SHARE

Tuesday, September 20, 2011

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம்,ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம், ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இப்பொன்னாளில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் நால்வரின் விடுதலைக்காக முழக்கமிடுவோம்! போராடுவோம்!

ஈழத்தில் சுரேஸ்,தமிழகத்தில் நெடுமாறன்,புலம்பெயர்ந்த நாடுகளில் உருத்திரகுமாரன் தலைமை ஒருசேர அரங்கேற்றும் இடைவழிச்சமரசத்தை எதிர்ப்போம்!

தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!


                         ராஜிவ் கொலை வழக்கு

ராஜிவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை ஏற்றுக் கொள்ள இந்திய ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவு தமிழ் மக்களின் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த முடிவானது, ஈழவிடுதலையை தொடர்ந்து ஆதரிக்கும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் எங்கும் தன்னியல்பான இயக்கங்கள் வெடித்து கிழம்பியுள்ளன.

செங்கொடி என்கிற செம்மலர் தீய்ந்து கரியாகிப்போனாள்!


இதன் பிரதி விம்பங்கள் புலம்பெயர் நாடுகளிலும் தெறிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தன்னியல்பான மக்கள் இயக்கங்களின் மத்தியில் பல்வேறு சமூக வர்க்கங்களும் தம் நலன் சார்ந்து, தம் நிலை சார்ந்து, தம் சொந்த முழக்கங்களை முன்வைத்து , தம் சொந்தக் குறிக்கோள்களை அடைய தலையீடு செய்து போராடி வருகின்றன.

இந்நிலையில் சர்வதேசிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் தமிழீழப் படைப்பிரிவினரான புதிய ஈழப் புரட்சியாளரின் நோக்கு நிலையை விளக்குவது இச்சிறு பிரசுரத்தின் நோக்கமாகும்.

ராஜிவ் படுகொலையானது புற நிலையில், 1987 ஜூலை மாதம் இலங்கை அரசை இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு அடிபணியச் செய்யும் பொருட்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அரசியல் எதிர் விளைவாகவும்; இவ் ஒப்பந்தத்தை அமுலாக்கவும், விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பொருட்டும் இலங்கையில் நிலை கொண்ட ராஜிவ் படை இழைத்த யுத்த குற்றங்களின் இராணுவ எதிர் விளைவாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

1947 இல் அரைக்காலனியப் போலிச் சுதந்திரம் கிடைத்த பின்னரும் இலங்கை நாடானது உலக வங்கியினதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்களைச் சார்ந்தே பிரதானமாக இயங்கி வந்தது.ஆனால் இக்காலத்தில் சர்வதேசிய சூழ்நிலையானது இரட்டைத் துருவ அமைப்பைக் கொண்டிருந்தது.

அதாவது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் பிரதானமாக முனைப்புற்றிருந்தது. இந்த அணிசேர்க்கையில் அரசியல் ரீதியாக இலங்கை, அமெரிக்க ஏகாதிபத்தியம் (மற்றும் பாக்கிஸ்தான்) சார்ந்தும்; இந்தியா அரசியல் ரீதியாக சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தும் இயங்கி வந்தன.

1971 இந்திய பாக்கிஸ்தான் போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டது.Voice of America வானொலி நிலையம் அமைக்க இலங்கை அனுமதித்தது. 70 களின் நடுப்பகுதியில் தென்னாசிய பிராந்திய நாடுகளில் இலங்கையே முதன் முதலாக திறந்த பொருளாதார உலக மயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தது.

இதன் விளைவாக அரைக்காலனிய இலங்கை நாடு ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் சந்தையாக மாறியது.

இந்தப் பின்னணியில் “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் தருணத்தில்”,அவசரகால நிலைமையில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியதற்கு அப்பால் இலங்கை அரசானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெளிவிவகாரக் கொள்கையிலும் இந்தியாவின் விரிவாதிக்கக் குடைக்கு வெளியே நின்ற ஒரு நாடாகவே இருந்தது.

இதனை சகித்துக் கொள்ளாத, இதனால் கசப்புணர்வு கொண்ட பஞ்ச சீல இந்திய ஆளும் கும்பல் இலங்கைக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அதட்டல்களும் மிரட்டல்களும் விட்டு தன்னுடைய விரிவாதிக்கக் குடைக்குள் வீழ்த்துவதற்கு போராடிவந்தது.

இதே நேரத்தில் 70 களில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருந்த சமரவாதத் தமிழ் தலைமையினர் இந்திய ஆளும் கும்பலோடும் தமிழக மாநில ஆளும் கும்பல்களுடனும் அடுத்த கட்ட அரசியல் ஸ்தாபன உறவுகளை ஸ்தாபித்திருந்தனர்.

இந்த வேளையில்தான் இலங்கையில் 1983 ஜூலை இனப்படுகொலை அரங்கேறியது. இதன் விளைவாக ஈழத்தமிழர்கள் உயிர்த்தஞ்சம் கோரி தமிழீழக் கடல் தொழிலாளர்கள், தமிழகக் கடல் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த வீரதீரச் செயல்களால் தமிழகத்துக்குள் அகதிகளாகக் குவிந்தனர். மறுபுறம் 70 களின் பிற்பகுதில் கெரில்லாப் போர்க்கட்டத்திலிருந்த ஆயுதமேந்திய தமிழீழப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்தது.

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் இப்புதிய இரு பரிணாமங்களையும் இந்திய அரசு தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்த முனைந்தது.

இதற்கமைய தனது அரசியல் வெளிவிவகார மற்றும் இராணுவக் கொள்கைகளையும் வரையறுத்துக் கொண்டது. இதற்குத் துணையாக, மேலும் இதற்குப் பக்கபலமாக இந்திய விரிவாதிக்கத்தின் ஆதரவாளர்களும் தமிழகத்தின் இனமானத் தமிழ் சமரசவாதிகளும்

“கொல்லாதே கொல்லாதே ஈழத்தமிழர்களைக் கொல்லாதே”


”இந்திய அரசே இந்திய அரசே ஈழத்தமிழர்களைக் காக்க இலங்கையில் இராணுவத் தலையீடு நடத்து”


என முழங்கி மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தி ஈழத்தமிழர்களை இந்திய விஸ்தரிப்புவாத அடிமைச் சங்கிலியால் கட்டிப்போட பாதையைச் செப்பனிட்டனர். இதே கடமையைத்தான் ஈழத்தமிழினத்தின் சமரசவாத தமிழர் கூட்டணி அமிர்தலிங்கம் கும்பலும் நிறைவேற்றப் பாடுபட்டது. இந்தப் புண்ணியவான்களின் பேருதவியுடன் `ஈழத்தமிழரின் பாதுகாவலன்` என்கிற கொடியேந்தி இலங்கையை தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்தும் உண்மை நோக்கத்தை மூடிமறைக்க ஒரு தார்மீக நியாயத்தை இந்தியா பெற்றுக் கொண்டது.

