SHARE

Sunday, April 10, 2016

தகவலறியும் உரிமைச் சட்டம்


தகவலறியும் உரிமைச் சட்டம்: தகவல் கேட்டுப் போராடுவதற்கான 'லைசென்ஸ்'
06-04-2016

பொது மக்கள், தமக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில், தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தார்.

அதற்காக, தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 11 நாட்களில், அதாவது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பிப்பதாக, அவரது 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வாறு குறித்த தினத்தில் அது நாடாளுடன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 14 மாதங்கள் கடந்து, கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதியே சமரப்பிக்கப்பட்டது.

ஆயினும், வாக்குறுதியளிக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அது தொடர்பாக அரசாங்கம் மற்றுமோர் உத்தரவாதத்தை வழங்கியிருந்தது. அதாவது,
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில், தகவலறியும் உரிமை அங்கிகரிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு முன்னர் இரண்டு முறை தகவலறியும் சட்டமூலங்களைச் சமர்ப்பிக்க முயற்சித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இம்முறை சபையில் தலைமை தாங்கும் போது, இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கரு ஜயசூரிய, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதாவது 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனிநபர் பிரேரணையாக, தமது முதலாவது சட்ட மூலத்தைச் சமர்ப்பித்தார். ஆறு மாதங்களுக்குள், தகவலறியும் சட்டமூலமொன்றை அரசாங்கம்  சமர்ப்பிக்கவிருப்பதாக அப்போது ஆளும் கட்சிக் கொறடாவாக இருந்த தினேஷ் குணவர்தன தெரிவித்ததையடுத்து, கரு ஜயசூரிய, தமது சட்டமூலத்தை வாபஸ் பெற்றார்.

ஆனால், வாக்குறுதியளித்த படி, அரசாங்கம் அவ்வாறான சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்கப் போவதில்லை என்பதும் தினேஷ் குணவர்தன தம்மை ஏமாற்றிவிட்டார் என்பதும் உறுதியாகவே, கரு ஜயசூரிய,
2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தமது சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது தாமாகவே தகவலறியும் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிப்பதாக முன்னர் வாக்குறுதியளித்த ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், ஜயசூரியவின் சட்டமூலத்தைத் தோற்கடித்தனர்.

அரச நிறுவனமொன்றிடம் இருக்கும் அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல்களை அடைய, பொது மக்களுக்குள்ள உரிமையை உறுதி செய்வதாக தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கூறுகிறது. ஆயினும், அதே சட்டமூலத்தில், தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தடைகள் அடங்கிய நீண்டதொரு பட்டியலொன்றையும் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் ஊடுருவதையும், தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுவதையும், இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படைவதையும், சர்வதேச ஒப்பந்தங்கள் பாதிப்படைவதையும், வெளிநாட்டு செலாவணி, வங்கித்துறை, வரி முறை, வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தேசிய பொருளாதாரம் பாதிப்படைவதையும், தனி நபர்களின் சுகாதார அறிக்கைகளை வெளியிடுவதையும், நம்பிக்கையின் பேரில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளிடுவதையும், நீதிமன்ற அவதூறு ஏற்படக்கூடிய தகவல்களை வெளியிடுவதையும், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைப் பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதையும், பரீட்சைகளின் விவரங்களை வெளியிடுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டமூலம் கூறுகிறது.

இந்த நீண்ட தடைப் பட்டியலைக் காணும் போது, இவற்றையும் தாண்டி எவரும் அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எவர் மனதிலும் எழலாம். அதேவேளை, அந்தப் பட்டியலின்
பரம்பலைப் பார்க்கும் போது, எந்தவொரு முக்கிய துறையைப் பற்றியும் தகவல்களைப் பெற முடியாது என்று பலர் அஞ்சினால் அது நியாயமானதே.

