SHARE

Monday, November 25, 2024

Scorched Earth-Military Policy

 

ENB Visual News

சமரன் - ஏஎம்கே நினைவு நீடூழி வாழ்க!

 

மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் மக்கள் யுத்தம் போல்ஷிவிக்
கட்சியின் நிறுவனருமான தோழர் ஏஎம்கே

நவ-25 - மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் மக்கள் யுத்தம் போல்ஷிவிக் கட்சியின் நிறுவனருமான தோழர் ஏஎம்கேவின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தில் சமரன் தனது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறது. சமரன் குழு ஏஎம்கேவின் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதலில் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஏ.எம்.கே மறைவதற்கு முன்பு ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் பெறும் என வழிகாட்டினார். அவரது லெனினிய தீர்க்க தரிசனம் இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இவ்வாண்டு நினைவுதினத்திற்கு தனது நிலைபாட்டை பின்வருமாறு முன்வைக்கிறது.

பாலஸ்தீன விடுதலை போராட்டம் வெல்க!

பாலஸ்தீனத்தின் மீதான அமெரிக்கா-நேட்டோ- இஸ்ரேல் பாசிசக் கூட்டணியின் இன அழிப்புப் போர் கடந்த ஓராண்டாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 75% சதவிகிதம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். காசா ரத்தவெள்ளத்தில் மிதக்கிறது.

மத்தியக் கிழக்கில் வளர்ந்துவரும் சீன- ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தை வீழ்த்தி தனது மேலாதிக்கத்தை நிறுவவே இந்த பாசிசக் கூட்டணி பாலஸ்தீனத்திற்கு எதிரான ஒரு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்கா 17.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. இஸ்ரேலிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அமெரிக்காவில் 24 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் இஸ்ரேலிய முதலீடு 3 மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 300 அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரேலில் ஆய்வு, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்து செயல்பட்டு வருகின்றன.

ஹமாசிற்கு இராணுவ உதவி செய்து வருகின்ற காரணத்தால் சமீபத்தில் லெபனானின் ஹிசபுல்லா, ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புகளின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. ஹமாசின் முக்கியத் தலைவர்களையும் கொன்றது. லெபனானில் பேஜர் -வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்ளிட்ட லெபனான் மக்களையும் கொன்றது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா, ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தன. ஈரான், இஸ்ரேலுடைய அதி நவீன ஏவுகனை தடுப்பு மையங்கள் மீதே தாக்குதல் தொடுத்து இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மீண்டும் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த அக்டோபர் 26 அன்று இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானில் செயல்படும் சீனாவின் எண்ணெய்-எரிவாயு வயல்கள், அணு நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது; போரில் சீனாவை இழுத்துவிடும் அபாயம் இருப்பதால் பைடன் நிர்வாகம் தலையிட்டு இதை நிறுத்தியது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், சீனா - ரஷ்யா - ஈரான் கூட்டணியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் அமெரிக்கா ஒரு நேரடியான ஏகாதிபத்திய போரை தவிர்க்க விரும்புகிறது. தொடர்ந்து அப்பிராந்தியத்தில் இஸ்ரேலை கருவியாகக் கொண்டு ஒரு மறைமுகப் போரை அமெரிக்கா நடத்த விரும்புவதற்கு காரணமும் இதுவே ஆகும்.

இஸ்ரேலின் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாராமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. கடந்தாண்டு அதனுடைய ஜிடிபி 6.7% சதவிகிதத்திலிருந்து 2% சதவிகிதமாக வீழ்ந்துவிட்டது. இந்நெருக்கடியை இஸ்ரேல் மக்கள் மீது சுமத்தி வருவதால் இஸ்ரேல் மக்களும் நெதன்யாகு ஆட்சிக்கு எதிராக திரும்பியுள்ளனர். நெருக்கடியிலிருந்து மீளவும் சரிந்துக் கொண்டிருக்கும் தனது பிம்பத்தை மீட்கவும் நெதன்யாகு அரசு, பாலஸ்தீனம் என்ற நாடே இருக்கக் கூடாது என்று யுத்தவெறி கொண்டு அலைகிறது. போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஹமாஸ், ஐ.நாவின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் அரசு செவிமடுக்கவில்லை. பொருளாதார

மறுபுறம் சீன-ரஷ்ய ஏகாதிபத்தியங்களும் மத்தியக் கிழக்கில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஈரானைக் கருவியாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. பாலஸ்தீன உரிமை போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டே, இஸ்ரேலுடன் தொடர்ந்து அரசியல் பொருளாதார இராணுவ உறவுகளையும் வளர்த்து வருகின்றன. இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகள் செய்து வருவதில் ரஷ்யா அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 2ம் இடத்தில் உள்ளது. வர்த்தக முதலீடுகளில் சீனா 2ம் இடத்தில் உள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் இஸ்ரேலில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலின் நெருக்கடியைத் தீர்க்கும் விதமாக சீன-ரஷ்ய-இஸ்ரேல் உறவுகள் வளர்ந்து வருகின்றன. சீனா இஸ்ரேலுக்கு சுமார் 20000 தொழிலாளர்களை ஏற்றுமதி செய்துள்ளது.

மத்தியக் கிழக்கில், இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களின் மேலாதிக்க மற்றும் மறுபங்கீட்டு முயற்சிகளும் இஸ்ரேல் ஈரானின் துணை மேலாதிக்க முயற்சிகளும் அப்பகுதியில் மறைமுகப் போர் அதாவது பனிப்போர் நீடித்து வருவதற்கான பொருளியல் அடிப்படையாகும். இதனால் பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்புப் போர் மறைமுக பிராந்தியப் போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் மற்றும் ஈரானுடனான ரஷ்ய சீனாவின் அரசியல் - பொருளாதார - இராணுவ -வர்த்தக உறவின் காரணமாகவும், அமெரிக்க-நேட்டோ முகாம்களின் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் ஒரு நேரடி ஏகாதிபத்தியப் போராக மாறும் நிலைமைகள் இன்று இல்லை.

