SHARE

Thursday, July 15, 2010

இனப்படுகொலையும் அந்நியமுதலீடும்

ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை யுத்தத்தின்- (இறுதி)- மூன்றாண்டுகளில் 2006, 2007, 2008 இலங்கையில் அந்நிய முதலீடு முறையே 604,734,889 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளதை சிறீலங்கா முதலீட்டு அதிகார சபையின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.2006 இலிருந்து 2008 இல் இது 46% அதிகரிப்படைந்துள்ளதை இப்புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இந்த அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுமே ஆகும்.இந்த முதலீட்டாளர்களின் நலன் ஈழப்போரில் நீதியான தமிழர் தரப்பை நசுக்குவதை வேண்டி நின்றது என்பதையே இவ் ஆதாரம் காட்டுகின்றது.
இதேகாலத்தில் தான் இதே சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் '' கிளிநொச்சி நிர்வாகத்துக்கு '' கிடைக்கும் என்றும், ஆக இறுதியில் 2009 இன் ஆரம்ப மாதங்களில் இவர்கள் மூலம் ஒரு யுத்த நிறுத்தம் சாத்தியம் என்றும் அரசியல் ரீதியில் நம்பப்பட்டது.அதற்காக போராட்டங்கள் நடத்தப்பட்டது.குறிப்பாக புலம்பெயர் நாடுகளில், முதலீட்டாளர்களின் தாய் மடியில்.
எத்தகைய முரண்!
தகவல்:
BOARD OF INVESTMENT OF SRI LANKA
Performance Highlights
Statistical Summary - (2006, 2007 & 2008 ) (January - December)
Foreign Direct Investment 2006 /2007 /2008*
Rs.Mn. 62,714 / 81,298 / 96,268
US $ Mn. 604 /734/ 889
http://www.boi.lk/2009/statistics_in_brief.asp

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...