இது ஒரு பெரும் அரசியல் வெற்றியாக இருப்பினும் இதை மட்டும் கொண்டே இலங்கை அரசைப் பணியவைப்பது சாத்தியமாக இருக்கவில்லை.

இதற்காக இந்திய அரசு ஒரு சதித்தனமான இராணுவத்திட்டத்தை வகுத்தது

இத்திட்டம் இரு அம்சங்களைக் கொண்ட இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தது. அவ் அம்சங்கள் ஆவன;

1. ஈழப் போரளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான பயங்கரவாத படுகொலை நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலம் இலங்கை அரசைப் பணிய வைப்பது,


2. ஆயுதப் பயிற்சி என மோகம் காட்டி பயங்கரவாதப் படுகொலைப் பாதையில் வழிதிருப்புவதன் மூலம் தமிழீழத் தேசிய விடுதலைக்காக ஒரு மக்கள் ஜனநாயக இயக்கத்தை வளரவிடாமல் தடுப்பது,

இந்த இரு குறிக்கோள்களையும் நிறைவேற்றும் பொறுப்பை இந்திய ஆளும் வர்க்கங்களினதும் இந்திய மைய அரசினதும் சார்பில் இந்தியப் புலனாய்வுத்துறையான Reasarch And Analysis Wing (RAW ) இன் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் திறந்து விடப்பட்டு தமிழகத்தில் சட்டபூர்வமாகவும் பகிரங்கமாகவும் இயங்கி வந்த,இலங்கையில் தடைசெய்யப்பட்ட ''பயங்கரவாத இயக்கங்களை'' அணுகி இராணுவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப் பிரதேசத்தில் பிரதானமாகவும் தமிழ்நாட்டின் கும்பகோணம் மற்றும் பகுதியில் துணையாகவும் இராணுவப்பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு RAW உளவாளிகளால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான முகாம்களில் சிறைக்கைதிகளாக சுமார் இரண்டு வருடங்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈழப்போராளிகள் உடற்பயிற்சிக்கு மேல் எந்த இராணுவப் பயிற்சிகளையும் பெறவில்லை.( மேலதிக புள்ளிவிபரங்களுக்கு டக்ளஸ்சை அணுகவும்)


இவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஈழப் போராளிகளை பயன்படுத்தி 1985 நடுப்பகுதிகளில் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிராக RAW ஒரு படுகொலைத் தாக்குதலை ஏவியது. இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு, ஈழப் போராளிகளும் தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இந்த ஈனத்தனமான செயலை-பங்களாதேசத்தைப்போல் ஒரு `கேக் துண்டை` இலங்கையிலும் வெட்டி தங்கள் வாயில் வைக்குமென்ற மூடத்தனத்தின் விளைவாகச்- செய்து முடித்தனர். இந்த நடவடிக்கையானது அன்றிருந்த J.R. ஜெயவர்த்தனா அரசுக்கு ஒரு பெரும் நிர்ப்பந்தமாக அமைந்து இந்திய விரிவாதிக்கத்தின் காலில் இறுதியாக வீழ்த்தப்பட்டார்.

இலங்கை அரசை தனது காலில் வீழ்த்திய மறுகணமே ஈழப்போராளிகளின் மீது பாய்ந்தது இந்திய அரசு.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இலங்கை அரசோடு போராளிக் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்கு தான் மத்தியஸ்துவம் வகிக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்தது இந்திய அரசு. இதற்கமைய 1985 ஜூன் மாதத்தில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் போராளிக்குழுக்களுக்கும் இடையில் தனது மத்தியஸ்துவத்தில் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள வேண்டுமெனப் போராளிக் குழுக்களைப் பணித்தது. இதுவே இன்று திம்புப் பேச்சுவார்த்தை என அழைக்கப்படுவதும் அறியப்பட்டதுமான வரலாற்று முக்கியத்தும் மிக்க நிகழ்வாகும்..

திம்பு பேச்சுவார்த்தை

திம்பு பேச்சுவார்த்தையில் EPRLF, PLOT, TELO, TULF, LTTE ஆகிய அமைப்புக்கள் தமிழர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்தன. அவர்களுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணும் முகமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில், தான் மத்தியஸ்துவம் வகிக்கும் பாத்திரத்தை ஆற்றுவதாக இந்திய அரசு கூறியது. இவ்வாறு பேச்சுவார்த்தையில் தானும் ஒரு பங்காளி ஆனது. பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமானால் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது.

அக்கோட்பாடுகளும், கோரிக்கைகளும் பின்வருமாறு;

1. வடக்கு மாகாணம், கிழக்குமாகாணம் அடங்கிய நிலப்பரப்புக்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும்.


2. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்தவரும் தேசிய சுயநிர்ணய உரிமை உடையவர்களும் ஆவர்.


3. தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக சட்டரீதியாகவும் நடைமுறையிலும் அமுலாக்கப்படவேண்டும்.


4. வாக்குரிமை பறிக்கப்பட்ட அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் வாக்குரிமையும்,வாழ்விட உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நியாயமான ஜனநாயக ரீதியான அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளை (வரையறுத்து வகுத்தளித்து பேச்சுவார்த்தை மேசையில் வைத்தவர் திரு,வரதராசப்பெருமாள் அவர்கள்) இலங்கை அரசு ஏற்க மறுத்தது.குறிப்பாக தாயகம்,தேசியசுயநிர்ணய உரிமைக்கோட்பாடுகளை அடியோடு நிராகரித்தது.