இவ்வாறாக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான இந்த பனிப்போரில் பாலஸ்தீன விடுதலை பலியிடப்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் மீதான நேட்டோ -இஸ்ரேலின் இன அழிப்புப் போரை ஷாங்காய் கூட்டமைப்பு வேடிக்கைப் பார்த்து வருகிறது; ஏற்கெனவே இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று கூறி வருகிறது. போர் நிறுத்தம் கோருவதும்கூட இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது சந்தை நலன்கள் பாதிக்கப்படும் என்பதால்தானே ஒழிய பாலஸ்தீன விடுதலைத் தேவையிலிருந்து கோரவில்லை. ஹமாஸ் இயக்கத்தை அழித்து காசாவை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதில் இரண்டு ஏகாதிபத்தியங்களும் ஒரே நிலைபாட்டில்தான் உள்ளன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஏகாதிபத்திய மேலாதிக்க நலன்களை புரிந்துக் கொண்டு இராணுவ ரீதியாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் செயல்பட்டால்தான் பாலஸ்தீன விடுதலையை வெல்ல முடியும்.

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு துணைப்போகும் மோடி ஆட்சி

அமெரிக்காவின் தெற்காசிய ஏஜன்டான மோடி அரசு பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதானி - எல்பிட் யுஏவி மூலம் ஆளில்லா போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிஎல்ஆர் சிஸ்டம் (அதானி மற்றும் இசுரேல் வெஃபன் இண்டஸ்ட்ரீஸ் நி நிறுவனத்தின் கூட்டு நிறுவனம்) ஆயுத தளவாடங்களை இசுரேலுக்கு அனுப்பி வருகிறது. சென்னை துறைமுகத்திலிருந்து 27 டன் வெடிமருந்துகள் இசுரேலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுமார் 10000 தொழிலாளர்கள் மோடி அரசால் இசுரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். இசுரேலிய - இந்திய கார்ப்பரேட்களுடைய இந்த மூலதனக் கூட்டணி ஜியோனிச-இந்துத்துவ பாசிச கூட்டாக வெளிப்படுகிறது.

அயலுறவுக் கொள்கைகள் மட்டுமின்றி உள்நாட்டுக் கொள்கையிலும் அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கு ஏற்பவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவை அமெரிக்க ஐரோப்பிய நிதிமூலதன நலன்களுக்கும், அம்பானி அதானி நலன்களுக்கும் முழுவதும் பலியிடுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவ பாசிசத்தைக் கட்டியமைப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது மோடி ஆட்சி

மாநில அரசுகளை விருப்பம் போல் கலைக்கவும், அவற்றை மையப்படுத்தப்பட்ட பாசிச அரசின் உறுப்புகளாக மாற்றவும் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை நிறுவவும், நீடித்த நிலையான ஆட்சி என்ற பெயரில் தங்குத் தடையற்ற கார்ப்பரேட் மூலதன சர்வாதிகாரத்தை நிறுவவும் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாசிசத் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

வக்ஃபு வாரியத்தை ஜனநாயகப் படுத்துவது எனும் பெயரில் அதன் சொத்துக்களை கைப்பற்றி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க வக்ஃபு வாரிய சீர்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்துமத நிறுவனங்களின் நிலக்குவியலை பாதுகாத்துக் கொண்டு வக்ஃபு வாரிய சொத்துக்களை கைப்பற்றுவதானது கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும்.

இசுலாமியர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாக ஹிஜாப் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்ததைத் தொடர்ந்து தற்போது மதரசா பள்ளிகளை மூடத் திட்டமிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது எனும் பெயரில் மதரசா பள்ளிகளை மூடுவதன் மூலம் இசுலாமிர்யகளின் கல்வி உரிமைகளை பறிக்கிறது. இது இந்துத்துவ தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பிரதான அம்சமாக விளங்குகிறது. மதரசாக்களில் மதப் போதனைகள் மட்டுமின்றி அரசு பாடத் திட்டமும் நடைமுறையில் இருக்கும்போது மோடி கும்பல் இதற்கு மாறாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கார்ப்பரேட்களுடைய நெருக்கடியை இந்திய மக்கள் மீது சுமத்தி வருகிறது மோடி ஆட்சி. வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிடிபி வீழ்ச்சி பன்மடங்கு பெருகி வருகிறது. பட்டினிக் குறியீட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இந்தியாவை மாற்றி சீரழித்து வருகிறது; உள்நாட்டில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இத்தகைய பாசிச காட்டாட்சியை நடத்தி வரும் மோடி கும்பலை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய வேண்டியது நாட்டு மக்களின் உடனடி கடமையாகும்.

தேர்தலின்போது, மோடிக்கு எதிராக வீராவாசமாக பேசிய ராகுல்காந்தி தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்குள் பதுங்கிக் கொண்டார். மோடி ஆட்சியினுடைய பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை காங்கிரசு கட்சி. ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்த விவாதத்தில் ப.சிதம்பரம் தற்போதைய அரசியல் சட்டத்தில் இது சாத்தியமில்லை என்றும், 5 சட்டத் திருத்தங்களுக்குப் பிறகே இது சாத்தியம் என்றும் பாஜக ஆட்சிக்கு ஆலோசனை வழங்குகிறார். இது பாசிச திட்டம்; இந்த பாசிச திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று காங்கிரசு கட்சி சொல்லத் தயாரில்லை. காரணம், 1947 -1967 காலக் கட்டங்களில் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை முதலில் அமல்படுத்தியது காங்கிரசு கட்சியே ஆகும்.

பாசிச மோடி ஆட்சியின் தமிழக பிரதிநிதியாக விளங்கும் திமுக அரசு

சாம்சங் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்திய போது திமுக ஆட்சி சாம்சங் நிறுவனத்தின் ஏவல்துறையாக செயல்பட்டு அப்போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது. தொழிலாளர்களை குடியிருப்புகளிலும் பேருந்துகளிலும் தேடித்தேடி வேட்டையாடி கைது செய்தது. தொழிலாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் மு.க.ஸ்டாலின் ஜூனியர் மோடியாகவே செயல்பட்டார். தற்போது போராட்டத்தை தொழிலாளர்கள் விலக்கிக் கொண்ட பிறகும் சாம்சங் நிறுவனமும் சாம்சங் முன்னேற்றக் கழக ஆட்சியும் தொழிலாளர்களை பழிவாங்கி வருகின்றன. 1500 தொழிலாளர்களில் 150 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் சங்கம் அமைக்கும் உரிமை சம்பந்தமான வழக்கில் சாம்சங் நிறுவனம் பதில் தருவதற்கு 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. திமுக ஆட்சியோ சாம்சங் நிறுவனத்தையும் மிஞ்சி 3 வார கால அவகாசம் கேட்டுள்ளது. தொழிலாளர்களை பணிக்கு வர விடாமல் தடுப்பது சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பது என திமுக ஆட்சி தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு சேவைசெய்யும் விதத்தில் அண்மையில் முருகன் மாநாட்டை திமுக ஆட்சி நடத்தியது. அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். காவி காடையர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.