ஆனால், இலங்கையிலும் வெளிநாடுகளிலும், ஊடகத்துறையில் நிலவும் பாரிய பொறுப்பற்ற தன்மையைக் கருத்திற்கொள்ளளும் போது, இது போன்றதோர் வரையறை இருக்கத் தான் வேண்டும் எனவும் பலர்
கருதலாம்.

இவ்வாறான விரிவான தடைப் பட்டியல் ஒன்றைக் கொண்டிருந்த போதிலும், தகவலறியும் சட்டமூலம் இந்தத் தடைகளைத் தாண்டிச் செல்லும் வழியையும் சுட்டிக் காட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால், தகவலொன்றை வெளியிடுவது பாதகமானதாகத் தெரிந்த போதிலும், அதனை வெளியிடுவதனால் ஏற்படும் மக்கள் நலன் அந்த பாதகத் தன்மையை விட அதிகமானது எனத் தெரிந்தால்,

அந்தத் தகவல் வெளியிடப்பட வேண்டும் எனவும் சட்டமூலம் கூறுகிறது.

இங்கே தகவல் எனும் போது, அது ஊடகவியலாளர்களுக்கான தகவல்கள் மட்டும் என அர்த்தப்படாது. தமது ஓய்வூதிய விண்ணப்பப் பத்திரத்துக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், அதற்கு என்ன நடந்தது என்று அறிய, சம்பந்தப்பட்டவருக்கு உரிமை இருக்க வேண்டும். அது போன்றவையும் இந்தச் சட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் நன்மைகளாகும்.

நிறுவனமொன்றின் தகவல் அதிகாரியே, குறிப்பிட்டதோர் தகவல் வெளியிடப்படுவதனால் ஏற்படும் தீங்கை விட, அதனை வெளியிடுவதனால் ஏற்படும் நன்;மை பெரிது என முடிவு செய்து, அந்தத் தகவலை
வெளியிடுவாரா? ஊழல் மலிந்த ஒரு நாட்டில், ஊழலும் செயற்றிறனற்ற தன்மையும் நிறைந்த ஓர் அரச நிறுவனத்தின் அதிகாரிகள், ஒருபோதும் தகவல்களை வெளியிடுவதற்கு விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், தகவலறியும் இந்த சட்டமூலத்தின் அவசியம் ஏற்பட்டது. எனவே, தகவல் வெளியிடுவதனால் ஏற்படும் தீமை, பெரிதா அல்லது நன்மை பெரிதா என்று அந்த அதிகாரிகளே தீர்மானிக்கும் நிலை இருந்தால், அவர்கள் தீமை பெரிது என்று தான் தீர்மானிப்பார்கள்.

எனவே, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதன் பின்னரும் அதிகாரிகள் சுயமாக தகவல்களை வழங்க முற்பட மாட்டார்கள். அதற்காக தகவல் தேடுபவர்கள், இந்த சட்டத்தைப் பாவித்துப் போராடவேண்டியிருக்கும்.

இந்தச் சட்ட மூலத்தில் உள்ள தடைகள் மட்டுமன்றி, ஏற்கெனவே நாட்டில் இருக்கும் சில சட்டங்களும் தகவல் பெறுவதற்கு தடையாகவே இருக்கின்றன. உத்தியோகபூர்வ இரகசியங்கள் தொடர்பான சட்டம்,

இலங்கை பத்திரிகை சபைச் சட்டம் மற்றும் இலங்கை நிறுவனக் கோவை ஆகியன அவற்றுக்கு சில உதாரணங்களாகும்.

தகவலறியும் சட்டத்தை ஆதரிக்கும் சில அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும் போது தகவலறியும் சட்டம் அமுலில் இருந்தாலும் அதிகாரிகள், தகவல்களை மறைக்கவே முயற்சிப்பார்கள் என்பதை உணரலாம். ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றே தகவலறியும் சட்டம். ஆனால் அவர் பதவிக்கு வந்து சில நாட்களில் அவரது நெருங்கிய சகாவான அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்கள் இனி மேல் அரச அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற முடியாது என்றும் அமைச்சு செயலாளர்களிடம் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.

