SHARE

Tuesday, February 21, 2012

ஈழத்தமிழர் துயரைவிற்று பி.ஜே.பி க்கு வாக்குப் பொறுக்கும் ஈனப்பிறவி சீமான்.

என் இனத்தை அழிக்கத் துணை போன காங்கிரஸை சகல மாநிலங்களிலும் அழிப்பேன் மும்பையில் சீமான் சூளுரை .
Saturday, 18 February 2012 07:09 Hits: 287 .
.
மும்பை: மும்பை மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாடுபடுவேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசினார்.

மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் க ட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி , சயான் கோல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர்வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் க ட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.  தாராவி 90 அடிச் சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் சீமான் பேசுகையில்;

காங்கிரஸூக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். காரணம் இலங்கை அரசு  தமிழர்களை அழித்தொழிக்க நடத்திய இனப் படுகொலைப் போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுத்தும் ஆலோசனை வழங்கியும் ராடார் அளித்தும் , நிதியுதவி, படையினருக்கு பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியுள்ளது.

என் இனத்தை வேரோடு அழிக்கத் துணைபோன காங்கிரஸ் கட்சியை என்னுயிர் தமிழ்ச்  சொந்தங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்க வேண்டும். உண்மையான ஒவ்வொரு தமிழனும் இலங்கையில் தன் இனத்தை அழித்த  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழி தீர்க்க வேண்டும். இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தமிழனாவது வாக்களித்தால் அவனது பிறப்பை சந்தேகிக்க வேண்டும்.
 
தமிழினப் பகைவர்களுடன் சேர்ந்துக் கொண்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு  மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சென்று பரப்புரை செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன். இது சத்தியம்.

எந்த சின்னத்திற்காக சீமான் வாக்குக் கேட்கிறான் என்பதல்ல, எந்த எண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறான் என்பதே முக்கியம். என் இனத்தை அழித்தவனை அழிக்க மராட்டிய மண்ணில் வாழும் என் சொந்தங்களின் வாக்குப் பலத்தை சரியான திசையில் பயன்படுத்தியே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த இந்த பரப்புரையைச் செய்கிறேன் என்றார்.

தாராவியில் உள்ள 178  ஆவது வார்டில் , பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக் வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக் கொண்டார்.  
அதே போல, இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


தாராவி பொதுக் கூட்டத்தில் பரப்புரை செய்த பிறகு  சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168 ஆவது வார்டில் பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான கப்டன் இரா. தமிழ்ச் செல்வனை ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது போரை நிறுத்துமாறு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டவர் தமிழ்ச் செல்வன் ஆவார்.

சீமானுடன் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ஊடகவியலாளருமான கா. அய்யாநாதன் , மாநில ஒருங்கிணைப்பாளர்  அன்புத் தென்னரசன், கலை பண்பாட்டுப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பால முரளி வர்மா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உலகிலேயே பணக்காரக் கோயிலுக்கு உயர் பாதுகாப்பு!

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில்
பொக்கிஷங்கள் பதியப்படுகின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2012 - 11:20 ஜிஎம்டி பிபிசி

தென்னிந்தியா, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் காணப்பட்ட விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை அதிகாரிகள் பட்டியல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கோயிலில் உள்ள ஐந்து பாதாள அறைகள் ஏற்கனவே கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன- அவற்றில் ஆபரணக்கற்கள், தங்கம், வெள்ளி என பெருமளவு விலைமதிப்பற்ற பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஐந்து அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் தொழிநுட்ப முறையில் பட்டியல்படுத்தப்படும்வரை ஆறாவது அறையை திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு கண்காணிப்பில் இருக்கின்ற இந்தக் கோயில் உலகிலேயே மிகச் ‘செல்வந்தமான’ மதத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மதிப்பிடுவதில் சிரமம்

