SHARE

Monday, June 09, 2014

``13 இற்கு மேல்`` மாகாணசபைகளுக்கு ``பொலிஸ் அதிகாரம்`` !






போக்குவரத்துக்காவல் துறை அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவது குறித்து சிறிலங்கா அரசு யோசனை

[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 07:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

காவல்துறை அதிகாரங்களில்லாமல், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

13வது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது.

13வது திருத்தச்சட்டம் குறித்து அப்போது முழுமையாக ஆராயப்படவும் இல்லை.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

எனினும் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

காவல்துறை அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்குவதில்லை என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
எனினும் காவல்துறை அதிகாரத்தில் நிர்வாக முகாமைத்துவத்துக்குத் தேவையான குறிப்பாகப் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

அரசியலமைப்பு என்பது கல்வெட்டல்ல. இந்தியா 157 தடவைகள் தனது அரசியலமைப்பில் திருத்தம் செய்துள்ளது.

சிறிலங்காவின் அரசியலமைப்பும் 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டும், மக்களின் தேவைக்கேற்ப அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு வரையில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை இருக்கவில்லை.

போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரங்களை ஓரளவு கொடுக்க முடியுமா என்பது பற்றி ஆராயப்படுகிறது.

எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
==============
குறிப்பு: ஆக நடப்பிலுள்ள மாகாண சபைகளுக்கு இந்தளவு அதிகாரமும் இல்லை.

Get rid of 13th Amendment – Asgiriya Chapter

File Photo:  Medagama Dhammananda Thera
Get rid of 13th Amendment – Asgiriya Chapter 
June 6, 2014 2:05 am
BY Ruwan Laknath Jayakody

The government should do away with the 13th Amendment to the Constitution, without succumbing to the pressures exerted by India, the Asgiriya Chapter said yesterday.

Committee Member of the Asgiriya Chapter, Medagama Dhammananda Thera, calling the 13th Amendment the root cause of the country's... ... international bedlam, said initiatives should be taken to prepare a draft Constitution to be presented to Parliament, whilst simultaneously opening it up for public debate.

"The 13th Amendment has not been able to achieve national unity. It has instead precipitated international pressure, particularly from India, through force applied by South India. It has also given birth to the money guzzling Provincial Council system and caused disharmony among the different ethnic communities. We must, as a country, remain independent. We do not need to do everything that India says in the manner they suggest as they have their own political agendas."

The Thera also referred to the 13th Amendment as an amendment forced on Sri Lanka by India's former Prime Minister, Rajiv Gandhi. He added that police and land powers should not be given to the Northern and Eastern Provinces, while the powers of the Executive Presidency and the Cabinet should be reduced.

"Because we are stuck with the 13th Amendment, it is hindering our forward momentum," he claimed.
The Thera also blamed the UNP for not only representing international viewpoints, but also for shirking their responsibilities by not taking part in the Parliamentary Select Committee (PSC), hiding behind the excuse of the TNA's boycott of the same.

http://www.ceylontoday.lk/51-65651-news-detail-get-rid-of-13th-amendment-asgiriya-chapter.html

Sunday, June 08, 2014

அடுத்த தலைவன்.

கோட்டே தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளராக கோத்தாபய?
2014-06-05 22:06:51 | General

அடுத்த கொழும்பு மாவட்டத்தில் கோட்டே தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய கோட்டே தொகுதி அமைப்பாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைப்பாளர் பதவியிலருந்து  ஜனாதிபதி விலக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோத்தாபய ராஜபக்ஷ, கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, நகர அபிவிருத்தி அமைச்சர் பதவியும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.


ஜனாதிபதி கோரினால் பகிரங்க அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியான பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்தார்.


கோத்தாபய ராஜபக்ஷவை குருணாகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.  எனினும் குருணாகல் மாவட்டத்திலிருந்து அரசியலுக்கு வருவதை கோத்தாபய விரும்பாததால், ஜனாதிபதி அந்த எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டார்.


ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, திலங்க சுமதிபால ஆகியோர் விலகி செல்லக் கூடும் என்பதால், கொழும்பு மாவட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை கோத்தாபயவிற்கு வழங்கும் நோக்கத்தில் ஜனாதிபதி அவரை கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/jdwr9gbyog6137b8c8c63d4b15922brrqn8856c7872b225e53a6656cxnrcy#sthash.qxjQHfS4.dpuf

Poaching crisis: Lanka will complain to EU

Poaching crisis: Lanka will complain to EU

By Leon Berenger and Chris Kamalendran
Fisheries Deputy Minister reveals alternate plan if talks with India fail
View(s): 197

The Government will take up with the European Union the issue of Indian fishermen poaching in Sri Lanka’s territorial waters, if India fails to agree to an early solution to the issue, Deputy Fisheries Minister Sarath Kumara Gunaratne said yesterday.

He told the Sunday Times substantial evidence to show that poaching by Tamil Nadu fishermen was affecting the marine life of Sri Lankan territorial waters would be presented to Indian External Affairs Minister Salman Khurshid during his visit here.
The Indian Minister is scheduled to arrive here tomorrow morning and will be meeting President Mahinda Rajapaksa and External Affairs Minister G.L. Pieris and others.

The poaching crisis in the Palk Strait would be one of the main issues to be taken up during talks with Mr. Khurshid.
External Affairs Ministry Secretary Karunatilleke Amunugama told the Sunday Times the Indian Minister would be shown evidence of the extensive poaching done by thousands of Indian boats mainly off the northern coast.

“This evidence has been known to both countries for some time. There is little new but the matter will be taken up for discussion once again,”

Mr. Amunugama said.He said Sri Lanka at the talks with Mr. Khurshid would seek at least a reduction in the number of poaching boat as a prelude to a total restriction.

Last week the European Union delegation office in Colombo said it was aware that Indian fishermen were engaged in Illegal-Unregulated-Unreported (IUU) fishing practices, but the delegation had not been formally informed by relevant authorities that the catch was processed in EU-approved factories in Tamil Nadu.More than 700 Indian fishermen have been arrested by the Navy while allegedly poaching in Sri Lanka’s seas since the start of this year, a naval official said yesterday.

Regional politicians in India’s Southern Indian state of Tamil Nadu have repeatedly accused the Sri Lankan Navy of harassing Indian fishermen and making illegal arrests. They have urged the Indian Government to take up the matter with Sri Lanka in the strongest terms.The Sri Lanka Navy has vehemently denied the charges.

TNA also to take up issue

The Tamil National Alliance (TNA) will take up the issue of Indian fishermen poaching in Sri Lanka’s territorial waters with Indian External Affairs Minister Salman Khurshid when he visits Jaffna on Tuesday.

A TNA spokesman said the issue would be taken when the Northern Province Chief Minister-elect C.V. Wigneswaran meets Mr. Khurshid. Hitherto, the TNA has not raised the issue with India though it has had a major impact on the fishermen in the north.

Wednesday, June 04, 2014

2014 புதிய ஆட்சி: மோடிப் பாசிசத்தின் தொடரும் முஸ்லிம் படுகொலை.

மோடி - ஆர்.எஸ்.எஸ் பாசிசம் பலிகொண்ட பூனா முஸ்லிம் இளைஞன்.

சக்கரவர்த்தி சிவாஜிக்கும், சிவ சேன நிறுவனர் பால் தக்கேருக்கும் `அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்` Face Book இணைய சமூகத்தில் இனந்தெரியாத ஒருவரின் பதிவை எதிர்த்து சிவ சேன கும்பல் காவிப் பாசிச காட்டுத்தனத்தைக் கட்டவிழ்த்தது. கடைகளை மூடியது. பொது ஜன போக்குவரத்தை நிறுத்தியது.வாகனங்களை அடித்து நொருக்கியது. இவ்வாறு மத வெறிப் பாசிச அராஜகத்தை இரண்டு நாட்கள் கேட்பாரற்று  கட்டவிழ்த்து வந்தது.

இந்தக் கபளீகரத்தின் மத்தியில் இந்திய IT பணியாளனான ஒரு 24 வயது இளைஞன் தற்செயலாக மாட்டிக்கொண்டான், என்னே துரதிஸ்ரம் அவன் `தாடி` வேறு வைத்திருந்தான்.கொலைக்கு நியாயம் கிடைத்தது. வெற்று வெளித் தெருவில் நையப் புடைக்கப்பட்டு நரபலி எடுக்கப்பட்டான்.

