18.12.2025 வியாழக்கிழமை இரவு 8.00 மணி.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற தன்மையும் நீடிக்கின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை முதல் (19.12.2025) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1. தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும்;
2. கனமான மழை கிடைத்து மண் முழு ஈரக் கொள்ளளவை எட்டியுள்ளதாலும்;
3. கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்ப போன்ற நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாலும்;
4. மகாவலி, மாதுறு ஓயா, கல்லோயா, போன்ற ஆறுகள் அவற்றின் முழுக்கொள்ளளவோடு பாய்வதாலும்;
5. காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டிருப்பதனாலும்;
6. இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும், குறிப்பாக இரத்தினபுரிக்கும் மாத்தறைக்கும் இடையிலேயே இரண்டு மில்லிபார் அமுக்க வேறுபாடு உள்ளமையினாலும்;
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
எனவே அன்புக்குரிய மலையக உறவுகள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியமானதாகும்.
மழை எதிர்வரும் 20.12.2025 அன்று இரவு முதல் படிப்படியாக குறைவடைந்தாலும் நிலச்சரிவு அபாயம் எதிர்வரும் 23.12.2025 வரை நீடிக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
அதேவேளை
2. ஏனைய சிறிய மற்றும் நடுத்தர ஆறுகளின் நீரேந்து பிரதேசங்களான பொலன்னறுவை, கண்டி, போன்ற பிரதேசங்களில் தொடர்ந்து மழை கிடைத்து வருவதாலும்;
3. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும்;
4. கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதனாலும்;
கிழக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. திருகோணமலை மாவட்டத்திற்கு மழை குறைவாக இருந்தாலும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே கிழக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களும், மகாவலி, கல்லோயா, மாதுறு ஓயா, முந்தெனியாறு, நவகிரி ஆறு போன்றவற்றின் கரையோரப்பகுதிளில் உள்ள மக்களும் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது சிறந்தது.
அதேவேளை நாளை முதல் (19.12.2025- வடக்கின் சில பகுதிகளுக்கு இன்றிலிருந்து) குளிர் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 27 ஆம் தேதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025.12.18 බ්රහස්පතින්දා රාත්රී 8.00.
අනතුරු ඇඟවීමේ අනතුරු ඇඟවීම !!!
බෙංගාල බොක්කෙහි ශ්රී ලංකාවට ගිනිකොන දෙසින් නිර්මාණය වූ වායු සංසරණය බටහිර-වයඹ දෙසට ගමන් කර දැනට ශ්රී ලංකාවට දකුණු-නිරිත දෙසට පිහිටා ඇත.
ඒ හා සමානව, ශ්රී ලංකාවේ දකුණු කොටසේ වායුගෝලීය අස්ථාවරත්වයක් පවතී.
මේ හේතුවෙන්, මඩකලපුව, අම්පාර, මහනුවර, මාතලේ, නුවරඑළිය, බදුල්ල, පොළොන්නරුව, අනුරාධපුර, රත්නපුර, කෑගල්ල, ගාල්ල, මාතර, හම්බන්තොට සහ මොනරාගල දිස්ත්රික්කවල 20 වන දින රාත්රිය දක්වා තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
හෙට (2025.12.19) සිට උතුරු පළාතේ වර්ෂාපතනය ක්රමයෙන් අඩු වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
1. අඛණ්ඩ වැසි හේතුවෙන්;
2. අධික වර්ෂාව සහ පස එහි සම්පූර්ණ තෙතමනය ධාරිතාවයට ළඟා වීම හේතුවෙන්;
3. කොත්මලේ, වික්ටෝරියා, රන්දෙණිගල, රන්දෙඹ වැනි ජලාශ පිටාර ගැලීම හේතුවෙන්;
4. මහවැලි, මාතුරු ඔය, කල්ලෝය වැනි ගංගා පිටාර ගැලීම හේතුවෙන්;
5. ශ්රී ලංකාවේ පවතින දකුණු-නිරිතදිග දිශාව හේතුවෙන්;
6. ශ්රී ලංකාවේ දකුණු කොටසේ පවතින වායුගෝලීය අස්ථාවරත්වය හේතුවෙන් (රත්නපුර සහ මාතර අතර මිලිබාර් දෙකක පීඩන වෙනසක් ඇත);
නුවරඑළිය, මහනුවර, මාතලේ, බදුල්ල සහ කෑගල්ල දිස්ත්රික්කවල අධික වර්ෂාපතනය සමඟ සම්බන්ධ නායයෑම් ව්යසන ඇතිවීමේ ඉහළ සම්භාවිතාවක් පවතී.
එබැවින්, අපගේ ආදරණීය කඳුකර ඥාතීන් නායයෑම් සම්බන්ධයෙන් ඉතා ප්රවේශම් සහ සුපරීක්ෂාකාරී වීම අවශ්ය වේ.
2025.12.20 රාත්රියේ සිට වර්ෂාව ක්රමයෙන් අඩු වුවද, නායයෑම් අවදානම 2025.12.23 දක්වා පවතින බව මතක තබා ගන්න.
මේ අතර,
1. මහවැලි, මාතුරු ඔය, කල්ලෝය ආදී ප්රදේශවලින් වැඩි ජලය ගෙන එයි;
2. පොළොන්නරුව, මහනුවර වැනි අනෙකුත් කුඩා හා මධ්ය පරිමාණ ගංගා ජල පෝෂක ප්රදේශවලට අඛණ්ඩව වැසි ලැබෙමින් පවතී;
3. නැගෙනහිර පළාතේ බොහෝ ප්රදේශවලට, විශේෂයෙන් මඩකලපුව සහ අම්පාර දිස්ත්රික්කවලට අඛණ්ඩව වැසි ලැබෙමින් පවතී;
4. නැගෙනහිර පළාතට 20 වන දින රාත්රිය දක්වා වැසි ලැබෙනු ඇත;
නැගෙනහිර පළාතේ පහත් බිම් ප්රදේශවල ගංවතුර ව්යසනයක් ඇති කිරීමේ හැකියාවක් පවතී. ත්රිකුණාමලය දිස්ත්රික්කයට අඩු වර්ෂාවක් ලැබී ඇතත්, මහවැලි ගඟේ ජල මට්ටම ඉහළ ගොස් ඇති බව සැලකිය යුතු කරුණකි.
එබැවින්, නැගෙනහිර පළාතේ පහත් බිම් ප්රදේශවල සහ මහවැලි, කල්ලෝයා, මාතුරු ඔය, මුන්දෙනියාරු සහ නවගිරි ගංගා ඉවුරුවල ජීවත් වන ජනතාව ගංවතුර අවදානම පිළිබඳව විමසිල්ලෙන් සිටීම සුදුසුය.
මේ අතර, හෙට (2025.12.19 - අද සිට උතුරේ සමහර ප්රදේශ සඳහා) සිට සීතල කාලගුණය වැඩි වනු ඇතැයි අපේක්ෂා කරන අතර එය 27 වන දින දක්වා පවතිනු ඇත.
- නාගමුතු ප්රදීපරාජා
No comments:
Post a Comment