SHARE

Wednesday, February 15, 2012

நிளாவரைக் கிணரு!


யாழில் தலை விரித்தாடும் தமிழ்க் கொலைகள்

தமிழையே தாய்மொழியாக கொண்ட யாழ்.குடாவில் தமிழ் எழுத்துப் பிழையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலாவரைக் கிணற்று வழிகாட்டிப் பெயர்ப்பலகை.

யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களிலும் தற்போது தாய்மொழி கொலை செய்யப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடமாகும்.

யாழ் நிலாவரைக் கிணற்றுப் பிரதேசத்திற்கு செல்வதற்கான வழிகாட்டிப் பலகையில் தமிழ் கொலை எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதைப் பாருங்கள்.

பெரும்பான்மையின மக்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் கொலை ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றது. அதே போல தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் இவ்வாறான பிழைகள் தற்போது அதிகளவில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருபவர்கள் யாராக இருந்தாலும் இங்கு செல்லத்தவறுவதில்லை.

எனினும் இப் பெயர்ப்பலகை பிரபல காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி: யாழ் உதயன் 13 பெப்ரவரி 2012, திங்கள் 11:30 மு.ப

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...