தகவலறியும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி, சில அரசியல் கட்சிகள், 2014ஆம் ஆண்டு சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் (மே 3) கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். ஆனால், அதே மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊடகவியலாளர்கள் தகவல்களுக்காக இனி தம்மை தொடர்பு கொள்ளக் கூடாது என அதே சுமந்திரனின் கட்சியைச் சேர்ந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார்.

எனவே சிலரிடம் கொள்கைகள் இருந்த போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதிகாரிகள் தகவல்களை மறைக்கும் தற்போதைய
நிலைக்கு, ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் பழகிவிட்டார்கள். எனவே, தகவல்களை அறிந்து கொள்வது தமது உரிமை என்றதோர் உணர்வு அவர்களில் பெரும்பாலானோரிடம் இல்லை. அவர்கள்,

தற்போதைய நிலையோடு திருப்தியடைகிறார்கள். இதனாலும் அதிகாரிகள், தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்.

தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமொன்று தற்போது நாட்டில் இல்லாவிட்டாலும், அந்த உரிமையை வலியுறுத்தும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கள் இருக்கின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தொடர்பிலான அவ்வாறானதொரு வழக்கொன்றில், தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மார்க் பெர்ணான்டோ, கருத்துச் சுதந்திரத்தை அனுபவிப்பதனால், கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும் அதற்காக, தகவலறியும் உரிமை நாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், ஊடகவியலாளர்களோ ஏனையவர்களோ அந்தத் தீர்ப்பைப் பாவித்து, தகவலறியும் உரிமைக்காகப் போராடவில்லை. அதிகாரிகள், தகவல் வழங்க முன்வரவுமில்லை. எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் நிறைவேறினாலும், அதிகாரிகள் தகவல் வழங்க முன்வரப் போவதில்லை. அதற்காக, தகவல் அவசியமானவர்கள் அந்தச் சட்டத்தை பாவித்துப் போராட வேண்டியிருக்கும்.

இந்தியாவிலும் இவ்வறானதொரு சட்டம் அமுலில் உள்ளது. ஆனால், அங்கும் அதிகாரிகள் சுயமாகத் தகவல் வழங்க முன்வருவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் போராடியே தகவல்களைப் பெறுகிறார்கள்.

அண்மையில், ராஜீவ் காந்தி கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ஒரு தசாப்தத்துக்கு முன்னர், தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவுக்கு என்ன நடந்தது என தகவலறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதிகாரிகள் அதற்கு பதிலளிக்க இணக்கம் தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமர் மோடியின் மனைவி, நீண்ட காலமாக மோடியிடமிருந்து பிரிந்தே வாழ்கிறார். அவர் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த போது, திருமணச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தால், அந்த விண்ணப்பப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அப்போது மோடியின் மனைவி, அவ்வாறாயின் மோடி எவ்வாறு கடவுச் சீட்டைப் பெற்றார் என தகவலறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.

அதிகாரிகள் அதற்கு பதிலளிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

எனவே, இலங்கையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் போராடியே தகவல் பெற வேண்டியிருக்கும். சட்டம், அந்தப் போராட்டத்துக்கான 'லைசென்ஸ்' ஆகவே அமையும். அதேவேளை, அந்தப் போராட்டம் சிலவேளை மாதக் கணக்கு நீடிக்கவும் கூடும். ஏனெனில், முதலாவது விண்ணப்பத்துக்குப் பதிலாக, குறிப்பிட்ட நிறுவனத்தின் தகவல் அதிகாரி தகவல் வழங்காவிட்டால் மற்றோர் அதிகாரியிடம் போக வேண்டும்.

அவரும் மறுத்துவிட்டால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் செல்ல வேண்டும். அங்கும் கோரிக்கை நிராகரிக்கப்ட்டால், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். இவ்விடயங்களிலும் உடனடியாகத் தகவல் வழங்கவோ அல்லது கோரிக்கையை நிராகரிக்கவோ வேண்டும் என்றில்லை. அதற்காக அவர்களுக்கு சட்டத்தாலேயே குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமும் தகவலறியும் உரிமையை பூரணமாக வழங்கவில்லை. ஆனால் உரிமையே இல்லாத நிலைமையை விட இதுவும் நல்லது தான்.   

