SHARE

Friday, October 26, 2012

Berlusconi Is Found Guilty of Tax Fraud

The case at the heart of Friday’s ruling centered on a scheme in which Mr. Berlusconi and several other defendants used a series of offshore companies to buy the rights to broadcast American movies on Mr. Berlusconi’s private television networks and falsely declared the amount of the payments to avoid taxes. Prosecutors said the defendants then inflated the price for the television rights of some 3,000 films as they relicensed them internally to Mr. Berlusconi’s networks, pocketing the difference, which amounted to around 250 million euros, about $320 million. Mr. Berlusconi, who has major holdings in real estate, insurance, advertising and publishing, has been involved in dozens of legal cases over the years. In 1997 and 1998, when Mr. Berlusconi was the opposition leader, he was convicted by lower courts on charges of tax fraud and corruption.

October 26, 2012
Berlusconi Is Found Guilty of Tax Fraud

By RACHEL DONADIO NYT
 
ROME — A court in Milan convicted former Prime Minister Silvio Berlusconi of tax fraud on Friday and sentenced him to four years in prison. Mr. Berlusconi is also currently on trial over charges that he paid for sex with an underage prostitute. He has denied the accusation.

The ruling was Mr. Berlusconi’s fourth lower-court conviction, and the first since he stepped down as prime minister in November, after years in which his personal legal battles often eclipsed the work of his government. His four-year sentence was reduced to one year under a law aimed at reducing prison overcrowding.

Besides being a blow to Mr. Berlusconi personally, the ruling comes at a time when his center-right party is unraveling and Italy is in the throes of the most dramatic political transition since the early 1990s, when he first came to power. It was just two days ago that he announced that he would not lead his party in Italy’s next elections.

“It’s without a doubt a political sentence, the way so many other trials invented against me have been political,” Mr. Berlusconi said after Friday’s ruling, calling in to a news program on a channel he owns.

A lawyer for Mr. Berlusconi said the former prime minister would appeal the ruling, which must go through two more rounds of appeal before becoming definitive. It is unlikely that he will ever serve jail time. Even if a definitive ruling were reached before the statute of limitations in the case runs out next year, Mr. Berlusconi would enjoy immunity as long as he remained in the Parliament.

However, the judges also barred the former prime minister from holding public office for five years, a penalty that would be applied only if his conviction were upheld by the highest court. They also took the unusual step of reading the reasoning behind the verdict, which normally takes 60 to 90 days after a ruling. That could speed up the appeals.

On Wednesday, Mr. Berlusconi, 76, said he would not lead his People of Liberty party in Italy’s national elections next spring to replace the unelected technocratic government of Prime Minister Mario Monti, who has been guiding Italy through a perilous economic crisis. But he said that he would stay involved in politics.

The case at the heart of Friday’s ruling centered on a scheme in which Mr. Berlusconi and several other defendants used a series of offshore companies to buy the rights to broadcast American movies on Mr. Berlusconi’s private television networks and falsely declared the amount of the payments to avoid taxes. Prosecutors said the defendants then inflated the price for the television rights of some 3,000 films as they relicensed them internally to Mr. Berlusconi’s networks, pocketing the difference, which amounted to around 250 million euros, about $320 million. Mr. Berlusconi, who has major holdings in real estate, insurance, advertising and publishing, has been involved in dozens of legal cases over the years. In 1997 and 1998, when Mr. Berlusconi was the opposition leader, he was convicted by lower courts on charges of tax fraud and corruption.

All three previous lower-court convictions were either overturned on appeal or thrown out for lack of evidence — or the statute of limitations ran out before a definitive highest court ruling was reached.

Gaia Pianigiani contributed reporting.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தெருமுனைக் கூட்டம்

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தெருமுனைக் கூட்டம்
தினமலர் – பு, 24 அக்., 2012
 
சிதம்பரம்:மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும். அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வு காண வேண்டும். சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் தெருமுனைக் கூட்டம் நடந்தது.
 