மாநாட்டையும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்துத்துவ தீர்மானங்களையும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல் மனமுவந்து பாராட்டியுள்ளது.

கடந்தாண்டு ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக ஆட்சி இந்தாண்டு ஆளுநர் விருந்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தது. ஆளுநர் விருந்தில் அண்ணாமலை, ஹெச். ராஜா உள்ளிட்ட காவி கழிசடைகளுடன் கூடிக் குலாவியது. கலைஞர் சிலையை திறப்பதற்கு வெங்கையா நாயுடு வருகிறார்; கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத்சிங் வருகிறார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா என்று துரைமுருகனும், ராஜ்நாத்சிங் தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என்று கனிமொழியும் கூறி கருணாநிதித்தனம் செய்கிறார்கள்.

திமுக ஆட்சி பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் மோடி ஆட்சியின் தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக அமல்படுத்தி வருகிறது. தனியார்மய தாராளமயக் கொள்கைகளை நாலு கால் பாய்ச்சலில் செயல்படுத்துவதில் மோடியுடன் போட்டிப் போடுகிறது. போக்குவரத்துத் துறை, விளையாட்டு மைதானம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுடுகாடு தகனமேடை என அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது. ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தியதன் மூலம் உள்கட்டமைப்புத் துறை சிறப்பாக உள்ளது என்று எடுத்துக்காட்டி அமெரிக்க நிதி மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. இவ்வாண்டு துவக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது மட்டுமின்றி அண்மையில் அமெரிக்காவிற்கே சென்று மூலதன பிச்சை எடுக்கிறார் மு.க.ஸ்டாலின். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலும், அமெரிக்கா சென்றபோது சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது திமுக ஆட்சி. மட்டுமின்றி, அதானியுடன் 42000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் திமுக அரசு கையெழுத்திட்டுள்ளது; அம்பானியுடன் சுமார் 60000 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை வழக்கு ஏதும் பதியாமல்மோடி ஆட்சி விடுதலை செய்ததன் பின்னணியில் திமுக ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் இடையில் ஓர் இணக்கமான ஒப்பந்தம் உருவாகியுள்ளது. செந்தில் பாலாஜி விடுதலையான சில தினங்களில் மு.க.ஸ்டாலின் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, உதயநிதியை துணை முதலமைச்சராக்குவதற்கும் ஒப்புதல் பெற்று திரும்பினார். எதிர்க் கட்சியாக இருந்த பொழுது மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் மோடிக்கு வெள்ளைக் கொடி காட்டி தமிழக மக்களுக்கு கருப்புக் கொடி காட்டுகிறது.

இவ்வாறு, உலகமய தனியார்மய - தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவது மட்டுமின்றி இந்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் மோடி ஆட்சியும் மு.க.ஸ்டாலின் ஆட்சியும் ஒரே நிலைபாட்டைக் கொண்டுள்ளன. இந்துத்துவத்தின் திராவிட முகமூடியாக திமுக ஆட்சி விளங்குகிறது. ஆனால், ஆரிய-திராவிட மாயைகளில் மக்களை ஆழ்த்தி பாஜகவுடனான வர்க்க உறவுகளை மூடிமறைக்க முனைகிறது.

சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் அறிவாலயத்தின் நிலைய வித்வானாக செயல்படும் மருதையன் வகையறாக்களும், பாஜக பாசிசத்தின் தமிழக கிளையாக செயல்படும் திமுக அரசை விமர்சிக்கத் திராணியற்று கிடக்கின்றன. ஆனால், திமுகவை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளை வெட்கமே இல்லாமல் பாஜக ஆதரவு சக்திகள் என்று முத்திரைக் குத்துகின்றன. திராவிட சாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசரான உதயநிதியின் ஒப்பனையாளராக மாறிவிட்டனர்.

எனவே, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும், பாசிச மோடி ஆட்சியைத் தூக்கியெறிவதும் ஜூனியர் மோடியான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தமிழின விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதும் நமது முக்கியமான கடமைகளாகும். இக்கடமைகளை நிறைவேற்ற அணிதிரளுமாறு தமிழக மக்களையும் ஜனநாயக சக்திகளையும் சமரன் அறைகூவி அழைக்கிறது.

- சமரன் 

(நவம்பர் 2024 இதழில் இருந்து)

IMF happy with AKD’s commitment; eyes 2025 Budget

 


IMF happy with AKD’s commitment; eyes 2025 Budget:

  • Says new Government’s commitment has enhanced confidence and ensures policy continuity
  • Stresses sustaining reform momentum critical to safeguarding hard-won gains via program and putting economy on path towards lasting recovery, and stable and inclusive growth
  • Calls for continued revenue mobilization efforts and spending restraint to prepare 2025 Budget in line with program parameters
  • Suggests avoiding new tax exemptions will help reduce fiscal revenue leakages, corruption risks and build much needed fiscal buffers
  • Urges for redoubling efforts to meet program’s minimum spending target on social spending and to improve targeting
  • Critical next steps – complete commercial debt restructuring, finalize bilateral agreements with official creditors thereby restore debt sustainability.
  • Says new Government’s mandate will reinvigorate governance reforms addressing corruption risks, rebuilding economic confidence, and making growth more robust and inclusive

The International Monetary Fund (IMF) on Saturday welcomed new President Anura Kumara Dissanayake’s and his Government’s commitment to continue with the on-going program and identified the 2025 Budget as a litmus test.

The IMF’s opinion follows its staff and the Sri Lankan authorities on Friday reaching agreement on economic policies to conclude the third review of the economic reform program supported by the IMF’s Extended Fund Facility (EFF).

Once the review is approved by IMF Management and completed by the IMF Executive Board, Sri Lanka will have access to about $ 333 million in financing bringing the total under the program to $ 1.3 billion.

“The new Government’s commitment to the program objectives has enhanced confidence and ensures policy continuity. Sustaining the reform momentum is critical to safeguarding the hard-won gains under the program thus far and putting the economy on a path towards durable recovery and stable and inclusive growth,” said IMF’s Senior Mission Chief for Sri Lanka Peter Breuer at a media briefing on Saturday along with Deputy Mission Chief Katsiaryna Svirydzenka and IMF’s new Resident Representative to Sri Lanka Martha Tesfaye Woldemichael.