 “பஞ்சம் பிழைக்க வந்த சீமை”

 நூல் வெளியீடு



“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நூல் வெளியீடு

மலையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் நடைபெற்றது.

மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி.இராஜேஸ்வரி மகேஸ்வரன் தலைமையில் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலையக கலை,பண்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறண்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேஸ்வரனும், நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்தினர்.நூலின் ஆய்வுரையை  சூரியகாந்தி  பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம்  சிவகுமாரன் மற்றும்
பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும்  கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர்

கமெரனின் 5 கனி மொழிகள்


Saturday, April 09, 2016

M.S.M Ayub 1971 ஏப்ரல் கிளர்ச்சி குறித்து!


The 1971 insurrection in retrospect
2016-04-08
     

On  Tuesday April 5, the 45th “Bak Maha Viru Samaruwa” took place  at four places in the country
After the Matale Rebellion against the British in 1848 the 1971 JVP revolt  was the first against a government in power

The People’s Liberation Front, the party commonly known as the Janatha Vimukthi Peramuna (JVP) commemorated its “Bak Maha Viru Samaruwa” or the April Heroes’ Day for the 45th time on Tuesday (April 5) at four places in the country, unlike in the previous years when the main function was held in one place with the participation of all the leaders of the party.


At the same time the most recent breakaway group of the party, the Front-line Socialist Party (FSP) too commemorated the day in several places in the country. However, the National Freedom Front (NFF) led by former minister Wimal Weerawansa, the only other existing breakaway group of the JVP has by now given up all political and ideological legacies of its mother party, including the commemoration of the those who sacrificed their lives for a cause shared by members of all these groups a few decades ago.


A significance of the 1971 JVP insurrection which broke out on April 5 of that year against the newly elected government of the world’s first woman Prime Minister Sirima Bandaranaike was that after the famous Matale Rebellion in 1848 against the British rule of the country, it was the first ever armed rising by a group of ordinary people against the government in power. 


Interestingly, the JVP insurrection of 1971 too was officially considered as a rebellion against the Queen of Great Britain. The suspects arrested in connection with the insurgency had been indicted before the specially instituted Criminal Justice Commission (CJC) in 1972 for conspiring and rebelling against the Queen’s government, in spite of the fact that Ceylon, as Sri Lanka was then called, had been considered to have gained Independence from Britain as far back as 1948. 


The JVP and its 1971 insurrection are unique in many ways in Sri Lankan history. At a gathering of those involved in that insurrection, but dissociated with the JVP now, held on April 5 this year in Colombo, Swaminathan Wimal, a lecturer of the Jaffna University who had been invited as the guest speaker said that the 1971 uprising has been the cradle of violent uprisings against the establishment as well as a brutal suppression of uprisings in recent history.  


Many analysts have opined that the Tamil youth in the North and the East who took arms against the State  a few years after the 1971 insurrection had been inspired mainly by the uprising of their southern counterparts. It also had been an inspiration to another rebellion of southern youth led by the same group, the JVP in 1988/89 which claimed nearly a hundred thousand lives. However, unlike the southern rebellion which was brutally crushed by the armed forces within a few months, the northern uprising lasted more than thirty years claiming another one hundred thousand lives.


Although it was called a childish act by a misguided group of youth, the first JVP insurrection had a great impact on the politics of Sri Lanka. On the economic front, Prime Minister Sirima Bandaranaike had to introduce a land reform scheme as many of those involved in the insurgency had been from poor families in rural areas. On the political front, the JVP had argued that Sri Lanka’s Independence in 1948 was a farce since the governor general of the day was responsible for the British queen. The highest court in the country at time was the Privy Council in London. And the United Front Government of Mrs. Bandaranaike had to address the issue with a new Constitution which severed all administrative as well as judicial links with the British Raj making Sri Lanka a republic. 