இந்த ஐந்து அறைகளிலிருந்த பொக்கிஷங்களும் இந்திய மதிப்பில் சுமார் 900 பில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கோயில் பொக்கிஷங்களையும் புதையல் தொல்பொருட்களையும் ஆவணப்படுத்துவதற்காக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட கருவியொன்றின்மூலம் இந்தப் பொருட்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிஜிட்டல் முறையில் பட்டியல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
இரத்தினக் கற்கள், பழங்கால நாணயங்கள், தங்கம் மற்றும் தொல்லியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இந்தப் பொக்கிஷங்களின் பெறுமதியை மதிப்பிடுவது தான் மிகச் சிரமமான காரியமாக இருக்கும் என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு பொருளாக ஆராய்ந்து விபரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், இந்த பணி பூர்த்தியடைய பலமாதங்கள் எடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை, வழமையான வழிபாடுகளும் சடங்குகளும் எவ்வித தடங்கல்களுமின்றி நடைபெறுமென்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பொதுமக்கள் மத்தியல் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியது.

இந்தப் பொக்கிஷங்கள் அருங்காட்சியங்களில் வைக்கப்பட வேண்டும் அல்லது அவை விற்கப்பட்டு அதில்வரும் பணத்தை பொதுநலன்களுக்காக செலவிட வேண்டும் என்றும் பலர் வாதிடுகின்றனர்.
==============
குறிப்பு: விவசாயிகளின் கலகங்களில் இருந்தும், அண்டை நாட்டுப் படையெடுப்புக்களில் இருந்தும் நிலப்பிரப்புத்துவச் செல்வங்களைப் பாதுகாக்க மன்னர்கள் கட்டிய பாதாள வங்கிகளே இந்துப் பெருங்கோவில்கள்.

போர்க்குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றம்


போர்க் குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு ; 5 பேர் கொண்ட குழுவை இராணுவத் தளபதி நியமித்தார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு இராணுவத் தளபதியினால் இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டது போன்று இறுதிக் கட்ட போரில் பொது மக்கள் கொல்லப்பட்டமை மற்றும சனல் 4 காணொலியில் காண்பிக்கப்பட்ட போர்க்குற்ற ஆவணங்கள் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவே இந்த நீதிமன்றம் நிறுவப்படவுள்ளது.

 இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட இந்நீதிமன்றக் குழு ஜனவரி மாதம் முதலாம் வாரம் தொடக்கம் அதிகாரம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றக் குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நீதிமன்றத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் அடிப்படை விசாரணைகள் போன்று இடம்பெறும் எனவும் இரண்டாம் கட்டம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தகுற்ற நீதிமன்றம் போன்ற மேல் நீதிமன்றுக்கு உள்ள அதிகாரங்கள் இருப்பதால் மரணதண்டனை போன்றவைகூட வழங்கப்படுவதற்கான அதிகாரம் காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் உதயன் 16 பெப்ரவரி 2012, வியாழன் 8:55 மு.ப

இராணுவமயமாகும் குடிபெயர்க்கப்பட்ட மக்களின் நிலங்களும், மீள் குடியேற்றத்தில் திருப்தி அடையும் ஈரோபியன் யூனியனும்!

வலி.வடக்கில் இராணுவம் நிரந்தர பாதுகாப்பு வேலி - 26 ஆயிரம் மக்களின் மீள்குடியமர்வு கேள்விக்குறி

வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை  நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது "கொங்கிறீட்" போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன.

அந்த 4 கிலோ மீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட துண்டு வீதியைப் புனரமைப்பதைத் தாம் நிறுத்திக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் வல்வை அராலி வீதிக்குக் "கார்ப்பெற்" போடும் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நன்றி யாழ் உதயன் 16 பெப்ரவரி 2012, வியாழன் 8:45 மு.ப
English Summary
The Military are making a permanent Prevention fences from Oddakapulam to Thellippalai…
Uthayan : Daily Tamil News Paper from Jaffna
======
Satisfied with displaced Sri Lankan Tamils' rehabilitation : EUBy Indo Asian News Service | IANS India Private Limited – 5 hours ago Colombo, Feb 17 (IANS)

The European Union (EU) has expressed satisfaction with the resettlement process in Sri Lanka three years after the war between the Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) ended.
The Sri Lankan government should be commended for the efforts it took to resettle most of the war displaced people, Xinhua quoted the EU ambassador to Sri Lanka and the Maldives, Bernard Savage, as saying Thursday.
Savage said that all the major camps for the war displaced have now been shut.
He appreciated the efforts taken by the international community to support the Sri Lankan government to send home those affected by 30 years of war.
On Thursday, the EU also announced a new grant package of 16 million euro (about $21 million) to assist the families resettled in the north and east of Sri Lanka.
Savage said that the funds would be used mostly for the families in Mullaitivu and Kilinochchi in the north, two areas which bore the brunt of the war during the final stages.