Breuer said The IMF’s Executive Board will consider completion of the review based contingent on: (i) the implementation by the authorities of prior actions including the submission of a 2025 Budget consistent with program objectives; and (ii) the completion of financing assurances review, which will focus on confirming multilateral partners’ committed financing contributions and whether adequate progress has been made with the debt restructuring to give confidence that the restructuring will be concluded in a timely manner and in line with the program’s debt targets.

The IMF reiterated that Sri Lanka’s ambitious reform agenda supported by the EFF is delivering commendable outcomes. The economy expanded on average by 4% y-o-y in the four quarters ending in June 2024. High-frequency indicators point to continued expansion across all sectors. Average headline and core inflation remained contained at 0.8 and 3.8% during the third quarter. Gross official reserves increased to $ 6.4 billion at the end-October 2024 with sizable foreign exchange purchases by the Central Bank. Public finances have strengthened following substantial fiscal reforms.

Breuer also said the program’s performance was strong, with all quantitative performance criteria and indicative targets (IT) for end-June 2024 met, as well as the ITs for end-September 2024, except for the IT on social spending. Most structural benchmarks due before October-2024 were either met or implemented with delay; some benchmarks are delayed because of the election cycle.

He said maintaining macroeconomic stability and restoring debt sustainability are key to securing Sri Lanka’s prosperity and require persevering with responsible fiscal policy. Continued revenue mobilisation efforts and spending restraint are needed to prepare the 2025 Budget in line with program parameters. Revenue administration reforms and efforts to improve tax compliance will help to ensure that the burden stemming from the crisis is shared proportionately to taxpayers’ ability to contribute. Avoiding new tax exemptions will help reduce fiscal revenue leakages, corruption risks and build much needed fiscal buffers, including for social spending and to support Sri Lanka’s most vulnerable. Maintaining cost recovery in fuel and electricity pricing and resolving legacy debts will help minimise fiscal risks arising from State-owned enterprises.

The Government has an important responsibility to protect the poor and vulnerable at this difficult time. It is important to redouble efforts to meet the program’s minimum spending target on social spending and to improve targeting, adequacy, and coverage of social safety nets, particularly Aswesuma.

While inflation has decelerated faster than expected, continued monitoring is warranted to ensure sustained price stability and support macroeconomic stability. Against ongoing global uncertainty, it remains important to continue rebuilding external buffers through strong reserves accumulation.

Sri Lanka’s recent Agreement in Principle with bondholders is an important milestone putting Sri Lanka’s debt on a path towards sustainability. The critical next steps are to complete the commercial debt restructuring, finalise bilateral agreements with official creditors along the lines of the accord with the Official Creditor Committee and implement the terms of the other agreements. This will help restore Sri Lanka’s debt sustainability.

The new Government’s mandate will reinvigorate governance reforms addressing corruption risks, rebuilding economic confidence, and making growth more robust and inclusive.


The IMF team held meetings with President and Finance Minister Anura Kumara Dissanayake, Labour Minister and Deputy Minister of Economic Development Prof. Anil Jayantha Fernando, Deputy Minister of Finance and Planning Dr. Harshana Suriyapperuma, Senior Economic Advisor Duminda Hulangamuwa, Central Bank of Sri Lanka Governor Dr. P. Nandalal Weerasinghe, Secretary to the Treasury K.M. Mahinda Siriwardana, and other senior Government and CBSL officials. The team also met with Parliamentarians, representatives from the private sector, civil society organisations, and development partners.” We would like to thank the authorities for the excellent collaboration,” Breuer added.

US development agency 'assessing ramifications' on Adani's Sri Lanka project

 US development agency 'assessing ramifications' on Adani's Sri Lanka project


 

Bloomberg News first reported the news on the DFC on Sunday.
The Adani Group has said the Justice Department accusations as well as those leveled by the U.S. Securities and Exchange Commission in a parallel civil case are "baseless and denied" and said it will seek "all possible legal recourse."⍐

Sunday, November 24, 2024

NPP அழகான வாழ்க்கை!


The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel

Tourism Minister draws inspiration from ABBA music at Arrival from Sweden concert

Daily FT Monday, 25 November 2024

Tourism Minister Vijitha Herath delivered a hopeful message on Saturday while attending the live performance of ‘Arrival from Sweden: The Music of ABBA’, an internationally renowned tribute band.

The event, which drew around 2,500 vibrant enthusiasts, was filled with music, nostalgia and entertainment, as the Minister shared admiration for the iconic band and one of his favourite songs, ‘I have a dream’.

 The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel.Pic-Colombo Gazette


Referring to the song’s lyrics, Minister Herath expressed his optimism for Sri Lanka’s future. 

“The lyrics say, ‘I have a dream and I’ll cross the stream’. Today, people are happy and I am confident that all Sri Lankans share this desire to cross the stream he remarked to enthusiastic cheers and applause from the audience. “In few years, we will cross that stream together and achieve that dream of a better future,” Herath added. 

The Minister highlighted the importance of tourism as a key driver of economic growth, stating that the industry’s significance has been recognised in the Government’s vision for a prosperous and stable country.

 The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel.Pic-Colombo Gazette


“Tourism is a vital industry to boost economic growth. It will contribute significantly in realising our shared dream of a thriving and prosperous country,” he said. 

The event which celebrated the timeless music of ABBA, also saw the participation of Prime Minister Harini Amarasuriya, JVP General Secretary Tilvin Silva, former Ministers, tourism industry champions, business leaders and local artists. 

 The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel.Pic-Colombo Gazette


The brainchild of the event, Mt. Lavinia Hotel Chief Operating Officer (COO) Anura Dewapura expressed immense satisfaction with the success of the event, describing it as a culmination of six months of meticulous planning and coordination.

“The effort we put into organising this truly paid off,” he remarked, highlighting the significance of hosting such a landmark performance. 

 The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel.Pic-Colombo Gazette


Dewapura also emphasised the broader vision behind hosting the concert, pointing to the importance of positioning Mt. Lavinia Hotel as a vibrant destination for high-profile events. 

 The Music of ABBA From Sweden show Mount Lavinia Hotel.Pic-Colombo Gazette


The print media partner of the event was Wijeya Newspapers Ltd.  The ABBA tribute show marked the debut performance in Sri Lanka with its full 17-member band, ‘Arrival from Sweden: The Music of ABBA’ renowned globally for their authentic and electrifying renditions of the iconic group’s music. With an impressive track record of touring over 80 countries and performing 120 shows in the UK alone, their arrival in Sri Lanka was a historic moment for fans of the legendary band.⍐

Pix by Waruna Wanniarachchi + Akila Jayawardena+Colombo Gazette

Anura Kumara Dissanayake should fully implement the “vision document” adopted with India last year-Ranil

 

The vision document emphasized on strengthening maritime, air, energy ties and people-to-people connectivity between India and Sri Lanka. It also envisaged accelerating mutual cooperation in tourism, power, trade, higher education and skill development.

