SHARE

Sunday, November 30, 2025

India steps up aid to Sri Lanka

In this image posted on Nov. 30, 2025, Indian Air Force personnel evacuate stranded passengers from cyclone-hit Sri Lanka.Photo | PTI

India steps up aid as Cyclone Ditwah death toll in Sri Lanka crosses 200

India has deployed National Disaster Response Force (NDRF) teams and Indian Air Force (IAF) assets under Operation Sagar Bandhu to assist Sri Lankan authorities. 

Updated on: 30 Nov 2025

Sri Lanka pressed on with large-scale rescue and relief operations on Sunday, supported by India, as the death toll from Cyclone Ditwah climbed past 200 amid widespread flooding and landslides.

According to the Disaster Management Centre (DMC), 212 people have been confirmed dead and 218 remain missing since Thursday. Nearly 10 lakh people from over 2.7 lakh families have been affected by the disaster.

India has deployed National Disaster Response Force (NDRF) teams and Indian Air Force (IAF) assets under Operation Sagar Bandhu to assist Sri Lankan authorities.

“NDRF personnel, in close coordination with local authorities, continue to undertake relief operations in Sri Lanka,” External Affairs Minister S. Jaishankar said on social media.

Eighty NDRF personnel in two urban search-and-rescue teams are on the ground, while IAF helicopters and transport aircraft are conducting high-risk evacuation missions.

In one such mission, a Garud commando was winched down to lead stranded passengers through difficult terrain to a helipad at Kotmale, from where 24 people, including Indians, Sri Lankans, and other foreign nationals were flown to Colombo. Three critically injured individuals were also airlifted for urgent treatment.

The IAF additionally transported 40 Sri Lankan Army personnel to the landslide-hit Kotmale region and has positioned Mi-17 V5 helicopters in Colombo for rapid HADR operations.

Transport aircraft are on standby for large-scale evacuation of Indian nationals, and relief items such as Bhishm cubes and medical supplies are being airlifted.

On Saturday, C-130J and IL-76 aircraft delivered nearly 21 tonnes of humanitarian aid to Colombo. INS Sukanya is en route from Visakhapatnam with more supplies, while two Chetak helicopters aboard INS Vikrant continue to support rescue missions, including the dramatic rescue of a family of four stranded on a rooftop.

400 Indian passengers stranded due to Ditwah evacuated from Sri Lanka

Around 150 of them were sent back to Delhi aboard flight C130 while 250 of them were sent to Trivandrum on flight IL 76 from the Bandaranaike International Airport here, Sri Lankan officials said.

COLOMBO: At least 400 Indian nationals stranded at the Colombo airport following the extreme weather conditions in cyclone-hit Sri Lanka, were sent back home on Sunday.

Around 150 of them were sent back to Delhi aboard flight C130 while 250 of them were sent to Trivandrum on flight IL 76 from the Bandaranaike International Airport here, Sri Lankan officials said.

Both the aircraft had arrived in Sri Lanka on Saturday carrying food and humanitarian aid for flash floods victims.

As Sri Lanka battled the aftermath of the powerful cyclone Ditwah, Acting High Commissioner of India to Sri Lanka, Dr Satyanjal Pandey, met stranded compatriots at the Colombo airport on Saturday.

The Indian High Commission provided food and water to those who needed it, and also assured the stranded Indians that New Delhi will facilitate their swift travel back home.

Sri Lanka declared a state of emergency throughout the island nation after Cyclone Ditwah caused widespread devastation as it left a trail of destruction and damage to infrastructure.

There was widespread flooding, landslides and severe service disruptions, including flight cancellations.

The island nation is a popular tourist destination for Indians.

As at 2 am on Sunday, the latest data from Sri Lanka's Disaster Management Centre (DMC) showed that at least 212 people have been killed and 218 missing since Thursday across the island nation in cyclone-induced rainfall, floods and landslides.