இலங்கை அரசின் நிலையைப் போலவே இக்கோரிக்கைகளை ஏற்க இந்திய அரசும் மறுத்தது.இந்நிலையில் இலங்கை அரசுக்கும், ஈழத்தமிழ் தரப்புக்குமிடையில் மத்தியஸ்துவம் வகிப்பதாக கூறிவந்த இந்திய அரசு குத்துக்கரணம் அடித்து இலங்கை அரசுடன் இணைந்து கொண்டது. இவ்விணக்கத்தின் பயனாக இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் உருவானது. இவ்வொப்பந்தத்தின் மூலம் ஒருபுறம் இலங்கை அரசை தனது அரசியல் இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. மறுபுறம் ஈழத்தமிழரின் தேசிய சுயநிர்ணய உரிமைப்,போரை நசுக்க விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையைக் கட்டவிழ்த்து ஒரு காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை நடத்தியது.

*******************************
இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை நடத்திய யுத்தம் நவீன மனித நாகரீக வரலாறு இதுவரையிலும்(2011), காணாத அளவுக்கு கேடானதும் கொடியதும் சர்வதேச சட்ட விதிகளை மீறியதும் ஆகும்.

தமிழீழத் தாய்க்குலத்துக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்முறையை (கற்பழிப்பை) ,ஒரு போராயுதமாக இந்திய அரசு ஈழத்தில் பயன்படுத்தியது.

இது உலக யுத்த வரலாற்றில், அமெரிக்க வியட்நாமிய யுத்தத்திலும், இலங்கை விடுதலைப் புலிகள் யுத்ததிலும் கூட எந்தத் தரப்பாலும் பயன்படுத்தப்படாத படு கேடான மிக இழிவான மிலேச்சத்தனமான காட்டுமிராண்டி ஆயுதமாகும். இதை இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழின படுகொலை யுத்தத்தில் பிரதான ஆயுதமாக பயன்படுத்தியது.

(இதுபோன்ற எண்ணற்ற இந்திய ஆக்கிரமிப்பு யுத்தக்குற்ற தகவல்களும், ஆதாரங்களும் தனியாக இணைக்கப்படும்.இவ்விணைப்புக்களில் கூறப்படும் கருத்துக்கள், மதிப்பீடுகள் அவர்களுக்கு உரியவையாகும்.இந்திய ஆக்கிரமிப்புப்படையின் போர்க்குற்றங்களை தத்தம் நோக்கு நிலையில் ஆவணப்படுத்தியுள்ள எழுத்தாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் என்றும் எமது நன்றி. ENB)


1 2 3 4 5
*******************************

இந்திய இலங்கை ஒப்பந்தம், இலங்கை மீது தனது மேலாதிக்கத்தை நிறுவுவதன் மூலம் இந்திய பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மை உறுதி செய்யப்படுவதாக அமைந்ததால் இது அனைத்து ஏகாதிபத்திய வாதிகளினதும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தது, பெற்றிருக்கிறது!

இதனால் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நிகழ்த்திய போர்க்குற்ற அட்டூழியங்கள் இன்றுவரை உலக மக்களின் கண்களுக்குத் தெரியாமல் முற்றுமுழுதாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. உலகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு போர், அதன் அடிச்சுவடு கூடத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப்புப் போர்தான்.

அதுமட்டுமல்லாமல்  இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வடகிழக்கில் தமிழீழத்தில்விடுதலைப் புலிகளை வேட்டையாடி தமிழ்மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்க சிங்கள இராணுவம் முழுமையாக தென்னிலங்கையில் குவிக்கப்பட்டு JVP போராளிகள் மீதும் சிங்கள பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தது. இன்றுவரைக்கும் சரியான கணக்குத் தெரியாமல் இந் நரபலி வேட்டையில் கொன்றொழிக்கப்பட்டோர் ஒரு உத்தேசத்துக்கு சில லட்சம் பேர் என அறியப்படுகிறது. (சரியான புள்ளிவிபரம் ராஜபக்சேவுக்கு தெரிந்திருக்கக்கூடும், இவர்தான் அப்போது மனித உரிமைக்காக போராடினார்!) சிங்கள இராணுவம் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக இரவோடு இரவாக பகலோடு பகலாக சுற்றிவளைத்து சிங்கள இளைஞர்களைக் கூட்டம் கூட்டமாக கைது செய்து வதை முகாம்களில் சித்திரவதை செய்து கைகளைப் பின்னால் கட்டி இறப்பர் ரயர்களால் தீமூட்டிக் கொழுத்தியது. பாதி கருகிய உருக்குலைந்த சடலங்களை களனி ஆற்றில் தூக்கிவீசியது. ஒரு கட்டத்தில் சிங்களச் சிறுவர்கள் மனித எலும்புக் கூடுகளின் முறிவுகளைப் பற்றி மோதறைக் கடற்கரையில் பந்தடித்து விளையாடினார்கள்.

அப்போது கொழும்பை ஆண்ட இந்தியத் தூதுவராக இருந்த J.N.டிக்சிற் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்கள் மாத்தையாவையும் பிரபாகரனையும் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பேரறிவாளராகும். இந்த டிக்சிற் தான் அப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருந்தார். இக்கோர கொலைவெறித் தாண்டவத்தின் பின்னணியில் இருந்து அதை இயக்கிய அதிகாரி இவர்தான்.

எனவே தமிழீழத்தில் நடந்த படுகொலைக்கு மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த படுகொலைகளுக்கும் இலங்கை அரசுக்கு இணையாக இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு சிங்கள இளைஞர்களை இந்தியப் படை படுகொலை செய்தது இதுவல்ல முதல் தடவை 1972 இல் JVPஇன் ஆயுதமேந்திய கிளர்ச்சியையும் இந்தியப் படையே நசுக்கியது. அப்போது இலங்கை அரசிடம் ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியை நசுக்கக் கூடிய இராணுவமே இருக்கவில்லை. உள்ளூர் விவசாயிகளின் ஆயுதப்பாவனை அப்போதுதான் பறிக்கப்பட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ராஜீவ் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் இடம்பெற்ற அரசமரியாதை வைபவத்தில் கலந்து கொண்ட ஒரு சிங்களக் கடற்படைச் சிப்பாய் தன் துப்பாக்கியால் ஓங்கி ராஜீவின் பிடரியில் அறைந்தான்.