Ranil in India, speaks about President AKD

News Wire November 23, 2024

Former Sri Lankan President Ranil Wickremesinghe on Friday said his successor Anura Kumara Dissanayake should fully implement the “vision document” adopted with India last year.

President Dissanayake, elected to the top office in September this year, is scheduled to visit India in mid-December.

During his India trip in July 2023, then-President Wickremesinghe had signed a vision document with Prime Minister Narendra Modi, outlining areas of cooperation between the two countries, especially economic partnership.

“In the vision document signed by me and Prime Minister of India Narendra Modi, we have set out the areas of bilateral cooperation between the two countries. I am of the opinion he (Dissanayake) should move forward and we should implement this vision document in its entirety,” he told PTI.

Wickremesinghe, who attended an event at the Sri Sathya Sai Vidya Vihar school in Indore, was replying when asked what should be the areas of mutual cooperation when Dissanayake visits New Delhi next month and meets PM Modi and other Indian leaders.

The vision document adopted during Wickremesinghe’s tour emphasised on strengthening maritime, air, energy ties and people-to-people connectivity between India and Sri Lanka. It also envisaged accelerating mutual cooperation in tourism, power, trade, higher education and skill development.

Earlier, Wickremesinghe inaugurated a sports complex at the Sri Sathya Sai Vidya Vihar and later addressed the audience on the topic “Common Heritage: India and the Indian Ocean”.

Referring to India’s assistance during Sri Lanka’s unprecedented economic crisis, he said his country has benefited from this legacy during the most difficult period in its history.

Wickremesinghe, who has also served as prime minister of the island nation, thanked PM Modi and Union Finance Minister Nirmala Sitharaman for the financial assistance.

Notably, in April 2022, Sri Lanka declared its first-ever sovereign default since gaining Independence from Britain in 1948. The unprecedented financial crisis led the then-President Gotabaya Rajapaksa to quit office amid civil unrest.

India had then pitched in with about $4 billion in assistance to enable the island nation to recover from the crisis after it announced the default on over $51 billion in foreign loans.

Citing different examples at the school gathering, Wickremesinghe maintained India and Sri Lanka have had religious, trade, linguistic and cultural relations since ancient times. (Business Standard)⍐

Thursday, November 21, 2024

மாவீரர் தினம் 2024- ENB முழக்கச் சுவரொட்டி.


பத்தாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை-தமிழ்.


பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என அனைத்து மாகாணங்களும் மக்களும் அதற்கு பங்களிப்பு செய்துள்ளன.

இனவாதத்திற்கு இடமளிக்கப்படாது

இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை,சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளையில் அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலும் சமூகத்திலும் பார்ததிருக்கிறோம். ஆனால் அனைத்து இன மக்களும் எம்மை நம்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எம்மை நம்பாமல் ஏனைய கட்சிகளை நம்பும் மக்கள் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமான அமையாது.

பல்கட்சி முறையை பலப்படுத்துவோம்

பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்புதான் ஜனநாயகமாகும். அதேபோல் பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களிக்கான அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்ய கடமையைப் பட்டிருக்கிறோம். தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம் அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். பங்குக்கு எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

எனவே நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளியாமல்,இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்

எனவே எமது நாட்டு மக்கள் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகவும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்க கூடாது என்ற பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம்.பொருளாதாரம்,ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மீள ஏற்படுத்துவோம்

இந்த மக்கள் ஆணையில் மற்றுமொரு எதிர்பார்ப்பு மறைந்திருந்தது. நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட முறையற்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவான நான் 24 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினேன். 24 வருடங்களும் இந்த பாராளுமன்றம் மக்கள் வெறுப்பை தேடிக்கொண்ட காட்சிகளை கண்ணால் கண்டிருக்கிறேன். பாராளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததை பார்த்திருக்கிறோம். சபைக்குள்ளும் சபைக்கு வௌியில் உள்ள மக்கள் மத்தியிலும் இந்த உயர் சபை தொடர்பிலான நம்பிக்கை படிப்படியாக அற்றுப் போனது. உயர்வான ஒரு சபையில் இருந்துகொண்டு மக்களை புறக்கணிக்கும்,மக்கள் வெறுப்பை தூண்டும், மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.  அவ்வாறானதொரு பாராளுமன்றம் இந்த நாட்டை ஆள்வதற்கு பொருத்தமானதாக அமையுமென நான் நம்பவில்லை. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பொருத்தமானது அல்ல. இனியும் மக்களின் நிதி அதிகாரத்தை கையாள்வதற்கு அந்த பாராளுமன்றம் பொருத்தமற்றது. மக்கள் நிதியை கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

எனவே, தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான பாராளுமன்றமாக இருக்க முடியாது. இந்தப் பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தின் மீயுர்வை பாதுகாக்க வேண்டும். இந்தப் பாராளுமன்றம் பெருமளவான புதிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்துள்ளது. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை துரிதமாக வழங்கக் கூடிய பாராளுமன்றம் இது. புதிய சபாநாயகரும் பணிக்குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இந்த பாராளுமன்றத்தை மீளக்கட்டமைக்க ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கு மறைவான குகையாக இருக்கக் கூடாது.இந்தப் பாராளுமன்றத்தில் போதுமான நவீன தொழில்நுட்ப முன்னேற்த்திற்கு அமைய நாளாந்தம் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக இருக்கும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது.

மக்களுக்கு வெளிப்படையான நிலையமாக மாற்ற நாம் தொடர்ந்தும் முயன்று வருகிறோம். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாயின் நாம் பேசும் விடயம்,நடத்தை,வெளியிடும் கருத்து என அனைத்தும் மக்கள் முன்னிலையில் ஆராயப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தான் இறுதிமுடிவு என நான் யாராவது நினைப்பதாக இருந்தால் அது இறுதியானதல்ல. அடுத்த அதிகார பரிமாற்றம் வரை மற்றும் அடுத்த மக்கள் ஆணை உரசிப்பார்க்கப்படும் வரை எம்மை பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்குள்ளது. இந்த பாராளுமன்றம் எதிர்வரும் சில வருடங்களில் மக்களின் பரிசோதனையில் சித்தியடைந்த பாராளுமன்றமாகும் என கருதுகிறேன். அதற்கு சபாநாயகரினதும் எம்.பிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும்.

இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள்ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சில பாதகமாக எண்ணங்கள் காணப்படுகிறது. அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பிலும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையும் தான் எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.
இந்த மக்கள் ஆணையின் போது சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கசார்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை.உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது.
அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும். அதனால் செயற்திறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அரச சேவையில் இருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது.அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஜனநாயக அரசை உருவாக்குவோம்

விசேடமாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் நோக்கினால் அனைத்து பிரஜைகளுக்கும் தாம் பின்பற்றும் மதம்,மொழி மற்றும் கலாசாரத்திற்கு அமைய தனிமைப்படத் தேவையில்லை. தாம் பின்பற்றும் மதம் தனக்கு மேலதிக அழுத்தத்தைத் கொடுப்பதாக எண்ணத் தேவையில்லை. தமது கலாசாரம் தனக்கு மேலதிக அழுத்தம் தருவாதக நினைக்கத் தேவையில்லை. தாம் ஆதரிக்கும் அரசியல் மேலதிக அழுத்தம் கொடுப்பதாக கருதத் தேவையில்லை. அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குமிடையில் தமக்கென தனித்துவங்கள் இருக்கலாம். ஆனால் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அச்சமோ சந்தேகமோ இன்றி ஜனநாயக நாடொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்

அந்தப் பொறுப்பில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது பிரதானமானதாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதென்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களின் ஊடாக மாத்திரமல்ல. இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சமயங்களில் நீண்ட கலந்துரையாடல்கள்,தொடர்ச்சியான விவாதங்களின் ஊடாக முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். சட்டங்களை நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல. அவற்றை உரிய வகையில் அமுல்படுத்த வேண்டும்.

அதே போன்று சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி நடந்தால் சட்டத்தின் முன்பாக சென்று நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அந்த அநீதிக்காக சட்டத்தின் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுக்கள் மத்தியில் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தாமல் நல்லாட்சியொன்றை கட்டியெழுப்ப முடியும் என்று நாம் கருதவில்லை. சிறந்த ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு சட்டத்தின் ஆட்சி அதில் பிரதான அம்சமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நாம் அரசு என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் சட்டத்திற்கு உட்பட்டுள்ளன. எந்தவொரு அரசியல்வாதியோ அதிகாரம் உள்ள எவருமோ இனிமேல் சட்டத்தை விட உயர்வாக இருக்கமாட்டார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அதே போன்று சட்டம் மீதான மக்களின் வீழ்ச்சியடைந்த நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில் எவரிடமும் பலிவாங்கவோ துரத்திச் சென்று வேட்டையாடும் நோக்கமோ எமக்குக் கிடையாது. அனைவரினதும் அரசியல் செய்யும் சுதந்திரத்தை உறுதி செய்வோம்.

பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்

ஆனால் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பல குற்றச் செயல்கள் உள்ளன. அவை காலத்தில் போக்கில் மூடிமறைக்கப்படும் என குற்றவாளிகள் நினைத்தால் அது சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை வீழுச்சியடையச் செய்வதாக அமையும். சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருந்தால் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நிதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பல்வேற சந்தர்ப்பங்களில் நாட்டில் நடந்துள்ள குற்றச் செயல்கள் அரசியல் மேடைகளில் அரசியல் கோசங்களாக பயன்படுத்தப்பட்டன.ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட தவறியுள்ளன.சர்ச்சைக்குரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை அம்பலப்படுத்துவோம். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவோம். பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை நிலைநாட்டுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சட்டம் ,நியாயம் என்பன நிலைநாட்டப்படும் ஆட்சியொன்று எமக்கு அவசியம்.அதனை இந்த மக்கள் ஆணையிலாவது நிலைநாட்ட தவறினால் மீள அவ்வாறான ஆட்சிதொடர்பில் கனவு காண்பதில் எந்தப் பயனும் இல்லை. இந்த மக்கள் ஆணையில் அந்த நோக்கம் உள்ளது. அந்த ஒப்பாரி உள்ளது. இந்த மக்கள் ஆணையில் தமது இறந்த தமது உறவினரின் வெளிப்பாடு உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நண்பர்களின் ஒப்பாரி இந்த மக்கள் ஆணையில் இருக்கிறது. அவர்களுக்கு நாம் நியாயத்தை நிலை நாட்டாவிட்டால் யார் நிறைவேற்றப் போகிறார்கள்.யாருக்குப் பொறுப்புக் கொடுக்க முடியும்?
அவற்றை நிறைவேற்றாவிட்டால் நீதி,நியாயம் தொடர்பிலான கனவுகள் இந்த நாட்டில் மடிந்து போகும். கனவில் கூட நீதி,நியாயம் தொடர்பான எதிர்பார்ப்பு நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படும் என நினைக்கவில்லை. அதனால் நீதி,நியாயம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். குற்றங்கள் தொடர்பிலும் ஊழல் மோசடி தொடர்பிலும் சட்டத்தை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியையம் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையையும் மீள உறுதிப்படுத்துவோம். அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நாம் செய்யாவிட்டால் யார் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எம்முன் உள்ளது.

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவோம்

இந்த ஆட்சி எமக்குக் கிடைத்த போது நாம் எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபட்டிருந்தோம். பொருளாதாரத்தின் ஆழத்தை நாம் அறிந்திருந்தோம். எமது பொருளாதாரம் பெரும் ஆழத்தில் பாரிய பரப்பில் சிக்கியிருக்கிறது. மிகச்சிறிய நூலொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் தான் எம்முன் உள்ளது. இந்தப் பொருளாதாரத்தினால் பாரிய அதிர்ச்சிகளை தாங்க முடியாது.
இப்பொருளாதாரத்திற்கு பாரிய திருப்பங்கள் சரிவராது. அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் பொருளாதாத்துடன் தொடர்புள்ள குழுக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்துவது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. பொருளாதார நெருக்கடியின் அளவின் காரணமாக எமது சிறு தவறும் பாரிய விளைவை ஏற்படுத்தும். சிறு அதிர்ச்சியும் இந்த பொருளாதாரத்திற்கு ஒத்துவராது.எனவே இந்தப் பொருளாதாரத்தை வீழ இடமளிக்காத வகையில் சகல சந்தர்ப்பங்களிலும் அனைத்து முடிவுகளையும் சகல கோணங்களிலும் சிந்தித்து மிகவும் மென்மையாக எடுக்க வேண்டியுள்ளது.