Earlier on Sunday, the Indian High Commission here said in a post on X,"@Indiainsl is facilitating the swift return home of the Indian passengers stranded in. Evacuation flights by @IAF_MCC and commercial airlines (are) being facilitated today. Every stranded Indian will reach home at the earliest."

"Any distressed Indian citizen at the airports or any part of Sri Lanka in need of assistance may reach out to the emergency No +94 773727832.

(For WhatsApp also)," it said.

Cyclone Ditwah: Indian Air Force, Navy scale up humanitarian assistance to battered Sri Lanka

The IAF reaffirmed the spirit of 'neighbourhood first', saying, “India stands firmly with Sri Lanka in this hour of need.”
An IL-76 Indian Air Force aircraft arrived in Sri Lanka carrying 80 National Disaster Response Force personnel, disaster relief supplies and rescue equipment.
An IL-76 Indian Air Force aircraft arrived in Sri Lanka carrying 80 National Disaster Response Force personnel, disaster relief supplies and rescue equipment. (Photo | Sri Lanka Air Force)

NEW DELHI: The Indian Air Force and Indian Navy have scaled up humanitarian assistance to Sri Lanka under Operation Sagar Bandhu in the wake of the devastation caused by Cyclone Ditwah across the island nation.

The Indian Air Force was quick to respond, deploying one C-130 and one IL-76 from Hindon Air Base near Delhi on the night of November 28/29 to airlift 21 tonnes of relief material along with over 80 NDRF personnel and eight tonnes of rescue equipment. Essential rations and critical supplies were delivered to support affected communities.

The IAF reaffirmed the spirit of 'neighbourhood first', saying, “India stands firmly with Sri Lanka in this hour of need.”

On Saturday, Sri Lanka appealed for urgent international assistance as Cyclone Ditwah continued to batter the island. According to reports, the cyclone led to the deaths of up to 153 people with 191 still missing.

More than 15,000 homes were destroyed and nearly 78,000 people forced to take refuge in state-run temporary shelters consequent to the continued torrential rain and landslides triggered by the cyclonic storm. Cyclone Ditwah is one of the country’s worst natural disasters in recent years.

Floods and cyclonic storms across Asia

Floods and cyclonic storms across Asia leave over 700 dead and hundreds missing

Catastrophic floodings has displaced more than four million people while death toll is set to climb

Shweta Sharma

Sunday 30 November 2025 Independent UK

The death toll from devastating floods across several Asian countries has surpassed 750, with storms and cyclones battering Indonesia, Malaysia, Thailand, and Sri Lanka with their heaviest rainfall in decades.

Millions across Southeast Asia have been affected as the exceptionally rare Cyclone Senyar swept through Indonesia, Malaysia and Thailand, while the powerful Cyclone Ditwah pounded Sri Lanka and India.

Over four million people have been impacted by the floods, with nearly three million in southern Thailand and 1.1 million in western Indonesia, according to official statistics.

In Indonesia, the death toll from floods and landslides climbed to 417 on Saturday, up from 174 earlier in the week, the head of the country’s disaster mitigation agency said.

At least 279 people remain missing, even as around 80,000 have been evacuated, and hundreds are still stranded across three provinces in Sumatra, Indonesia’s westernmost region. 

Many people in Sumatra were forced to steal food and water to survive, said police spokesperson Ferry Walintukan, adding that regional police had been deployed to restore order.

 
A general view shows a damaged house in a flooded area in Meureudu, Pidie Jaya district in Indonesia's Aceh province (AFP via Getty Images)

"The looting happened before logistical aid arrived," he said. "(Residents) didn't know that aid would come and were worried they would starve."

Videos on social media showed people running past barricades, flooded roads and broken glass to get their hands on food, medicine and gas. Some were seen wading through waist-deep floodwaters to reach the convenience stores.

Relentless downpours began hammering Sumatra on Wednesday, triggering extensive flooding that submerged towns and swept away roads.

Landslide survivors clean the debris in Hanguranketha, Sri Lanka, Saturday (AP)

Landslides have cut off entire communities in the island’s north, destroying communications infrastructure and leaving key routes impassable. Helicopters have been deployed to deliver aid and supplies to areas inaccessible for three days.