சிதம்பரம் பகுதி அமைப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் குணாளன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 
 

Tuesday, October 23, 2012

மாகாண எண்ணிக்கையை ஐந்தாக மாற்றுவதே அரசின் இரகசிய திட்டம்







 
மாகாண எண்ணிக்கையை ஐந்தாக மாற்றுவதே அரசின் இரகசிய திட்டம்

மனோ கணேசன்

இலங்கை-இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் இல்லாது ஒழித்து இந்நாட்டில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களின் எல்லைகளையும்  மீளமைத்து அவற்றை ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த இலக்கை முன்வைத்தே அரசாங்கம் இன்று காய் நகர்த்துகிறது. இந்த தகவலை முடியுமானால் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் மறுக்கட்டும். அதேபோல் அரசில் உள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் இதற்கு பதில் சொல்லட்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது


முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுவே இவர்களது கொள்கைத் திட்டம். இதன் முதற்கட்டமாக  13வது திருத்தமும்  அதையொட்டிய மாகாணசபைகளும் ஒழிக்கப்படும். இரண்டாம் கட்டமாக நாட்டின் மாகாணங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு ஒன்பது மாகாணங்கள் ஐந்து மாகாணங்களாக அறிவிக்கப்படும். இதன்மூலம் எந்த ஒரு மாகாணத்திலும் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள். மூன்றாவது கட்டமாக அனைத்து நிர்வாக மற்றும் தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்க முடியாத நிலைமை உருவாக்கப்படும்.

இன்று வட மாகாணத்தில் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மாகாணங்களுக்குள் அடங்கிய மாவட்டங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படும்.

அனைத்து மாகாணங்களுக்கும் கடல் எல்லை அவசியம் என்ற காரணத்தை காட்டி மாகாண எல்லைகளை மீளமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மாகாண மாவட்டங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் ஜனத்தொகை குடிப்பரம்பல் மாற்றி அமைக்கப்படும்.

இதுதான்  தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வாகும். இந்த இலக்கை நோக்கியே அரசாங்கம் பயணம் செய்கிறது. இதன் முதல் கட்டமாகவே  13வது திருத்தத்திற்கும் மாகாணசபைகளுக்கும் எதிரான பிரச்சார இயக்கத்தை அரசாங்கம் இன்று தனது பங்காளி கட்சிகள் மூலமும் பாதுகாப்பு செயலாளர் மூலமும் ஆரம்பித்துள்ளது.

13வது திருத்தத்தை இல்லாதொழிக்க கருத்துக்கணிப்பு - மகிந்தவுக்கு விமல் வீரவன்ச அவசர கடிதம்!

''ஒரே நாடு என்ற நிலையை ஏற்படுத்த அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்''
விமல் வீரவன்ச.
13வது திருத்தத்தை இல்லாதொழிக்க கருத்துக்கணிப்பு - மகிந்தவுக்கு விமல் வீரவன்ச அவசர கடிதம்
[ திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, 00:45 GMT ] புதினப்பலகை

13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ள நிலையில், 13வது திருத்தம் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.

இது தொடர்பாக நேற்று அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய - சிறிலங்கா உடன்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திருத்தத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக பேசுவதற்கு, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களத் தேசியவாதக்-(பேரினவாத)- கட்சிகளுடன் இணைந்து சிறிலங்கா அதிபருடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றுள்ள சூழ்நிலையை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்து விடக்கூடாது.

13வது திருத்தத்தினால் எழுந்துள்ள அச்சுறுத்தலை முறியடிக்க மாற்று நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு செப்ரெம்பரில் நடத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதில் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு பெறும் வெற்றியால், நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும்.

வடக்கு மாகாணசபை காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரி உயர்நீதிமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பை சிறிலங்கா அரசு புறக்கணித்து விடக் கூடாது.

ஒரே நாடு என்ற நிலையை ஏற்படுத்த அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது மாகாணசபைகள் தலையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் போரிடும் பலம் அழிக்கப்பட்ட போதும், பிரிவினைவாதச் சிந்தனைகள் தொடர்ந்தும் உள்ளதையே திவிநெகும சட்டமூலத்துக்கு காட்டப்படும் எதிர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Govt. allies want 13-A scrapped

``The government has a two-third majority in Parliament. It can be used to abrogate the 13th Amendment``
Mahajana Eksath Peramuna (MEP) 

Govt. allies want 13-A scrapped .
Tuesday, 23 October 2012 06:19

Several allies of the ruling United Peoples Freedom Alliance (UPFA) have decided to continue their campaign to pressure President Mahinda Rajapaksa to abrogate the 13th Amendment to the Constitution, by using the two-thirds majority in Parliament, Daily Mirror learns.

