SHARE

Saturday, January 30, 2010

தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் முன்னிலைப்படுத்துவோம்- தமிழ் இளையோர்

"ஆம்" எனப் புள்ளடியிட்டு தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் முன்னிலைப்படுத்துவோம்:
தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா
திகதி: 29.01.2010 // தமிழீழம் சங்கதி
எமது கடந்த கால வரலாறானதுஎமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது. எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப்பட்டுள்ளது.
எமது மக்களின் வரலாறானது இதுவரை எமது கரங்களினாலேயே எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்பங்கள் அமைவது அரிது, ஆனால் இன்று எம் முன்னால் எமது எதிர்காலத்தை நாம் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல் என்கின்ற வடிவில் அமைந்துள்ளது.
வாக்குச்சீட்டில் "ஆம்" எனப் புள்ளடி இடுவதன் மூலம் இதை நிகழ்த்திக்காட்ட முடியும். மேற்குலகுக்கு மிகவும் பரிச்சயமான இளையோர் அமைப்பு என்கின்ற வகையில் தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஜனநாயக ரீதியில் முன்னிலைப் படுத்துவது எமது மிகப் பெரிய பொறுப்பாகும்.
எமது மக்களுடைய அபிலாசைகளை நாம் வாழுகின்ற நாட்டின் அரசியல்சட்டதிட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் உட்பட்டு வெளிப்படுத்துதல் எமது அடிப்படை உரிமையாகும். இன்று எமது தாயக மக்களின் தலைவிதி இலங்கை அரசு என்ற கொடிய எழுத்தாளனால் எழுதப்படுகின்றது.
இலங்கையில் எத்தனை புதிய அரச தலைவர்கள் வந்தாலும் போனாலும் தமிழர்கள் தொடர்பான இலங்கை அரசின் அணுகுமுறை என்றும் மாறியதில்லை. அரசு என்று தமிழர்களுக்கான ஒரேயொரு 'அழிவு' என்ற முடிவையே என்றும் எழுதுகின்றது, அதனை அனைவரும் வக்கிரமான ஒரு அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதாவது குரல் அதற்கு எதிராக ஒலிக்குமானால் அது வன்முறையால் அடக்கப் படுகின்றது. அதனால் தமிழ் இளையோர் அமைப்பு எம் மக்கள் அனைவரையும் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்து, எம்மக்களின் தலைவிதிக்கு நிரந்தர தீர்வை, ஒரு நல்ல முடிவை எழுதுமாறு கேட்கின்றது. நாம் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் எமது தொப்புள் கொடி தாயகத்துடனேயே தொடர்பு கொண்டுள்ளது.

<< பிரித்தானிய வாக்குச் சாவடிகள் >>
அதனால் நாம் அனைவரும் நாடற்றவர்கள் என அடையாளப் படுத்தப் படுகின்றோம். தயவு செய்து இனிமேலும் இந்த அவதுறை தொடர விடாது பேனாவை எமது ஆயுதமாக பாவித்து எமது எதிர்காலத்தை நாமே எழுதுவோம். தமிழீழத்தின் எதிர்காலம் எம் கைகளிலேயே உள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