ஒரு குறியீடாக அமைந்த இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளும்--தமிழ்மக்களும், தென்னிலங்கையில் ஜே.வி.பியும்-- சிங்கள மக்களும் தனித்தனியான பாதையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த நாடுதழுவிய கிளர்ச்சிக்கு வித்திட்டனர். இதன் விளைவாக இலங்கை அரசு பொறிந்து விழும் நிலையேற்பட்டது.

அரசாங்கம் ஸ்தம்பித்துப் போனது. பெரும்பாலான மந்திரிகள் பிரேமதாசாவை விட்டுத் தப்பியோடி “பயங்கரத்துக்கு அஞ்சி” பதுங்கிவிட்டார்கள். ஆட்டங்கண்டுவிட்ட அரசு முறையைப் பாதுகாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றக் கோரும் இலங்கை மக்களின் தேசியப் புரட்சிக்கு பிரேமதாசா அடிபணிய நேரிட்டது. விடுதலைப் புலிகளின் உதவித் தலைவர் மாத்தையாவுடனான பேச்சுவார்த்தையில் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டு யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியா இலங்கையில் “கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு போரிட்ட காரணத்தால்” மண்கவ்வி மானமிழந்து கறைபடிந்த கையோடு தன் சொந்த நாடு திரும்பியது.கருணாநிதி போன்ற அயோக்கியன் கூட தன் அரசியல் வாழ்வுக்கு அஞ்சி இப்படையை வரவேற்கச்செல்லவோ வாழ்த்தவோ இல்லை!

இவ்வாறு ராஜீவ் படை கட்டவிழ்த்த அரச பயங்கரவாத போர்க்குற்றங்களுக்கு பழிதீர்க்கும் பதில் பயங்கரவாத நடவடிக்கையாகத்தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமிழகம் ஒரு பலமான பின்புலமாக இருந்த நேரத்தில், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை நசுக்கும் பொருட்டும், இலங்கை நாட்டை தனது மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் பொருட்டும் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்ட ஒரு அண்டைநாட்டுடனான முரண்பாட்டை ஈழதேசிய விடுதலை இயக்கம் இவ்வாறு அணுக முடியுமா? இந்த வழிமுறை சரியானதா? என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். உணமையில் விவாதிக்கவும் வேண்டும். விவாதங்களும் வேண்டும்.

ஆனால் இது ராஜீவ் காந்திக்கு தண்டனை வழங்குவதற்கான நியாயங்களை இல்லாமல் செய்துவிடாது.

மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது 1987 இல். ராஜீவ் கொலை நடைபெற்றது 1990 இல். முத்தமிழரின்தூக்குத்தண்டனை விவகாரம் எழுந்திருப்பது 2011 பிற்பகுதியில்.எனவே முத்தமிழர் தூக்குத் தண்டனை விவகாரத்தில் 1987 இல் நிலைமைகளோடு மட்டுமல்ல, 1990 இற்குப் பிந்திய 21 ஆண்டுகால உலக உள்நாட்டு நிலைமைகளிலுள்ள மாறுதல்களுடனும் ஒப்பிட்டு நோக்க வேண்டும்

* ஆப்கானிஸ்தானில் தளமிட்டு இயங்கிய இஸ்லாமிய அல்கெய்டா அமைப்பைச் சார்ந்த சவுதிஅரேபிய உறுப்பினர்கள் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி சுமார் மூவாயிரம் அமெரிக்கர்களை படுகொலை செய்தனர்.இதற்காக முழு ஆப்கான் நாட்டையுமே அமெரிக்கா இன்று ஆக்கிரமித்து இருக்கிறது. பாக்கிஸ்தானுக்குள் அத்துமீறிப் புகுந்து ஒசாமா பின்லாடனை படுகொலை செய்தது.

* குவைத்தை ஆக்கிரமித்தமைக்காக முதலாவதும், உள்நாட்டுமக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கமை, குர்திக்ஷ் மக்கள் மீது விசவாயு அடித்தமை ஆகிய குற்றங்களுக்காக   இரண்டாவது தடவையும் ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர்கள் தொடுக்கப்பட்டன. ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் அவர்கள், இறுதிப்பிராத்தனை முடிவதற்கு முன்னமே கோரத்தனமாக தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டார்.

* ஆசிய சமுதாய வளர்ச்சிக்கட்டதையும், ஆபிரிக்க சமூக வளர்ச்சிக்கட்டத்தையும் ஒப்புநோக்கி, அரசு முறை வடிவத்தை நோக்கினால் நேரு குடும்பத்தின் பாராளுமன்ற பாசிசம் கடாபி குடும்பத்தின் ராணுவ சர்வாதிகாரத்துக்கு சற்றும் சளைத்தது அல்ல.ஆனால் மனிதகுலத்தின் மனச்சாட்சியையே உலுக்கக் கூடிய வகையில் “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் லிபிய நாடு மறைமுகமாக ஆக்கிரமிக்கப்பட்டு நவீன காலனிய NTC பொம்மை அரசு நிறுவப்பட்டுள்ளது.லிபியத் தளபதி கடாபியை படுகொலை செய்ய எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தும் கூட நேட்டோவும்,Interpol உம் அவரை வேட்டையாட கொலை வெறி கொண்டு லிபியா எங்கும் அலைகிறது.

* இவற்றுக்கெல்லாம் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அனுசரனையில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை ஒரு அங்குலமும் முன்னேறவிடாமல் தடுத்தது இந்திய அரசு.இறுதியாக இலங்கை அரசு ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும், பேச்சுவார்த்தையிலிருந்தும் விலகி இனப்படுகொலை யுத்தத்தைக் கட்டவிழ்த்தது.இந்த யுத்தத்துக்கு இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதரவு வழங்கிய இந்திய விஸ்தரிப்புவாத அரசு சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து நேரடியாக யுத்ததில் பங்கேற்று விச வாயுக்களை வீசி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நிர்மூலமாக்கி சிங்கள படைகளின் முன்னேற்றத்துக்குவழியமைத்தது. இறுதியாக யுத்தத்தில் சிங்களம் வெற்றிகொள்வதற்கும் விடுதலைப் புலிகள் தலைமை முற்றாக அழித்தொழிக்கப்படுவதற்கும் காரணகர்த்தாவாக அமைந்தது.இந்த ஈழப்போரில் இறுதிச் சில நாட்களில் மட்டும் எழுபதினாயிரம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த இரத்த வரலாற்றுக்கும் இந்திய அரசு பிரதான பொறுப்பாளியாக இருக்கிறது.