 The Jathika Nidahas Peramuna (JNP) led by Minister Wimal Weerawansa and the Jathika Hela Urumaya (JHU) have started a public campaign against the 13th Amendment.

 The Mahajana Eksath Peramuna (MEP) led by Minister Dinesh Gunawardane has also decided to prevail upon the government in this regard.

 Minister Gunawardena told Daily Mirror his party foresaw the consequences of this piece of legislation introduced in 1987 under the Indo-Lanka Accord giving birth to the provincial councils, which have become white elephants.

“This is a hastily prepared piece of legislation. The provincial councils are useless. They waste public funds. We have to do away with this system at least now,” he said. “In Sri Lanka, even education and health have been devolved to the provinces. These are two crucial subjects, which need to be handled by the central government to develop a country. We are witnessing the repercussions of leaving such powers in the hands of the provincial councils.

 Asked whether he would carry out a public campaign, the minister said that his party would first discuss the matter with the government.

“We have written to the government on several occasions. We will take it up again. The government has a two-third majority in Parliament. It can be used to abrogate the 13th Amendment,” he said.

 The MEP is an ally of the ruling coalition with three parliamentary seats. Digamadulla district MP Sriyani Wijewickrema and Deputy Minister Geethanjana Gunawardane are the two others.

 He said that instead of the provincial councils a district council system could be set up to implement and co-ordinate development work.

“The Pradeshiya Sabhas and Urban Councils should be strengthened,” the minister said.

 Referring to the Indo-Lanka Accord, he said though the former Indian Prime Minister Rajiv Gandhi played a role in introducing this law here, there are village-based administrative bodies set up in India to carry out grassroots level development activities.

The minister said the MEP wants the cultural and linguistic concerns of people in the North addressed. (Kelum Bandara)

13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி

``13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவும், இதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்றால் அதை நடத்தவும் நாம் தயார்``
அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ

13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி 

யாழ் உதயன்

"வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்.

 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.''

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோது கூறினார்.

 அவர் மேலும் கூறியவை வருமாறு:

மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கான அதிகாரத்தை மக்கள் அவர்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அச்சட்டங்கள் தடையாக அமைந்தால் அவற்றைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை.

 அதேபோல், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவுமே 13 ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அச்சட்டம் தடையாக இருந்தால் அதை வைத்திருந்து என்ன பிரயோசனம்?

 13 ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும்தான் ஆரம்பத்தில் கூறினர். அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இச்சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே புலிகள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தனர்.

 தெற்கு மக்களை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது. ஆகவே, இச்சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதையே இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.

 நாம் பலமிக்க அரசு. மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளும்போது எச்சட்டமும் எம்மைத் தடைசெய்யாது. 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான எமது சேவை தொடரும்.

 ஏதேனும் ஒரு சட்டம் மக்களுக்கான சேவைக்குத் தடையாக இருந்தால் அச்சட்டத்தை மக்களே நீக்குவர். உணவு சமைக்கவே நெருப்பைப் பயன்படுத்தவேண்டும். அந்த நெருப்பு ஊரையே அழிக்கும் அளவுக்கு மாறினால் அந்த நெருப்பை அணைத்துத்தான் ஆகவேண்டும். அதேபோலத்தான் மக்களுக்கு எதிரான சட்டங்களும் கையாளப்பட வேண்டும்.

 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பிழையாகப் பயன்படுத்த எவராவது முயற்சி செய்தால் அச்சட்டத்தை இல்லாது செய்ய மக்களே முயற்சிப்பர். இச்சட்டத்தை இல்லாது செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்றால் அதையும் நாம் நடத்துவோம்.

மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதற்காக  வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாம் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவும் தயார். 