Wednesday, January 27, 2010

2010 ஜனாதிபதித் தேர்தல் மதிப்பீடு-ENB

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.
2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு பிரச்சாரம் செய்தோர் இப்போது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் ஒட்டுக்குழுக்கள் மேல் பழி போட்டு தேர்தல் மோசடியை தமது படு தோல்விக்கு காரணமாகக் காட்டுகின்றனர்..
1) பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தோற்கடித்து விட்டு தாங்கள் நடத்திய ஜனநாயக தேர்தல் இது, இப்படித்தான் பீத்திக் கொண்டீர்கள். இனிமேல் வன்முறை பற்றி எங்களிடம் ஊளையிட வேண்டாம்.
2) ஒட்டுக்குழுத் தலைவன், வெள்ளை வான் கொலை காரன் டக்ளஸ் ''மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி'' என்று சொல்லி விட்டுத்தான் இத்தனையும் செய்தான்.
மாநிலத்தில் டக்ளசின் ''சுயாட்சியில்'' இருந்து தங்களைக் காப்பாற்றும் கவச வாகனங்களை மத்தியில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப் புறப்பட்ட தாங்கள் பெற்று தங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.அப்படி ஒரு ''கூட்டாட்சியை'' ஒற்றையாட்சிக்குள் தாங்களும் அமைத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதிகாரப் பகிர்வு அதைத் தங்களுக்கு உத்தர வாதம் செய்யவில்லையெனில் அழிந்து தொலைய வேண்டியது தங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.
3) கேவலம் சம்பந்தன்-சுரேஸ்-பத்மினி கும்பல் வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட சரத்திடம் வலியுறுத்தவில்லை.இந்தக் கும்பல் மட்டும் என்ன இலட்சியக் குழுவா??
4)1987 இல் இந்திய இராணுவத்தின் அதிகாரப் பின் பலத்தில்-
சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் கச்சேரியில் நடத்திய தேர்தலை விட என்ன மோசமாக இங்கே நடந்துவிட்டது? அங்கு வாக்களித்ததே அதிகாரிகள் தானே!!இந்தியச் சிப்பாய் கூட வாக்களித்தானே!!
5) புலிகளின் அதிகாரப் பின் புலத்தில்
அ) ஏகபோக அங்கீகாரத்துக்காக நடந்த "வீட்டுக்குப் போகும் தேர்தல்"
ஆ) ராஜபக்சவிடம் லஞ்சம் வாங்கி "அதிகார பேரத்துக்காக ரணிலை தோற்கடித்த ஜனாதிபதித் தேர்தல்"
இவை மட்டும் என்ன, 'கன்னி கழியாமல் கற்பு அழியாமல்' நடந்த புனிதத் தேர்தல்களா??
6) மேலும் ஜனநாயகப் பாதைக்குச் சென்றோரே இது தான் தங்கள் கேடுகெட்ட ஜனநாயகம்.
தேர்தல் மோசடி வென்றவனுக்கு தோல்வியைத் தவிர்ப்பதற்கு எந்தளவு உதவுகிறதோ அதே அளவுக்கு தோற்றவனுக்கு வெற்றியைத் தழுவுவதற்கும் உதவுகின்றது.சில வேளைகளில் இன்றைக்கு அதிகாரத்தில் உள்ளவன் அதிக நன்மை அடைந்திருந்தால் அவன் நேற்றைக்கு அதிகாரத்தில் இருந்தவனிடம் அதை இழந்தவனாக இருந்திருப்பான். அதற்கு பழி தீர்த்திருப்பான்அவ்வளவே!!
7) தேர்தல் ஆணையாளப் புலியின் பற்களைப் பிடுங்கி விட்டார்களாம், இது தானாம் அவர் கடைசி உறுமல்!!
பாதிரிகளினதும், நீதவான்களினதும்,தூதுவர்களினதும் துல்லிய ஆய்வுக்கு இந்த தேர்தல் புள்ளிவிபரங்கள் சமர்ப்பணம்.
8) நமது கரிசனையை எட்டியவை வருமாறு.
அ) இலங்கையின் 1978 அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் அவர் தன்னைத் தேர்வு செய்யும் தேர்தலைக் கூட தனக்கேற்ற விதத்தில் நடத்தலாம்.அப்படி நடந்த ஒரு தேர்தல் தான் 2010 ஜனாதிபதித் தேர்தல்.
ஆ) வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச காட்டும் புள்ளிவிபரமே! குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில்.இது 70 வீதத்தையும் எட்டிச் செல்கிறது, காவலில் உள்ள பல்லிழந்த ஆணையாளர் கையொப்பமிட்டாகவேண்டும்,
இ) அவரது புள்ளி விபரத் தலையீட்டில் தப்பிய தமிழ் பேசும் மக்களில் - குறிப்பாக தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் -தேர்தலில் வாக்களிக்கவில்லை சராசரியாக 70 வீ,தம் மக்கள் வாக்களிக்கவில்லை.
இப் பெரும்பான்மையோரான தமிழ் மக்கள்
1) தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்
2) இரு வேட்பாளர்களையும் நிராகரித்துள்ளனர்
3) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துள்ளனர்.
ஈ) வாக்களித்த 30 வீதம் பேரில் பெரும்பான்மையோர் சரத்துக்கு வாக்களித்துள்ளனர்.
உ) விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புரட்சியை சீர்திருத்த இந்திய சார்பு வழியில், சரத்துடன் கூட்டுச் சேர்ந்து அழித்தொழிக்க திட்டமிட்ட சம்பந்தன்- சுரேஷ்-பத்மினி கும்பலின் சதியை தமிழ் பேசும் மக்கள் முறியடித்துள்ளனர்.
ஊ) விடுதலைக்கான உத்வேகத்தை பின் தொடர்ந்து ஊசலாட்டம் பயணிக்கின்றது.எனினும்,
நிலத்திலும் புலத்திலும் தமிழர் முழக்கம் ஒன்றே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.

