SHARE
Monday, March 28, 2011
லிபியா மீதான யுத்தத்தைக் கண்டிக்கும் சிங்கள சமூக தேசிய வெறியர்கள்
லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பதிவு Mar 24, 2011 / பகுதி: சிறப்புச் செய்தி /
லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல.
எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.
குறிப்பு:
லிபியாவுக்கு எதிரான யுத்தத்தை கண்டிப்பதாக இது தோற்றமளித்தாலும், ஈழதேசத்தில் சிறீலங்கா நடத்திய இனப்படுகொலையையும், யுத்தக்குற்றங்களையும் நியாயப்படுத்துவதே கெளரவ அமைச்சர் விமல் வீரவன்சவின் குறிக்கோள் என்பது தெளிவாகின்றது.’’எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.’’ உண்மைதான் அமைச்சரே கூடவே ஒரு தேசத்தின் சுயநிர்ணயத்தில் தலையிடுவதற்கும் எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ உரிமை கிடையாது என்பதையும் சேர்த்துச் சொல்லவிடாமல் தங்களைத் தடுப்பது என்ன? முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்த இறையாண்மையுள்ள சிறீலங்கா அரசு, ஒரு களங்கமாக தங்கள் கண்களுக்கு தெரியாதது ஏன்? சிங்களப் பெருந்தேசிய வெறிதானே!!
’’லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன’’.உண்மைதான் இதில் தங்களுக்கு என்ன கவலை? தங்கள் நாட்டில் எந்தவளங்களை மேற்குலக நாடுகளுக்கு- கூடவே கிழக்குலக நாடுகளுக்கும் பங்கிட்டு! - தாரைவார்க்காமல் பாதுகாத்து வைத்திருக்கின்றீர்கள் ஒரு உதாரணம் காட்டமுடியுமா?
Sunday, March 27, 2011
நேற்றோவின் கொலைக்கரத்தில் லிபிய மக்கள் அடையப்போவது விடுதலையல்ல, படுகொலையே!
கொசோவோவில் குடித்த இரத்தமும், ஆப்கானிஸ்தானில் குடிக்கும் இரத்தமும் சாட்சியமளிப்பது ஆக்கிரமிப்பு கொலைவெறியே!
நேற்றோவின் கொலைக்கரத்தில் லிபிய மக்கள் அடையப்போவது விடுதலையல்ல, படுகொலையே!
இரவல் படையில் ”கிளர்ச்சி’’ செய்யும் லிபிய ஆயுதக் கும்பல்,
அந்நிய ஏகாதிபத்திய நேற்றோ கைக்கூலிகளே!
உலக மறுபங்கீட்டுக்கான ஏகாதிபத்திய கொலைகார இராணுவக் கூட்டணி நேற்றோவின், லிபியாவை துண்டாடும் திட்டத்தை எதிர்ப்போம்!
---------------------------------------செய்தி:
Nato to command all Libya's military operations
Nato ambassadors meeting in Brussels have agreed that the alliance will take command of all international military operations relating to Libya.
That includes airstrikes on Colonel Gaddafi's forces.
The decision ends days of diplomatic wrangling and paves the way for the US to relinquish its temporary leadership of the operation.
Some Nato members - notably Turkey and Germany - have been reluctant for the alliance to take charge of the air strikes because of the risk of civilian casualties.
Thursday, March 24, 2011
Tomahawk Cruise Missles Penetrate Gaddafi Compound Rare Launch Video
லிபிய நாட்டை மறுபங்கீடு செய்ய
அமெரிக்க,ஐரோப்பிய பச்சைப் பாசிச பயங்கரவாதிகள், லிபிய மக்களுக்கு எதிராக ஏவிய அநீதியான ஆக்கிரமிப்புப் போர்.
Wednesday, March 23, 2011
லிபிய மக்களின் விடுதலைக்கான புரட்சிப்பாதை.
வீரப்புதல்வர்களே,
அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உலகமறுபங்கீட்டிற்கும், எண்ணெய்வளத் திருட்டுக்கும், சாவு ஆயுத வியாபாரத்துக்கும் லிபிய மக்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள ஆக்கிரமிப்பு யுத்தம் அநீதியானதாகும்!
தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும் லிபியமக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தம் நீதியானதாகும்!
ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்கேற்றுள்ள நாடுகளின் உழைக்கும் மக்கள் அதன் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்துவர்!
மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க தேசிய ஜனநாயக இயக்கங்கள் லிபிய விடுதலையை ஆதரிப்பர்!
உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசங்களும்,ஏகாதிபத்திய அநீதி யுத்தத்தை எதிர்த்து, லிபிய மக்களின் நீதியான யுத்தத்தின் பக்கம் என்றும் நிற்பர்.
ஏகாதிபத்திய தாச விதேசிய அரபு ஆபிரிக்க ஆளும் கும்பல்கள் அம்பலப்பட்டு தனிமைப்படுவர்!
அநீதி யுத்தமுகாம் பிளவுபட்டு பலமிழக்கும்! நீதி யுத்த முகாம் ஒன்றுபட்டு பலம் பெருக்கும்!
ஏகாதிபத்திய இராணுவப் படை நேற்றோ ஒழிக!
ஏகாதிபத்திய அரசியல் படை ஐ.நா.ஒழிக!
ஏகாதிபத்தியம் ஒழிக!!
இறுதி வெற்றி லிபிய மக்களுக்கே!
உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்குமே.
மேலும்: http://senthanal.blogspot.com/2011/03/blog-post.html
Saturday, March 19, 2011
Subscribe to:
Comments (Atom)
காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா
https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...