In the later years too, the JVP had been able to turn the course of the country’s history manipulating the rivalries of the two main political parties. It was the JVP that was instrumental for the 17th Amendment to the Constitution in 2001 which was introduced during the famous “Parivasa Anduwa” (probationary government) under President Chandrika Kumaratunga, considerably curtailing the powers of the Executive Presidency through the introduction of the Constitutional Council and independent commissions.


Again in 2004 it was the JVP that persuaded President Kumaratunga to topple the UNF government scuttling the peace talks between the UNF government and the LTTE which had taken a dangerous turn with the government beginning to give into almost all LTTE demands. One of the demands had been an interim administration for the northern and eastern provinces called the “Interim Self Governing Authority (ISGA) which was in fact a blueprint for a separate State.


Also the role played by the one-time southern rebels in the defeat of President Mahinda Rajapaksa who had been considered as invincible even by his foes, in January last year is well known.

 
The JVP has been unique in its survival despite being physically subjected to macabre suppression by governments of the two main parties, the SLFP and the UNP in its 51-year history. During the two uprisings it lost tens of thousands of its cadres and majority of its experienced leaders including its founder leader Rohana Wijeweera who was killed after being arrested during the second insurrection in November 1989.


Despite the brutality, the party had exhibited and introduced in its two insurgencies a distinct culture into Sri Lankan politics. The incredible selfless dedication for the cause by the majority of the JVP has been unparalleled. It is unimaginable that presently, a JVP Member of Parliament, provincial council or a local government body subscribes his monthly salary and other perks to a common fund run by his party and lives a life with the help of members and supporters of the party. Many members of the JVP still give up their higher education, well-recognised and well paid jobs in order to become full-time cadres of the party.


However, except for a few, many have found that they cannot continue with this sacrifice and have withdrawn citing genuine as well as spurious reasons. Members of the NFF broke away from the JVP citing theoretical differences, but used the opportunity to enjoy posts and perks provided by the Rajapaksa regime, never resorting to any sacrifices they had been used to or compelled to make. The process of this withdrawal by the aging people from the stem of the JVP during the last five decades has resulted in a young party membership that could be indoctrinated easily towards sacrifices. One can accuse the JVP for their brutality during the two insurrections but not for corruption.  


However, their doctrine is seen by the people of this country as utopian. Their public meetings have been great crowd pullers, but when it comes to elections even those who admire their policies vote for one of the two main parties which appeared to have a better chance of coming to power. Hence, the JVP is unique in that they make sacrifices for the party although they know that they would not come to power in the foreseeable future.

- See more at: http://www.dailymirror.lk/108026/The-insurrection-in-retrospect#sthash.8GfJ8kr5.dpuf

Thursday, April 07, 2016

யுத்த வெறியன், வரி ஏய்ப்பு சூதாடி கமெரனே பதவி விலகு!



Panama Papers: David Cameron Admits He Profited From Father's Offshore Fund
World | Agence France-Presse | Updated: April 08, 2016 01:56 IST
by Taboola Sponsored Links Sponsored

Cameron sold the stake in the Bahamas-based trust in 2010, four months before he became prime minister, he said in an interview with television channel ITV.

Downing Street have issued four statements on the affair this week following Sunday's publication of the leaked Panama Papers, which showed how Panama-based law firm Mossack Fonseca had helped firms and wealthy individuals set up offshore companies.

"We owned 5,000 units in Blairmore Investment Trust, which we sold in January 2010. That was worth something like 30,000 pound (37,000 euros, $42,000)," Cameron said.

"I sold them all in 2010, because if I was going to become prime minister I didn't want anyone to say you have other agendas, vested interests."

He insisted he had paid income tax on the dividends from the sale of the units, which he bought in 1997.

Downing Street first dismissed the story as a private matter on Monday before saying Cameron had no offshore funds, then saying he and his wife and children did not benefit from any offshore funds.

