SHARE

Sunday, November 29, 2009

ஜனாதிபதித் தேர்தல் 2010


ஜனாதிபதித் தேர்தல் 2010 எந்த முனைக்கு உனது வாக்கு?

மாவீரர் தினம் 2009 மெளனத்தில் TNA

மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்

செய்தி :
மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
[ வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009, 03:14.05 AM GMT +05:30 ]

இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.

பேரினவாத சிங்கள ஆக்கிரமிப்பை உடைத்தெறிந்து, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க புதிய புறநானூறு படைத்த மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழினம் பெருமிதத்துடன் நினைவுகூரும் தேசிய நாள் இன்று.

மாவீரர்கள் நமது தழிழீழ தேசத்தின் வீரப்புதல்வர்கள். எமது மகள்கள், எமது மகன்கள், எமது சகோதரிகள், எமது சகோதரர்கள். தமிழீழத்தின் மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, தமிழ் இனத்தின் உணர்வுடன், உதிரத் துடிப்புடன் ஒன்றாகக் கலந்தவர்கள். இவர்களது தியாகமும் வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிறைந்து நிற்கும்..

நமது தேசத்தினுள் நிமிர்ந்தெழுந்த தேசிய அடையாளத்தினையும் ஆற்றல்களினையும் அவற்றினைக் காத்து நின்ற மக்கள் படையினையும் சிதைத்து விட்டதாக சிங்கள ஆட்சியாளர்கள் இறுமாப்படைந்துள்ள இன்றைய நாளில் இவ்வருட மாவீரர் நாள் மிக முக்கியம் பெறுகின்றது. நமது விடுதலை வேட்கையை உலகிற்கு மிக உறுதியாக எடுத்தியம்பும் நாளாகவும் அமைகிறது.

நமது தமிழீழ தேசத்தினையும், நமது மக்களது வாழ்வினையும் வாழ்விடங்களையும் துவம்சம் செய்தமை மட்டுமின்றி, தமிழ் ஈழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிங்கள பேரினவாதம் சிதைத்து அழித்துள்ளமை மனித நாகரீகத்துக்கும், மனித நேயத்திற்கும் முரணானது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான செயல் அனைத்துலக சமுதாயத்தால் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

மனித நாகரீகத்தைப் பேணும் எந்த ஒரு நாடும் கல்லறைகளைச் சிதைக்கவோ அழிக்கவோ முற்படாது. சிங்களப் பேரினவாதத்தின் இச்செயல் மனித நாகரீக படிமங்களில் அதனுடைய இழிநிலையையும் தமிழினத்திற்கு எதிரான இன வெறியையும் தான் காட்டுகின்றது. தமிழீழ மண்ணிலிருந்து இன்று எமது மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தாலும், தமிழர்
நெஞ்சங்களில் இருந்து அதனை என்றுமே அழித்துவிட முடியாது. மேலும் சுதந்திரத் தமிழீழ மண்ணில் அவ் நினைவாலயங்கள் மீண்டும் கட்டி எழுப்பப்படும்வரை தமிழினம் ஓயவும் மாட்டாது.

தமிழீழத் தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் உரையில், எமது சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கான போராட்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து செல்லுகின்றது எனவும், இந்த நீண்ட படிநிலை வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும்
முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பாரளுமன்ற அரசியல் மூலமும், சாத்வீகப் போராட்டங்கள் மூலமும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இலங்கைத் தீவினுள் அரசியல் வெளி அற்றுப்போனதாலும், சிங்கள பேரினவாதத்தின் மிலேச்சத்தனத்தாலும, தேசியப்பிரச்சனையை தீர்ப்பதற்கான அனைத்துலகப் பொறிமுறை இல்லாமை காரணமாகவும் ஆயுதம் தாங்கிய தமிழீழ
விடுதலைப் போராட்டமாக - அனைத்துலக சட்டங்களுக்கு அமைய பரிணாமம் பெற்றது.

தமிழத் தேசிய இனத்தின் இராணுவ பலமும் அதன் விளைவாக உருவாக்கம் கண்ட நிகழ்வு பூர்வமான தமிழீழ அரசுக் கட்டுமானங்களும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளைப்

பிரதிபலிப்பதற்கும், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கும் தமிழனத்தின் இறையாண்மையை பிரயோகிப்பதற்குமான ஒரு அரசியல் வெளியை ஏற்படுத்தியது. இதற்கான சுதந்திர சிற்பிகளாக திகழ்ந்த மாவீரர்களை தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவு கூரும்.