“We are trying to open the route from North Tapanuli to Sibolga, which has been completely cut off for a third day,” the agency’s chief, Suharyanto, said. Authorities warn the death toll is likely to rise.

In Thailand, 170 people have died, and floods have affected 1.4 million households – roughly 3.8 million people. Heavy rains inundated parts of 12 southern provinces, with deaths confirmed in at least eight, a government spokesperson said in Bangkok.


A woman stands amidst tree trunks that were stranded on a shore following deadly flash floods and landslides, in Padang, West Sumatra province, Indonesia (REUTERS)

The extreme weather, meteorologists note, was driven in part by Cyclone Senyar, an unusually rare system that formed in the Strait of Malacca.

Hat Yai, the largest city in Songkhla, received 335mm (13 inches) of rain last Friday, its highest single-day tally in 300 years, amid days of heavy downpours.

In neighbouring Malaysia, the toll is lower, but the scale of damage remains severe.

Widespread flooding has swamped large parts of northern Perlis, leaving two people dead and forcing tens of thousands into temporary shelters.

An aerial view shows houses partially submerged in floodwaters after heavy rainfall in Kaduwela on the outskirts of Colombo on November 29, 2025 (AFP via Getty Images)

Further west, Sri Lanka has been left reeling after Cyclone Ditwah, with the death toll rising to 193 .

More than 228 people are still missing and nearly 78,000 have been displaced, according to the country’s disaster management centre. Officials expect the toll to rise as rescue operations continue.

Videos from the island on Saturday showed homes, roads and farmland engulfed by floodwaters.

Weather experts say the extreme conditions across the region may have been intensified by the combination of Typhoon Koto in the Philippines and the rare Cyclone Senyar in the Malacca Strait.

வரலாற்றுத் தவறிழைக்காது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

வரலாற்றுத் தவறிழைக்காது இந்த நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க



வரலாற்றில் மிகப்பெரிய  இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்வோம். அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும்  அந்த சவாலை, குறிப்பாக இந்த நாட்டின் அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இன்று (2025.11.30) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரழிவு நடந்துள்ள  தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில்  ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது. இந்தத் தடவை  அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற  முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம். 

முழுமையான உரை கீழே :

"ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்  அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட  முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.  இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம். ஆனால் நாம்  யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும். இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது  அனுதாபத்துடன் மட்டும் நின்றுவிடாமல்  அந்த உயிர்களை அந்த குடும்பங்களுக்குத் திரும்பக் கொண்டுவர முடியாவிட்டாலும், ஏனைய அனைத்தையும் வழங்க நாங்கள்  அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேபோன்று  காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பலருடைய துன்பத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்காக  முன்வந்த அனைவரையும் நாம் அன்புடன் அரவணைக்கிறோம்.

இயற்கை அனர்த்தங்களை முறையாக கட்டுப்படுத்த முடியாத போதும் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளை உரிய வகையில் முகாமைத்துவம்  செய்தல், பழைய நிலைக்கு அல்லது முன்பை விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும்  மூன்று செயல்முறைகளின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்குரியது. அதற்குத் தேவையான மற்றும் சாத்தியமான நடவடிக்கைகள்  எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த அனர்த்தத்தை  எதிர்கொள்ளும் போது, ​​மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஒரு நாட்டில், நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற மனித வளம் வேறு எதையும் விட மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் அனர்த்தத்தின் போது விட்டுச் செல்லாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் உள்ள மனஉறுதியுடனான எமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் நாம்  பெருமைப்படுகிறோம்.

நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மறுசீரமைப்பு முன்னெடுப்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும்  பணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அழிவின் அளவை மதிப்பிடுவது மிகவும் பாரதூரமானது. ஆனால், வெள்ளம், புயல் அல்லது ஏதேனும் பேரழிவுக்குப் பின்னர், நம் நாட்டு மக்களின் முதல் பணியாக அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணத்தை வழங்குவதுமாகவே உள்ளது. அதற்காக, எங்கள் முழு அரச பொறிமுறையையும் மிகவும் திறமையாக வழிநடத்த முயற்சி செய்தோம். குறிப்பாக, எங்கள் முப்படையினரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் துணிவுடன் செயலாற்றினார்கள். அவர்கள்  தொடர்பில் பெருமை அடைகிறோம். 

அதேபோன்று அமைச்சுக்களின்  செயலாளர்கள் முதல் கிராம அலுவலர் வரை முழு அரச பொறிமுறையும் இந்தப் பணிக்காக மிக விரைவாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பாரிய பங்காற்றி  வருகின்றனர். அவர்கள் அதை தங்கள் கடமைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமானப் பணியாகப் உணர்ந்து,  அர்ப்பணிப்புடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஏராளமான மக்கள் தாமாகவே முன்வந்து பங்களித்தனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் பெரும் மனிதாபிமானத்துடன் அவர்கள்  பங்காற்றினர்.  இந்த நேரத்தில் நாம் அதை நினைவுகூர வேண்டும்.
மேலும், இந்த மீட்புப் பணியில், நமது அயல் நாடுகளும் நட்பு நாடுகளும் எங்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நிவாரண மற்றும் மீட்புப் படைகளை வழங்குவதன் மூலம் வெளிநாடுகள் ஏற்கனவே எங்களுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளன. நமது நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சில சுற்றறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து, அவர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில்  ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.  சில சுற்றறிக்கைகள்  அதிகாரிகளுக்கு  தேவைக்கேற்ப பணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி அளித்துள்ளோம்.  

மேலும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது.அதை நாங்கள் பாராளுமன்றத்தின் அனுமதி  இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம். மாவட்ட செயலாளர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதையெல்லாம் வழங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாவிட்டால்,குறைமதிப்பீட்டின் ஊடாக  மேலும் நிதியை வழங்கலாம். வழங்கியுள்ள நிதியின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, சுகாதார உதவிகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அனர்த்த சூழ்நிலை காரணமாக, ஏராளமான அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார வலையமைப்பு சேதமடைந்துள்ளது.  தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுள்ளன.   உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை துரிதமாக மீளமைக்க  நடவடிக்கை எடுத்துள்ளோம்.அனர்த்தத்தினால்  பாதிக்கப்படாத பகுதி  ஊழியர்கள் இந்த உள்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

அமைச்சுக்களுக்கு நிறுவனங்களுக்கு வேறு பணிகள் இருந்தாலும் பிரதான பணியாக கருதி இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்காக நாம் ஏற்கெனவே திட்டமொன்றை தயாரித்துள்ளோம். மின்சார சபை , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை , தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை  போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் தேவையான பங்களிப்பையும் வழிகாட்டுதலையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அதனால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

வீதிகள் மற்றும் பாலங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் நீர் வசதிகள் வரை  உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய  பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சீராகவும் முறையாகவும் எழுந்து நிற்கப்  போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை சாதாரண சவாலல்ல. சிறு சுயதொழில் முயற்சி முதல் பாரிய அளவிலான கைத்தொழில்கள் வரை, சிறு தொழில்முனைவோர் முதல் பாரிய அளவிலான தொழில்முனைவோர் வரை,  அனைத்துத் தரப்பினரும் தங்கள் வருமானத்தை இழந்துள்ளன. விவசாயம், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

எனவே, இவை அனைத்தையும் மிக விரைவாக மேம்படுத்துவதற்கு நமக்கு ஒரு துரித திட்டம் அவசியம் . அதனால்தான், இந்த அனர்த்த  சூழ்நிலையை முகாமைத்துவம் செய்து  , விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் வளங்களை வழங்க அவசரகால நிலையை அறிவித்துள்ளோம். இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும்  , நமது நாட்டை செயற்திறனுடன்  கட்டியெழுப்புவதற்காக அன்றி  வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்த நாட்டின் பிரஜைகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்