==============================================
புதிய ஈழப் புரட்சியாளர்கள் ===============================================

ஜனாதிபதித் தேர்தல் 2010- வெற்றி வாகை சூடியதாம் வெற்றிலை

ராஜபட்ச வெற்றி: அரசுத் தொலைக்காட்சி
First Published : 27 Jan 2010 09:22:43 AM IST தினமணி
இலங்கையில் நேற்று நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி அதிபர் ராஜபட்சவே முன்னணியிலுள்ளார்.
இந்த நிலையில், அவர் வெற்றி பெற்றுவிட்டதாக அரசுத் தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்திருக்கிறது.
70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தேர்தலில் ராஜபட்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவைவிட சுமார் 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக இலங்கை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fonseka seeks security guarantees
Wednesday, 27 January 2010 14:22
Presidential Candidate General Sarath Fonseka who is at a hotel in Colombo surrounded by the military, spoke to Daily Mirror online a short while ago and urged President Mahinda Rajapaksa to give him security guarantees to leave the hotel.

சரத் பொன்சேகா விரைவில் கைது?
வீரகேசரி இணையம் 1/27/2010 10:11:12 AM -
கொழும்பு சினமன்ட் லேக் வியூ ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துகள் அனைத்தும்
தடைசெய்யப்பட்டு விசேட இராணுவப் படையணியினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இன்னும் சற்று நேரத்தில் அந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன. எனினும் அவரைக் கைது செய்வதற்கான எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தொவித்தார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதே தவிர தற்போதைய நிலையில் வேறெந்த கருத்தினையும் வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
சுமார் 350 இற்கும் அதிகமான இராணுவத்தினர் அவ்விடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்த ஹோட்டலைச் சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ஆகியோரும் இந்த ஹோட்டலில்
இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சரத் பொன்சேகா தங்கியுள்ள விடுதி நள்ளிரவில் முற்றுகை: சுற்றிவளைப்பு தொடர்கிறது
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:20.29 PM GMT +05:30 ]
கொழும்பில் சரத் பொன்சேகா தங்கியிருந்த சினமன் லேக் வியூ ஹோட்டல் செவ்வாய் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் ட்ரான்ஸ் ஏசியா விடுதியைச் சுற்றிவளைத்திருப்பதாகவும், அங்கு தங்கியுள்ள உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது.
எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அங்கேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் ஹோட்டலின் சுற்றிவளைப்பு தொடர்கிறது.
கொழும்பின் மத்தியில் உள்ள சினமன் லேக் வியூ ஹோட்டலை சுற்றி தொடர்ந்தும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்
ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
தன்னை கொலை செய்ய இராணுவத்தினருக்கு ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்: ஹோட்டலில் செய்தியாளரிடம் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 05:12.53 AM GMT +05:30 ]
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தன்னை கொலை செய்ய இலங்கை இராணுவத்தினருக்கு ராஜபச்ச உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக அதிபர் ராஜபக்சே களம் இறங்கி இருக்கிறார். இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் தற்போதைய அதிபர் ராஜபக்ச சுமார் 12 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாக்குகள் எண்ணிக்கை பணி நடைபெற்று வரும் இந்நிலையில் பொன்சேகா தனது இல்லத்தில் தங்காமல், கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச முறைகேடு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை இராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இலங்கை இராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளார்: சுசில் பிரேமஜயந்த
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:22.53 AM GMT +05:30 ]
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்கான உரிமை இல்லை என்பதனை கடைசி நேரம் வரையில் ஜெனரல் மக்களிடம் மூடி மறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குரிமை இல்லாத நபர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரப் பணி நிறைவடைந்த 23ம் திகதிக்கு பின்னர் தமது கட்சி எவ்வித ஊடகச் சந்திப்புக்களையோ அறிக்கைகளையோ விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் ஊடக சந்திப்புக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பு தேர்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Over 70 per cent polling in Sri Lanka presidential poll
B. Muralidhar Reddy
Ruling combine to challenge Fonseka’s candidature as he has not enrolled as a voter
COLOMBO: More than 70 cent of the 14 million-plus voters exercised their franchise in the sixth Sri Lankan presidential election on Tuesday. The polling was held from 7 a.m. to 4 p.m.
The counting of postal ballots commenced at 8 p.m. and of the other votes after 10 p.m. in 88 different centres. The final result could be expected by Wednesday afternoon.
The first result has gone in favour of President Mahinda Rajapaksa. According to the Election Commission office, in Ratnapura district, the President has polled nearly 69 per cent of the postal votes. In Monaragawa district too, he is leading in postal votes.
The highlight of the day was the ‘discovery’ that the Opposition consensus nominee, General (retired) Sarath Fonseka, had not enrolled himself as a voter. At a hurriedly convened news conference, senior Ministers and leaders of the ruling combine accused him of taking the people for a ride and said they would move the apex court challenging his eligibility to contest, despite the fact that the Election Commission had ruled his nomination papers to be in order.
Given the high stakes involved for Mr. Rajapaksa, who is seeking a second term two years ahead of his first tenure, and General Fonseka, the peaceful poll came as a big relief to the people of the island nation.
Acknowledgement that the voting was calm came from the former Army Chief at a news conference. He said there was ‘unusual enthusiasm’ among the voters.
Mr. Rajapaksa cast his vote early in the morning at the Madhumalana Rajapaksa Maha Vidayalaya polling centre in Hambantota.
In contrast to the high turnout in the majority Sinhalese south, polling in the Northern and Eastern Provinces, parts of which were under the control of the Liberation Tigers of Tamil Eelam in the last election, was poor.
In the presidential polls in 2005, the then Prime Minister Mahinda Rajapaksa, who contested on United Party Freedom Alliance ) ticket, obtained 4,887,162 votes (50.29 per cent) and the United National Party candidate and Opposition leader, Ranil Wickremesinghe, secured 4,706,366 votes (47.43 per cent). Mr. Wickremesinghe lost mainly due to LTTE leader Velupillai Prabakaran’s diktat to Tamils to boycott the election.
Now, political and diplomatic observers are pleased that the election was tension-free, particularly given the apprehensions expressed by the Opposition in the last few days of large scale violence and rigging.
Rajith Keerthi Tennakoon, Director, Campaign For Free and Fair Elections, an NGO monitoring the elections, said there were six minor incidents before polling began.