இன்று பன்னாடுகள் பல்வேறு காரணங்களிற்காக சிங்கள இனவாத அரசுக்குத் துணையாய் நின்று, நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசை அழித்தும் தமிழ் தேசிய இனத்தின் இராணுவ பலத்தை பலவீனமாக்கியும் உள்ளன.

இந் நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வுரிமையை பேணுவதற்கும், சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கும் இறைமையை பிரயோகிப்பதற்குமான அரசியல் வெளி இலங்கைத் தீவிற்கு அப்பாலே உருவாக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டம் இந்த யதார்த்தங்களை உள்வாங்கி மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்பாகும்.

இவ் அரசியல் முன்னெடுப்பு சாத்வீக முறையில், அரசியல் ரீதியாக, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் சர்வதேச நியதிகளுக்கு அமைவாகவும் எடுத்துச்செல்லப்படும். தேசியத் தலைவர்

அவர்கள் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதுமலை கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

நமது மாவீரர் தியாகங்கள் வீண்போகப்போவதில்லை தொடர்ந்து செல்லும் எமது விடுதலை பயணத்திற்கு மாவீரர்களது தியாகங்கள் உந்து சக்திகளாக அமையுமென்பது திண்ணம்.

நாடுகடந்த தமிழீழ அரசினை நெருங்கி வரும் புதிய ஆண்டில் உருவாக்கி, அவ் அரசின் ஊடாக எமது மாவீரர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற - அவர்களது கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் உழைப்போமென இம் மாவீரர் நாளில் நாம் உறுதி பூணுவோமாக.

ஒப்பம் வி.ருத்ரகுமாரன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

ராம் என்கிற புலிகளின் முன்நாள் தளபதி மாவீரார் நாள் 2009 அன்று வெளியிட்ட உரை

ராம் என்கிற புலிகளின் முன்நாள் தளபதி மாவீரார் நாள் 2009 அன்று வெளியிட்ட உரை
http://video.yahoo.com/watch/6499976/16854699

தங்களை நாங்கள் வணங்குகின்றோம்-மூனாவின் ஓவியம்

Friday, November 27, 2009

மாவீரர் தினம் 2009

தமிழர் தாயக உறுதிமொழி

உறுதி மொழி
தமிழீழத்தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் இந்நாளில் -2009,நான் மேற்கொள்ளும் உறுதி மொழியானது; ஈழத்தமிழனாகிய நான் உலகின் எத் திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எனது இலட்சியம்.இந்த இலட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றேன்.

தமீழவிடுதலைப் புலிகளின் தலமைச் செயலகம் வெளியிட்டுள்ளதாக 'தமிழ் நெற்' இணையதளம் வெளியிட்டுள்ள மாவீரர் தின அறிக்கை-2009.
மாவீரர் தினம் 2009 அறிக்கை - உரை வடிவில்
==============================================
"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

மாவீரர் நாள் உரை- 2008
=============================================
மாவீரர் தினம் 2009
*தேசியத் தளபதி பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க சபதம் ஏற்போம்!
*அந்நிய நாடுகளில் தற்காலிக தமிழீழ அரசாங்கம் எனும் மோசடித்தனமான ஏமாற்றுப் பாதையை அடியோடு நிராகரிப்போம்!!
*இலங்கையின் -அரைக்காலனிய,தரகு முதலாளித்துவ,சிங்களப்பேரினவாத,பெளத்த மதவாத,இராணுவ சர்வாதிகார,தமிழினப் படுகொலைப் - பாசிச அரசை பாதுகாக்கும் இந்திய விஸ்தரிப்புவாத, மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய அரசுகள் நமது எதிரிகளே எனப் பிரகடனம் செய்வோம்!
*இனவெறிப்பாசிச இராணுவ சர்வாதிகார இலங்கை அரசின் கொலைக் கரத்தில் இருந்து ஈழ தேசம் விடுதலை பெற பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்போம்!
*புதிய ஈழம் படைக்கும் புரட்சிப்படையைத் திரட்ட, புலம் பெயர் நாடுகளில் புதிய ஜனநாயக அரசியல் பிரச்சாரம் செய்வோம்!!!
*பக்ச பாசிஸ்டுக்களின் ஈழமுற்றுகையை (புலம்பெயர்-ஈழம் வாழ்) தமிழர் படையெடுப்பால் முறியடிப்போம்!
* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
-புதிய ஈழப் புரட்சியாளர்கள்-

Monday, November 23, 2009

ஜூரிச் கூட்டத்தில் நடந்தது என்ன?

