்.நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் பொன்சேகா தெரிவிப்பு
நான் இராணுவ அதிகாரியாக இங்கு இருந்த போது யுத்தத்தில் ஈடுபட்டேன் அது எனது கடமை. அதே சமயம் நான் தெற்கில் இருந்தாலும் இதனையே செய்திருப் பேன். எனது கடமையைத் தவற விட்டிருக்கமாட்டேன். இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகா. நேற்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
தமது தேர்தல் வாக்குறுதிகளை விவரித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தை நன்கு அறிந்தவன், நான் இங்குள்ள மக்களாகிய உங்களின் பாதுகாப்புக்காக நான் கடமையாற்றியுள்ளேன். உங்களின் அன்பு, கலாசாரம் என்பவற்றையும் இங்கிருந்ததால் நன்கு அறிந்தவன். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இளைஞர்கள் பலரின் உயிர்கள் நம்மை விட்டுப் பிரிந்தன. அதனை எண்ணி நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் வடக்கு,
கிழக்கு, தெற்குக்கு என்ன தேவையோ அதனையே புரிந்தேன். தமிழ் மக்களுக்கு சுகாதாரம், உணவு, உடை என்பன கிடைக் கவில்லை ஆனால் இந்த அரசு இதனை அறிந்தும் அறியாதது போல் உள்ளது. நான் ஜனாதிபதியானதும் இலங்கையில் தமிழ், சிங்களவர், முஸ்லிம் என்று வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்குவேன் என்றார். அங்கு மற்றும் வாக்குறுதிகள் பலவற் றையும் பொன்சேகா வழங்கினார்.
அவை வருமாறு:
* முகாம்களில் அடைத்துவைத்து துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் உட னடியாக சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்படுவர்.
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
* வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் இடைக் கால வருமானம் ஒன்றைப் பெறவும் சந் தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல்.
*வேலையற்ற பட்டதாரிகளுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் மாதம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
*பொலிஸார், இராணுவத்தினர் தவிர்ந்த ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் அனைத்தும் களையப்படும்.
* தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்பேசும், தமிழ் அறிவுள்ள அதிகாரிகள் நியமிக்கப் படுவர்.
*சீரற்ற நிலையில் இருக்கும் போக்கு வரத்துப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும்.
* போக்குவரத்துச் சேவையில் ஈடு படும் வாகனங்களுகளுக்கு பொற்றோல் மானியவிலையில் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய மானியங் கள் வழங்கப்படும்.
* கொழும்பில் இருக்கும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்று யாழ்ப் பாணப் பாடசாலைகளும், வைத்தியசாலை களும் அபிவிருத்தி செய்யப்படும்.
* பொலிஸாரின் நடவடிக்கைகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக உரிய சட் டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத் தப்படும்.
இவை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளன என்று தெரிவித்தார் பொன்சேகா.
பதிவு சிவதாசன், கொழும்பு செவ்வாய், ஜனவரி 5, 2010 15:15
79 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம்; மேலும் ஒருமாதம் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை சமூகமளிக்கவில்லை-மறைமுகமாக ஆதரவளித்தனர் -.
நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால்
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
2010-01-03 06:19:05
யாழ்.நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் பொன்சேகா தெரிவிப்பு
நான் இராணுவ அதிகாரியாக இங்கு இருந்த போது யுத்தத்தில் ஈடுபட்டேன் அது எனது கடமை. அதே சமயம் நான் தெற்கில் இருந்தாலும் இதனையே செய்திருப் பேன். எனது கடமையைத் தவற விட்டிருக்கமாட்டேன். இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகா. நேற்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
தமது தேர்தல் வாக்குறுதிகளை விவரித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தை நன்கு அறிந்தவன், நான் இங்குள்ள மக்களாகிய உங்களின் பாதுகாப்புக்காக நான் கடமையாற்றியுள்ளேன். உங்களின் அன்பு, கலாசாரம் என்பவற்றையும் இங்கிருந்ததால் நன்கு அறிந்தவன். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இளைஞர்கள் பலரின் உயிர்கள் நம்மை விட்டுப் பிரிந்தன. அதனை எண்ணி நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் வடக்கு,
கிழக்கு, தெற்குக்கு என்ன தேவையோ அதனையே புரிந்தேன். தமிழ் மக்களுக்கு சுகாதாரம், உணவு, உடை என்பன கிடைக் கவில்லை ஆனால் இந்த அரசு இதனை அறிந்தும் அறியாதது போல் உள்ளது. நான் ஜனாதிபதியானதும் இலங்கையில் தமிழ், சிங்களவர், முஸ்லிம் என்று வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்குவேன் என்றார். அங்கு மற்றும் வாக்குறுதிகள் பலவற் றையும் பொன்சேகா வழங்கினார்.
அவை வருமாறு:
* முகாம்களில் அடைத்துவைத்து துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் உட னடியாக சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்படுவர்.
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
* வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் இடைக் கால வருமானம் ஒன்றைப் பெறவும் சந் தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல்.
*வேலையற்ற பட்டதாரிகளுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் மாதம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
*பொலிஸார், இராணுவத்தினர் தவிர்ந்த ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் அனைத்தும் களையப்படும்.
* தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்பேசும், தமிழ் அறிவுள்ள அதிகாரிகள் நியமிக்கப் படுவர்.
*சீரற்ற நிலையில் இருக்கும் போக்கு வரத்துப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும்.
* போக்குவரத்துச் சேவையில் ஈடு படும் வாகனங்களுகளுக்கு பொற்றோல் மானியவிலையில் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய மானியங் கள் வழங்கப்படும்.
* கொழும்பில் இருக்கும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்று யாழ்ப் பாணப் பாடசாலைகளும், வைத்தியசாலை களும் அபிவிருத்தி செய்யப்படும்.
* பொலிஸாரின் நடவடிக்கைகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக உரிய சட் டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத் தப்படும்.
இவை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளன என்று தெரிவித்தார் பொன்சேகா.
Monday, January 04, 2010
யுத்தக் குற்றவாளியோடு தேர்தல் கூட்டு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு ஆதரவு

By Dianne Silva Daily Mirror LK
The Tamil National Alliance (TNA) has decided to extend support to General Sarath Fonseka at the Presidential Elections this month, sources at the General’s office told Daily Mirror online. The decision was reached following talks between the TNA leader R. Sambanthan and the General this afternoon.
=====================================
பதிவு திங்கள், ஜனவரி 4, 2010 17:38 சிவதாசன், கொழும்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம்?
எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகா அவர்கட்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
சிறீலங்காவில் இடம்பெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில் இருவேட்பாளர்களுக்கும் இடையே பெரும் போட்டி நிலவும் இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நீண்ட ஆலோசனைகளுக்கு பிற்பாடு சரத்பொன்சேகாவிற்கு தமது ஆதரவினை வழங்குவதாக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இச்செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. இத்தகவலை சரத்பொன்சேகாவின் தேர்தல் அலுவலம் உறுதி செய்துள்ளதாக டெய்லிமிரர் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடி ஆராய்ந்துள்ளனர். கூட்டம் காலை 10 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரா.சம்பந்தன் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் இசந்திரநேரு சந்திரகாந்தன் ( தற்போது லண்டன்) இஎஸ்.ஜெயானந்தமூர்த்தி ( தற்போது லண்டன் ) த.கனகசபை (தற்போது இந்தியா ) இசதாசிவம் கனகரத்தினம் ( தடுப்புக் காவல் ) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் அவர்கள் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...