More than 70 percent vote
Tuesday, 26 January 2010 16:20 1 2 3 4 5 ( 20 Votes )
By Sumaiya Rizvi
Island wide voter turnout was more than 70% while the voter turnout for the North and East Provinces was less, People’s Action Free and Fair Elections (PAFFREL) Spokesperson Rohana Hettiarachchi said.
“The overall voter turnout was more than 70% island wide while the North and East witnessed a very low voter turnout of less than 20%,” Hettiarachchi said.
There were isolated incidents of violence that took place in Jaffna, Hambantota and Nawalapitiya with regard to grenade attacks and firing although these incidents were comparatively low considering the elections, Hettiarachchi said.
39 incidents of violence were reported at the time when the polls were closing, Hettiarachchi said. Although only 27 cases of violence were confirmed by the PAFFREL while 12 cases went unconfirmed, he added.
“There have been five cases of assaults, seven cases of intimidation and seven cases of illegal propaganda,” Hettiarachchi said. Seven of the most violent incidents were reported from the central province while the western and southern province had four incidents of election violence each, he said. However when compared to the incidents of pre election violence that amounted to 757 the Election Day violence was comparatively low, Hettiarcachi said.



Polling peaceful overall
Bid to disrupt polling in Jaffna aborted
Fonseka’s failure to vote not a problem, say Ranil, ex – கஜ்
by Shamindra Ferdinando and Norman Palihawadana
The Island
Contrary to fears expressed, the first peacetime presidential election, following the defeat of the LTTE last May, was held yesterday (January 26) without any serious incidents of violence, though some elements made an abortive bid to disrupt polling in the Jaffna peninsula.
The police and the military said that heavy presence of law enforcement personnel backed by security forces had ensured a peaceful environment. Independent Election monitors, too, said the election had been largely free and fair though they had received about three dozen complaints.
The Election Secretariat said that polling had been brisk in almost all in areas outside the Northern and Eastern Provinces. Sources said that overall voter-turn out was expected to be around 70 per cent though in areas previously held and dominated by the LTTE, it was low.
The government deployed over 100,000 officers and men to provide security.
The Centre for Monitoring Election Violence (CMEV) said that an unidentified person had carried out a grenade attack on the home of Subramanium Sharma, SLFP Uduppidi coordinator at 3.30 a.m. on Tuesday. Sharma was quoted by the CMEV as saying that he had received threats last Saturday (January 23) not to vote.
Five persons were killed in pre-poll clashes, according to the Centre for Monitoring Election Violence.
Security officials and the CMEV said that explosions had been reported from Nallur, Manipay, Vaddukoddai, Chavakachcheri and Tellipillai in the Jaffna peninsula though there were no injuries or deaths among the civilian community. They said that a bicyle, a tea kiosk and a shop were damaged.
The CMEV expressed concern over the absence of transport as promised by Elections Commissioner Dayananda Dissanayake to facilitate the war displaced to reach polling booths.
Government sources told The Island that the Election Secretariat had made all possible arrangements to ensure the internally displaced received free transport.
Sources said that some critics had conveniently forgotten the environment in which the last presidential election was conducted in November 2005.
Recalling early presidential polls, President Mahinda Rajapaksa declared that he wanted to give an opportunity to Tamil speaking people to exercise their franchise as the LTTE had sabotaged the previous poll.