யார் நடத்தினார் ஜூரிச் மாநாட்டை? ஏன் நடத்தினார்?
கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் கட்சி , மற்றும் "தன்னார்வ"க்குழு ஓடுகாலிகளே மக்களுக்குப் பதில் அளியுங்கள்!
*ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை
-தமிழோசை
* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-யாழ் உதயன்
*Working paper for dialoge,இணக்கப்பாட்டு அறிக்கை,பத்திரிகை அறிக்கை இங்கே வெளியிடப்பட்டன.
_ இலங்கை முஸ்லிம் சிவில் சமூகம்.
* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-யாழ் உதயன்
*13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் அவசியமென இணங்கப்பட்டது.
-மனோ கணேசன்
=============
ஜூரிச் கூட்டத்தில் நடந்தது என்ன?
செய்தியரங்கம் BBC தமிழோசை
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இலங்கையில் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் இருநாள் கூட்டம் ஸ்விஸ் நாட்டின் ஜூரிச் நகரில் முடிவடைந்துள்ளது.

1 இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது என்றும்,
2 அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், ஒரு செயற்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சட்டம் தொடர்பான பிரச்சினைகளும், மீள்குடியேறியுள்ள மக்களை சுயாதீனமாக மேற்பார்வை செய்கின்ற அமைப்பு ஒன்றை உருவாக்குவதின் அவசியமும் தீர்மானமாக இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அமீன் அவர்கள் கூறுகிறார்.

சில விடயங்களில் கலந்து கொண்டவர்கள் முரண்பட்டாலும், அதைத் தவிர்த்துவிட்டு, ஒன்றுபட்டு செயற்படக் கூடிய விடயங்கள் தொடர்பாகத்தான் எல்லோரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கையில் விரைவில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்தப் பேச்சுவார்தையும் இடம்பெறவில்லை என்றும் அமீன் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

13வது சட்டத்திருத்திற்கும் மேலாக அதிகாரப்பகிர்வு தேவை என்று வலியுறுத்தல் இதனிடையே இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு பரந்துபட்ட அளவில் அதிகாரப் பகிர்வு அளிக்க வழி செய்யும் வகையில் ஒன்றுபட்டு செயற்பட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இணங்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கும் மேலாக அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிற கருத்திலும் ஒரு கருத்தொற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் இருந்தது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவை தவிர நாட்டில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள், தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவை

குறித்தும் ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமகம் தொண்டமான் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தக்

கூட்டத்தில் விவாதிக்க இயலவில்லை என்றும் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முக்கியமென குறித்த 2 விடயங்களில் காத்திரமான கலந்துரையாடல்தானும் இன்றி முடிவுற்ற சூரிச் கூட்டம்!
2009-11-23 06:20:12 யாழ் உதயன்
சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே.. பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப் பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு முக்கியவிடயங்கள் குறித்து காத்திரமான கலந்துரையாடல் தானும் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததாம். அதற்கென அரைநாள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது குறித்து காத்திரமான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்
தெரிவித்தார் என்று தகவல்கள் கொழும்பில் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில் அது குறித்து இங்கு விவாதிப்பதால் பயனில்லை என்று ஒரு சாராரும் கூட்டத்தின் பிரதான நோக்கம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு என்று தெரிவித்து விட்டு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வது அர்த்தமற்றது என்று ஆட்சேபம்
தெரிவித்து அடுத்த சாராரும் இதனைப் புறக்கணித்தனர்.

ஆராயப்பட குறிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் விடயம் தேவையற்றது எனக்கூறி, அந்த விடயம் நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டது. கிழித்து எறியப்பட்டதாக மற்றொரு தகவல்

தெரிவித்தது. அரசியலுக்கு அப்பால், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்ந்து நீதியான, ஒரு முடிவுக்கு வந்து அது குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது

என்பது கூட்டத்தில் இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் அது குறித்த கலந்துரையாடல் தொடங்கிய சிறிது நேரத்தில், அகதி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரசு

அனுமதி அளித்திருப்பதும், மற்றும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் பஸில் ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்புக் குறித்து அமைச்சர்

