SHARE

Monday, September 27, 2010

குமுறி நின்றதோர் புயல் படுத்தது


சாவு தின்னுதே சாவு தின்னுதே

தங்க மேனியை சாவு தின்னுதே

வந்து பாரடா வந்து பாரடா

நொந்த மேனியை வந்து பாரடா

குரல் எடுத்ததோர் குயில் படுத்தது

குமுறி நின்றதோர் புயல் படுத்தது

தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது

- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பதிவு: புதிதாய் பிறப்போம் நன்றி தமிழரசி


No comments:

Post a Comment

ENB-Videos