Tuesday, January 26, 2010

டெல்கி பறந்து திரும்பினார் மகிந்த!

* President Mahinda fly to Delhi - Sri Lanka Guardian
* Sri Lanka opposition accuses President Rajapaksa of plotting coup- The Times - UK * Presidential election tomorrow andanalysts cautious on promises - Fiscal position ‘in danger’
* No matter who wins, India's stake in Lanka will go up- Times of India
More

வாக்குக் கடதாசியை சரிவரப் பயன்படுத்துவது எப்படி?

வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?

அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும்
எதுவுமே மாறாது என்று
அவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
என்றாலும்
அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால்
அதை வீணாக்கக் கூடாது என்று
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று
சொல்ல மாட்டார்கள்.
பயன்படுத்தத் தெரியவில்லை என்று
உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும்
எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை விடவும்,
எவரேன் பயன்படுத்த மாட்டார;
என்று அறியும் எவரும்
அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால்
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று
ஆராயத் தொடங்கினேன்.

சில கேள்விகளுக்குச்
சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு.
சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை.
சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன.
வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது
எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன.
அந்தக் கடதாசியில் உள்ள
சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள்
பெருக்கல் அடையாளம் இடுவதோ
இலக்கம் எதையாவது எழுதுவதோதான்
சரியான மறுமொழி என்று சொல்கிற பலர்
எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை.
சொல்லுகிறவர்கள் ஆளுக்காள்
வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.
எனவே
அவற்றை விடச் சரியான
வேறு மறுமொழிகளும் உள்ளன என்று
உறுதியாக நம்புகிறேன்.
வரிசையில் நின்று
உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற
அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ?
எனவே தான்
வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன்.
தெரிவு உங்களுடையது.

தாள் சதுரமாக இருந்தால்
அதை மடித்துக்
காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை
என்று பலவுஞ் செய்யலாம்.
சற்று நீள் சதுரமாக இருந்தால்
ராக்கெட் செய்து வீசி விளையாடலாம்.
இன்னும் நீளம் என்றால்
நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம்.
தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம்.
கெட்டியான பற்களும்
வாயில் உமிழ்நீரும் இருந்தால்
வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி
ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம்.
தெருவிற் கிடக்கும்
கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து
ஓரமாகப் போடப் பாவிக்கலாம்.
ஆனால் தேர்தல் அதிகாரிகள்
அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.
வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது.
கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம்.
கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம்.
ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது.
கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி.
அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம்.
நேரமிருந்தால்
எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம்.
அல்லது தாளுக்குக் குறுக்காகப்
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல்
அடையாளம் ஒன்றை இடலாம்.
ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம்.
நீளமாக ஒரு கவிதை எழுதலாம்.
வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது
படிக்கும் வாய்ப்புண்டு.

பட்டியலில் உள்ள எதுவுமே
உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல
அக் கடதாசியைப் பயன்படுத்த
எத்தனையோ வழிகள் உள்ளன.
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும்
தெரிவு நிச்சயமாக உங்களுடையது.

- சி. சிவசேகரம் -

Friday, January 22, 2010

பிரித்தானியாவில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு

பிரித்தானியாவில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு
ஊடக அறிக்கை
09 சனவரி 2010
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! பெருவாரியான மக்கள் பங்களிப்பை உறுதிசெய்வோம்!!

ஈழத்தமிழர்கள், பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு, எமது அரசியல் அபிலாசையான சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசா? அல்லது அதைத் தமிழர்கள் கைவிட்டுவிட்டார்களா? என்பதை, பிரித்தானியாவிலுள்ள ஈழத் தமிழர்கள் எதிர்வரும் சனவரி 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சனநாயக கருத்துக்; கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் உலகுக்கு எடுத்தியம்ப உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக சனநாயக ரீதியாக வழங்கிய ஆணையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல் நிகழ்வாகும். எமது இலக்குக் குறித்த மக்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை இதைத் தொடர்ந்து வந்த காலம் எடுத்தியம்பி நிற்கிறது.

