SHARE

Thursday, June 26, 2014

பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது




பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது – பெளவுத்த பல படை அணியின் மற்றொரு பாசிசத் தாக்குதல்!

[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:30 GMT ]

பாணந்துறையில்  முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மருத்துவமனைக்கு அண்மையாக உள்ள நோலிமிட் ஆடைக் காட்சியறையே தீக்கிரையாக்கப்பட்டது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், இது மின்கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை கருத்து வெளியிட்டுள்ளது,

இன்று அதிகாலை 3 மணியளவில் பற்றிய தீயை அணைக்க, 5 தீயணைப்பு வண்டிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது.

இது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதும், அண்மைக்காலத்தில் நோமிலிட் காட்சியறைகளைக் குறிவைத்து பௌத்த அடிப்படைவாத பெளவுத்த பல படையணி , இராவண பலய போன்ற அமைப்புகள் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வரும் நிலையில், பாணந்துறையில் ஆடை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

VI.DIVISION OF THE WORLD AMONG THE GREAT POWERS

  Vladimir Ilyich Lenin Imperialism, the Highest Stage of Capitalism A POPULAR OUTLINE VI. DIVISION OF THE WORLD AMONG THE GREAT POWERS In h...