Monday, October 22, 2012

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 16:13 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் கூறுகிறார்.


இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு , எனவே இந்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை ரத்து செய்தால் அதன் விளைவுகள் இலங்கையை மீறி இருக்கும், இலங்கையின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என்கிறார் ஆய்வாளர் பேராசிரியர் சஹாதேவன் ஏனென்றால்,  இந்த சட்டத்திருத்தம் இலங்கையின் மற்ற சட்டத்திருத்தங்களைப் போன்றதல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட ஒரு நடவடிக்கை. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை தர அரசு முன்வரவில்லை என்ற கருத்து சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை, இலங்கை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றார் சஹாதேவன்.

இந்தியா இந்த நடவடிக்கையைத் தடுக்குமோ இல்லையோ , ஆனால் நிச்சயம் வரவேற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என்று கூறிய சஹாதேவன், இலங்கையில், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டியே இந்த சட்டத்திருத்தம் வந்தது என்று சமீபத்தில் இந்தியா வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்திருத்தம் வெளிநாட்டினால் திணிக்கப்பட்டதல்ல, உள்நாட்டு வழிமுறையிலேயே உருவானது என்று அவர் கூறினார்.

'இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை பெரிய அளவில் இல்லை'- சந்திரஹாசன்

'இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை'- சந்திரஹாசன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2012 - 18:27 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்புவதில் எந்தவிதமான பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று இந்தியாவில் இலங்கை அகதிகளின் நலன்சார் விடயங்களில் ஈடுபட்டுவரும் தொண்டுநிறுவனமான ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் (ஆஃபர்) (OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation) தலைவர் எஸ்.சி. சந்திரஹாசன் கூறுகிறார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிச்சென்றுள்ள இலங்கை அகதிகள் 6 ஆயிரம் பேர் வரையில் தமக்கு அங்கு பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக உணரவில்லை என்றும் அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகளே இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


தமிழகத்தில் வசிக்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருநாட்டு அரசுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை உருவாக்கும் முயற்சிகளிலும் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் சந்திரஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் வசிக்கின்றனர், அவர்களில் 70 ஆயிரம் பேர்வரையில் முகாம்களிலேயே தங்கி இருக்கின்றனர் என்று ஆஃபர் அமைப்பு கூறுகிறது.

21 ஆயிரம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள்1983-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்ற குடும்பங்களிலிருந்து சுமார் 21 ஆயிரம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் தற்போது 16 ஆயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகரகம் ஊடாக பிறப்புச் சான்றிதழ்களைப் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

நூற்றுக் கணக்கான தமிழர்கள் அண்மைய காலங்களில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்று பிடிபட்டிருக்கிறார்கள்.

இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பிறப்பை பதிந்து பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் 'நாடற்றவர்களாகும்' நிலை இருப்பதால் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுத்து இலங்கைக் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் ஸ்தாபகர் சந்திரஹாசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக பிரதேசங்களிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறி, பின்னர் அங்கிருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இந்திய வம்சாவளி தமிழர்களில் சுமார் 30 ஆயிரம் பேர்வரையில் முகாம்களில் இருப்பதாகவும் அவர்கள் வந்த காலத்தில் நாடற்றவர்கள் நிலையில் இருந்ததால் அவர்களுக்கும் குடியுரிமை ஆவணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதாவும் அவர் கூறினார்.
அந்த நடவடிக்கையின் ஒருகட்டமாகவே சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருப்போருக்கு சனிக்கிழமை பிறப்புச் சான்றிதழ்களும் குடியுரிமை ஆவணங்களும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்பு காணிகளில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதையும் அங்கு அரசியல் தீர்வுத்திட்ட முயற்சிகள் முடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழோசை கேள்வி எழுப்பியபோது, அந்தப் பிரச்சனைகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் சுட்டிகாட்டினார்.

Saudi wants our AG there to discuss Rizana Nafeek’s release


Saudi wants our AG there to discuss Rizana Nafeek’s release
The Saudi Arabian Government has indicated that the Attorney General (AG) of Sri Lanka should
come to Saudi Arabia to discuss the legal issues connected with the release of condemned Sri
Lankan maid Rizana Nafeek, foreign media reported.