Police said he simply killed because of his obvious appearance.









Tuesday, June 03, 2014

புதிய ஈழம்: மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பாகம் (2)

புதிய ஈழம்: மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பாகம் (2):



மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பாகம் (2)


 மோடி ஆட்சி கடைப்பிடிக்கப் போகும் பொருளாதாரத் திட்டத்தின் திசை வழி குறித்து

Monday, June 02, 2014

`கொள்ளை போகும்` ஈழ தேசம்!


படையினரால் நிலஅபகரிப்பு : அச்சுவேலியில் போராட்டம்  

இராணுவத்தினர் முன்னெடுக்கும்  நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை   எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் பத்து ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர், உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை வடக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும் அதனை தாண்டி தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
------------------
புதன், மே 28, 2014 - 13:02 மணி தமிழீழம் | தவராசா, கிளிநொச்சி

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும்இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனார்.

அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படல்  வேண்டும் எனவும்  வலியுறுத்தியும்,

மேற்படி மக்களுக்குகாக நீதி கேட்டுப் போராட முற்பட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்தியும்,

கிழக்கு மாகாணத்தில் சம்புர் கிராமம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராமம், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு, வளலாய், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர், பாரதிபுரம், இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோாிக்கைகளை வைத்தே மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கிளிநொச்சி கச்சோிக்கும் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளார் விசுவலிங்கம் மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனார்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட உரிமையாளார்கள் போன்றோரும் கலந்து கொண்டனா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன், சிவாசிலிங்கம், ஐங்கரநேரசன், குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், சதீஸ், கிளி பிரதேச சபைத் தலைவர் குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்களை கைது செய்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைப்பதன் மூலம் இப் போராட்டத்தினை குழப்பிவிடலாம் என்று அரசு செயற்பட்டது.

எனினும் கைது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகரமாக மேற்படி போராட்டத்தினை நடாத்தி சர்வதேச சமூகத்திற்கு கிளிநொச்சி மக்களின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.
===================
 சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் நில அபகரிப்பு எதிர்ப்புப் போராட்டம்

காணிகளை படையினருக்கு தாரைவார்க்க உரிமையாளர்களுக்கு அழைப்பு
இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாவகச்சேரி, நுணாவில் வைரவர் கோவிலுக்கு அருகாமையில் J/312 கிராமசேவகர் எல்லைக்குற்பட்ட 11 தனி காணி உறுதிகள் கொண்ட 7 ஏக்கர் காணிகளை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி பிரதேச நிலஅளவை காரியாலயத்தால் அறிவித்தல் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது அதில்:-

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த திணைக்கள அதிகாரிகளை அங்கு கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்,உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

முல்லைத்தீவில் விவசாய, மீனவர்கள் பிரச்சனை.

விவசாய நிலங்கள் சிங்களவர்களால் பறிமுதல்.
கடற்தொழிலில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு.
அனைத்துக்கும் இராணுவம் பக்க பலம்.
வடக்கு முதலமைச்சர் விக்கிக்கு முல்லை மக்கள் முறையீடு.
அதிகாரம் இல்லையென்று அரசர் அலறல்!
BBC Tamil


``எங்கள் நிலம், எங்கள் மனை எமக்கு வேண்டும்``

எங்கள் நிலம் எமக்கு  வேண்டும் 
03 ஜூன் 2014


கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த நான்கு வருடங்களாக தங்கள் சொந்த இடத்தை தங்களிடம் மீள கையளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னமும் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட நிறைய பிரதேசங்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்படவில்லை. மாறாக இன்னும் இன்னும் நிலங்களை இராணுவத்தினர் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தபோது தான் முன்னெடுக்கும் நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி தொடர்பில் மகிந்த ராஜபக்ச அவருக்கு விளக்கம் அளித்தாக  இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போருக்குப் பின்னர் மீள் கட்;டமைப்பு, இன நல்லிணக்கம், அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் உலகுக்குச் சொல்லியிருக்கிறது.

