SHARE

Monday, March 24, 2025

இந்திய வளர்ச்சிக்கு ஐ.நா.பாராட்டு

பாலின சமத்துவத்தில் உலகளாவிய ரீதியில் இந்தியா முன்னணியில் உள்ளது

- ஐ.நா.பிரதிநிதி பாராட்டு!

March 24, 2025 தினகரன்

பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப் , உலகளாவிய அபிவிருத்தியில் இது மிக முக்கியமான பிரச்சினை என்று கூறினார். “எளிமையாகச் சொன்னால், உலகளவில் பாலின சமத்துவத்தில் முதலீடு செய்வதை விட முக்கியமான பிரச்சினை எதுவும் இல்லை.இந்தியாவும் அதில் விதிவிலக்கல்ல.” ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை மேற்கோள் காட்டி கருத்து வெளியிட்ட அவர், “பாலின சமத்துவம் என்பது நமது காலத்தின் நிறைவு செய்யப்படாத பணி” என்ற கருத்தை அவர் வலுப்படுத்தினார்.

முடிவெடுப்பதில் பெண்களின் சம பிரதிநிதித்துவத்தின் மறுக்க முடியாத நன்மைகளை ஷார்ப் எடுத்துரைத்தார்: “முடிவெடுப்பதில் பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம் உள்ளது.வீடுகள் செழிக்கின்றன. சமூகங்கள் செழிக்கின்றன. வணிகம் அதிக லாபகரமானது.நாடுகளும் அதிக வளமானவை என்பதற்கான சான்றுகள் உலகம் முழுவதும் தெளிவாக உள்ளன என்பதை நாங்கள் காண்கிறோம்.” சர்வதேச தளங்களில், குறிப்பாக G20 மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவின் தலைமையையும் அவர் வரவேற்றார்.

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை நாங்கள் மிகவும் அங்கீகரிக்கிறோம்.பாராட்டுகிறோம்.இந்தியா முன்வைத்த பல சர்வதேச முயற்சிகள் மூலம், இந்தியா முழுவதும் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் உண்மையில் ஒரு பெரிய வாக்குறுதியை அளிக்கிறது. இந்த தாக்கத்தின் அளவை உண்மையில் மிகைப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் சிலவற்றில் 25 அல்லது 50 சதவீதத்திற்கு மேல் பங்களிக்க முடியும்.எனவே இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மார்ச் மாதம் பாலின சமத்துவ மாதமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால், பாலின சமத்துவத்தை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை ஷார்ப் மீண்டும் வலியுறுத்தினார். ” ஒவ்வொரு நாளும் மகளிர் தினமாக இருக்க வேண்டும். நாம் பாலின சமத்துவத்தை அடையும் வரை, நாம் கொண்டிருக்கும் இலக்குகளை அடைய முடியாது.” பரந்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார், ” 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் 2047 விகாசித் பாரத் – இவை அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரே பாதையில் இரண்டு படிகள். இது இன்று மிகவும் உற்சாகமான மற்றும் மிக முக்கியமான கலந்துரையாடலாகும்” என்றும் அவர் கூறினார்.

பாலின சமத்துவமின்மையின் உலகளாவிய சவால் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய ஷார்ப், “எந்தவொரு நாடும் உண்மையில் முழு பாலின சமத்துவத்தை அடையவில்லை. இது ஒரு உலகளாவிய சவால்.” இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், இன்னும் முடுக்கம் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “இந்தியாவில், உத்தியோகப்பூர்வ தரவுகளின் பிரகாரம் பாலின சமத்துவத்திற்கு கூடுதல் முடுக்கம் தேவை என்பதைக் காட்டுகிறது .”

இந்தியாவின் அண்மைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பாராட்டிய அவர், “மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பார்த்தோம்.எனவே அந்த மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மிக முக்கியமான அதிகரிப்புகளைக் காணப்போகிறோம்” என்று கூறினார். உள்ளூர் நிர்வாக மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார், “நிச்சயமாக, உள்ளூர் மட்டத்தில் – எங்கள் மட்டத்தில் பஞ்சாயத்தில், ஏற்கனவே பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முடிவெடுப்பது மிக அதிகமாக உள்ளது. அது மிகவும் முக்கியமானது”.

இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.ஆனால் முன்னேற்றத்தின் அறிகுறிகள் காணக்கூடியதாக உள்ளது என்பதை ஷார்ப் ஒப்புக்கொண்டார். “பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்.ஆனால் அவை அதிகரித்து வருகின்றன – இந்தியாவில் இங்கு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது பல நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்று நான் கருதுகிறேன். ”

இந்தியாவில் பெண்கள் வலுவூட்டலின் எழுச்சியை ஒரு பலமான சக்தியாக அவர் விவரித்தார்.இந்தியாவின் பெரிய அளவிலான வளர்ச்சி முன்னேற்றத்தை மேலும் விரிவாகக் கூறிய ஷார்ப், மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதில் நாட்டின் பங்கைப் பற்றிப் பேசினார்.

“இந்தியாவில் நாம் காண்பது அளவிலான வளர்ச்சி தாக்கம். கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் இந்த நம்பமுடியாத இந்திய வளர்ச்சிக் கதையில் பணிவான பங்காளிகளாக இருப்பதில் ஐ.நா என்ற வகையில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். அதில் ஒரு பெரிய பகுதி முற்றிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலும் ஆகும்.”என்றும் அவர் தெரிவித்தார்.🔺


No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...