It later added that Cameron would not benefit from such funds in the future.

The row is the latest headache for Cameron, who faces a tight race to ensure Britain stays in the European Union in a referendum due to be held on June 23.

'Difficult few days'

The prime minister has been under intense pressure from the main opposition Labour party and media this week to come clean over his financial arrangements past and present.

Labour's deputy leader Tom Watson told Sky News that, while it was too early to say whether Cameron should quit, "he may have to resign over this but we need to know a lot more about what his financial arrangements have been".

Cameron indicated in the ITV interview that he would be prepared to publish his tax returns although a previous offer to do so in 2012 did not materialise.

The story could be damaging partly because it taps into a perception of the Conservatives as the party of the rich, and its leadership as products of affluent backgrounds educated at some of Britain's most expensive schools.

"The PM has always been aware that if voters knew the scale of his wealth, they would consider him incapable of relating to their daily struggles," wrote Isabel Oakeshott, author of a biography of Cameron, in the Daily Mail newspaper this week.

Cameron's father Ian was a stockbroker who died in 2010, four months after his son became premier.

The prime minister revealed he had been stung by criticism of his father -- who he has previously called his "hero" -- and stressed that the culture in the finance industry had changed in recent years.

"It has been a difficult few days, reading criticisms of my father and his business practices -- my dad, a man I love and admire and miss every day," Cameron said.

Story First Published:April 08, 2016 00:08 IST

விழி இழந்தோர் குரல் கேட்போம்!



செய்தி:
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னாரில் விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து....
தினம் : 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மன்னார் நகரசபை மண்டபம்
நேரம் : பிற்பகல் 2.00 மணி


''பார்வை இல்லாதவர்களே பாடுவார்கள், இசைக்கருவிகளை மீட்டுவார்கள். இசை கூட்டுவார்கள். விழா அமர்க்களமாய் நடைபெறும்.''

அணிதிரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!
அனுமதி இலவசம்.

அழைப்பிதழ்

மன்னார் வரைபடம்

Thursday, March 31, 2016

மறவன் புலவு ``தற்கொலை அங்கி`` யும், ஈழம் மீது இராணுவ ஆக்கிரமிப்பும்!

முப்பது ஆண்டுகால நீண்டயுத்தத்தின் இராணுவ உபகரணப் புதையல்களின் மீட்பை, தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயம் செய்ய, சம கால அச்சுறுத்தலாக சித்தரிக்கும்,சிங்களத்தின்
சதிகார பிரச்சார மோசடியை முறியடிப்போம்!


ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமே வெளியேறு!

==============================================================

Recovery Of Arms Cache May Impair De-Militarization Of North Lanka
By PK Balachandran | ENS Published: 30th March 2016 04:49 PM Last Updated: 30th March 2016 04:49 PM

COLOMBO: The accidental discovery of an arms cache, including three parcels of TNT and a suicide jacket, in a house at Chavakachcheri in Jaffna District on Wednesday, may hinder the demilitarization of the Northern Province which is one of the major post-war demands of Sri Lankan Tamils and which was promised to the UN Human Rights Council (UNHRC) by the Lankan government headed by President Maithripala Sirisena.

Opponents of demilitarization like MP Namal Rajapaksa have already tweeted that the cache is a sign of the resurgence of the LTTE and that there is no case for lowering vigil.

Recently, President Sirisena himself said that the separatist "Eelam" mindset is still prevelant among the Tamils, but he was quick to add that the only way to neutralize it is the promotion of reconciliation.

The Sirisena-Wickremesinghe government is keen on demilitarization to the maximum extent, and has got the army, navy and air force to vacate hundreds of acres of land in favor of their former civilian owners.

But observers say that the military may not be entirely with the government in this.In fact, Maj Gen.Chaggi Gallage had an open spat with Foreign Minister Mangala Samaraweera at a meeting he had with troops at the army base in Palaly. He was transferred for "insubordination".