பெ.சந்திரசேகரன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். அத்தோடு தமிழ்மக்களின் குடியேற்றம் குறித்த விடயமும் தொப்பென கைவிடப்பட்டதாக நேற்று இரவு இங்கு கிடைத்த தகவல்கள்

தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியில் அங்கம் வகித்த எஸ்.வரதகுமார் என்பவரே ஏற்பாடு செய்திருந்தார். அவர் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற

நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து வரதகுமார் இந்தியா சென்று காலத்துக்குக் காலம் அந்நாட்டு அரசுகளுடன் நெருங்கிய

உறவைப் பேணி வருகிறார். இதேவேளை, சூரிச் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் பயண மற்றும் செலவுக்கென 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில்

மொத்தம் 26 பேர் பங்கு பற்றினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், பி.சந்திரசேகரன், பேரியல் அஸ்ரப், கிழக்கு

மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ்

பிரேமச்சந்திரன், மனோகணேசன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, ரி.சிறிதரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவற்றில் அடங்குவர்.

இதற்கிடையே
கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தம்மால் நான்கு "ஸ்ரார்'' ஹோட்டலில் தங்க முடியாது என்று தெரிவித்து சூரிச் நகருக்குச் சென்று ஐந்து "ஸ்ரார்''

ஹோட்டலிலே தங்கினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த மேலதிக செலவையும் கூட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களே வழங்கினர்.
இந்தளவுக்கு பெருந்தொகைப்பணம் தமிழர் தகவல் மையத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் இந்தியாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவும்

பிரிட்டனும் முன்னின்று செயற்பட்டதாகவும் இந்தியா முழு விரும்பம் இன்றியே அதற்கு ஒத்துழைப்பு நல்கியதாகவும் மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
===========
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ சிறுபான்மை கட்சிகள்
23 November 09 01:46 am (BST)

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ சிறுபான்மை கட்சிகள் :

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

விரிவான அதிகாரப் பரவலாக்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களினால் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் அவசியமென இணங்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை இன்னமும் முடிவவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மேற்குலக நாடுகளது தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி இரு சமூகங்களும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வாறான ஓர் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை நிலைமைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.

யார் நடத்தினார் ஜூரிச் மாநாட்டை? ஏன் நடத்தினார்?

யார் நடத்தினார் ஜூரிச் மாநாட்டை? ஏன் நடத்தினார்?
கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் கட்சி , மற்றும் "தன்னார்வ"க்குழு ஓடுகாலிகளே மக்களுக்குப் பதில் அளியுங்கள்!
*ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை
-தமிழோசை
* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-யாழ் உதயன்
* Working paper for dialogue, இணக்கப்பாட்டு அறிக்கை,பத்திரிகை அறிக்கை இங்கே வெளியிடப்பட்டன.
_ இலங்கை முஸ்லிம் சிவில் சமூகம்.
*
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் அவசியமென இணங்கப்பட்டது.
-மனோ கணேசன்

Saturday, November 21, 2009

விசேட மாநாடு

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக சுவிட்ஸர்லாந்தில் விசேட மாநாடொன்று ஆரம்பம்‐
20 November 09 04:41 am (BST) GTN
இலங்கையின் தற்போதைய நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக சுவிட்ஸர்லாந்தில் விசேட மாநாடொன்று நேற்று ஆரம்பமாகியுள்ளது. சூரிச் நகரில் நேற்றிரவு இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சுவிட்ஸர்லாந்திற்கு சென்றுள்ளனர்.
லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டிலேயே இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
இன்றும் நாளையும் நாளை மறுதினம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இதில் பங்குபற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், kalmunai மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் ஈ.பி.டி.பி.யின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் செயலாளர் எஸ். சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, ரிசாட் பதியுதின் ஆகியோர் உட்பட பலரும் அங்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி ஆகியோர் ஒரே விமானத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சூரிச் நோக்கி சென்றுள்ளனர்.


சூரிச்சில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த மாநாடு இடம்பெறுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் தீர்வுத் திட்டம் ஒன்றினை முன்வைக்கும் விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த மாநாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பங்கேற்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இரகசிய மாநாடு

சுவிற்சர்லாந்தில் மாநாடு -மிகவும் இரகசியமாக- தொடர்கிறது

வீரகேசரி இணையம் 11/21/2009 2:07:12 PM - சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிறவுன்பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதாக சுவிஸ் நாட்டிலுள்ள எமது இணையத்தளத்தின் வாசகர் ஒருவர் தெரிவித்தார்

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...