President Mahinda Rajapaksa met with Prince Salman bin Abdulaziz Al Saud of Saudi Arabia on
the sidelines of the Asia Corporate Dialogue Summit in Kuwait City this week.

Crown Prince Salman bin Abdulaziz Al Saud, is presently the Vice Custodian of the Two Holy
Mosque, First Deputy Prime Minister and Minister of Defence of Saudi Arabia, as well as the
most senior member of the House of Saud, next to the King of Saudi Arabia.

Prince Salman who is expected to succeed the King of Saudi Arabia was earlier the Governor of
Riyadh and handled the files connected with Rizana Nafeek .

 The Saudi Government has told the Sri Lankan delegation that met them, to send Sri Lanka’s
Attorney General to Saudi Arabia for further talks regarding the legal issues connected with the
release of the maid, according to media reports. (Ceylon Today Online)

Sunday, October 21, 2012

கே.பி.விடுதலை! `புலத்துப் புலிகளுடன்` கலந்துரையாட ராஜபக்ச தலைமையில் தூதுக்குழு!

அரசின் சாட்சியாக கே.பி: அரசாங்கம் அறிவிப்பு
வீரகேசரி 2012-10-20 10:26:46
http://www.virakesari.lk/article/local.php?vid=1187


‘‘கே. பி. ௭னப்படும் குமரன் பத்மநாதன் அரச சாட்சியாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். அவர் ஊடாக கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளது.அவ்வாறான கலந்துரையாடல்கள் வெற்றிபெற்றுள்ளன.
௭திர்காலத்தில் கே.பி. ஊடாக புலம் பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ௭திர்பார்க்கின்றோம்’’ ௭ன்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பயங்கரவாதம் யுத்தத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கான காரணங்கள் தீர்க்கப்படவேண்டும் ௭ன்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. அதற்காக ௭திர்கால நலனை நோக்காகக்கொண்டு மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படவேண்டும் ௭ன அரசாங்கம் கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையை நாங்கள் பல கோணங்களில் நோக்கவேண்டியுள்ளது.

30 வருடகாலமாக நீடித்த பயங்கரவாத பிரச்சினையை யுத்தத்தின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தோற்கடித்தோம். ௭னினும் இந்த 30 வருடகால யுத்தம் ௭ன்பது பல்வேறு பின்னணிகளுடனான வரலாற்றைக்கொண்டுள்ளது ௭ன்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ௭னவே இந்த விடயத்தை இலகுவாகக்கொள்ள முடியாது.யுத்தம் முடிந்துவிட்டாலும் இன்றும் கூட அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்துக்கொண்டிருக்கின்றார். கசிப்பு சாராயத்தை தயாரித்தவரை பிடிப்பதைப்போன்று இந்த விடயத்தை அணுக முடியாது.இது மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் ௭திர்கால நல நோக்கோடும் அணுகப்படவேண்டிய விடயமாகும். அந்தளவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த விடயம் காணப்படுகின்றது.

சட்டத்தை மீறவில்லை ௭னினும் ௭தனையும் சட்டத்தை மீறி நாங்கள் செய்யவில்லை. சட்டத்தின் ஊடாகவே நிலைமையை பார்க்கின்றோம். அதன்படி சில இடங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டிய தேவை ௭ங்களுக்கு உள்ளது.அதனை முன்னெடுக்கின்றோம். அடிக்கவேண்டியதை அடித்து முடிந்தாயிற்று. தற்போது பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தவேண்டியுள்ளன. யுத்தம் முடிந்துவிட்டது. தற்போது பல விடயங்களில் பல கோணங்களில் ஆராயவேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்.சாதகமாக பார்க்கின்றோம் அந்த வகையிலேயே கே.பி. யின் விடயங்களை சட்டத்துக்குள் சாதகமாக அணுகி வருகின்றோம்.