இந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக , அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை ஏற்கனவே நியமித்துள்ளோம். அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மையப்படுத்தியுள்ளோம். அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் மூலம் மிகவும் திறமையான மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டை மேற்கொள்ள ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அதேபோன்று , நமது நாட்டை முன்பு இருந்ததை விட மிகவும் முன்னேற்றமான நாடாக மாற்ற வேண்டியது எமது அடுத்த பணியாகும். அந்த நோக்கத்திற்காக, புனரமைப்புக்குத் தேவையான நிதியை வழங்க ஒரு நிதியத்தை  நிறுவ எதிர்பார்க்கிறோம்.  அந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரிய பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம்.

நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான  நிதியை நாம் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.  எங்கள் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி அவர்களின் உதவியைப் பெறுதல், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை பெறுதல், உள்நாட்டு வர்த்தகர்கள்  மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உதவியை நாடுதல் ஊடாக அதனை பெறலாம். குறிப்பாக   இலங்கைக்கு வெளியே வசிக்கும் இலங்கையர்கள்  உதவியை வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வலுவான நிதியமொன்றை உருவாக்க வேண்டும்.  

அதேபோன்று  தமது  துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீள்கட்டமைப்புக்குத் தேவையான நிதி தொடர்பான ஒழுங்கான பட்டியலைத் தயாரிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம். துல்லியமான தரவு மற்றும் துல்லியமான தகவல்கள் இல்லாததால் ஏற்படும் பாதகங்களை நாங்கள் அனுபவித்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, எங்களுக்கு துல்லியமான தரவு மற்றும் தகவல்கள் அவசியம். அதன் படி அனைத்து அரச நிறுவனங்களும் அதற்காக பணியாற்றி வருகின்றன. 

இந்த துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக  நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில்  ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது. இந்தத் தடவை  அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற  முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த பேரழிவு நடந்துள்ள  தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். குறிப்பாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறேன். நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம். நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும்  அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

குறுகிய வேறுபாடுகள் இல்லாமல் இந்த கூட்டு முயற்சியில் சேர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் . ஒரு தேசிய மற்றும் சர்வதேச திட்டத்தின் மூலம், சிறந்த  ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு நமது மனசாட்சிக்கு அமைவாக  எதிர்பார்க்கும் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்குமாறு கோருகிறேன். எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை  குணப்படுத்துவோம். சுபீட்சமான நாட்டை  உருவாக்குவோம்."