Sri Lanka came under severe criticism for the conditions of the displacement camps where thousands of people were temporarily sheltered in the north of the country soon after the war ended in May 2009.
The Sri Lankan authorities resettled most of the people but a few still remain in the camps despite an assurance by the government last year that all displacement camps will be shut by January.

எழுத்தூரில் இராணுவமுகாமுக்கு இட ஒதுக்கீடு- பெண்கள் எதிர்ப்பு

மன்னார் இராணுவ முகாமுக்கு பெண் அமைப்புக்கள் எதிர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 பிப்ரவரி, 2012 - 15:01 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இராணுமுகாமுக்கு பெண்கள் அமைப்புக்கள் எதிர்ப்பு
மன்னார் புறநகர்ப்புறத்தில் எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
இங்குள்ள பல மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.

குடியேற்றக் கிராமமாகிய ஜீவன்புரம் உட்பட ஒன்பது மீள்குடியேற்ற கிராமங்களுக்கு நடுவே தரவன்கோட்டைக்குச் செல்லும் வீதியில் இந்த இராணுவ முகாமை அமைப்பதற்குரிய காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அத்துடன் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த இந்தப் பகுதி மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஐநாவின் அபிவிருத்தி நிறுவனம் (யுஎன்டிபி) அமைத்துக் கொடுத்துள்ள குளத்திற்கு அருகில் இந்த முகாம் வரவிருப்பது இப்பகுதி மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

பெண்களைத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களும் வளர்ந்த பெண்பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட குடும்பங்களும் இங்கு பெருமளவில் வசிப்பதாகவும், இதனால், இங்கு புதிதாக இராணுவத்தினர் நிலைகொள்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் கூடும் என்று, இந்தப் பெண்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

குளத்தில் குளிப்பது, துவைப்பது, கழிப்பறை வசதிகள் இல்லாமையினால் அருகில் உள்ள காட்டுப்புறத்திற்கு இயற்கைக் கடன்களைக் கழிப்பது, போன்ற விடயங்களில் தடங்கல்களும், பிரச்சினைகளும் எழக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இராணுவ முகாம் அமையவுள்ள வீதியொன்றே இந்தப் பகுதி மக்களின் பொது போக்குவரத்திற்கு உரியதாக இருப்பதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் வளர்ந்த பெண்பிள்ளைகள் போன்றோரின் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் என்பதால், இங்கு இராணுவ முகாம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு என தமிழ்ப் பிரதேசம் எங்கும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதி காணிகளில் இராணுவத்தினர் முகாம்கள் அமைப்பதை ஒரு திட்டமாகவே அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோசலிசமே கிரேக்கத்தின் பிரச்சனைக்குத் தீர்வு- கிரேக்கக் கொம்யூனிஸ்ட் கட்சி

“National” or people’s sovereignty?

One of the arguments used by the bourgeois and opportunist forces in Greece, in order to blur the causes of the capitalist crisis rooted in the basic contradiction which characterizes capitalist society, the contradiction between capital and labour, is the argument concerning the “loss of national sovereignty”.

