SHARE

Monday, June 17, 2024

IMF அதானி ஆட்சிக்கமைய நாட்டில் 90 புதிய சட்ட மூலங்கள்

 15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

திர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களில் சுமார் 75 புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு நாட்டுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ” இந்த காலகட்டத்தை நமது நாட்டின் நீதித்துறையில் நீதி நிர்வாகம் தொடர்பாக மிகப்பெரிய சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலகட்டமாக அறிமுகப்படுத்தலாம்.

இரண்டு மாற்றங்கள் 

கடந்த 18 மாதங்களில் சுமார் 75 புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அது நாட்டிற்கு தேவையான அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு! 

 (Provision For Execution Of 15 Major Ordinances)

காதி நீதிமன்றம் தொடர்பாக இதுவரை பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. அதன்படி, இரண்டு மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பான வெளிநாட்டு தீர்ப்புகளை செயல்படுத்துவதற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான அரசாணைகளை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நாங்கள் சமீபத்தில் நிறைவேற்றிய நீர் அறிவியல் சட்டத்தை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தலாம்” என்றார்⍐.

Source: Tamilwin

No comments:

Post a Comment

Ukraine-Russia peace talks

Ukraine-Russia peace talks: How US envoys and a 28-point plan failed to secure deal... India has significantly increased its diplomatic invo...