After the war ended in 2009, and especially after the exit of President Mahinda Rajapaksa in January 2015, the military has lost much of its power and influence.Despite assurances by Sirisena and Wickremesinghe, the military top brass are not convinced that they will not be tried for war crimes by an international judicial mechanism set up by the UN.

In this context, incidents and discoveries showing resurgence of the LTTE, are expected to restore the relevance of the military in the affairs of the nation and prevent the government from bowing to the diktats of the West and the UNHRC.
             ==============================================================
மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 
மீன்பிடிக்கவே வெடிபொருட்களை கொண்டுவந்தேன்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 
================================

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - கூட்டு எதிர்க்கட்சி
30 மார்ச் 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மைகளை மக்களிடமிருந்து மூடி மறைக்க முயற்சிப்பதாகவும்,தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமெனவும், அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் உள்ள இடமொன்றுக்கு அனுப்பி வைக்க, இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர்,இந்த சம்பவத்தை உதாசீனம் செய்து விட முடியாது எனவும், உண்மையாக மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் என்ன நோக்கத்திற்காக இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன என்பது பற்றியும் அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
=========================
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
MAR 30, 2016 | 11:36by கார்வண்ணனின் செய்திகள் Karunasena Hettiarachchi

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சிக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அளித்துள்ள செவ்வியில், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஒன்றும் அதிமுக்கியமான விடயமல்ல என்றும், அது போர்க்காலத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வெடிபொருட்களை நாம் அடிக்கடி மீட்கிறோம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=============================

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில், சிங்கள மொழிப் பத்திரிகை மற்றும் உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தற்கொலை அங்கியும் இதர வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில், தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 12 கிலோ கிராம் நிறைகொண்ட வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், 9 மில்லிமீற்றர் ரவைகள் அடங்கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதிகளில் 100 ரவைகள் இருந்துள்ளன),  கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்கான மின்கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்டைகள் ஐந்தும் அடங்குகின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆயுதங்கள் மீட்கப்பட்ட, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர் ஒரு வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், பொருட்களை ஏற்றியிறக்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை செய்வதாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், குறித்த நபர் வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேகநபர், இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்தே அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து,  பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை  நடத்திய பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவருடைய மனைவி,  அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். இதனையடுத்து சந்தேகநபர் தொடர்பிலான விவரம் அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

சந்தேகநபரின் தந்தையை பொலிஸார், தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருவதாக தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அக்கராயன் பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் 2 மணியளில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. அதன் பின்னர் சாவகச்சேரிக்கு, மாலையில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது.

சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார்.

அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரியவருகின்றது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. இவ்வாறு மீட்கப்பட்ட இந்தத் தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும், அவ்வளவு பழையன இல்லை என்றும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இவை, ஏதாவது பிரதேசத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டனவா, சந்தேகநபருக்கு இப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர்,  தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்து கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நன்றி: தமிழ் மிரர்/ யாழ் உதயன்
==============
சாவகச்சேரி விவகாரம்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை
31-03-2016 10:18 AM Comments - 0       Views - 25

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேற்படி பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


மூலம்: http://www.tamilmirror.lk/
=======================

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் அச்சுறுத்தல் – கோத்தா எச்சரிக்கை
MAR 31, 2016 | 1:07by கி.தவசீலன்in செய்திகள்
gota-udaya (1)சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய 

ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2009ஆமே் ஆண்டு மே மாதம், போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையாதவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

இவர்கள், மோசமான அச்சுறுத்தலாக உருவாகக் கூடும்”  என்றும் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

================
Sri Lanka recovers second stock of explosives from former war zone
Source: Xinhua   2016-03-31 01:01:36   More

COLOMBO, March 30 (Xinhua) -- Sri Lankan police on Wednesday recovered a stock of explosives in the north of the country hours after a suicide jacket had been discovered at another location.

Police Spokesperson Ruwan Gunesekara said that several explosives including small bombs and a rocket-propelled grenade (RPG) launcher had been discovered from an abandoned well in Mannar in the north after police had conducted a search operation in the area.

