SHARE

Tuesday, February 02, 2010

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்

No comments:

Post a Comment

Gas prices are about to take a big jump

  Gas prices are about to take a big jump, analysts say, with the worst still to come The forecast of economic impacts beyond November’s mid...