கிளிநொச்சிப் பரவிப் பாஞ்சான் பகுதி மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முற்பகுதியில் அழைத்துவரப்பட்டார்கள். அவர்கள் இன்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் காணிகளில் விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தார்கள் என்று சொல்லியே அவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியிலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பின் பகுதிவரையான காணிகள் இராணுவத்தின் வசம் இருக்கின்றன.

இந்தப் பகுதியை உயர்பாதுகாப்பு வலமயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதிக்குள் யாரும் அனுமதியின்றி நுழைந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. எனது வீட்டுக்குள் இருந்து கொண்டு எனது காணியை பிடித்துக் கொண்டு நுழைந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்று எழுதியுள்ளார்களே என்று அந்தப் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் புலம்பிக் கொண்டு நின்றார். எல்லோரும் அவரவர் ஊர்களில் அவரவர் வீடுகளில் சந்தோசமாக இருக்கிறார்கள் நாங்கள்தான் வீடற்று அலைந்து கொண்டிருக்கிறோம் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த ஐந்து ஆண்டுகளும் பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவமுகாம்களுக்கும் அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் செல்லாத பொழுதுகள் இல்லை. அண்மையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது அலுவலகத்திற்கும் மக்கள் ஒன்று திரண்டு சென்று தமது காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். 2010ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் இந்த மக்கள் உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அங்கும் இங்கும் என்று காலத்தை கழித்து வருகிறார்கள். வளமும் எழிலும் நிறைந்த தங்கள் காணிகளை இராணுவம் ஆள்வதைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த காணிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலடி பட்ட இடமென்றும் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் அங்கு அவர் மாவீரர் தின உரை ஆற்றி வந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் ருவாண்; வணிகசூரிய சொல்லுகிறார். பிரபாகரனின் காலடி பட்ட மண்ணெல்லாம் வேண்டும் என்று இராணுவத்தினர் நினைத்தால் ஒட்டுமொத்த ஈழமண்ணையும் இராணுவமுகாமாக்க வேண்டும். பிரபாகரனுக்கு பரவிப்பாஞ்சானில் காணிகள் இருப்பதாக எந்த விபரங்களும் இல்லை. அவர் ஒரு கிராமம் முழுவதிலுமா இருந்து மாவீரர் தின உரையாற்றினார்?

இந்தக் காரணத்தைச் சொல்லி பரவிப்பாஞ்சான் கிராமத்தின் முழுப்பகுதியையும் இராணுவத்தினர் அபகரிக்க முயல்வதைப் போல அநீதி வேறில்லை. அவை மக்களின் காணிகள். அதற்கான உறுதிகள், காணி ஆதாரங்கள் மக்களின் கையில் உள்ளன. ஆனால் அவை மக்களின் காணிகள் இல்லை என்றும் அவர்களிடம் ஆதாரம் இல்லை என்றும் இராணுவம் சொல்கிறது. கிளிநொச்சியிலும் வடக்கு கிழக்கிலும் என்ன நடக்கிறது எப்படி நிலம் விழுங்கப்படுகிறது என்பதற்கு கிளிநொச்சியின் இந்தக் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு.

கிளிநொச்சியில் நிலத்தைக் கோரும் போராட்டத்தை நடத்த இலங்கை இராணுவமும் காவல்துறையும் பல்வேறு தடைகளை உருவாக்கின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த ஏற்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான ஜெகதீஸ்வரனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்திருந்தது.