எமக்கு தவறு செய்வதற்காக வாய்ப்பை இந்த பொருளாதாரம் வழங்கவில்லை.எனவே இந்தப் பொருளாதாரத்தை வழிநடத்துகையில் மென்மையான அனைத்து இடங்கள் குறித்தும் சிந்தித்து ஆராய்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்ததில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியம் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டின் படி செயற்படுவோம்

கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல்பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என நம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.

நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது.

புதிய பொருளாதார மூலோபாயங்கள் 

எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும்

 எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல்மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பகுதி மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும்.அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயனம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தைப் போக்கை நிர்வகித்து பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக நியாயமான விலையில் வழங்குவோம்

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப்படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும். இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானது. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.
அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம்.

சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் துரித அபிவிருத்தி

சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

அமைவிடத்தின் பயனை பெற்று கப்பற்துறையை முன்னேற்ற நடவடிக்கை

இன்றும் உலக துறைமுகங்கள் கொழும்பு துறைமுகம் வரிசையில் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது.

விவசாயத்துறையில் புரட்சிகர முன்னேற்றம்

நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம். விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பெரும் சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாரணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.
அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.

தனியார் துறை உதவியுடன் கனிய வளத்தினால் உச்சபயன் பெற்று பெறுமதிசேர்க்க நடவடிக்கை

கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை செய்ய எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம்.

டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்..

அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியும் என திர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும். கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் எனநம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.

நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது. எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல் மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பிரதேச மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது. பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும். அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயணம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப் படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும்.இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானதா. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.

அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம். சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

இன்றும் உலக துறைமுகங்களின் வரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது.

நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம். விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பாரிய சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.

அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். தற்பொழுது அமைவ கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.

கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம்.

டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.

அவரை அந்த அமைச்சின் செயலாளராகவும், ICT நிறுவனத்தின் தலைவராகவும், டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். இதை ஒரே இடத்தில் இருந்து இயக்க வேண்டும். பொருளாதாரத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டுச் செல்வதிலும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் மிக முக்கியமானது.

எமது நாடு தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தப்பட வேண்டுமாயின், அந்த அந்த உயர் நிலை “டிஜிட்டல் ஸ்ரீலங்கா” ஆக அமைய வேண்டும். அதற்காக அரசாங்கம் முழுமையான அரப்பணிப்புடன் செயலாற்றும். அதன் வெற்றிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கிறது.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அடுத்த பிரதான திட்டமாக cleaning sri lanka வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். குறிப்பாக, தூய்மையான இலங்கை என்பது சுற்றுச்சூழல் அமைப்பை மட்டும் குறிக்கவில்லை. மக்கள் அரசியல் அதிகாரத்தில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர முடியும்.

அரசாங்க அதிகாரிகள் அமைப்பில் நல்ல மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் ஒரு நல்ல அரசை கட்டியெழுப்புவதற்கு மக்களிலும் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களில் ஒரு நல்ல மாற்றம் இல்லாமல், மேலே இருக்கும் அரசியல் அதிகாரத்தை மாற்றுவதால் மாத்திரம் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது. அதனால்தான் நல்ல பிரஜைகள், நல்ல மனப்பான்மை, நல்ல செயல்பாடுகள் மற்றும் நல்ல நடத்தை கொண்ட மக்களை உருவாக்க வேண்டும்.
அதுவே தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் நோக்கங்களாக அமைகின்றது. குறிப்பாக இப்படி ஒரு தேசிய சபையில் விவாதிக்கக் கூடாத, பிரதேச சபை மட்டத்திலான பிரச்சினையாக இருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல இந்த நாட்டில் சுத்தமான கழிப்பறை அமைப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகும், தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் சில பெண்கள் வீடு வரும் வரை தண்ணீர் அருந்துவதில்லை. சுத்தமான கழிப்பறை கட்டமைப்பொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும். கழிப்பறை கட்டமைப்பு கட்டப்பட்டாலும், சமூகத்தில் நல்ல மனப்பான்மை கட்டியெழுப்பப்படவில்லை. சாதாரண மக்களுக்கு பொது இடமாக அன்றி அவை அழிவுகரமான இடமாக மாறியுள்ளன. இதனால் என்ன தெரிகிறது? இது எமது நாட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் காணப்படுகின்ற அணுகுமுறையாகும். எனவே, தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக அவ்வாறான மனோபாவத்தையும் மாற்ற எதிர்பார்க்கின்றோம்.

சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக மாறுவது எவ்வாறு? இப்போது மட்டும் வாழ்ந்து களிப்பது எவ்வாறு இன்று சிந்திக்காமல் நம் எதிர்கால சந்ததியினருக்காக நம் நாட்டின் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது, சாரதி என்ற வகையில் நாம் எவ்வாறு வீதியில் வாகனத்தை செலுத்துவது?
நாம் எப்படி பாதைகளை கடப்பது? நாம் ஒரு இடத்தில் நுழையும் போது நாம் எப்படி மற்றவர்களை மரியாதையுடன் வரவேற்க முடியும்? இவ்வாறானதொரு சமூகத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது. ஒருவரை ஒருவர் பற்றி கவலைப்படாத சமூகம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமூகமே இன்று கட்டியெழுப்பட்டுள்ளது. ஒரு சிறிய சம்பவம் மோதலை நோக்கி நகர்த்தப்படுகிறது. பொறுமை இல்லை, மற்றவரை மன்னிக்கும் மனப்பாங்கு இல்லை. மற்றவரை இழிவாகப் பார்க்கும் சமூகம் என்று ஒட்டுமொத்த சமுதாயமும் வறண்ட சமுதாயமாக மாறியுள்ளது.

எனவே, இப்படியொரு சமுதாயத்திற்கு ஈரம் தேவை. வறண்ட முகங்கள், கடுமையான முகம் என்பவற்றோடு சமுதாயம் முன்னேற முடியுமா? புன்னகைக்கும் சமுதாயம் வேண்டும். பிறரை கருணையுடன் நடத்தும் சமுதாயம் வேண்டும். மனிதநேயப் பண்புகள் நிறைந்த சமுதாயம் தேவை. பிறர் துன்பத்தில் கருணை காட்டும் சமுதாயம் வேண்டும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி, இலக்கியம், சட்டம், கலாச்சாரம் ஆகியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த சமூகத்தில் மிகவும் உயர்வான மற்றும் தரமான சமுதாயத்தை உருவாக்கும்.