சதாம் குவைத்தை ஆக்கிரமித்து குர்க்ஷித் மக்கள் மீது விசவாயுவை அடித்தது, பின்லாடன் இரட்டைக்கோபுரத்தை தாக்கியழித்தது, கடாபி உள்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்தது இதற்காக எல்லாம் அவர்கள் கொலை செய்யப்படுவது நியாயமென்றால் இவை அனைத்தையும் இலங்கை நாட்டின் மீது மூன்று தடவை மீண்டும் மீண்டும் பிரயோகித்த இந்திய அரசை ஈழத்தமிழ் மக்கள் தண்டிப்பது எந்த வகையில் குற்றமாகும்.

ராஜீவ் காந்தியை தண்டிப்பதற்கு ஈழத்தமிழர்களுக்குள்ள அரசியல் உரிமையை மறுப்பது எந்த வகையில் நியாயமானதாகும், ஜனநாயகமானதாகும்?.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதியானது நியாயமானது. இதற்கு அஞ்சி நாம் மரண தண்டனைக்குள்ளும் மனிதாபிமானத்துக்குள்ளும்,மனித உரிமைக்குள்ளும் முக்காடுபோட்டு மறைந்திருந்து முனகத்தேவை இல்லை, அதற்கு நாம் தயாராக இல்லை.

எனவே ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும்,இந்திய விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்து, ஈழத்தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்குமான ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக நாம் ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்தின் மீது இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தலையீடு செய்வதற்கும், விடுதலைப்புலி இயக்கத்துக்கு தடை விதித்திருப்பதற்கும், ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி ஈழத்தமிழின விடுதலைப்போரை தொடர்ந்து நசுக்கி வருவதற்கும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து போராடுவோம் எனப் பிரகடனம் செய்கிறோம்.

முத்தமிழர் உயிர்மீட்புப் போராட்டம்

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனைக்குக் காத்திருக்கும் முத்தமிழ் உயிர்கள் தொடர்பான இக்குறிப்பான பிரச்சனையில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்குரியவை.

1. ராஜீவ் கொலையில் காங்கிரசின் ஒரு பகுதியினரின் பங்கு.

2. ராஜீவ் கொலையில் ராஜீவ் குடுப்பத்தின் பங்கு

3. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் யார் என்ற கேள்வி.கே.பி.குறித்த சர்ச்சைகள்.

4. இவ்வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டமை.

5. வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்பட்டமை.

6. இம்மூவரும் ஏற்கனவே 21 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்து முடித்திருப்பது

7. இம்மரண தண்டனை சட்டவிரோதமானதென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது.

இக்காரணங்களால் முத்தமிழர்களின் கருணை மனுவை நிராகரித்திருப்பதும் தொடர்ந்து சிறை வைத்திருப்பதும் சட்டவிரோதமானதும், அநீதியானதும் சட்டத்தின் ஆட்சியின் வரம்புகளுக்கு உட்பட்டே கூட ஜனநாயக விரோதமானதாகும்.

எனவே முத்தமுழர் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டு உடனடியாக அவர்கள் மூவரும், நளினியும் விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென அறைகூவுகின்றோம்.இக்கொடுமையை எதிர்த்து போரிடும் உலகத்தொழிலாளரினதும், உலகத் தமிழ்மக்களதும் ஜனநாயக இயக்கத்தில் பின்வரும் சொந்த முழக்கங்களுடன் நாமும் பங்குபெறுகின்றோம்.

* இந்திய அரசே ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!


* போர்க்குற்றவாளி ராஜபக்க்ஷவை சர்வதேச அரங்குகளில் பாதுகாக்காதே!


* இலங்கை அரசு தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்காதே!

* இந்திய விஸ்தரிப்புவாத ஆதரவு பொம்மைத் தமிழ் குழுக்களை உருவாக்கி அவர்களே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என பிரகடனம் செய்து மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டை மாசுபடுத்தாதே!


* இலங்கையில் மூன்று தடவைகள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று தண்டனை வழங்கும் ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை அங்கீகரி!


* இலங்கை மக்களுக்கு இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு நக்ஷ்ட ஈடு வழங்கு!


* பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய முத்தமிழ் உயிர்கள் மீதான மரண தண்டனையை ரத்துச் செய்!


* நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Sunday, September 18, 2011

குஜராத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்களை நரபலி வேட்டையாடிய நரேந்திர மோடியின் ஏமாற்றுக்கு தாமரைச் செல்வி ஜெயலலிதா மலராதனை!

மாநில அரசியலுக்கு இந்துமதப் பயங்கரவாதம்,

கலவரம்!

தேசிய அரசியலுக்கு மத நல்லிணக்கவாதம்,

உண்ணாவிரதம்!!

``இந்துக்கள் முஸ்லீம்களுக்கு பாடம் படிப்பிக்கட்டும்``

குஜராத் கலவரத் தலைவர் நரேந்திர மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வரும் உண்ணாவிரதத்துக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை, செப்டம்பர் 17, 2011, 12:38

இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு முதல்வர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதோடு தனது கட்சியின் சார்பில் எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோரை உண்ணாவிரதத்துக்கு அனுப்பி வைத்தார்.

இன்று காலை உண்ணாவிரத மேடைக்குச் சென்ற தம்பிதுரை, ஜெயலலிதாவின் வாழ்த்துக் கடிதத்தை நரேந்திர மோடியிடம் அளித்தார். பின்னர் தம்பிதுரையும், மைத்ரேயனும் உண்ணாவிரத மேடையில் அமர்ந்தனர்.

பின்னர் உரையாற்றிய தம்பிதுரை, குஜராத்- தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையேயும் வர்த்தகத் தொடர்பு நெடுநாட்களாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 3ம் முறையாக புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வரானபோது, அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனால் புரட்சித் தலைவி எங்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வரச் சொல்லியிருந்தார். மோடிக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மோடிக்கு பதில் மரியாதை செய்வதற்காகவே புரட்சித் தலைவி எங்களை இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தமிழகத்தில் முன்னர் பதவியில் இருந்த திமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தான் காரணம். இவர்கள் செய்த மிகப்பெரும் ஊழலால் உலகமே நம்மை ஏளனமாகப் பார்க்கிறது.