So, depending on who is invoking this argument, variations of this line are presented of the type “the government is not negotiating!” or “the government implements the orders of the foreigners” or “they serve the Germans”, “the foreigners govern us”, “we are under occupation”, “Greece has become a protectorate”, “ we have lost national sovereignty”, etc. Indeed, at some point the last argument was used by the leader of the social-democratic party and the Socialist International and former Prime Minister, G. Papandreou, who claimed that due to the crisis we lost national sovereignty and that the workers must endure harsh measures, so that the economy can recover and we can find our “national sovereignty” again…

The KKE comes into conflict with the abovementioned points of view, which deceive the people, as they conceal the reality and propose out-dated solutions within the framework of capitalism. In addition, they unscientifically present the relations of dependence and interdependence, which emerge in the framework of imperialism and within the imperialist unions (such as the EU) as a consequence of the loss of “national sovereignty”, while they constitute a result of the uneven development of the capitalist countries. The bourgeois class of every country participates in these unions, not because it operates allegedly “treacherously” or “anti-patriotically”, but to serve its class interests! In order to strengthen its position inside every country against the working class, using both repressive and other mechanisms and tools which these unions possess. It is incorporated in these in order to better participate in the global competition with the American, Japanese, Chinese, Russian and other monopolies and to increase its profits. In the framework of this ambition it cedes sovereign rights to inter-state bodies. These relations of dependence and interdependence are not abolished through the humanization of “imperialist unions”, e.g. with more “democracy” in the institutions of the EU, as the opportunists demand, but through the disengagement of the countries from these unions, their dissolution, the establishment of working class-people’s power, the socialization of the basic means of production, central planning and workers control of the economy, through socialism!
==========================================
The short video of the Propaganda Section of the CC of the KKE is in this direction and is addressed to the Greek people. We considered it worth subtitling (English, Arabic, Spanish, Russian) and we present it to you today.
[Οn the lower right hand side of the image there is the button CC. Click on it to choose the subtitles in your language.]
 http://www.youtube-nocookie.com/embed/M15sWa-2CXA
International Relations Section of the CC of the KKE

ம.ஜ.இ.கழக பிரச்சார பிரசுரம்: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!

அமெரிக்கா, இந்திய சில்லரை வணிகத்தில் எவ்வளவு வேட்கை கொண்டுள்ளது என்பதை அந்நாட்டின் வெளியுறவுச் செயலரின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டிசம்பர் 7ல் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தவுடன் ஹிலாரி கோபத்தோடு இவ்வாறு பேசுகிறார்;

"மான்டேக் சிங் அலுவாலியாவை விட்டுவிட்டு பிரணாப் முகர்ஜியை நிதி மந்திரியாக ஏன் நியமித்தார்கள்? முகர்ஜியும் அலுவாலியாவும் எப்படி ஒத்துப் போகிறார்கள்?" என்றும் " வர்த்தக அமைச்சர் ஷர்மாவால் முகர்ஜியுடனும் பிரதமருடனும் இணைந்து செயல்பட முடிகிறதா?" என்றும் கோபாவேசத்துடன் கேட்கிறார்.
நட்வர்சிங்கையும் மணிசங்கர் அய்யரையும் ஒழித்துக்கட்டியதுபோல பிரணாப் முகர்ஜியையும் ஒழித்துக்கட்ட அமெரிக்கா விரும்புகிறது போலும். இவ்வாறு ஹிலாரி கோபாவேசப் படுவதற்குக் காரணம், அவரே வால் மார்ட்டில் ஒரு பங்குதாரராக இருந்து கொண்டு பல ஆயிரம் கோடிகளை இலாபமாக பெறுவதுதான்.

அந்நிய முதலீட்டிற்கு இந்திய சில்லரை வணிகத்தை திறந்துவிடும் மன்மோகன் கும்பலின் துரோகத்திற்கு எதிராக வணிகர்கள் நடத்திய நாடுதழுவிய போராட்டம்தான், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளான பா.ஜ.க மற்றும் இடது வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளான திரினாமுல் மற்றும் திமுகவும் இம்முடிவைத் தற்காலிகமாகத் தடுத்துநிறுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே அந்நிய மூலதனத்திற்கு எதிராக நாடுதழுவிய மக்கள் இயக்கங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்த போராட்டமானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளான தரகுப் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும் எதிர்த்த நாட்டின் விடுதலைக்கான போராட்டமாகும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைவது மட்டுமே நாட்டை அடிமைப்படுத்தும் செயலாக பார்க்க முடியாது. மாறாக, நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அந்நிய முதலீடுகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதியாகும். உலகமயம் தாராளமயம் தனியார்மயம் போன்ற புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை எதிர்த்தும்,அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களையும் முறியடித்து நாட்டில் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே நாட்டின் விடுதலைக்கும், நெருக்கடிகளை தீர்ப்பதற்குமான ஒரே வழியாகும். எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட தேசபக்த சக்திகள் அந்நிய மூலதனத்திற்கு, சில்லரை வணிகத்தை திறந்து விடுவதையும், பிற துறைகள் திறந்து விடப்படுவதையும் எதிர்த்து முறியடிக்க ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு கூட்டுப் போராட்டமே ஆளும் வர்க்கங்களின் துரோகத்தை முறியடிப்பதற்கான பலமிக்க சக்தியாக அமையும்.

