SHARE

Sunday, February 20, 2011

தாய் நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்!

பெற்றதாய் சுமந்தது பத்துமாதம்
நிலம் சுமப்பதோ நீண்டகாலம்.
அன்னை மடியிலிருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில் தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவானதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்துபோனால் பலமிழந்துபோகும்
பலமிழந்துபோனால் இனம் அழிந்துபோகும் 
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்.

புலவன்:புதுவை இரத்தினதுரை

பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும் பக்கம் 88

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...