SHARE

Thursday, September 03, 2009

தமிழ்ச்செல்வனின் உதவியாளர் கைது!

யாழ் உதயன் 2009-09-02 06:11:50

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியாளராகச் செயற்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியாளராகச் செயற்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாடு செல்வதற்காக தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார். தனது கணவன் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அந்தப் பெண் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் கூறினர். சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...