SHARE

Tuesday, November 26, 2013

மாவீரர் தினத்தையொட்டி தமிழ்ச் செய்தி இணையங்கள் மீது சிங்களம் தாக்குதல்!

ஊடகங்கள் மீதான தாக்குதலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
பதிவு இணையம்

தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சிறீலங்காவின் வழிநடத்தலில் அவர்களின் அனுசரணையாளர்களாக விளங்கும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் தொலைபேசி நிறுவனத்தின் நிதியிலும் கட்டளையிலும் இந்தியாவிலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது தொழில்நுட்பவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை இந்தத் தொலைத் தொடர்பு குழுமத்தின் உள்ளகத் தொடர்புகள் உறுதி செய்துள்ளன. இந்தக் குழுமத்தின் சிறீலங்காத் தொடர்புகள் பற்றியும் இராஜபக்ச குடும்பத்துடனான தொடர்புகள் பற்றியும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் எழுதி வந்தமை தெரிந்ததே. தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்த வேறு சில இணைய ஊடகங்களும் நேற்று இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

மேலும், தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது நாளையும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது எனவும் இக் குழுமத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாவீரர் நாளில் தாயக, தமிழக, புலம்பெயர் தேசத்து மக்களின் எழுச்சியையும் இன உணர்வையும் தடுக்கத் தனது சக்திவளம் முழுவதையும் சிறீலங்கா அரசு பிரயோகிக்க அவர்களுக்குத் துணையாகத் தமிழ்த்தேசிய ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் இந்தத் தொலைபேசிக் குழுமம் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

No comments:

Post a Comment

A Policy Paper on Emerging U.S. Reciprocal Tariffs and Sri Lanka–U.S. Trade Relations

A Policy Paper on Emerging U.S. Reciprocal Tariffs and Sri Lanka–U.S. Trade Relations Written on: March 7, 2025                             ...