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது 

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி
++++++++++++++++++++++++++++++++++++
இது போன்ற ஒரு தருணத்துக்காகவே காத்திருந்தோம்.
டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது.
+++++++++++++++++++++++++++++++++++++
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும்.
புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவுக்கு நீர் வரத்து நாளை முதல் குறைவடையும். ஆனால் மன்னாருக்கான நீர்வரத்து எதிர்வரும் 03.12.2025 வரை இருக்கும்.
ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளை அண்மித்த மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கடல்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
---------------------------------------------------------------------------
ஆனாலும் இந்த புயலோடு தொடர்புடைய வானிலை சார்ந்து இனி அச்சப்பட எதுவுமில்லை.
----------------------------------------------------------------------------
கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.
இன்னும் ஒரு நாள் டிட்வா இலங்கையில் நிலைத்திருந்தால் மாபெரும் பேரழிவுகள் இலங்கையில் நிகழ்ந்திருக்கும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.
இந்த டிட்வா புயலின் நகர்வில் பல தடவைகள் எனக்கு அதிக அச்சம் இருந்தது. ஏனெனில் அதன் நகர்வு அத்தகையது.
கடந்த 24.11.2025 அன்று தீவிர தாழமுக்கமாக அதன் நகர்வு வேகம் மணிக்கு 9 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மணிக்கு 11 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் புயலாக மாறியபோது சிறிது நேரம் மணிக்கு 14 ஆக இருந்தது. பின்னர் மத்திய மலை நாட்டின் செல்வாக்கு காரணமாக மணிக்கு 9 கி.மீ. ஆக குறைந்தது. பின்னர் மணிக்கு 4 ஆகக் குறைந்தது.
உண்மையில் இந்த நேரத்தில் மிகப்பெரும் அச்சநிலை இருந்தது. ஏனெனில் ஒரு புயலின் நகர்வு வேகம் குறைந்தால் அது நிலைத்து நின்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் அது மத்திய மலை நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு பொலன்னறுவைக்கு வந்த பின் மீண்டும் வேகமெடுத்து மணிக்கு 14 கி.மீ. நகர்ந்தது. பின்னர் மீண்டும் திருகோணமலைக்கு வந்த மீளவும் வேகம் குறைவடைந்து மணிக்கு 8 கி.மீ. ஆகக் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அச்சநிலை ஏனெனில் ஏற்கனவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கனமழை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மீளவும் வேகமெடுத்து மணிக்கு 12 கி.மீ என்ற வேகத்தில் கடலுக்குள் சென்றது.
இந்த டிட்வா புயலின் இரண்டு விடயங்களுக்கு இலங்கையின் மத்திய மலைநாடு காரணமாயிருந்தது.
1. புயலின் நகர்வு வேகத்தையும் மையச் சுழற்சியின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது.
2. மிகக் கனமழை பொழியவும் காரணமாக இருந்தது.
எவ்வாறாயினும் இந்த டிட்வா புயல் இன்னும் ஒரு நாள் இலங்கையில் நிலைத்திருந்தாலும் இலங்கையின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக இருந்திருக்கும்.
----------------------------------------------------------------------------
இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே.
-----------------------------------------------------------------------------
இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது. முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி.
-----------------------------------------------------------------------------
ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது. ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இனனும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம்.
-----------------------------------------------------------------------------
உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்டங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும்.
திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம். குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும்.
இந்த மிகப்பெரிய அனர்த்தத்திலிருந்து இலங்கையர்கள் அனைவரும் மீண்டெழ வேண்டும். அந்த வல்லமையும் ஆற்றலும் அவர்களுக்கு நிறையவே உண்டு. இறைவனும் இலங்கையர்களோடு துணை நிற்பார்.
- நாகமுத்து பிரதீபராஜா -


29.11.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி

ஏற்கனவே குறிப்பிட்டபடி டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.

இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.

மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

29.11. 2025 சனிக்கிழமை மாலை 4.45 மணி


2025.11.29 සෙනසුරාදා පෙ.ව. 8.00

දැනටමත් සඳහන් කළ පරිදි, ටිට්වා සුළි කුණාටුව චුන්ඩිකුලම් හි කේන්ද්රගත වී මුහුද දෙසට ගමන් කරමින් සිටී. දැනට (පෙ.ව. 8.00) මධ්යයේ 30% ක් මුහුද දෙසට ගමන් කර ඇත.

අද දහවල් වන විට එය සම්පූර්ණයෙන්ම මුහුද දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්රදේශවල අද මධ්යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත. විශේෂයෙන් උතුරු පළාතේ බටහිර ප්රදේශවලට තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

උතුරු පළාතේ ජලාශවලට අද දිනයේදීත් ඉහළ ජල මට්ටමක් ලැබෙනු ඇත. එබැවින්, ප්රධාන භූමියේ පහත් බිම් ප්රදේශවල ජනතාව විමසිලිමත් වීම අවශ්ය වේ.

වයඹ පළාතට අද දින තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

මධ්යම සහ බටහිර පළාත්වල ප්රදේශ කිහිපයකට මධ්යස්ථ වැසි ලැබීමට ඉඩ ඇත.

අද දිවයිනේ සෙසු ප්රදේශවල කාලගුණය ක්රමයෙන් යහපත් වනු ඇත.

- නාගමුතු ප්රදීපරාජා - 

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...