SHARE

Monday, June 02, 2014

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கை `13அமூல்`.

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
Posted By Thara On May 31st, 2014 02:39 PM | செய்திகள், பிரதான செய்திகள்

இலங்கை தமிழர் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மிக தெளிவாக கூறியுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதற்கான 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறும் மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தார்.

மோடி கூறியதை இலங்கை செய்யுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

எனினும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான நிபந்தனையை இந்தியாவின் புதிய பிரதமர் தெளிவாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஜனாதிபதி மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் நேர்காணலை நடத்தியது.

இதன் போது மோடி, ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் சொல்லப்பட்ட சில விடயங்களையும் கூறினார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.

மோடி இப்படியான கோரிக்கையை விடுத்தது இரகசியமான ஒன்றல்ல. இதனை முழு இந்தியா மட்டுமல்ல முழு உலகமும் அறியும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Iran’s New Grand Strategy

Iran’s New Grand Strategy How a Remade Islamic Republic Will Reshape the Middle East Narges Bajoghli and Vali Nasr July/August 2026  Publish...