வறுமையை ஒழிக்க பொருளாதார ஒத்துழைப்பு

வறுமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் நியாயமான உணவு வேளை, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, வாழும் வீடு, நல்ல வருமானம் மற்றும் மன சுதந்திரம் ஆகியவற்றை விரும்புகிறார்கள் அல்லவா? குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பது அரசின் முக்கிய பணியாக உள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பமாக தற்போது வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்படும். எதிர்வரும் பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்.

அனைத்து பிரஜைகளையும் கவனிப்போம்

குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு எதிர்கால சமூகப் பேரழிவாக மாறக்கூடும். எனவே, பிள்ளைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டைக் போக்க அந்த வறிய குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவுகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாக்க, போஷாக்குள்ள உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தற்போதைய வறுமையின் காரணமாக பெற முடியாத பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க தீர்மானித்திருக்கிறோம். ஆனால், நீண்டகாலமாக இதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது. எந்தவொரு நாட்டிலும் எந்த நேரத்திலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய மக்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் ஈடுபாடு இல்லாத மக்கள் சமூகமும் உள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளிலும் இப்படிப்பட்ட சமூகம் இருக்கிறது. எனவே, அந்த சமூகத்தை எப்போதும் கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கைவிட மாட்டோம்.

இலங்கையில் அங்கவீனமானவர்கள் உள்ளனர். அங்கவீனமான குழந்தை உள்ள வீட்டில், அதுவே பிரச்சினையாக மாறுகிறது. அவர்களுக்கு சம்பிரதாய வாழ்வியல் முறை கிடைக்காமல் போகிறது. அந்த குழந்தையின் இயலாமையால் பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் முழு வாழ்க்கையும் அரப்பணிக்க வேண்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க விசேட செயன்முறை மற்றும் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எமது அரசாங்கம் அனைத்து மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும் அரசாங்கமாகும். மக்களை கைவிடாத அரசாங்கமாக மாற வேண்டும். இது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.

மேலும், எப்பொழுதும் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மட்டும் வறுமை ஒழியும் என்று நாங்கள் நம்பவில்லை. வறுமையை ஒழிக்க, பிரதிபலன்களை பெறக்கூடி பொருளாதார முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தற்போது, ​​வறுமையில் வாடும் பலரின் முக்கிய வருமான வழிமுறையாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றாமல், வறுமையில் இருந்து மீட்க முடியாது.

மேலும், மீன்பிடி தொழிலை இலாபகரமான தொழிலாக மாற்றாமல் மீனவர்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியாது. எனவே, அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார செயற்பாடுகளை வெற்றிகரமானதாகவும் இலாபகரமானதாகவும் மேம்படுத்துவதே எங்களது முதல் முயற்சியாகும். ஆனால் இந்த பொருளாதார மூலதனங்கள் மட்டும் ஒரு கிராமத்திற்கு போதுமானது அல்ல. புதிய பொருளாதார முறைமைகளும் வாய்ப்புகளும் கிராமங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

நமது சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, சிறு, நடுத்தர தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, மூலதனம் மற்றும் சந்தையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நம் நாட்டில் சந்தை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை. நமது சந்தையில் 38 இலட்சம் என்ற தொகையே உள்ளனர். இது ஒரு சிறிய சந்தை. இந்த சிறிய சந்தையில் மட்டும் வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் தொழில் உரிமையாளர்கள் , தொழில்முனைவோர், வர்த்தகர்கள் என்று பலமான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியாது. எனவே இவர்கள் நாட்டுக்கு வௌியிலிருக்கும் சந்தை வாய்ப்புக்களை தேட வேண்டியது அவசியமாக உள்ளது.

தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும்

அதன்படி, எங்கள் தூதரகத்தை முழுமையாக மறுசீரமைப்போம். இராஜதந்திர உறவுகள் தொடர்பில் எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது. ஆனால் இந்த இலங்கை உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தையை தேடுவது தொடர்பிலான பொறுப்பு உள்ளது. அதற்காக எங்கள் தூதரகங்களை செயற்படுத்துவோம். நமது நாட்டில் மிகவும் தொழில்நுட்பத் திறன்களையும் ஆற்றலையும் கொண்ட ஒரு கட்டுமானத் தொழில் இருக்கிறது. இந்த கட்டுமானத் தொழிலை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்.

எங்களிடம் சில தனித்துவமான தயாரிப்புகள் உள்ளன. அந்தப் பொருட்களுக்கு அதிக மதிப்புகள் மற்றும் பெறுமதிகளை சேர்த்து புதிய தொழில்துறை கட்டமைப்பை உருவாக்கி அவற்றை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தாங்களாகவே முடிவெடுத்து செயல்படுபவர்கள் அல்ல. அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர துறையின் வளர்ச்சியை நாம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரித்துள்ளோம்.

மார்ச் மாதத்தில் புதிய வரவு செலவுத் திட்டம்

அது பற்றிய விடயங்களை “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற விஞ்ஞாபனத்தில் சேர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்தில் தமது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை எமது அமைச்சர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

விரைவில் பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாதுள்ளது. அடுத்த 04 மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்காக டிசம்பர் மாத தொடக்கத்தில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை சமர்பிப்போம். பெப்ரவரி மாத தொடக்கத்தில் பட்ஜெடை சமர்ப்பித்து, மார்ச் மாதத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

எனவே, இந்த திட்டத்தை நடைமுறை ரீதியான பட்ஜெடில் இணைத்துள்ளோம். தற்போது கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளின் அடிப்படையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரித்து, மார்ச் மாத நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.

புதிய யுகத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்
நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மாற்றத்தின் புதிய யுகம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய யுகத்தின் வெற்றிக்கு இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றியிருக்கலாம். நாம் எதிர்மறையான கொள்கைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் மற்றும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் இன்று நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கு செல்ல ஒன்றுபட்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த பொறுப்புக்கு நானும் எங்கள் அரசும் கட்டுப்பட்டுள்ளோம். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை சொன்னார், “இருளை இருளால் விரட்ட முடியாது. ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பால் வெறுப்பை ஒழிக்க முடியாது. அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.⍐

நன்றி
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

China ready to work with EU

  Chinese Foreign Ministry Spokesperson Lin Jian  China ready to work with EU to safeguard global trade rules and justice: FM By Global Time...