பாரியதும் ஆழமானதுமான இன அழிப்பு வரலாற்றைக் கொண்ட சிறிலங்கா அரசின் தமிழ்த்தேசியத்தின் மீதான போரை, அமைதிவழியிலும் பின்னர் ஆயுதவழியிலும் எதிர்கொண்டு தற்போது சர்வதேசத்திடம் தீர்க்கமான நியாயம் கேட்கும் நிலையில், குறிப்பாக சர்வதேசத்தில் எமது அரசியல் கட்டுமானங்களை உருவாக்கும் இந்தச் சூழலில் இவ்வாக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் மத்தியில் நடாத்தப்படும் இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு, சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லப்போகும் செய்தி என்ன என்பதை தெளிவாக்க, பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் பெருந்திரளாய்; திரண்டெழுந்து பங்களிக்க வேண்டியது மிகவும் அவசியமும் தார்மீகக் கடமையுமாகும்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள், தனித்துவமான தேசியத்தையும் பாரம்பரியத் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் கொண்டவர்கள். இதன் அடிப்படையில், இத்தீவின் வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைவதுதான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையா என்பதை எடுத்துக்காட்டும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை வருகின்ற சனவரி 30, 31 ம் திகதிகளில் பிரித்தானியா முழுவதும்; ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடாத்தி முடிக்க நாம் அனைவரும் திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம்.

தமிழ் தேசிய சபையால் நடாத்தப்படும் இக்கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பினை, தமிழீழச் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு (ஐ.இ) ஆகிய நாம் அனைவரும் ஒருமித்து, தமிழ்த் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, ஒரே தளத்தில் நின்று மக்களை அணிதிரண்டு வந்து எதிர்வரும் 30, 31 ம் திகதிகளில் நடைபெறவுள்ள கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பெருவாரியாகப் பங்களிக்குமாறு வேண்டி நிற்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய செயற்பாட்டுக் குழு, தமிழீழத் தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தியும் இம்முயற்சி வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டும் தமது ஆதரவை வழங்கியிருப்பது இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய காலகட்டத்தில், தமிழீழத் தேசியத்தின் ஒன்றுபட்ட கருத்தை உறுதிபட நின்று உலகுக்குப் பறை சாற்றுவோம்!
இவ்வண்ணம்:
தமிழ் இளையோர் அமைப்பு – (ஐக்கிய இராச்சியம்)
பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழீழச் செயற்பாட்டாளர்கள்

Thursday, January 21, 2010

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: அரசு தேய்ந்து வணிக நிறுவனமான கதை

நாடுகடந்த அரசமைக்கும் குழுவுக்கு ஒரு திறந்தமடல்!
சேரமான்
அம்மையீர், ஐயன்மீர், வணக்கம்!
தைத்திருநாளில் நீங்கள் வெளியிட்ட அறிக்கை கண்டோம்.
இழந்துபோன எமது தேசத்தின் நிலங்களையும், இறையாண்மையையும் இராசரீக வழிகளில் வென்றெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என்று நீங்கள் அன்று சபதமெடுத்த பொழுது நாம் புளகாங்கிதமடைந்தோம்.
முள்ளிவாய்க்கால் அவலத்தால் வெதும்பிப்போயிருந்த எங்களுக்கு உங்களின் வாக்கு வேதவாக்காக ஒத்தடமளித்தது உண்மைதான். தமிழீழ மக்களவையும், நாடுகடந்த தமிழீழ அரசும் எதிரியைத் தாக்கும் இருபேராயுதங்கள் என்று நீங்கள் உரைத்தபொழுது நாம் மெய்மறந்தே போனோம்.
இக்கால பூகோள - அரசியல் தமிழீழத் தனியரசு நிறுவப்படுவதற்கான புறச்சூழலை தோற்றுவித்திருப்பதாக அன்று நீங்கள் பிரகடனம்செய்த பொழுது நாங்கள் உச்சிகுளிர்ந்ததும் உண்மைதான்.
ஆனால் இன்று...
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு பல்தேசிய வணிக நிறுவனம் போன்று இயங்கும் என்கின்றீர்கள். தேசம்கடந்து இயங்கும் அரசுசாரா அமைப்புப் போன்று அது செயற்படும் என்கின்றீர்கள்.
போதாக்குறைக்கு உங்கள் கற்பிதத்திற்கு உவமையாக CNN, Microsoft போன்ற முதலாளிய நிறுவனங்களையும் துணைக்கு அழைக்கின்றீர்கள்!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை அறிந்துள்ளோம். ஆனால் அரசு தேய்ந்து வணிக நிறுவனமாக மாறப்போகும் கதையின் சூத்திரத்தை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தயைகூர்ந்து விளக்குவீராக!
-------
உருவாகப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசு ஒரு அஞ்ஞாதவாச அரசு அல்ல என்கின்றீர்கள். அங்கீகரிக்கப்பட்ட சிறீலங்கா அரசுக்கு விரோதமாக இயங்கும் ஒரு அஞ்ஞாதவாச அரசுடன் உலகம் தொடர்புகளைப் பேணவிரும்பவில்லை என்றும் கூறுகின்றீர்கள். அதனால்தான் அஞ்ஞாதவாச அரசுடன் நாடுகடந்த அரசை ஒப்பிடுவது தவறு என்கின்றீர்கள்.
சரி, அப்படியே இருக்கட்டும். சிறீலங்கா அரசுடன் முரண்பட விருப்பமில்லை என்றால் நாடுகடந்த சிறீலங்கா அரசு என்று நீங்கள் பெயர்சூட்டிக் கொள்ளலாமே? பிறகெதற்கு தமிழீழம்?

