இன்று 13-04-2026 அன்று, முன்கூட்டியே அறிவித்தபடி மருதமுனைக் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் விழா ஆரம்பமானது.
வாழ் நாள் ஊடக சாதனையாளர் கலாபூஸணம் மர்ஹூம் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இக் கூட்டம் நடைபெற்றது.
அழைப்பிதழில் குறிப்பிட்ட அதிதிகள் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினர்.
`அஸ்ரஃப் எனும் இலக்கியம்` நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நூலை விலை கொடுத்து வாங்கிக் கொண்டனர்.
பெண்கள் குழந்தைகள் உட்பட மண்டபம் நிறைய மக்கள் கூடியிருந்தனர்.
உரைகளுக்குச் செவிமடுத்து, நூல்களைப் பெற்றுக் கொண்டு பரஸ்பரம் அளவளாவி கூட்டம் இனிதே நிறைவேறியது.

No comments:
Post a Comment