SHARE

Thursday, August 20, 2015

தேர்தலுக்குப் பின்னால் புதிய ஈழப் புரட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

அதற்கான மார்க்சிய வழி நடத்துதல் என்ன?

திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவு வி.ஐ.லெனின்

திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவுவி.ஐ.லெனின்

ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் திட்டமானது, புரட்சிகர மார்க்சியம் நிறைவு செய்திருப்பதின் மொத்த தொகுப்பாகும்.


இந்த தொகுப்பினை, மூன்று முக்கிய இனங்கள் பூர்த்தி செய்கின்றன.

1.   கட்சியின் திட்டம்.
2.   அதனுடைய செயல்தந்திரம்
3.   எங்கும் அதிகமாகப் பரவி வியாபித்திருக்கின்ற, ஆதிக்கம் செலுத்துகின்ற தத்துவ மற்றும் அரசியல் போக்குகளைப் பற்றி அல்லது சனநாயகத்திற்கும் சோசலிசத்துக்கும் அதிக அளவில் ஊறுவிளைவிக்கின்ற போக்குகளைப் பற்றிக் கட்சியின் மதிப்பீடு.

ஒரு திட்டமின்றி, ஒரு கட்சியானது எவ்விதமாக நிகழ்ச்சிகள் ஏற்பட்ட போதிலும் தன்னுடைய பாதையை அனுசரித்துச் செல்லுகின்ற, ஓர் ஒருங்கிணைந்த உயிரோட்டமுள்ள, அரசியல் பொருளாக இருக்க முடியாது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி ஓர் மதிப்பீடு, நமது காலத்திய வெறுப்பூட்டக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றிய தெளிவான பதிலுரைகள் அளித்தல், இவை இரண்டின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட ஓர் செயல்தந்திர வழி இன்றி நாம் தத்துவவாதிகளைக் கொண்டவர்களாக
இருப்போமேயன்றி, ஓர் இயங்குகின்ற அரசியல் முழுமையாக நமது கட்சி இருக்க முடியாது.

“செயலூக்கமுள்ள” நடப்பிலுள்ள அல்லது வழக்கத்திற்கு வரவுள்ள தத்துவ, அரசியல் போக்குகளைப் பற்றிய ”செயலூக்கமுள்ள” ஓர் மதிப்பீடு இன்றித் திட்டமும், செயல்தந்திரமும் _ (சாராம்சத்தைப் பற்றிய அவசியமான புரிதல் எது எது என்ன வென்பதைப் பற்றிய புரிதல், இவற்றுடன் தான் திட்டமும் செயல்தந்திரமும் நடைமுறைச் செயலின் ஆயிரக்கணக்கான விரிந்த
குறிப்பான மற்றும் உயர்ந்த கறாரான  கேள்வியின் மீது பிரயோகிக்கப்பட முடியும் அல்லது அதனைப் பற்றிய மதிப்புக் கூற முடியும் )_ இறந்த சரத்துக்களாக சீரழிந்து போகலாம்.

”செயலூக்கமுள்ள” நடப்பிலுள்ள அல்லது வரவிருக்கிற சித்தாந்த, அரசியல் போக்குகளை மதிப்பீடு செய்யாமல், செயல் தந்திரமும், ஆயிரக்கணக்கான, விரிவானதும், தனித்துவம் மிகமிகக் குறிப்பானதுமான நடைமுறைச் செயல்களின்  கேள்விகளைத் தேவையான  இன்றியமையாத
புரிதலுடன், எது எது என்ன என்ன என்ற புரிதலோடு அமுல்படுத்தவோ அவற்றின் மேல் பிரயோகிக்கவோ முடியாது என்பதை எந்த வகையிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் உயிரற்ற சரத்துக்களாகச் சீரழிந்து விடலாம்.

(லெ.தே.நூல் தொகுப்பு 17 பக்கம் 278&286)

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...