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக உலக நாடுகளுடன் பேசுவதாக நீங்கள் அன்றுகூறிய பொழுது மயிர்க்கூச்செறிந்தது. உங்களது முயற்சியை உலக இராசதந்திரிகள் வரவேற்பதாக நீங்கள் பிரகடனம் செய்த பொழுது எங்களது மயிர்க்காம்பெல்லாம் புல்லரித்துப் போனது.

ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்தர்பல்டி அடித்து இப்பொழுது புதுக்கதை கூறுகின்றீர்கள். வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் மட்டும் பேசிக்கொண்டிருப்பதாக அறிக்கை விடுகின்றீர்கள். அரசியல் - இராசதந்திர வழிகளில் பரப்புரை செய்வோம் என்று அறிவிக்கின்றீர்கள்.
எப்பொழுதும் அகிம்சை வழியில் உங்களது செயற்பாடு அமையும் என்று உறுதிபூணுகின்றீர்கள். ஆயுதப் பலம் தீண்டத்தகாதது என்று அருவருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாடுகளின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு இயங்கப் போவதாக சத்தியம் செய்கின்றீர்கள்.

அருமை! அருமையிலும் அருமை. இருந்தாலும் ஒரு சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஆறு மாதங்களாக வெளிநாட்டு அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் எதற்காக வெளிநாட்டு அரசியல் தலைவர்களை இன்னும் அணுகவில்லை? அதற்கான இராசதந்திரக் கதவுகள் இன்னமும்
திறக்கவில்லையா? அல்லது உங்களால் அவற்றைத் திறக்க முடியவில்லையா? இராசதந்திரம் என்பது பலத்தில் தங்கியிருப்பது.
பரப்புரை என்பது இராசதந்திரத்திற்கு உறுதுணை நிற்பதே தவிர அதுவே இராசதந்திரமாகிவிடாது. யதார்த்தம் அடிப்படியிருக்கும் பொழுது அகிம்சை வழியில் என்னதான் இராசதந்திரம் செய்யப் போகின்றீர்கள்? காந்தியடிகளின் உப்புச்சத்தியாக்கிரகமா?

வெஸ்ட்மின்ஸ்டர் திடலிலும், ஜெனீவா முன்றலிலும், பாரிசிலும் வெள்ளைக்காரனிடம் அடிவாங்கியதை நாமென்ன மறந்துவிட்டோமா? நீங்கள் மறந்திருக்கலாம்... ஏனென்றால் அடி எங்கள் மீதல்லவா விழுந்தது!

அகிம்சை வழியில் நீங்கள் செயற்படுவது நல்லதுதான். நீங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து வாழ்வதும் போற்றத்தக்கதுதான். ஆனால்... ஆயுதபலத்தை நீங்கள் அருவருக்கின்றீர்களோ இல்லையோ எங்கள் தேசியத் தலைவன் ஒருபொழுதும் போரை விரும்பியதில்லை என்பது மட்டும் உண்மை. அது உங்களுக்கும் தெரியும். உங்களுக்கு பின்னால் நிற்போருக்கும் தெரியும். அனாதையாக அந்தரித்து நின்ற எமது மக்களுக்காக எம் தலைவன் ஆயுதமேந்தியதை நீங்கள் இப்பொழுது சிறுமைப்படுத்திப் பேசுவதுதான் நகைப்புக்கிடமானது.

இவைதான் போகட்டும். உலக அங்கீகாரத்தை நாடுகடந்த தமிழீழ அரசு பெறுவது சாத்தியமில்லை என்கின்றீர்கள். அப்படியென்றால் எதற்காக நாடு கடந்த அரசு அமைக்க வேண்டும்? தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசு உழைக்கும் என்கின்றீர்கள்.

