SHARE

Saturday, August 14, 2010

விஸ்தரிப்புவாத பாரத மணிக்கொடி புரட்சியின் நெருப்பில் தீய்ந்து கருகும்!

ஆகஸ்ட்-15 யாருக்கு சுதந்திரம்?
* அணுவிபத்து இழப்பீடு மசோதா – ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்திய மக்களைப் பலிகொடுக்கவே!
* பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் – அமெரிக்காவின் ஆதிக்க நலனுக்கே!
* ‘பசுமை வேட்டை’ – கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கவே!
* பன்னாட்டுக் குழும விவசாயமும், மரபணுமாற்றத் தொழில்நுட்பமும் வேளாந்துறையை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தவே!
* சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி, எண்ணெய் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயிக்க உரிமை – விளைவு விலைவாசி ஏற்றம்! மக்களுக்கோ... பட்டினிச்சாவு!
இதுவா சுதந்திர அரசு? தொடர்வோம் சுதந்திரப் போரை!
ஏனெனில் ஈழத்தின் இரத்தக்கறையோடு, காஸ்மீரீன் குருதிப் புனலோடு, ஆந்திராவின் பச்சை இரத்த வெறியோடு ஒளிரும் இந்திய விஸ்தரிப்புவாத பாரத மணிக்கொடி புரட்சியின் நெருப்பில் தீய்ந்து கருகும்!

விடுதலைத் தீபமாய் இந்தியச் செங்கொடி புரட்சியின் நெருப்பை எங்கும் பரவும்!

No comments:

Post a Comment

20 AIADMK to join TVK