இராணுவத்தினர் கிளிநொச்சியில் மாத்திரமல்ல வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டு இராணுவமுகாம் அமைத்துள்ள காணிநிலங்கள் எல்லாமே மக்களினுடையவை. அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிலமற்று வீடற்று அகதியாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவமுகாமிற்காக உதிரிகளாக காணிகளை இராணுவத்தினருக்குப் பறிகொடுத்துள்ளவர்கள் இந்த மாதிரியான போராட்டங்களையும் செய்ய முடியாமல் இராணுவமுகாங்களை சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காணாமல்போன தனது மகனை கேட்டுப் போராடிய ஜெயக்குமாரியும் தனது அண்ணனைக் கேட்ட விபூசிகாவும் எப்படி கைது செய்யப்பட்hர்களோ அப்படியே மக்களின் நிலத்தை கேட்டுப் போராட்டம் செய்யத் தயாரான ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார். காணாமல் போனவர்களை தேடுவதும் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க போராடுவதும் பயங்கரவாதம் என்று கருதும் இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கு மக்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர் மண்ணை ஆக்கிரமிக்கவும் தமிழர்களை ஒடுக்கவும் இவ்வாறான காரணங்களே தேவைப்படுகின்றன.

நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. எங்கள் நிலத்தில் வாழ வேண்டும். எங்கள் வீட்டில் வாழ வேண்டும் இதைத்தான் கேட்கிறோம் என்று பரவிப் பாஞ்சான் மக்கள் மனம் உருகிச் சொல்கிறார்கள். எங்கள் மக்கள் எதுவரை அகதிகளாக வாழ வேண்டும்? அவர்களின் காணிநிலங்கள் எதுவரை அபகரிக்கப்படும்? இவ்வாறான பல்லாயிரம் கேள்விகளுடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட அரசியல் சூழலில் நிம்மதியாக வாழும் ஒரு வாழ்க்கைக்கான போராட்டத்தை ஈழ மக்கள் இன்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் நடந்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். தம்முடைய வலுவான கண்டனங்களையும் பதிவு செய்தார்கள். விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் ஒரு சமாதான நகரமாக உலகின் பல்வேறு பிரதிநிதிகளும் வருகை தந்த கிளிநொச்சியில் நடந்த இந்த நில அபகரிப்புக்கு எதிரான நீல மீட்புக்கான போராட்டம் இன்று ஒட்டுமொத்த ஈழ மண்ணின் நிலவரத்தையும் உலக சமூகத்தை நோக்கி உரத்த குரலில் சொல்கிறது.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் என்று யாருமில்லை. அகதிகள் எனப்படுவர்கள் யாரும் இல்லை என்று ஒருமுறை கிளிநொச்சியில் வைத்து ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய குறிப்பிட்டார். அப்படி என்றால் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களை எப்படி அழைப்பது? இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்விடமற்று  அலையும் இந்த மக்களை எப்படி அழைப்பது?

தங்கள் நிலத்தை மீட்க, செல்லாத இடமெங்கும் சென்று அலைந்து களைத்துப்போய்விட்ட பின்னரும் கேட்காத இடமெங்கும் கேட்டு, குரல் வற்றி காய்ந்துபோன பின்னரும் இன்னமும் உக்கிரம் குறையாமல் இருக்கிறார்கள் பரவிப்பாஞ்சான் மக்கள். ஏனெனில் அந்த நிலம் அந்த மக்களுக்குச் சொந்தமானது. அந்த நிலம் இல்லை எனில் அந்த மக்கள் இல்லை. தாங்கள் வாழவும் தங்கள் சந்ததி வாழவும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டியது பரவிப்பாஞ்சான் மக்களுக்கு தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்த தேசமும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள நிலையில் ஒட்டுமொத்த ஈழ மக்களதும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டிய காலம் இதுவாகும்.

நன்றி: தீபச்செல்வன்/ (குளோபல் தமிழ் செய்தி)

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கை `13அமூல்`.

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
Posted By Thara On May 31st, 2014 02:39 PM | செய்திகள், பிரதான செய்திகள்

இலங்கை தமிழர் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மிக தெளிவாக கூறியுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதற்கான 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறும் மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தார்.

மோடி கூறியதை இலங்கை செய்யுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

எனினும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான நிபந்தனையை இந்தியாவின் புதிய பிரதமர் தெளிவாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஜனாதிபதி மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் நேர்காணலை நடத்தியது.

இதன் போது மோடி, ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் சொல்லப்பட்ட சில விடயங்களையும் கூறினார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.

மோடி இப்படியான கோரிக்கையை விடுத்தது இரகசியமான ஒன்றல்ல. இதனை முழு இந்தியா மட்டுமல்ல முழு உலகமும் அறியும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...