SHARE
Wednesday, September 17, 2014
Tuesday, September 16, 2014
சீனத் திருத்தல்வாதிகளின் தலைவனே ஈழ மண்ணில் கால் வையாதே!
The northern insurgency in Sri Lanka made Sri Lanka rely heavily on Chinese weaponry, especially guns and endless supplies of ammunition, artillery guns, shells, naval craft and fighter jets to squash the rebels when Western nations were reluctant to come forward with help. Credit lines were opened so that we could get supplies from the People’s Liberation Army ‘on tick’.
From Editorial Sunday Times LK: How indebted is Sri Lanka to China?
Monday, September 15, 2014
புதிய ஈழம்: A Marxist Case for an Independent Scotland
புதிய ஈழம்: A Marxist Case for an Independent Scotland: A Marxist Case for an Independent Scotland Introduction Marxists have an ambivalent attitude towards the national question. On the...
Sunday, September 14, 2014
Friday, September 12, 2014
செந்தோழர்கள் அப்பு பாலன் சிவப்பு அஞ்சலிக் காட்சிகள்
செப்டம்பர் – 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர்கள் அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!
நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் கழகம் கடைப்பிடித்து வருகிறது.
இவ்வாண்டு,
மோடி அரசே,
நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!
ஜெயா அரசே,
மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!
என்கிற பிரதான முழக்கங்களின் அடிப்படையில், ஜனநாயக விடுதலைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.பொதுக்கூட்டம்,சுவரொட்டிப் பிரச்சாரம், இணைய சமூகப் பிரச்சாரம், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அப்பு பாலன் சிலை நோக்கி அணிவகுத்துச் சென்று செங்கொடியேற்றி,செம்மலர் தூவி,சிவப்பு அஞ்சலி செலுத்தவும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
ஆனால் `அடிமைப் பெண்` ஜெயா அரசு,அப்பு பாலன் சிலை அரங்கில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தது. இத்தடைகளுக்கு மத்தியில், நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு அப்பு பாலன் சிலை அரங்கில் சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்புரட்சி நிகழ்வுகளின் சில காட்சிப்படங்கள்.
![]() |
பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து சிவப்பு அஞ்சலிக்கு அறைகூவிய கழகச் சுவரொட்டி |
![]() |
சிவப்பு அஞ்சலி ஊர்வலத்தின் முன்னிலைப் பதாகை |
![]() |
ஊர்வலத்தில் அணிவகுத்த மக்கள் மாதர்கள் |
![]() |
செம்மலர் தூவல்,செங்கொடி ஏற்றல், சிவப்பு அஞ்சலி! |
Thursday, September 11, 2014
இருமொழி சட்டக் கல்வி இறுதிப் பரீட்சை கோரி சட்ட மாணவர் இயக்கம் போராட்டம்!
சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையை இரு மொழிகளிலும் நடத்துமாறு ஆர்ப்பாட்டம்
புதன்கிழமை, 10 செப்டெம்பர் 2014 02:00 0 COMMENTS
(படங்கள்: சமந்த பெரேரா)
சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் நடத்தவேண்டும் என்று அகில இலங்கை சட்ட மாணவர் இயக்கம் கோரிக்கை விடுத்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் இறுதி பரீட்சை உள்ளிட்ட மூன்று பரீட்சைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும்.
எனினும், இறுதி பரீட்சையை ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தவேண்டும் என்று கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி சபையினால் ஆலோசனையொன்று அண்மையில் முன்வைக்கப்பட்டது.
![]() |
சட்டக்கல்வியில் மொழி உரிமையை உறுதிப்படுத்து |
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுதான் அரசாங்கத்தின் இருமொழிக்கொள்கை அமுலாக்கலா? என்றும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு முயன்றபோதிலும் டெலிகொம் நிறுவனத்துக்கு முன்பாக பொலிஸார், வீதி தடையை ஏற்படுத்தி பேரணியை தடுத்துநிறுத்தினர்.
சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை 35 வயதுக்கு மேல் இணைந்துகொள்ளவேண்டாம் என்று அண்மையில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன்
அந்த யோசனை வாபஸ் பெற்றுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: Tamil Mirror
வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் வாகனக் கொள்வனவுச் செலவு 50 மில்லியன் ரூபாய்!
சி.வி.க்கு வாகனம் கையளிப்பு
செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 12:24 0 COMMENTS
-பொ.சோபிகா
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, செவ்வாய்க்கிழமை (09) வழங்கினார்.
வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5 ஆம்
திகதி வழங்கப்பட்டன.
அத்துடன், முதலமைச்சருக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 12:24 0 COMMENTS
-பொ.சோபிகா
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, செவ்வாய்க்கிழமை (09) வழங்கினார்.
வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5 ஆம்
திகதி வழங்கப்பட்டன.
அத்துடன், முதலமைச்சருக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது.
யாழ் பாதிரிகளின் பாலியல் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு5 மாத காலம் போதாமையால் மேலதிக கால அவகாசம் வழங்கி கொன்சலிற்றா வழக்கு ஒத்திவைப்பு
================================================கொன்சலிற்றா வழக்கு ஒத்திவைப்பு
செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 19:05 0 COMMENTS
-யோ.வித்தியா
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) காலஅவகாசம் கோரியிருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை நவம்பர் 11ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
கொன்சலிற்றா வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை வாசிக்கப்படுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொன்சலிற்றாவின் மரணத்திற்கு ஆயர் இல்லத்து பாதிரியார்கள் இருவரே காரணம் என்பதற்குரிய ஆதாரம் நிரூபிக்கப்படாத நிலையில், பொலிஸாரின் மேலதிக விசாரணை அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படுவதாக இருந்தது.
இருந்தும், தமது விசாரணைகள் முடிவடையவில்லையெனவும், அதற்கு காலஅவகாசம் வழங்கவேண்டும் எனவும் பொலிஸார் இன்று, மன்றில் கேட்டதிற்கிணங்க நீதவான் காலஅவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.
யாழ்.குருநகர்ப் பகுதியை சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது - 22) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இருந்தும், நீதிமன்ற விசாரணைகளின் போது, பாதிரியார்கள் தான் காரணம் என்பது நிரூபிக்கப்படவில்லை.
கொன்சலிற்றா, யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி போதித்து வந்த ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)
காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா
https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...