அமெரிக்கா கூட மோடியைப் பாராட்டுகிறது என்பது மாநிலத்தில் அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களும் அவரது நிர்வாகத் திறனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை. அவரின் முயற்சி வெற்றிபெற தமிழக முதல்வரின் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம் என்றார் தம்பிதுரை. பின்னர் மைத்ரேயனும் பேசினா்.
===================================

குஜராத்தில் மோடியின், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நரபலி வேட்டை


“இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்  சன்சீவ் பட்.

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.
ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.
குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”
(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.
ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.
நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

தகவல்: வினவு, April 26, 2011

Saturday, September 17, 2011

லிபியாவின் எண்ணெய் குடிக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் ஜனநாயகம்!


 
 
 
 
The Scramble for Access to Libya’s Oil Wealth Begins

By CLIFFORD KRAUSS  Published: August 22, 2011 (New York Times)

HOUSTON — The fighting is not yet over in Tripoli, but the scramble to secure access to Libya’s oil wealth has already begun.
Before the rebellion broke out in February, Libya exported 1.3 million barrels of oil a day. While that is less than 2 percent of world supplies, only a few other countries can supply equivalent grades of the sweet crude oil that many refineries around the world depend on. The resumption of Libyan production would help drive down oil prices in Europe, and indirectly, gasoline prices on the East Coast of the United States.

Western nations — especially the NATO countries that provided crucial air support to the rebels — want to make sure their companies are in prime position to pump the Libyan crude.

Foreign Minister Franco Frattini of Italy said on state television on Monday that the Italian oil company Eni “will have a No. 1 role in the future” in the North African country. Mr. Frattini even reported that Eni technicians were already on their way to eastern Libya to restart production. (Eni quickly denied that it had sent any personnel to the still-unsettled region, which is Italy’s largest source of imported oil.)

Libyan production has been largely shut down during the long conflict between rebel forces and troops loyal to Libya’s leader, Col. Muammar el-Qaddafi.

Eni, with BP of Britain, Total of France, Repsol YPF of Spain and OMV of Austria, were all big producers in Libya before the fighting broke out, and they stand to gain the most once the conflict ends. American companies like Hess, ConocoPhillips and Marathon also made deals with the Qaddafi regime, although the United States relies on Libya for less than 1 percent of its imports.

But it is unclear whether a rebel government would honor the contracts struck by the Qaddafi regime or what approach it would take in negotiating new production-sharing agreements with companies willing to invest in established oil fields and explore for new ones.

Even before taking power, the rebels suggested that they would remember their friends and foes and negotiate deals accordingly.

“We don’t have a problem with Western countries like Italians, French and U.K. companies,” Abdeljalil Mayouf, a spokesman for the Libyan rebel oil company Agoco, was quoted by Reuters as saying. “But we may have some political issues with Russia, China and Brazil.”

Russia, China and Brazil did not back strong sanctions on the Qaddafi regime, and they generally supported a negotiated end to the uprising. All three countries have large oil companies that are seeking deals in Africa.

The European benchmark price for oil fell moderately on Monday on speculation that Libyan oil production would quickly begin rising again. Brent crude oil prices initially dropped more than 3 percent, but ended New York trading basically flat at $108.42. The American benchmark crude, which is less sensitive to events in the Middle East, rose $2.01, to $84.42.

Colonel Qaddafi proved to be a problematic partner for international oil companies, frequently raising fees and taxes and making other demands. A new government with close ties to NATO may be an easier partner for Western nations to deal with. Some experts say that given a free hand, oil companies could find considerably more oil in Libya than they were able to locate under the restrictions placed by the Qaddafi government.

Oil analysts said it was likely that oil companies, particularly Total and Eni, would compete fiercely for contracts on the best oil properties, with their respective governments lobbying on their behalf. But first the rebels will have to consolidate control over the country.

“If you don’t have a stable security environment, who will be able to put their workers back in the country?” said Helima Croft, senior geopolitical strategist at Barclays Capital.

The civil war forced major oil companies to withdraw their personnel, and production plummeted over the last several months to a minuscule 60,000 barrels a day, according to the International Energy Agency. That would account for roughly 20 percent of the country’s normal domestic needs. The rebels were able to export a modest amount of crude that was stored at ports and sell it for cash on the international markets through Qatar.

Oil experts caution that it could take as much as a year for Libya to make repairs and get its oil fields back to full speed, although some exports may resume within a couple of months.

Since oil is far and away Libya’s most important economic resource, any new government would be obliged to make oil production a high priority. That would mean establishing security over major fields, pipelines, refineries and ports. The government would also need to quickly establish relationships with foreign oil companies, some of which consulted with both the rebels and Colonel Qadaffi through the conflict to hedge their bets.

Most oil companies involved in Libya declined to comment on Monday or said they would wait to see how the security situation evolved before sending their personnel into the country.

“Clearly we are monitoring the situation like everyone,” said Jon Pepper, a Hess vice president. “Obviously the situation has to stabilize there before people start thinking about resuming production.”

Italy in recent years has relied on Libya for more than 20 percent of its oil imports. France, Switzerland, Ireland and Austria all depended on Libya for more than 15 percent of their imports before the fighting began.

Libya’s importance to France was underscored on Monday when President Nicolas Sarkozy invited the head of the rebels’ national transitional council, Mustafa Abdel-Jalil, to Paris for consultations.

Even though the United States relies very little on Libya for imports, the reduction of high-quality crude on world markets has pushed up oil and gasoline prices for Americans as well.

Oil analysts say that most reports from the oil service companies, which continued to pay their Libyan crews through the war, indicate that there has been relatively little damage to most oil facilities. That suggests that production could begin to increase in a matter of weeks.

But the resumption of large-scale exports will depend on how quickly repairs can be made on the Ras Lanuf, Melitah and Es Sider oil export terminals, and how well a new government can secure fields and pipelines in areas that traditionally supported the old regime.

Rushed closings of wells when fighting spread in February, along with the lack of maintenance over the last several months, may mean that months of repairs will be needed, particularly in older, more depleted fields.