தமிழீழம் கிடைத்தால்... என்றும் இழுக்கின்றீர்கள். அப்படியென்றால் தமிழீழம் அமைப்பது உங்களின் நோக்கமே இல்லையா? அல்லது தமிழீழம் அமையும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா?
இறுதியாக ஒரு கேள்வி.
எமது உடன்பிறப்புக்களான இஸ்லாமியத் தமிழர்களை தேசிய இனம் என்கின்றீர்கள். தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கான பிராந்தியங்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையுடையவர்கள் என்கின்றீர்கள்.

தமிழீழம் அமைந்தால்... அவர்கள் விரும்பினால் தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்கலாம் என்கின்றீர்கள். தமிழீழத்தில் இருந்து பிரிந்துசென்று தனியரசு அமைக்கப் போவதாக எப்பொழுது எமது இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உங்களுக்கு அறிவித்தார்கள்?
இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழர்களைக் கொண்ட தேசம் தமிழீழ தேசம். அதை இருகூறாக்கி இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒருதேசம், முஸ்லிம்களுக்கு ஒரு தேசம் என்று துண்டாடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?

அதுசரி, ஆங்கிலத்தில் நீங்கள் வெளியிட்ட அறிக்கைக்கும், தமிழில் வெளியிட்ட மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய கருத்துக் குழப்பங்கள் காணப்படுகின்றதே? உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
- சேரமான்
நன்றி:பதிவு- சங்கதி

Tuesday, January 19, 2010

நாதியற்ற ஹெயிற்றி மக்களை நையப்புடைத்த ஐ.நா.''அமைதிப்படை''

* U.N. Peacekeepers Confront Crowd in Haiti
CBS Video
* Officials: Haiti Death Toll May Be 200,000
* U.N. Peacekeepers Confront Crowd in Haiti
* Anger and Frustration Boil Over at the Airport in Port-au-Prince
* Haitians Clash with UN Troops
By Byron Pitts
As frustration grows in Haiti, the Port-au-Prince airport was in shambles after Haitians clashed with U.N. peacekeepers. As Byron Pitts tells us, Haitians were fighting for food and jobs.
UN peace keepers clear the street in Port-au-Prince, Haiti. (CBS)
(CBS) With word spreading far and wide across Port-au-Prince that there are jobs and food at the airport - a flood of able-bodied men and women showed up by the hundreds.
"We are not troublemaker. We need some job, you understand," one man told CBS News national correspondent Byron Pitts.
A U.S. Army Captain called this "controlled chaos." Military and police forces from around the world who speak different languages are working to maintain order. Late Monday morning that "chaos" turned to confrontation.
U.N. peace keepers were given orders to clear the street. They did so with force. Unable to speak the native language Creole or even English, the Jordanian... Pakistani and Indian forces mostly did their talking with nightsticks and rubber bullets. No one was seriously injured. But tensions are building.
The American soldiers on hand - members of the 82nd Airborne - showed restraint. Their helmets were off and their guns were intentionally unloaded.

பிரிவினையை முறியடிக்க சரத்தும் மகிந்தவும் திட சங்கற்பம்

Rajapaksa, Fonseka vow to curb secessionism
B. Muralidhar Reddy
COLOMBO: Five days before the close of official campaign to the Sri Lankan presidential election, President Mahinda Rajapaksa and his chief opponent General (retired) Sarath Fonseka vowed not to allow rise of secessionist forces in the island nation.

In the run up to the election, the former Army Chief and the consensus opposition nominee, secured the support of the post-Prabakaran Tamil National Alliance (TNA) but is now faced with charges of a “secret pact” pledging re-merger of the northern and eastern provinces. Though the General has denied the allegation levelled by Mr. Rajapaksa’s campaign managers, it has emerged as one of the dominant themes.

At their respective rallies across the nation, the contenders, with perhaps an eye on the majority community voters, deemed it necessary to rake up the issue of not letting anyone revive any separatist movement .
The campaign office of Mr. Rajapaksa quoted him as saying at a rally he is not prepared to betray the country for an election and vowed to defeat all forces which are attempting to divide the country after it was liberated from terrorists eight months ago.

General Fonseka’s campaign office in a message circulated through an E-mail quoted him as saying, “Unlike other presidential campaigns, we sought out active and vocal citizens not just passive voters.

The journey has not been easy as our opponents have mounted the most brutal, unprincipled and murderous election campaign ever conducted in Sri Lanka. Nevertheless, our active social movement to bring in a positive change has gained momentum every day — we are stronger than we were ever before.”

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு

  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு மே முற்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகளிடம் கருத்து April 14, 2025 தின...