எனவே கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

* சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!
* அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் அனைத்துத் துறைகளையும் திறந்துவிடும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை எதிர்த்து அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.பிப்ரவரி, 2012
மேலும் படிக்க http://samaran1917.blogspot.com/2012/02/24.html

Saturday, February 18, 2012

Hans Blix: UN's nuclear watchdog report in November 2011 "did not . . . conclude that Iran was making a weapon or had taken a decision to make one''

Hans Blix: How do we stop Iran getting the bomb?
Posted by Samira Shackle -New Statesman 15 February 2012 15:51

A preview of our exclusive essay by the former chief UN weapons inspector.

 In this week's New Statesman cover story, the former chief UN weapons inspector and ex-head of the International Atomic Energy Agency Hans Blix offers a diplomatic alternative to military action against Iran - and warns that any such attack by the west would be illegal and catastrophic:
'' If Iran were to be bombed, it would be another action in disregard of the UN Charter. There would be no authorisation by the Security Council. Iran has not attacked anybody and despite Mahmoud Ahmadinejad's wild, populist declarations that Israel should be wiped off the map there is no imminent Iranian threat that could be invoked to justify pre-emptive action.

Blix says he does not believe that the Iranian regime is trying to build or acquire nuclear weapons:
'' It is possible - but is denied by Iran and not evident to me - that there is a determination to make a nuclear weapon.
The former director of the IAEA points out that the much-discussed report on Iran released by the UN's nuclear watchdog in November 2011 "did not . . . conclude that Iran was making a weapon or had taken a decision to make one". And he issues a stark warning on Iran to the agency's current head:
'' In my view, the agency should not . . . draw conclusions from information where the supplier is not ready also to show evidence. Both Mohamed ElBaradei and I were careful on this point and I hope the present director general of the IAEA, Yukiya Amano, follows that line. The agency should not risk its own credibility by relying on data that it cannot verify fully.

Blix says "bombing Iranian nuclear installations may be a path to disaster rather than to a solution" and condemns the "outrageous, gangster-style" killing of Iranian scientists. He writes:

'' Iranian leaders are not going to sit quietly and twiddle their thumbs . . . A war in the Gulf and skyrocketing of oil and gas prices are not exactly what a financially troubled world needs right now. Furthermore, not all relevant installations in Iran would be destroyed. Some may not be known. The capacity and know-how to produce more centrifuges will survive and after armed attacks the Iranian government, which many now hate, may get broad support in a nation feeling humiliated by the attack. If there was not already a decision to go for a nuclear weapon it would then be taken.


The former chief UN weapons inspector in Iraq calls for the establishment of a "nuclear-weapon-free zone" in the Middle East as a solution to the impasse over Iran:

'' To many, the idea of an agreement between the parties in the Middle East - including Israel and Iran - to renounce not only the possession, acquisition or development of weapons of mass destruction, but also the means of their production, might seem very remote. It does not seem far-fetched to me.
It would, to be sure, call for many difficult arrangements, including verification going beyond IAEA safeguards, as well as outside security guarantees and assurances of supply of nuclear fuel for civilian reactors. It would require that Israel give up its nuclear weapons, stocks of fissile material and capability to produce enriched uranium or plutonium. It would require Iran to do away with its enrichment plants and a number of other installations. All states in the zone would agree between themselves not to acquire or develop capabilities for the enrichment of uranium or production of plutonium.’’

And he explains why this arrangement would appeal to all sides.

DR. HANS BLIX (MaximsNews Network, UN)

DR. HANS BLIX (MaximsNews Network, UN)

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...