The experiences of other countries in the region offer reasons for caution. Political turmoil in Iran has reduced production for decades, oil analysts note, and it took eight years for Iraqi oil production to recover after the American-led invasion that toppled Saddam Hussein.

Eni’s chairman, Giuseppe Recchi, recently told analysts that it would probably take a year to return Libya to normal export levels. On Monday, he denied that his company would immediately send back personnel, but he told reporters that he expected the new Libyan government to respect his company’s previous contracts.

Elisabetta Povoledo contributed reporting from Rome. (New York Times)

Wednesday, September 14, 2011

பாபர் மசூதியை இடித்த இந்திய அரசால் ஊட்டிவளர்க்கப்படும் சிங்கள இனவெறிப்பாசிச சீறீலங்கா அரசு, ஈழமுஸ்லீம்களின் தொழுகைத் தலங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகிறது!


'அநுராதபுரத்தில் தர்கா இடிப்பு'


பி.பி.சி.தமிழோசை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2011 - 15:36 ஜிஎம்டி

இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இடித்து தரைமட்டமாக்கியதாக சில ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.

இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அந்தச் செய்திகள் கூறின.

இந்தத் தர்கா , பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய அனுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார்.

அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்படியான சம்பவம் ஒன்றும் அநுராதபுரத்தில் நடக்கவில்லை என்று இலங்கை பொலிஸ் தரப்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார்.

இது குறித்து இணையத்தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், அப்படி இலங்கையில் உள்ள எந்த ஊடகமும் தகவல் வெளியிடவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகங்களில் அப்படி எதுவும் வந்திருந்தால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
-------------
செய்தி 2
அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளி வாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர்.

துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.சிங்கள ராவய தேசிய இயக்கம், பௌத்த பாதுகாப்புப் பேரவை, தம்மவிஜய மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களான கடும்போக்கு இனவாதிகள் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்டு பள்ளிவாசலை இடித்தழித்துள்ளனர்.

பள்ளிவாசல் இடிக்கப்படும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிசார் இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறுபான்மை மக்களின் வணக்கத்தலங்கள் பேரினவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அதே நேரம், அரசாங்கமும் இவ்விடயத்தில் பராமுகமாக இருக்கின்றதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஈழத்தமிழரின் தரித்திரக் கோலமும், இந்தியா காட்டும் விசித்திர ஜாலமும்!

ஈழத்தமிழரின் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசு!


பக்சபாசிஸ்டுக்களின் தமிழ்த்தேசிய இனப் படுகொலையை மூடிமறைக்க,

இந்துத்துவா நிறுவனத்தை ஏவிவிட்டிருக்கிறது இந்திய அரசு!

காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே!

ஈழத்தமிழரின் சுயநிர்ணய இயக்கத்தின் எதிரிகளே!

Tuesday, September 13, 2011

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் முத்தமிழர் உயிர் காப்பு இயக்கம்

தியாகிகள் தினம்-2011
செப்டெம்பர்-12

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் கொள்கை விளக்கவுரை 

இப்பதிவில் இணைந்துவரும் இதர www.youtube.com இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சிறப்புப் பேச்சாளர் மனோகரனின் பிரச்சார கிளர்ச்சி உரை (பகுதி1)

இப்பதிவில் இணைந்துவரும் இதர www.youtube.com இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சிறப்புப் பேச்சாளர் மனோகரனின் பிரச்சார கிளர்ச்சி உரை (பகுதி2)
 

இப்பதிவில் இணைந்துவரும் இதர www.youtube.com இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

நன்றி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு

AI New report slams woeful Sri Lanka inquiry

“The inquiry is flawed at every level: in mandate, composition and practice”

The Sri Lankan government’s inquiry into the country’s civil war is fundamentally flawed and provides no accountability for atrocities, according to a new Amnesty International report.


The report, When will they get justice? exposes the shortcomings of the inquiry, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC). These include its failure to properly pursue allegations of war crimes and crimes against humanity levelled against both government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
Sam Zarifi, Amnesty International’s Asia Pacific Director, said:

“The Sri Lankan government has, for almost two years, used the LLRC as its trump card in lobbying against an independent international investigation. Officials described it as a credible accountability mechanism, able to deliver justice and promote reconciliation

“In reality it's flawed at every level: in mandate, composition and practice.”

The LLRC was established by Sri Lankan President Mahinda Rajapaksa in May 2010, after he made a joint commitment to an accountability process in Sri Lanka alongside UN Secretary General Ban Ki-moon.

The commission’s mandate falls far short of international standards for such inquiries.

Amnesty International’s analysis of the LLRC’s publicly available transcripts found it failed to appropriately investigate credible allegations of systematic violations by both sides to the conflict, including illegal killings and enforced disappearances, widespread shelling of civilian targets such as hospitals, and use of civilians as shields.

Its commissioners include former Sri Lankan government officials who have publicly defended the Sri Lankan government against allegations of war crimes.

During the LLRC’s first field session, the panel’s chairman made no mention of human rights abuses, telling witnesses to “forget the past”. Instead, he asked them to tell the Commission about any problems accessing education, medical care and housing. Sam Zarifi, said:

“Analysis of LLRC sessions exposes a catalogue of missed opportunities, negligence and political bias.

“The LLRC’s panel of Commissioners ignored crucial questions about the role of government forces in war crimes and crimes against humanity.”

The LLRC published an interim report in September 2010, which did not contain any recommendations aimed at achieving accountability for past human rights abuses. It will submit its final report in November 2011.

For more than two decades, numerous national commissions of inquiry have failed to effectively deliver justice to victims of human rights abuses in Sri Lanka. Sam Zarifi, said:

“The LLRC is the latest in a long line of failed domestic inquiries. Impunity has been the rule rather than the exception, now exacerbated by a post-conflict triumphalism that rejects all responsibility for abuses carried out by government forces.”

A UN Panel of Experts’ report on Sri Lanka submitted to Ban Ki-moon on 12 April 2011 found credible allegations of war crimes and crimes against humanity committed by both government forces and the LTTE, and recommended establishing an “independent international mechanism” to investigate allegations.