முன்னர் பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் முன்னர் பஸ்களை ௭ரித்தவர்கள் இன்று ௭ம்.பி. க்களாக உள்ளனர். அதாவது மனிதர்களாக உள்ளனர். அவர்களை பழையதைப் போன்றே வைத்துக்கொண்டிருக்க முடியுமா? ௭னினும் சட்டத்துக்குள்ளேயே இதனை பார்க்கின்றோம். பயங்கரவாதம் யுத்ததத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காரணங்கள் தீர்க்கப்படவேண்டும் ௭ன்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. அதற்காகவே கே.பி. ஊடாக கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்துள்ளது.

அவ்வாறான கலந்துரையாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. ௭திர்காலத்தில் கே.பி. ஊடாக புலம் பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ௭திர்பார்க்கின்றோம். தொடர்ந்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இராணுவ நடவடிக்கை முடிவு

இராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது. ௭னவே ௭திர்கால நலனை நோக்காகக்கொண்டு மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படவேண்டும் ௭ன அரசாங்கம் கருதுகின்றது. இல்லாவிடின் இன்னும் 20, 15 அல்லது 10 வருடங்களில் மீண்டும் பயங்கரவாதம் உருவெடுக்கலாம்.
அதனால்தான் யுத்தத்துக்குப் பின்னரான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ஐ.நா. செயலாளர் பான் கீ. மூன் கோரிக்கை விடுத்துள்ளார். ௭மது அரசாங்கமும் அந்தக் காரணத்துக்காகவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தது. அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளது. 50 வீதமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

௭து ௭வ்வாறெனினும் இறுதியில் நிரந்தர சமாதானமே தேவைப்படுகின்றது. அதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். அதுவே ௭மது பிரதான நோக்கமாகும்.




 Govt. to talk with Tamil Diaspora

* President Rajapaksa to lead delegation

October 19, 2012, 10:57 pm The Island lk
by Zacki Jabbar

In a new turn of events, the government yesterday said that it would enter into a dialogue with the
Tamil Diaspora to find a solution to the long drawn out ethnic conflict.

Media Minister Keheliya Rambukwella, addressing the weekly Cabinet press briefing in Colombo, said that the groundwork had already been done and there had been a positive response from Sri Lankan Tamils resident abroad.

He said that government emissaries had established the required channel and if things went
according to plan, President Mahinda Rajapaksa would hold talks with the Tamil Diaspora in
Colombo shortly.

The war was over but the state of conflict and tension continued, the Minister said, adding that the objective was to end years of mistrust and usher in permanent peace for the benefit of Sri Lankans.Plantation Industries Minister Mahinda Samarasinghe was currently meeting world
leaders to explain the steps taken to forge ethnic harmony and reconciliation, Minister
Rambukwella said.

It was important to ensure that there would not be a repeat of the thirty-year conflict that had
caused irreparable damage to the country, its people and the economy.

The talks with the Tamil Diaspora were aimed at eliminating the causes that had led to the
emergence of groups like the LTTE. If not, Sri Lanka would be faced with another terrorist
problem in about a decade or so, the Minister said.

Amidst denials by Lakshman Hulugalle, Director General of the Media Centre for National Security, that K. P. Pathmanathan, the LTTE’s former chief arms procurer, had been released, Minister Rambukwella said those who had changed their ways should be given an opportunity to be reintegrated into society.

He said that since the southerners who engaged in violent activities had been given an opportunity
to enter mainstream politics, there was no reason why the ex-LTTE member should not be treated
in a similar manner.

KP to play "useful role"
October 19, 2012, 11:00 pm The Island
by Zacki Jabbar

The LTTE’s former chief arms procurer K. P. Pathamanathan, who was said to be in protective
custody, is to be given a ‘useful role’.

Media Minister Keheliya Rambukwella told journalists in Colombo yesterday that many
southerners involved in armed insurrections had been given an opportunity to enter mainstream
politics and there was no reason why Ex-LTTE cadres should not be treated in the same manner.

His comments came amidst denials by Lakshman Hulugalle, Director General of the Media
Centre for National Security that K. P. had been released from protective custody.

"It’s important to treat everyone alike; many former LTTE cadres are holding important positions
in government and there was nothing wrong in giving KP a ‘useful role’, the Minister noted.

Rambukwella said that the Lessons Learnt and Reconciliation Commission had been established
to achieve exactly what its name denoted.

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...