Gunesekara said that the explosives are believed to have been hidden by the Tamil Tiger rebels during the war period and after obtaining a court order, the army had destroyed it.

Police had earlier on Wednesday recovered a suicide jacket and explosives from a house in Chavakachcheri, also in the north, sparking concerns from opposition parliamentarians that the Tamil Tiger rebels may try to regroup.

Sri Lankan armed forces militarily defeated the rebels in May 2009, ending 30 years of a civil conflict.

The suicide jacket and explosives were recovered from a house based on information received by police.

The police said that three parcels found in the house contained 12kg of TNT explosives. They also recovered 100 bullets and batteries used to trigger explosives.

Soon after the recovery, Defence Secretary Karunasena Hettiarachchi dismissed concerns, stating that there was no threat to the country's national security as these were weapons hidden by the rebels during the war.
==============================
எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி
MAR 31, 2016 | 1:15by கார்வண்ணனின் செய்திகள்
Major General Mahesh Senanayaka

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
 சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
“ முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளியின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
 ஆனாால், எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா படையினர் தொடர்ந்து மூலோபாய ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
==========================================
வெடிபொருள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிளிநொச்சியில் கைது
MAR 30, 2016 | 11:19by கி.தவசீலனின் செய்திகள்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில், தற்கொலைத் தாக்குதல் அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, வீட்டில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் இன்று கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

31 வயதுடைய இந்த இளைஞரின் பெயர் எட்வின் என்றும் கூறப்படுகிறது. இவரே அந்த வீட்டின் உரிமையாளர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Tuesday, March 22, 2016

காலச்சுவட்டில் பிரேமா ரேவதியின் தமிழினிக் கட்டுரை!



மேற்காணும் கட்டுரையில் தான் பிரேமா ரேவதியின் கீழ்க் காணும் குறிப்பு உள்ளது,

''புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த காம்பவுண்டுகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.''

இந்த மேற்கோளில் உள்ள `காம்பவுண்டுகளில்` என்கிற தமிழக பேச்சுவழக்குச் சொல், ஈழத்தமிழ் வழக்குக்கு அமைய `இல்லங்களாக` மாற்றப்பட்டு,தமிழினியின் கருத்தாக, `ஒரு கூர் வாளின் நிழலில்` பிரசுரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதற்கு யார் யார் பொறுப்பு?


மேலும் இந்த ஒரு மேற்கோள் மட்டுமல்ல,காலச்சுவடு மார்க்சிய விரோத,ஈழ தேசிய விடுதலை விரோத,விடுதலைப்புலி எதிர்ப்புச் சஞ்சிகை என்பதும்,பிரேமா ரேவதியின் `நலமா தமிழினி`க் கட்டுரையின் தொனியும் அணுகுமுறையும்,காலச்சுவட்டின் நிலைப்பாட்டை அனுசரித்து இருப்பதும், இதற்கமைய `கூர்வாளின் நிழல்` தொகுக்கப்பட்டு அதே காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருப்பதும்தான் விவகாரம்,வழக்கு,குற்றச்சாட்டு.

சம்பந்தப்பட்டோர் பதிலளிக்க வேண்டும்.

துப்புத் துலங்கிய பின்னால், திருடர்கள் துப்பறிந்தவர்களை  திட்டிவிட்டு கூர்வாளோடு தப்பியோடக் கூடாது!

நியாயம் நிழல் போலத் துரத்தும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
==========================================
பிற்குறிப்பு : மேலும் வாய்ப்புக் கிடைத்தால், பிரேமா ரேவதியின் `சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில்` என்கிற ஈழ சமூக வரையறை குறித்து விரிவான தளத்தில் பேசுவோம். 

23-03-2016

Sri Lanka and India on a transformative path: President

  Sri Lanka and India on a transformative path: President AKD FT lk Monday, 7 April 2025 President Anura Kumara Disanayake  Statement by the...