Amnesty International called on the UN Security Council and Human Rights Council to support this call in order to pursue justice for victims and their families. Sam Zarifi, concluded:

“The international community must not be deceived into viewing the LLRC as a credible replacement for an international inquiry – this would allow war crimes and crimes against humanity to go unchallenged.

“Only an international, independent investigation can deliver justice to the thousands of victims of Sri Lanka’s brutal conflict. Only then will the voices of victims really be heard. And only then can the process of post-conflict reconciliation begin to move forward.”

Read the full report - When will they get Justice? Failures of Sri Lanka's lessions learnt and reconciliation commission (pdf)
http://www.amnesty.org.uk/uploads/documents/doc_21824.pdf

விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்

நீதி செலுத்துங்கள்

* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.


(திருக்குர்ஆன் 4:135, 5)


விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்


நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கும் அதே நேரம் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குமென அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (08-09-2011) சபையில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதிலுள்ள கெடுபிடிகளை நீடிப்பதற்கான மறைமுக செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் இங்கு கூறுகின்றன.

எனினும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாலும் அதேநேரம் யுத்தத்தின் பின்னரான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வினை எட்டுவதற்கும் இந்த விதிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன். நீதி அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பில் இதனை தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.

அவசரகாலச் சட்டமானது கடந்த 30 வருடங்களாக அமுலில் இருந்து வந்தது. இந்த சட்டம் அமுலில் இருந்தமையால் சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் பொலிஸார் பலர் இருந்தனர்.

தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கென அவசர காலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெருமளவான புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்த இவர்களுக்கு தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென புனர்வாழ்வு ஆணையாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் இரத்துச் செய்யப்பட வேண்டும். ஆனாலும் புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆதலால் புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் இருத்தல் அவசியமாகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்ட விதிகள் தொடர்ந்தும் பேணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேணுவதற்கும் மேற்படி அவசரகாலச் சட்ட விதிகள் அவசியமாக அமைகின்றமை இவ்வாறான காரணங்களையிட்டே நீக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
==========================================
பெருமதிப்பிற்குரிய நீதி அமைச்சர் அவர்களே!
``அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கென அவசர காலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.``

தங்கள் மாபெரும் ஜனநாயக நாடு 30 வருடங்களாக சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத வழி நடந்துவந்துள்ளது என்று 30 ஆண்டுகளுக்கு பின்னால் கண்டுபிடித்துள்ளீர்கள்!
இருக்கட்டும், காலந்தாழ்த்திய நீதிக்கு நன்றி!

ஆனால் அவசரகாலச்சட்டமே நீக்கப்படுகிறதென்றால் அதன்மீது தொடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தானே நீக்கப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின்
விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் ஏன் இருக்கின்றன?
எப்படி இருக்கமுடியும்?

சட்டத்தை நீக்குகிறபோது, அச்சட்டம் இழைத்த குற்றத்தையும் கூடவே நீக்குவதுதானே நீதி!

தாங்கள் குற்றத்தை தொடர்ந்து கொண்டு சட்டத்தை நீக்கியதாக    ஆடுகிற நாடகம் அநீதி!!

முற்போக்கு உணர்வுள்ள மக்கள் திரளே,
மீண்டும் பாருங்கள் வர்க்க சமுதாயத்தில்,எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. என்கிற பொது நீதிகள், பொது மறைகள் எவ்வாறு புறந்தள்ளப்பட்டு செல்லாக்காசாகி விடுகின்றன என்று!

Monday, September 12, 2011

ராஜீவ் கொலை சர்ச்சைகள்

தேசத்தின் குரல்

“ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துர்ப்பாக்கியம், அந்தத் தவறுக்கு வருந்துகிறோம்”

அன்ரன் பாலசிங்கம் ஆண்டு 2006

World's largest economies are close to grinding to a halt

UK economy 'is grinding to a halt' as world runs out of options


THE world's largest economies are close to grinding to a halt, with the UK facing near stagnation, according to an influential global economic think tank.

The Organisation for Economic Co-operation and Development (OECD) forecast that economic growth in the UK would fall to 0.3 per cent by the end of the year, a severe drop from the 2.5 per cent recorded in the third quarter of 2010.

The OECD blamed the slowdown on the uncertainty caused by the eurozone debt crisis and the debate in the US over fiscal policy.

It also cited the dwindling number of options open to governments to boost GDP growth as an example of factors that were driving down business and consumer confidence.

The OECD suggested its projections could be on the optimistic side, and warned that the UK economy could even contract by as much as 1 per cent.

The organisation's "interim assessment", published yesterday, forecast that the G7, the seven largest global economies, would expand by only 0.2 per cent in the final three months of this year.

According to its report, Germany could be the worst affected economy, contracting by 1.4 per cent in the last quarter.

If the OECD's analysis proves to be correct, then the UK is on course to experience a steep decline in growth by the end of the year. It would have fallen from 2.5 per cent in the third quarter of 2010 to 0.7 per cent in the second quarter of 2011, 0.4 per cent in the third quarter and 0.3 per cent in the last three months of this year.

The figures were released on the same day that the Bank of England's monetary policy committee (MPC) again held interest rates at their record low of 0.5 per cent. The MPC also held off from printing more money to stimulate the economy through "quantitative easing".

Shadow chancellor Ed Balls renewed his call for the government to ease up on austerity measures in the hope of bolstering demand, and said Chancellor George Osborne should use this weekend's meeting of G7 finance ministers in France to seek agreement on a global plan for growth.

Mr Osborne disputed the idea that the slowdown had been caused by his government's deficit reduction programme. He said that countries throughout the world were being affected by factors beyond Britain's control, such as high oil prices, the sovereign debt crisis in the eurozone and concerns about growth in the US.

"The forecasts we got from the OECD today show that this is a problem for many advanced economies," Mr Osborne said. "There was a revision down in their forecast for growth for virtually every developed economy.

"Actually, the real issue here is the long-term one, which is the big overhang of public and private debt from a decade-long boom that went unchecked.

"Unfortunately, the recovery from this is slower and takes longer than recoveries from previous recessions."

He added: "I think Britain has put in place the right policy mix."

The OECD interim economic assessment is designed to check if projections made in its last economic forecast are on track. In May, the body downgraded its estimate for UK GDP growth to 1.4 per cent for 2011 and 1.5 per cent for 2012.

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...